விபத்து நடந்த பின்னர் அதனை கையாண்ட விதம் தான் எரிச்சலடையச் செய்கிறது. ஒரு பன்னிரண்டு அடி ஆழத்தை தோண்ட எவ்வளவு நேரம் ஆகும்? பாறையை வெண்ணை போல வெட்டியெடுக்கும் இயந்திரங்கள் வந்துவிட்ட காலத்தில் இன்னும் மின்பாரைகளை வைத்துக்கொண்டு.... இத்தனைக்கும் காலையில் எட்டு மணிக்கு விழுந்த குழந்தை மதியம் ஒரு மணி வரையிலும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறது.கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம். போர்வெல் போட்டவர்களுக்கு அந்த இடத்தில் பாறை இருக்கிறது என்பது தெரியாதா? அப்படியே இருந்தாலும் இன்னொரு போர்வெல் இயந்திரத்தினால் 12 அடி தோண்ட எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்? மீட்புப்பணிகளை முடுக்கி விட அனைவரும் வந்து விட்டனர்.. ஆனால் மீட்புப் பணியை செய்யத்தான் ஆட்களை காணோம். மதியம் வரை பேசிக்கொண்டு இருந்த குழந்தை மாலையில் பார்த்தால் மண் மூடிக் கிடக்கிறது என்கிறார்கள். இதனால் தான் ஆக்சிஜன் போகவில்லை. குழந்தை இறக்க அதுவே காரணமாகி விட்டது. மேலே சேரும் மண்ணை அகற்ற என்ன முயற்சி மேற்கொள்ளப் பட்டது? 1500 ரூபாய் வாக்குவம் கிளீனர் அந்த வேலையை செய்திருக்குமே... கேட்பது சுலபம்தான் என்று எனக்குத் தெரியும். கஷ்டப்பட்டாவது கூறுவதற்கு இவர்களிடம் பதில் இருக்கிறதா? நிச்சயமாக அங்கு இருந்தவர்கள் 100% உதவத் தயாராக இருந்திருப்பர். ஆனால் அங்கு வேலை செய்பவர்களைக் கூட வழிநடத்த அங்கு யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மை. ஒரு தலைவனின் முக்கியத்துவம் இப்போது புரிகிறதா? நில உரிமையாளரையும் போர்வெல் கம்பெனி உரிமையாளரையும் சுலபமாக பிடித்து உள்ளே அடைத்து விடலாம். குழந்தை உள்ளே விழ இவர்கள் இருவரும் தான் காரணம். ஆனால் அவள் இறக்க காரணம் இவர்கள் இல்லை என்பது மற்றவர்கள் சொல்லத் தயங்குகிற உண்மை.
28-ஏப்-2013 10:13:15 IST
தொலைக்காட்சியில் நான் பார்த்தது... குழந்தை தலைகீழாக மாட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் தலைப்பகுதிக்கு ஆக்சிஜன் செல்கிறதா என்று கூட தெரியாமல் மாலை வரை ஆக்சிஜனை உள்ளே செலுத்திக் கொண்டு இருந்திருக்கின்றனர். ஆயிரம் பேருக்கு மேல் வேடிக்கை பார்க்க கூடி இருக்கின்றனர். ஆனால் மண்வெட்டி கொண்டு ஒரே ஒருவர் மண்ணை வெட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்த மண்ணை வாங்கிப்போடக் கூட யாரும் முன்வர வில்லை. ரொம்ப முக்கியமாக அனைவரும் மொபைல் போனை காதில் பிடித்துக் கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டிருக்கின்றனர். இது தான் நமது லட்சணம். யாரையும் குறை பட்டுப் பிரயோஜனம் இல்லை.
27-ஏப்-2013 18:47:08 IST
டில்லியில் முதல் சம்பவம் நடந்த பின்னர் இதே போன்ற ஒரு சம்பவம் நெல்லையிலும் நடந்தது. ஆனாலும் நமக்கு இந்த அளவிற்கு சொரணை இல்லையே... டெல்லியிலாவது தட்டிக் கேட்க இவ்வளவு பேர் இருக்கிறார்கள். இங்கே நடந்தது என்ன? நமக்காகவும் அவர்கள் தான் வந்து போராட வேண்டுமா? நாம் இங்கு என்ன கிழித்தோம் என்று சிந்தித்தால் அவர்களை பாராட்டக் கூட நமக்கு அருகதை இல்லை என்பது புலப்படும்.
21-ஏப்-2013 10:08:00 IST
அந்த தந்தைக்கும் சகோதரனுக்கும் எந்த தண்டனையும் வழங்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்களின் கடமை. அப்போது தான் மற்ற ஈனப் பிறவிகளுக்கு பயம் வரும்.
