இலவசம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி வழங்குவது நியாயமே.ஆனால் வசதி படைத்தவர்களுக்கு ஆடு, மாடு ,கோழித்தீவன உபயோகத்திற்காக இலவச அரிசியை வழங்கி வீணடித்தால் இது போன்ற நெருக்கடிகள் அரசுக்கு வரவே செய்யும் ...
23-மே-2013 11:59:02 IST
வழிபாட்டு இடங்களை வணிக மயமாக்கும் போக்கு ஆட்சியாளர்களிடம் மாற வேண்டும். கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சேவை மனப்பான்மை மறைந்து வருமானம் மட்டுமே குறிக்கோளாக மாறுகிறது. இந்துக்கள் என்ற போர்வையில், கோவில் நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள மதப்பற்றில்லாத அல்லது வேற்று மத நபர்களால் நிர்வாகம் செய்யப்படுவதால் இது போன்ற விபரீத வரிகளை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விதித்து மத மாற்றத்திற்கு வழி செய்கிறார்கள். வாக்கு வங்கி அரசியல் கருதி ஆட்சியாளர்களும் இதனை கண்டுகொள்வதில்லை என்பது வெட்கக்கேடு...
23-மே-2013 11:47:58 IST
தொலை நோக்கு திட்டங்கள் ஆட்சியாளர்களிடம் மறைந்து போய், இலவசங்களை அளித்தே ஐந்தாண்டுகளை சமாளித்து விடலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் 1996 முதல் ஆட்சிகள் நடை பெற்றதன் காரணமே தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறைக்கு காரணமாகும்.அடுத்து தண்ணீர் பற்றாக்குறையை தமிழகம் எதிர் நோக்கியுள்ளது ...
22-மே-2013 10:22:08 IST
கமிசன் ,கட்டிங் பெறும் ஊழல் அரசியல்வாதிகளுக்கிடையில், கோவை மாநகராட்சி ஆணையர் போன்று ஒருசில அதிகாரிகள் நேர்மையாளர்களாக இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது...
18-மே-2013 11:11:31 IST
அரசு உள்ளாட்சிகள் மூலம் அல்லது கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் வழங்கும் நீர் அப்படியே குடிப்பதற்கு அருகதையாக உள்ளதா என்றால் இல்லை என்பதுதான் பதில்.அந்த அளவிற்கு அரசு நிர்வாகம் வழங்கும் குடிதண்ணீர் தூய்மையற்றதாக உள்ளது.இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் காசு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ,தூய்மையற்ற நீரை கேன்களில் அடைத்து முடிந்த மட்டும் சம்பாதிக்கின்றனர்.மக்களும் கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் தூய்மையானது எனக்கருதி, தண்ணீரை மட்டுமல்லாது நோயையும் விலை கொடுத்து வாங்குகின்றனர். மக்கள் குடிக்கும் தண்ணீர் குறித்து அரசிடமும் விழிப்புணர்வு இல்லை.ஆறுகளில் மணல் ஒரு மீட்டர் அளவுதான் தோண்டி அள்ள வேண்டும் என அரசு விதி இருந்தும் கூட , பல இடங்களில் இரண்டு மீட்டர் ,மூன்று மீட்டர் அளவுக்கு தோண்டப்பட்டு மணல் கொள்ளை போவதால் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. ஏரிகளும் ,குளங்களும்,நீர்வரத்து கால்வாய்களும் தூர்க்கப்பட்டு, வீட்டு மனைகளாக மாறி வருகிறது.மழை காலத்தில் பெய்யும் மழை நீரை சேமிக்கும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் பாழடிக்கப்பட்டு வருகிறது.அரசும் இது குறித்து அக்கறை கொள்ளவில்லை.இதே நிலை நீடித்தால்தமிழ்நாட்டில் இன்று மின்சாரத்திற்கு அவதிப்படுவது போல் நாளை தண்ணீருக்கும் அவதிப்படும் காலம் விரைவில் வரும் .எனவே அரசு இனியும் தேவையற்ற இலவசங்கள் அளிப்பதை தவிர்த்து ,போர்க்கால அடிப்படையில் குடிநீருக்கான தொலை நோக்கு பெரும் திட்டங்களை நிறைவேற்ற முன்வர வேண்டும்.இல்லையேல் தமிழ்நாடு நீரில்லா பாலைவனமாக மாறி விடும் ...
18-மே-2013 10:58:06 IST
திராவிட கட்சிகளின் ஸ்தாபகர் ஆன அண்ணாதுரை அவர்கள் 1967 ஆம் ஆண்டு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட போது ,அவருக்கு இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும், வசதியும் இருந்தும் கூட, கொல்லைப்புற வழி என அவரால் வர்ணிக்கப்பட்ட எம்.எல்.சி .பதவி மூலமே முதல்வர் ஆனார்.அது போல மிகப்பெரும் பொறுப்பிலுள்ள பிரதமர், வீடு வீடாக ஏறி ஒட்டு கேட்பதை தவிர்க்க நினைத்திருக்கலாம்.தேர்தலில் நின்று பணத்தை தண்ணீராக வாரி இறைத்து செலவு செய்து விட்டு பின்னர் இது ஜனநாயகத்தின் வெற்றி என முழங்குவதை விட கொல்லைபுற வழி ஒருவகையில் நியாயமே ...
17-மே-2013 18:37:11 IST
பான் ,குட்கா போன்றவை உடல் நலத்திற்கு எவ்வளவு கேடோ அவ்வளவு கேடு மதுவும்.எனவே பான்,குட்காவிற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுப்பது போல், டாஸ்மாக்கை மூடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17-மே-2013 11:01:24 IST
ஒருபக்கம் நமது அரசியல்வாதிகள் ,அதிகாரிகள் கமிசன் என்ற பெயரில் நாட்டை சூறையாடுகின்றனர். கிரிக்கட் வீரர்கள் பிக்ஸிங் என்ற பெயரில் விளையாட்டில் கமிசன் பெறுகின்றனர். ஆக நாட்டில் எல்லாமே ஊழல் மயம்தான்,அரசு எவ்வழியோ குடிகளும் அவ்வழியே...
17-மே-2013 10:53:13 IST