தாத்தா நீ எம் எல் ஏ யாக இருந்துகொண்டு சபையில் வந்து விவாதிக்க வேண்டிய விஷயங்களை முரண்பாடாக தினமும் வீட்டு திண்ணையிலிருந்து வெளியிடுவது உங்க வயதுக்கும் அனுபவத்துக்கும் நல்லா இல்லையென்று நான் சொன்னா கேக்க மாட்டேன்கிறாய். திண்ணையை விட்டுட்டு சட்ட சபைக்கு போ. நாட்டுக்காக போராடு. கொண்டாடு.
17-மே-2013 08:42:07 IST
110 விதியின்கீழ் அறிவிதல்களை வெளியிடலாம் என்பது ஜனநாயகவிதி என்பதுகூடத்தெரியாமல் திமுக சட்டசபையில் வங்குறோத்து நிலைக்கு வந்திட்டுதே எங்கிறதுதான் என்னோட டவுட்டு.
16-மே-2013 08:24:00 IST
சாதியை காட்டி கட்சி நடத்துவது தப்பு என்றாலும், ஜனநாயக முறைமைக்குட்பட்டு அதற்கும் மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் ஜனநாயகத்தையே பலவீனமாக்கி வன்செயலில் ஈடுபட்டால் என்ன செய்யலாம். ஜனநாயகத்துக்குட்பட்டு விரைந்து சட்ட நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்.
11-மே-2013 08:25:24 IST
இவர்களின் தொல்லையே வேண்டாம் என்றுதான் மக்கள் எதிர்க்கட்சி நிலைக்கும் விட்டு வைக்காமல் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இப்போ ஆட்சி இல்லாத நிலையில் அப்பாவைப்போலவே அப்படியே முரண்பாடாக பேசுகிறார். இப்போ 2 மாதங்களில் நிறைவேற்றக்கூடியதான பணியை ஆட்சியிலிருக்கும்போது ஒரு மாதத்தில் நிறைவேற்றியிருக்க முடியும். ஏன் அதை தளபதியார் சிந்திக்கவில்லை. 1974 தாத்தா ஆட்சியிலிருந்துகொண்டு கச்ச தீவை ஸ்ரீரீலங்காவுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுகிறார். இதிலிருந்து மக்களே இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை யாராவது சொல்லுங்கள் பாப்போம்.
11-மே-2013 08:15:46 IST
தாத்தா தனது ஆட்சிக்காலத்தில் மனப்பூர்வமாக செய்த அனைத்து விடயங்களையும் இப்போ எதிர்த்து எதிர்நிலை எடுக்கிறார். கச்சதீவு தாரைவார்ப்பு ஒப்பந்தம் இலங்கை இனப்படுகொலை, எல்லாம் தாத்தாவின் ஆட்சிக்காலத்தில் அவரது ஆசியுடன் காங்கிரஸ் தடங்கலின்றி நிறைவேற்றிய விடயங்கள். இப்போ தாத்தா ஆட்சியிலும் இல்லை, தமிழக அரசின் எதிர்க்கட்சியாகவுமில்லை,மக்கள் மனதிலும் இல்லை. இந்த நிலையில் அனைத்து விடயங்களையும் எதிர்ப்பதாக அறிக்கைவிட்டு சுப்பிறீம் கோர்ட்டுவரை செல்லத்துணிந்திருக்கிறார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தாத்தா ஆட்சியிலிருக்கும்போது புகழ் போதைக்காகவோ, பணத்துக்கு அடிமைப்பட்டோ, வாரிசுக்களின் வாழ்வை கருத்தில் கொண்டோ முரண்பாடான செயல்களைத்தான் ஈடேற்றியிருக்கிறார் என்பது தெரிகிறது எனவே அவர் தான் விட்ட தவறுகளுக்காக மானசீகமாக போராடட்டும் முடிந்தால் அவற்றில் வெற்றி பெறட்டும். ஆனால் இனியொரு பொழுது ஆட்சியை கைப்பற்றும் முயற்சியுடன் அரசியல் செய்யக்கூடாது. என்பதை அவருக்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்ளுவோம். அவர் அதை புரிந்து கொண்டுள்ளார் புரிந்துகொள்வார் எனவும் நம்புவோம்.
11-மே-2013 08:02:44 IST
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அரசியல் என்ற பெயரில் மக்களிடையே குளப்பம் ஏற்படுத்தல் போன்ற சம்பவங்கள் நாட்டில நிகழும்போது தண்டனைச்சட்டம் கடுமையாக்கப்படவேண்டும் என்று குரல் எழும்புவதுண்டு. அதே நிகழ்வுகள் அரசியல் வியாதிகளால் உருவாகும்போது ஜனநாயக கிளர்ச்சி என்று பொய் பட்டப்பெயரை போர்த்தி கிரிமினல்கள் தப்பிவிடுவதுண்டு. இன்று ராமதாஸ், காடுவெட்டி போன்ற கிரிமினல்களை தமிழக பொலிஸ் துணிவுடன் உள்ளே தள்ளியிருக்கிறது என்றால் ஆட்சியிலிருப்பவர் எதையும் சந்தித்து நல்ல சமுதாயத்தை உருவாக்க சிந்திக்கிறார் என்று நம்பக்கூடியதாகவுள்ளது. அதே நேரம் சிறையில் அரசியல் கிரிமினல்களுக்கு சலுகை அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றத்தின் தன்மைக்கேற்ப சாதாரண குற்றவாளிக்கு கிடைக்கும் சலுகை மட்டுமே ஏமாற்று அரசியல்வியாதிகளுக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும்.
06-மே-2013 09:12:05 IST