21-ஏப்-2013 09:49:15 IST
அது என்ன எல்லாரும் மற்றவர்கள் வந்து போராட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறீர்கள்? அதுவும் படிக்கும் பிள்ளைகளை உங்கள் சுயநலத்திற்காக போராட அழைப்பதற்கு வெட்கமாக இல்லை? இந்த விவசாயிகள் அதிக லாபம் தேடித்தான் மற்ற நாடுகளுக்கு படையெடுக்கிறார்களே தவிர பஞ்சம் பிழைக்க அல்ல. இவர்களை விவசாயிகள் என்று கூறுவதே தவறு இவர்கள் பண்ணைக்காரர்கள். இந்திரா காந்தி எண்ணியது போல இந்த ஜமீன்தார்கள் மீது வரி விதித்திருந்தால் அப்போது தெரியும் இவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று. ஒன்று இரண்டு நிலங்களை வைத்திருந்தவர்கள் எல்லாம் பெரும் பண்ணைக் காரர்களிடம் அதிக விலைக்கு நிலத்தை விற்று விட்டு பிள்ளைகளை பட்டணத்துக்கு வேலைக்கு அனுப்பி வெகு நாளாயிற்று. நாம் நினைப்பது போல் இப்போது விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் ஏழைகள் அல்ல. அவர்களிடம் தினசரி கூலி வேலை செய்பவர்கள் தான் ஏழைகள். இந்த பண்ணைக் காரர்கள் ஒன்றும் வெள்ளந்தி மக்களும் அல்ல. இப்போது விவசாயம் செய்பவர்கள் பலர் இதை ஒரு லாபகரமான தொழிலாகவே நடத்தி வருகிறார்கள். நெல் விற்ற பணத்தை பாலிதீன் பைகளில் கட்டி பத்தாயத்திற்குள் போட்டு வைக்கும் உறவினரை எனக்குத் தெரியும். ஒரு நண்பர் சொன்னது, "எந்த தொழிலிலும் நட்டம் வரும் ஆனால் கையை கடிக்காத ஒரே தொழில் விவசாயம் மட்டும் தான்" என்று. இலவச மின்சாரம், ஆற்றில் இலவசமாகக் கிடைக்கும் தண்ணீர், மானிய விலையில் உரம் மற்றும் விவசாயக் கருவிகள், வங்கிகளில் மிகக் குறைந்த வட்டியுடன் கடன் ( பெரும்பாலும் தள்ளுபடி செய்யப் படுகின்றன). பயிர் பாதுகாப்புக்காக இன்சூரன்சும் செய்து கொள்கிறார்கள். இவை எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு நஷ்ட ஈடு வேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் போராட்டம் வேறு. கண்மூடித்தனமாக எதையும் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் பெரும்பான்மையாக உள்ள நடுத்தர மக்களின் ரத்தத்தில் ஊறிப் போன ஒன்று. நாம் விழிப்புணர்வு பெறும் வரை நாலாபக்கம் இருந்தும் அனைவரும் நம்மை சுரண்டிக் கொண்டேதான் இருப்பார்கள்.
19-ஏப்-2013 05:02:17 IST
குடும்ப அமைப்புகளை குறிவைத்து சீரழித்து வரும் அரசின் திட்டங்களுள் இதுவும் ஒன்று. எந்தத் திட்டதையுமே ஆரம்பிப்பது எளிது. விளைவுகள் இப்போது தெரியாது. உணவுக்காகத்தான் கணவன்மார்கள் அவ்வப்போது வீட்டுக்கு வந்து போய்க் கொண்டு இருந்தனர்.. இப்போது டாஸ்மாக்கில் குடித்து ரோட்டோரத்திலேயே படுத்துத் தூங்கி, மலிவு விலை உணவகங்களில் சாப்பிட்டு கீழ்த்தட்டு ஆண்களின் வாழ்க்கை வீடில்லாமலேயே ஜரூராக நடக்கும். அப்படியே மலிவு விலை விலைமாதர் விடுதிகளையும் திறந்து வைத்து விட்டால் மக்கள் தொகைப் பெருக்கத்தை பெரிதளவு தடுக்கலாம்.
17-ஏப்-2013 16:38:21 IST
நவமயம் / தமிழவேல்... நமது பெண்களையும் அமெரிக்காவில் வாழ்வது போல் வாழச் சொல்வீர்களா? வயதான காலத்தில் பெற்றோரை தவிக்க விட்டுவிட்டு காதலியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சல்லாபிக்கும் பிள்ளைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? பெற்றோர்களின் கண்டிப்பும் ஆதரவும் இருப்பதால் தான் பிள்ளைகள் இறுதிவரை பெற்றோரை பாதுகாப்பதை கடமையாக கருதுகிறார்கள். எனவே கலாச்சாரத்தையும் அரசின் கடமைகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க இயலாது. அரசுக்கு எது நலம் பயக்குமோ அதனை மற்ற நாடுகளில் இருந்து கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை. வாழ்க்கை முறையை அமெரிக்கர்கள் நம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள முயல்கிறார்கள். "நீ மட்டும் ரொம்ப ஒழுங்கோ..? " என்று விதண்டாவாதம் செய்வது, உறுதியான எதிர் கருத்து இல்லை என்பதையே காட்டும். தனிப்பட்ட விமர்சனம் என்பது, கூறுபவர் மேல் எதிர்மறை தாக்கத்தையே ஏற்படுத்தும்.
16-ஏப்-2013 20:08:37 IST