குஜராத் மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் அசுர வளர்ச்சியை ஏற்படுத்திய மோடி, இந்தியாவின் பிரதமர் ஆனால் அசைக்க முடியாத சக்தியாக, மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக,இரும்பு மனிதராக நிச்சயம் உருவெடுப்பார்.இதனால் நிதீஷ் குமார் உள்ளிட்ட பலருக்கு பிரதமர் கனவு கானல் நீராகி விடும்.எனவே மோடியை எதிரியாகவும், போட்டியாளராகவும் அரசியல்வாதிகள் பலரும் கருதுகின்றனர். எனவே முற்றிலும் சுயநலத்தின் அடிப்படையிலான நிதீஷ் குமார் போன்றோரின் பிடிவாதம் நியாயமற்றதே...
17-ஜூன்-2013 10:58:40 IST
செலுத்தப்பட வேண்டிய கூடுதல் டெபாசிட்டுக்கான விவரங்களை, மின்வாரியம் முன்பெல்லாம் நுகர்வோருக்கு கால அவகாசத்துடன் கூடிய டிமாண்ட் நோட்டீஸ் கொடுத்து, அதன் பின்னரே வசூலிக்கும் நடைமுறை இருந்தது. அதுபோல அவரவர் செலுத்தும் மின் டெபாசிட்டுகளுக்கு ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்பட்டு, அது ஏதாவது ஒரு மாத மின் கட்டணத்தில் கழித்து கொள்ளப்படும் நடை முறையும் இருந்தது. தற்போது எல்லா நடைமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டது.மின் வாரியத்திற்கு பணம் தேவையென்றால் எல்லாம் அதிரடி நடவடிக்கையாக மாறி விட்டது. பொதுமக்களை பற்றி அரசோ, மின்வாரியமோ யாருமே சிந்திப்பதில்லை ...
14-ஜூன்-2013 12:22:42 IST
வெள்ளையர்கள் இந்த நாட்டை சுரண்டியதை விட ஆட்சியாளர்கள் நாட்டை சுரண்டியதுதான் அதிகம்.ஆட்சியாளர்கள் தங்களது லஞ்ச லாவண்யத்தையும் ,வெட்டி செலவுகளையும் நிறுத்தி கொண்டாலே , நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நீங்கி விடும்.நாடும் நலம் பெறும் .மக்களும் வளமுடன் வாழ்வர் என்பது உறுதி ...
14-ஜூன்-2013 09:04:22 IST
தமிழனின் மதியை மயக்கி , அவனது மனைவி மக்களை தவிப்பில் ஆழ்த்தி விட்டு , புதுப்புது கலாச்சார சீரழிவுகளுக்கு டாஸ்மாக் காரணமாக இருப்பது வேதனை ...
13-ஜூன்-2013 10:51:49 IST
ஒருபக்கம் சாதனையோ சாதனை என்ற ஆட்சியாளர்களின் தம்பட்டம் .மறுபக்கம் தனது கர்ப்பிணி மனைவியை காப்பாற்ற ஒரு சாமானியனின் 40 கி.மீ.வேதனையோ வேதனை நடை பயணம்.சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகாலமாகியும் சாலைகள் இல்லை.போக்குவரத்து வசதிகள் இல்லை என்பது ஆட்சியாளர்களின் தவறே ...
11-ஜூன்-2013 10:56:24 IST
இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே குடும்ப அரசியல் அல்லது ஏக போக உரிமை என்ற பின்னணியில் தான் இயங்குகின்றன. இதில் பி.ஜே.பி.மட்டுமே விதிவிலக்கு உள்ள கட்சி என கூறலாம். எனவே அத்வானி போன்றோர் ஏற்கனவே ஒருமுறை பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தப்பட்டு தோல்வியை சந்தித்து விட்ட நிலையில், கௌரவமாக ஒதுங்கியிருந்தால் பாராட்டலாம். தற்போது மோடி முன் நிறுத்தப்பட்ட நிலையில், அத்வானி ராஜினாமா என்பது தள்ளாத வயதிலும் கூட பதவி ஆசைக்கு பலி ஆகி விட்டதாகவே கருத தோன்றுகிறது ...
11-ஜூன்-2013 10:25:37 IST
அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் கடமை மறந்து டாஸ்மாக்கிலும், கமிசன் கட்டிங் பெறுவதிலும் சிறப்பு கவனம் செலுத்துவதால், தேசிய கொடியின் மேல்பகுதி எது கீழ்பகுதி எது என அறியாமலேயே இது போன்ற தவறுகள் தொடர்ந்து தமிழகத்தில் நிகழ்வது கொடுமை ...
08-ஜூன்-2013 10:16:08 IST
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 42 ஆண்டுகாலமாக பதிவை தொடர்ந்து புதுப்பித்தும் கூட ராஜேந்திரன் என்பவருக்கு வேலை வாய்ப்புக்கான ஒரு நேர்முகத்தேர்வுக்கு கூட அழைப்பு இல்லை என்பது அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும் .எனவே அரசு இவருக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு மட்டுமின்றி மாதந்தோறும் ரூபாய் 3ஆயிரம் ஓய்வு ஊதியமும் வழங்க வேண்டுவது நியாயமான கோரிக்கையே ...
07-ஜூன்-2013 11:50:20 IST
கோவில்கள் அரசின் பிடியில் இருப்பதால், ஆளும் கட்சியினர் சம்பாதிப்பதற்கு கோவில் நிர்வாகமும் உடந்தையாக இருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுவது கவலை அளிக்கிறது ...
05-ஜூன்-2013 10:59:43 IST
அரசு பள்ளிகளில், கற்பித்தலில் தரம் மற்றும் உள் கட்டமைப்பு வசதி மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையேல் இன்னும் 10 ஆண்டுகளில் அரசு பள்ளிகள் இருந்தாலும் அதில் மாணவர்கள் சேர்ந்து படிப்பார்களா என்பது சந்தேகமே ...
05-ஜூன்-2013 10:47:54 IST