Advertisement
தினமலர் முதல் பக்கம் » B SIVASUBRAMANIYAN S B அவரது கருத்துக்கள்
B SIVASUBRAMANIYAN S B : கருத்துக்கள் ( 37 )
B SIVASUBRAMANIYAN S B
Advertisement
ஜூன்
19
2013
அரசியல் கனிமொழி வெற்றிக்காக தி.மு.க.,தீவிரம் சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு கருணாநிதியை சந்தித்து ம.ம.க., ஆதரவு
மீண்டும் காங்கிரசின் காலில் விழும் கருணா மக்கள் முகத்தில் இனி விழிக்கவோ, தெருவில் நடமாடவோ முடியாது. மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். இவர் புத்தி ஏன் இப்படிப்போகிறது. ? கனிமொழி தோல்வி உறுதி. காங்கிரஸ் ஆதரிக்கும் கட்சியை வேறு யாரும் ஆதரிக்க மாட்டார்கள். கருணாநிதிக்கு சொரணையே கிடையாதா ?   05:20:28 IST
Rate this:
3 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
19
2013
அரசியல் அத்வானிக்கு தலைமை பதவி தந்தாலும் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை சரத் யாதவ்
ஐக்கிய ஜனதா தளம் விலகலுக்கு பின் இருப்பது அத்வானி அல்ல, இந்திரா காங்கிரஸ் குடும்ப அரசு பீகார் மாநிலத்துக்கு வழங்கிய 44000 கோடி ரூபாய் நிதி உதவி என்ற பெயரிலான லஞ்சம். உங்கள் அம்மாவும் நிதி உதவி பெறவிரும்பி காங்கிரஸ் அணிக்கு வர வாக்குறுதி கொடுத்தால் உங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி தர இந்திரா காங்கிரஸ் குடும்ப அரசு தயார். உங்கள் அம்மா தயாரா ? பீகாரில் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழ் நாட்டிலும் பாண்டிச்சேரி உட்பட 39+1= 40 தொகுதிகள் தான். நிதீஷுக்கு கொடுக்கப்பட்ட தொகை பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறத்தான் தம்பி. கூட்டணிக்கு அல்ல. தேர்தல் சமயத்தில் கூட்டணிக்கு சம்மதித்தால் அதற்கு தனியே தக்க சன்மானம் வழங்கப்படும். தமிழக ஆளும் கட்சியான அம்மா அவர்களும், அண்ணா திமுகவுடன் கூட்டு சேர காங்கிரசை அனுமதித்தால் , சில பல ரொக்க பரிசும், கணக்கில் சொல்லமுடியாத சில சலுகைகளும் வழங்கப்படும். அம்மாவிடம் யாராவது எடுத்துச் சொல்லி , எங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி மாம்பழம் வாங்கித்தாருங்கள். நல்ல விலை தருகிறோம். பீகார் விலையைவிட சற்று அதிகமாக நிச்சயம் தருவோம். என்ன கூட்டணிக்கு யாராவது தயாரா?   13:08:05 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

ஜூன்
19
2013
அரசியல் பீகார் அரசின் முடிவுக்கான ஆரம்பம் தொடங்கிவிட்டது லாலு
காங்கிரசிடம் 44000 கோடி ரூபாய் நிதி உதவி என்றபெயரில் லஞ்சம் பெற்று உள்ளார் நிதீஷ். எனவே காங்கிரசுக்கு ஏற்றபடி குரைத்துத்தான் ஆக வேண்டும். வாங்கிய காசுக்கு குரைக்காத வங்களை என்ன செய்வார்கள் தெரியுமா ?   07:37:26 IST
Rate this:
1 members
1 members
24 members
Share this Comment

