லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்த நியூஸ்.. இதிலே +2 ஃபெயில் ஆனவங்களுக்கும் மட்டும் தான் இடம் கொடுப்பாங்களாம்.. வசூல் பாக்கணுமில்லே.. மூணாவது பெயில் ஆன, இல்லை பள்ளிக்கூடம் பக்கமே போகாத எம்.எல். ஏ க்களுக்கு மற்றும் அமைச்சர்களுக்கு ஃப்ரீயா இடம் கியாரண்டி.. வருக, வருக... பர்சுகளை திறந்து வருக.. பட்டங்களை அள்ளிச் செல்க..
25-மே-2013 03:02:07 IST
"அவர்களே விருப்பப்பட்டுக் கொடுப்பது இந்து மதத்தில் ஏற்புடையது. " உட்டாலக்கடி, கிரி, கிரி... நல்லவன் வேஷத்தில் இவனுங்க தான் மதப் போர்வையைப் போத்திக்கிட்டு அசிங்கத்தை பன்றவனுங்க.. இதிலே மதம் எங்கே இருந்து வந்தது என்று தெரியவில்லை.. எப்பவோ, எதோ ஒரு காலகட்டத்தில் எழுதி வைத்த புரியாத சடங்குகளும், அப்போதைய சம்பிரதாயங்களும் இப்போ "மதம்" என்ற கண்மூடித் தனமான இறை நம்பிக்கையாக காட்டுகிறார்கள்.. சமுதாய அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட சட்டப்படி, இன்றைக்கு இது குற்றம் என்றால், அதை தப்பில்லை என்று சொல்லும் மதங்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும்.. தவறை எந்த சந்தர்ப்பத்திலும் நல்லதாகக் காட்டக் கூடாது .. ஒரு குடும்பத்தில் இரு மகன்கள், ஒருத்தி பணக்கார வீட்டில் பெண் எடுத்தான்... அடுத்தவன் ஒரு ஏழையைக் காதலித்தான்... என்னவாகும்.. சமயம் கெடைச்சா ரெண்டாவது மருமகளை குத்திக் காட்டுவாங்க இல்லே... அவ பாரு.. நீயும் பாருன்னு.. அப்போ, இந்த பாழாய்ப் போன மதம் என்ன செய்யுமாம் ? மருமகள் தூக்குப் போட்டு இறந்தால் என்ன பரிகாரம் செய்யணும் என்று மட்டும் தான் சொல்லும்.. அசிங்கம்..
25-மே-2013 02:18:33 IST
" அவர் மீது பண மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்துள்ளோம் என்றார். " - நமது சட்டப்படி, ஒரு மாதம் காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கிறேன்.. மேலும், 5,000 ரூபாய் இன்னும் அபராதம் கட்டினால், காவல் தண்டனை ரத்து செய்யலாம் என்று கனம் நீதிபதி தீர்ப்பளிக்கலாம்.. அது தான் நடக்கும்.. கனமான பொட்டி வாங்கிக்கிட்டு தீர்ப்பு சொல்வதான் தான் "கனம்" நீதிபதியோ ??
25-மே-2013 01:41:25 IST
எல்லாரும் தப்பாப் புரிஞ்சுட்டேள்.. "தாய் எட்டடி பாஞ்சா, குட்டி நான் பதினாறு அடி பாய்வேனாக்கும்" ன்னு புள்ளையாண்டான் சொல்ல வர்றான்... ஊழல் டபுள் ஆகும், பெற கட்றேளா ?? (எதிலே எதிலே பெற கட்டுறது என்கிற வெவஸ்தை இல்லாமப் போச்சு..)
25-மே-2013 01:36:42 IST
" அவர்களை அந்த பெருமாள் பார்த்து கொள்வார். " - அப்போ, நீங்க என்ன செய்றீங்க ?? இப்படி சொல்லியே நமக்கு நாமே நாமம் சாற்றிக் கொள்கிறோம்.. இந்த சில்லறை விஷயங்களுக்கெல்லாம், அந்த அண்ட பராசரங்களை எல்லாம் ஆளும் உம் எம்பெருமான் வருவார் என்று நினைக்கிறீர்களா ?? சரியான கேலிக் கூத்து.. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இந்த வரியை தடுக்க ஒரு லட்சம் கோடிகளை கொட்டிய பல கோடி ஆத்திக பக்தர்களால் முடியாதா ?? வாயை மூடிக் கொண்டு, "அவன் பாத்துப்பான்" என்று கையாலாகாமல் சொன்னால், அவர்கள் பக்தர்கள் இல்லை... வெறும் பதர்கள்...
23-மே-2013 15:14:59 IST
ஆத்திகத்தை அழிப்பவர்களில் முதல், முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆத்திகர்களே.. நாட்டில் 99 விழுக்காடு ஆத்திகர்களே.. அது தெரிந்தால் இப்படி உளறிக் கொட்ட மாட்டீர்கள்.. செற்றியில் நாமமும், உள்ளமெல்லாம் வக்கிரமும் உள்ளவர்களை விட, கடவுளை நிந்திக்கும் நாத்திகர்கள் மிக மிகக் குறைவு.. உண்மை அது தான் என்பது அந்த கடவுளுக்கும் தெரியும்..
23-மே-2013 09:52:31 IST