மதங்களை முழுமையாக புரிந்துகொண்டவர்கள் யாரையும் மதம் மாற சொல்ல மாட்டார்கள் ... பெற்ற குழந்தையை அனாதையாய் விட்டுவிட்டு வா, நான் உன்னை மட்டும் வைத்துக்கொள்கிறேன் நாயகியாய்... என்ன அருமையான திட்டம் .. ஆசை தீர்ந்ததும் துரத்தி விட்டால் கேட்க நாதியில்லை ... பெண்ணே , சகுந்தலா அம்மா சொன்ன மாதிரி இஸ்திரி பெட்டியை கையில் எடு ... மகளிர் அமைப்புகள் மூலம் இலவச சட்ட உதவி மையத்துடன் தொடர்புகொண்டு , உன் புருஷனை வழிக்கு கொண்டு வரப்பார் ... முடியாவிட்டால் விவாகரத்து வாங்கி உன் தகுதிக்கு ஏற்றவனை திருமணம் செய்து வாழ்... வீண் கனவு காணாதே ...
21-மே-2013 10:44:38 IST
எங்க தலைவர் துணைவி , இணைவி என்று வைத்திருந்தாலும் எப்படி சமாளிக்கிறார் .. எத்தனை கொள்ளை அடித்தோம் என்று வெளியே வருகிறதா ?.. I A S பாஸ் செய்து என்ன பிரயோஜனம் ?.. வாங்க, வந்து எங்க தலைவர் கிட்ட கத்துக்கங்க .
15-மே-2013 09:54:52 IST
//நடப்பாண்டில், மதுபானங்களுக்கு எதிரான தீவிரமான விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் முகாம்கள் நடத்தப்படும். மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து, குறும்படம் எடுத்து, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளில் திரையிடப்படும்.// இந்த வருட விற்பனை இலக்கு 30 ஆயிரம் கோடி ... ( நேற்றைய தினமலர் செய்தி ) எங்க காதுல நித்தமும் பூ திரு நத்தம் அவர்களே ..
15-மே-2013 09:48:36 IST
அப்படியே கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியிலும்(GCT ) காமிரா பொருத்துங்கள் .... நிறைய பேராசிரியர்கள் வகுப்பிற்கே வருவதில்லை ... அரசு கல்லூரி என்பதால் யாரும் கேட்க முடியாது ... மாணவர் ஏதாவது கேட்டால் மார்க் போடாமல் பெயில் ஆக்கிவிடுவேன்(சுயாட்சி கல்லூரி ) என்று மிரட்டுவார்கள் ...
09-மே-2013 16:04:00 IST
//சட்டசபையில் பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, "மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் வேலி, பூங்கா போன்றவற்றை, பா.ம.க.,வினர் சேதப்படுத்தி, கோவில் கோபுரத்தில், கட்சி கொடியை நட்டனர்" என்றார்.// ... இன்னும் எத்தனை அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர் ... அம்மா தமிழக மக்கள் உங்களை தேர்ந்தெடுத்ததே "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் , அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவீர்கள் " என்ற நம்பிக்கையில்தான் ... இனியும் பொறுமையோடு இந்த கூட்டத்தின் வெறியாட்டத்தை வேடிக்கை பார்க்காதீர்கள் ... அன்று மரத்தை வெட்டி மழை வளத்தை அழித்தார்கள்.. இன்று புராதன சின்னத்தையே அழிக்கிறார்கள் .. எத்தனை பேருந்துகளை தீயிட்டு கொழுத்தியுள்ளார்கள்... இதெல்லாம் இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா ?.. சேதப்படுத்திய சொத்துக்கான மதிப்பை இவர்கள் கட்சி நிதியிலிருந்து வசூல் செய்யவேண்டும் ... அதிரடி நடவடிக்கை எடுங்கள் ... தமிழக மக்கள் உங்களைத்தான் நம்பியுள்ளோம் ...
01-மே-2013 10:06:55 IST
பாதிக்கப்பட்டதாக கூறும் நபர், தன் மனைவியின் தற்போதைய வயது என்ன என்று சொல்லவில்லை ... வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் இந்தபிரட்சினை வரலாம் ... வயது அதிகமான ஆண்கள் சிறு வயது பெண்ணை விரும்பி மனம் செய்தால் பின்னாளில் இது போன்ற பிரட்சினைகள் ஏற்ப்படும் ...எனக்கு தெரிந்து ஒருவர் 45 வயதான (விதவர்) ஒரு 20 வயது பெண்ணை , பெற்றோருக்கு பணம் கொடுத்து கட்டாய மனம் செய்து கொண்டுவந்து வைத்திருந்தார் ... இரவில் அந்த பெண் இவரை தொட விடாமல் முரண்டு பிடிப்பார் ... அந்தப்பெண் எப்போதும் அழுதுகொண்டே இருப்பார் ..எப்படியோ கஷ்டப்பட்டு அந்தப்பெண் இந்த ஆளிடமிருந்து தப்பித்து சென்றுவிட்டாள்.. ஒரு கன்னியாஸ்திரி மடத்தில் அந்த பெண்ணிற்கு ஆதரவு கொடுத்து காப்பாற்றப்பட்டாள்... ஆண்களே திருமணம் செய்வதற்கு முன் உங்களுடன் வாழ்க்கையில் இணையப்போகும் பெண்ணுடன் பேசி முடிவெடுங்கள் ... பெண்ணுக்கு உங்களை பிடிக்காதிருந்தால் திருமணம் செய்யாதீர்கள் ..திருமணம் முடிந்த பின்னும் சம்பாதிக்கிறது மட்டும் வேலை இல்லை ... வீட்டுக்காரியையும் கவனியுங்கள் ...
29-ஏப்-2013 11:15:15 IST
நின்னா வரி , உக்காந்தா வரி என்று ஆயிரம் வரியை போட்டு மக்கள் பணத்தை மத்திய , மாநில அரசுகள் கொள்ளை அடித்து , பிறகு அந்த பணத்தின் ஒரு பகுதியை மானியம் என்று நமக்கு திருப்பி கொடுக்கின்றன ... இதுல நான்தான் கொடுப்பேன் என்று ஓட்டுக்காக இருவரும் சண்டையிடல் வேறு ... மொதல்ல வரியைக் குறையுங்கள் , விலைவாசி தானாக குறையும் .
28-ஏப்-2013 10:13:35 IST