மணிவண்ணன் அவர்கள் திரை உலகில் தனக்கென முத்திரை உடையவர். நல்ல மனிதர். தொடர்ந்து இலங்கை மக்களுக்குக் குரல் கொடுத்தவர். அவரின் ஆன்மா சாந்தியடைவதாக..
15-ஜூன்-2013 17:09:18 IST
இவர் தஞ்சை நகரின் தனித் தன்மையான அடையாளம். இவரிடம் போளி வாங்கி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. என்றும் மாறாத சுவையுடன் அசாத்தியமான கைப்பக்குவத்துடன் திகழ்பவை இவருடைய போளிகள். இவருடைய நேர்மையான தொழில் தர்மம் தான் - இன்றைக்கு தினமலரில் தகவல் வரும்படிக்கு செய்திருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவருடைய போளிகளை உண்டு களித்தவன் என்பதில் பெருமை கொள்கின்றேன்.
08-ஜூன்-2013 22:55:30 IST
சரியான முடிவு.. வரவேற்கத்தக்கது. பெண் பிள்ளைகளுக்கு ஆண்கள் சரியான ஆசிரியர் ஆக மாட்டார்கள் என்பதை அறிந்து கொண்டதற்கு நன்றி... கண்ணியமான ஆசிரியப் பணிக்குக் களங்கம் விளைத்தவர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும். இனி ஆசிரியைகளும் பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் பெண்குலத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும்..
04-ஜூன்-2013 11:01:53 IST
இதுவும் காலத்தின் கொடுமையா... பாவப்பட்ட ஜென்மங்கள்... யார் காப்பாற்றி கரை சேர்ப்பது?... பாவம் அந்தக் கைக்குழந்தை.. அது நல்லபடியாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்...
04-ஜூன்-2013 09:27:36 IST
செம்மொழியான தமிழை, கன்னித் தமிழ் - தமிழ் கன்னி என உருவகம் செய்து கொண்டால் இவர் சொல்வது சரியாகத்தான் இருக்கின்றது. இவருடைய பூம்புகார் திரைப்படத்தில் ’’ அன்று கேட்கும் அரசன் ஆணை வென்று விட்டது. நின்று கேட்கும் தெய்வம் இங்கே வந்து விட்டது ‘’ - என ஒரு பாடல் கே.பி. சுந்தராம்பாள் பாடியிருப்பார். அதன்படி கன்னித் தமிழ் செம்மொழியாகி இவர் செய்த அக்கிரம அரசியல் வாழ்வுக்கு ஆப்பு அடித்து விட்டது என்று கூட சொல்லலாம்... எப்படியோ உண்மைகள் என்றைக்கும் உறங்கிக் கொண்டே இருப்பதில்லை...
04-ஜூன்-2013 09:18:34 IST
போறதெல்லாம் சரிதான்.. போன பிறகு தான் நிலைமை மாறிப் போய் விடுகின்றது... வயதுக்கு மூத்த கலைஞர்களை - குறிப்பாக நடிகர் திலகம் அவர்களை - எல்லாம் ஏளனம் செய்து நடித்து மேடைக்கு வந்தவனுக்கும் திரை உலகம் வாய்ப்பையும் வசதியையும் தந்தது பாருங்கள்.. அது தான் காலத்தின் கோலம்...
03-ஜூன்-2013 18:23:14 IST