ஜூன்
19
2013
அரசியல் பீகார் அரசின் முடிவுக்கான ஆரம்பம் தொடங்கிவிட்டது லாலு
கற்பனைகள் செய்துகொண்டே போக எல்லோருக்கும் உரிமை உண்டு அண்ணா. பாஜக கூட்டணியிலிருந்து நிதீஷ் விலகியதால், நாற்பது தொகுதியிலும் அவர் கட்சி தோல்வி உறுதி. பாஜகவுக்கும் நாமம் தான். காங்கிரசுக்கும் நாமம் தான். லாலுவும், ராமவிலாஸ் பாஸ்வானும் சேர்ந்து 40 தொகுதியையும் கைப்பற்றப்போவது உறுதி.   07:35:18 IST
Rate this:
7 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
6
2013
விவாதம் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தேவையா?
இந்த தேசீய தீவிரவாத தடுப்பு மையம் தேவை இல்லாதது. பிடிக்கப்பட்ட தீவிரவாதிகளிடம் உண்மை அறியும் பரிசோதனை ( BRAIN MAPPING AND NARCO ANALYSIS TESTS) நடத்தி , உண்மைகளை வரவழைத்தாலே தீவிரவாதிகளின் கோட்டை கலகலத்து விடும். தீவிரவாதத்தை வளர்த்து விடுவதே காங்கிரஸ்காரர்கள் தான். மும்பையில் வந்து 300 பேரை கொன்ற பாகிஸ்தானிய தீவிரவாதிகளை அனுப்பிய பாகிஸ்தான் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் காங்கிரஸ்காரர்கள் ? எவ்வளவு நாள் பேச்சுவார்த்தை நடத்துவது ? ஐந்து வருடம் முடிந்துவிட்டது .( 2008-2013 ) காங்கிரஸ் ஒழிந்தாலே தீவிரவாதம் ஒழிந்துவிடும். காங்கிரஸ் நம் நாட்டை பிடித்த ஏழரை நாட்டு சனியன். சனி விலகும் நாள் வெகு தொலைவில் இல்லை.   20:22:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
8
2013
அரசியல் பா.ஜ.,வில் பிளவு அத்வானி வீடு மோடி ஆதரவாளர்கள் முற்றுகை
திமுக அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பது உண்மை. இந்த கலாட்டா செய்வோர் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களாக கூட இருக்கலாம். ஏனெனில் காங்கிரஸ் குண்டர்கள் கலைஞருடன் பலகாலமாக கூட்டணி வைத்திருந்ததால், திமுகவினரின் குறுக்கு விஷப்புத்தி அவர்களுடன் ஏராளமாக ஒட்டிக்கொண்டு விட்டது. கருத்து கண்ணாயிரம் எம் ஏ பாண்டி அவர்களே, காங்கிரஸ் கொள்ளையர் கட்சி, பாஜக அப்படியல்ல. காங்கிரசில் கொள்ளையர்கள் மட்டுமே உள்ளனர். ஒரே விதிவிலக்கு என்று விரல் விட்டு எண்ணக்கூடிய ஏ கே அந்தோனி , சிவராஜ் படீல் ஆகியோரை மட்டுமே கூறமுடியும். ஆனால் பாஜகவில் ஏராளம் பேர் நல்லவர்கள் உள்ளனர்.   18:29:59 IST
Rate this:
6 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
3
2013
அரசியல் "போர்..போர்..போர் கருணாநிதி பிறந்த நாள் செய்தி மத்திய, மாநில அரசுக்கு எச்சரிக்கை
செம்மொழியா, அதில் என்ன தம்பி சிறப்பு இருக்கு ? அதி மோசடி அது . தமிழை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லாமே செம்மொழி தான் தம்பி. அதில் நம் தமிழனுக்கு என்ன சிறப்பு இருக்கு ? நேற்று உருவான மொழிக்கு கூட செம்மொழி பட்டம் கொடுக்க மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. கருணாநிதியின் பித்தலாட்டங்கள் இனி எடுபடாது. அவர் தமிழனுக்கு செய்த நன்மைகள் வருமாறு:- 1. 1-9-1972 முதல் சாராயம். 2. சர்க்காரியாவினால் விசாரிக்கப்பட்ட இன்னபிற ஊழல்கள் 3. உலகப்புகழ் டூ ஜி. 4. வேடசந்தூர் அணைக்கட்டு கலைஞர் ஆட்சியில் கட்டி ஒரு வருடத்திலேயே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது. இது ஒரு கின்னஸ் ரெக்கார்டு.   06:01:45 IST
Rate this:
194 members
1 members
216 members
Share this Comment

ஜூன்
4
2013
சம்பவம் பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை
அந்த சகோதரியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் .   05:36:57 IST
Rate this:
2 members
1 members
21 members
Share this Comment

ஜூன்
3
2013
அரசியல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் மத்திய தகவல் ஆணையம் அதிரடி
இது ஒரு நல்ல உத்தரவு தான் என்றாலும் நம் நாட்டில் பெருந்தலைகள் டூ ஜி , நிலக்கரி , ஆதர்ஷ் என்று இன்னும் வரிசைப்படுத்த இடம் இல்லாத ஊழல் பணத்தை வெளிநாடுகளுக்கு எப்படியோ கொண்டுபோய் விடுகிறார்கள் .பெரிய பதவியில் இருப்போர் எத்தனை ஊழல் செய்தாலும் அவர்களுக்கு ஓய்வு பெற்றவுடன் , மேலும் சில கவுரவப்பதவிகள் கொடுக்கப்படும் பழக்கம் வளர்ந்து வருகிறது. ஊழல் ஒழிப்பு பதவிக்கே, ஏற்கனவே வழக்கில் சிக்கியுள்ள ஒரு பெருமகனை நியமித்தனர். ஆனால் நீதிமன்ற தலையீட்டுக்கு பின்னரே, அவர் இராஜினாமா செய்ய நேரிட்டது. நம் நாட்டில் அரசியல்வாதிகள் பத்தினி வேடம் போடுவதற்கு பெரிய அதிகாரிகளில் பலர் உடந்தையாக உள்ளனர். இல்லையெனில் அரசியல்வாதிகள் இவ்வளவு பெரிய ஊழல்களை செய்ய முடியாது. எனவே என்ன தான் சட்டங்கள், உத்தரவுகள் புதிது புதிதாக வந்தாலும் , மக்களிடம் போடி என் சேஷனுக்கு முன் இருந்த பல தேர்தல் கமிஷனர்கள் பயன்படுத்தவில்லை. டி என் சேஷன் அவர்கள் தான் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி , தனக்கு பிறகு வந்த அதிகாரிகளுக்கு ஒரு வழி காட்டி முன் உதாரணம் ஆனார். டூ ஜி உட்பட பல ஊழல்களை அதிகாரிகள் நினைத்தால் தடுத்திருக்க முடியும்.   05:17:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
2
2013
பொது சரியான முடிவு எடுத்துள்ளேன் சீனிவாசன் விளக்கம்
ஐயா,தங்கள் முடிவு மிக சரியானது. பாராட்டுக்கள். முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு தாங்கள் பொறுப்பேற்றவுடன் செய்த உதவிகள் யாராலும் என்றும் மறக்கவோ, மறுக்கவோ முடியாதவை. இந்த விசாரணைகள் முடிந்தவுடன், மேட்ச் பிக்சிங் விஷயத்தில் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது நிரூபணமாகும். தாங்கள் மீண்டும் இந்த தலைவர் பதவியில் சிறந்த முறையில் தொடர்ந்து பணியாற்றவேண்டும். அதுவே அனைவரின் விருப்பமும்.   20:02:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment