வாழ்க்கையின் அன்றாட நடைமுறை கல்வியை யாரும் விரும்புவதுமில்லை, அதனை கற்றுக்கொடுக்க சில நல்லாசிரியர்கள் முனைந்தாலும் இன்றைய கல்விமுறையின் எதிர்பார்ப்பில் முடிவதுமில்லை. இக்கட்டுரையின் மூலமாக சொல்லப்படும் கருத்து செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும். திரும்பிப்பார்க்க ஆளில்லை. கவர்ச்சி நாயகி நாயகர்களின் செய்திகளும், புளித்துப்போன சினிமாவும் தானும் இன்றைய பல நல்லுள்ளங்களுக்கு அவசியம். சில நல்லவர்களும் உள்ளார்கள். ஆனால் அவர்கள் கானல்நீராகவே இருக்கிறார்கள்.
14-மே-2013 07:01:13 IST
என்னமோ வசூல் பண்ணப்போற மாதிரியே பீத்திக்கிறாங்க. இதெல்லாம் சும்மா கண்துடைப்பு கணக்கெடுப்பு. இதற்குப்பிறகு எத்தனை சட்டரீதயான வழிகள் இதிலிருந்து தப்பிக்க, அதுவும் காலம்கடத்த, மென்மேலும் மக்களிடமிருந்து இதனை மறக்க செய்ய என செயல்கள் பலஆயிரம் இருக்குங்க. எதோ இன்னைக்கு செய்தி கொஞ்சம் பரபரப்பு. அவ்வளவுதான்.
13-மே-2013 07:08:42 IST
அதில்லாட்டி சினிமாகாரங்களுக்கு காவடி தூக்குவோம். ஜாதிக்கட்சிகளின் கோசங்களின் ஓசையில் அமைதிக்கு பங்கம் விளைவிப்போம். முக்கியமாக நமெக்கென்ன நம்ம வேலை நல்லா போகுது என ஆத்ம திருப்பிதி கொள்வோம். இங்கே சமூக ஒரு சாக்கடையாகல்லவா மாறிக்கெடக்கு, தூர்வார முயற்சித்தால் சொர்க்கவாசலல்லவா திறக்கும்.
09-மே-2013 10:09:36 IST
ஊழல், கற்பழிப்பு, லஞ்சம், சமூகசீர்கேடு, காலாச்சார சீர்கேடு என்று முதலிடப்பட்டியலில் நாம் பெருமைபட்டுக்கொள்கிறோம். அவ்வரிசையில் இதுவும் ஒன்று அவ்வளவுதான். அரசும் கண்டுகொள்ளாது, அப்படியே செய்தாலும் நம்மால் அவற்றை பயன்படுத்த வழிகள் கிடையாது.
09-மே-2013 08:12:12 IST
ஜாதியும், தற்பெருமை பேச்சும் தமிழனுக்கே உரித்தான குணங்கள் என்றாகிவிட்ட காலம் இதுவன்றோ. இலக்கியம், மருத்துவமும், அறிவியலும் அதனூடே கலந்த ஆன்மீகமும் கொண்டு சிறந்து விளங்கியிருந்தோம் என எங்கோ படித்த வரிகள் நினைவில் வர மறுக்கின்றன. பாழ்பட்டு போன சமூகமாகவே நம் இன்றைய நிலை ஆகிவிட்டதால் ஏட்டு சுரைக்காய் என்றளவில் கூட நம் பரம்பரையின் உண்மை நிலை இல்லை என்பது வேதனைக்குரிய செய்தி.
09-மே-2013 08:07:13 IST
தமிழன் என்றுமே இனம், மொழி, ஜாதி என பல்வேறு காரனங்களுக்காக சிந்திக்கும் திறனற்று உணர்ச்சிவசப்படும் கூட்டமாகவே மாறி இருக்கிறான் என்றே இந்நிகழ்வுகளின் மூலம் தோன்றுகின்றது. கண்மூடித்தனமாக குருட்டுத்தனமான நோக்கங்களுக்கு நேரத்தை செலவிடுவதிலேயே வாழ்வின் பெருபகுதியை செலவிட முயலுகிறான். தற்பெருமை கூடாது என தெரிந்தும் பழமை கொண்டு அதனை செவ்வனே செய்துகொண்டிருக்கிறான். உண்மையை சொன்னால் இளிச்சவாயன் என்று பட்டம் வேறு தருகிறான். படித்த முட்டாள்களின் பகுத்தறியும் திறனற்ற உணர்வெழும் செய்திகள் சில சமூக வலைதளங்களின் பக்கங்களின் பரவிக்கிடக்கின்றன. எங்கே செல்கிறோம், எங்கே இலக்கு, நன்மைகள் என்ன என பல்வேறு விஷயங்கள் தவிர்த்து புகழ்ச்சிக்கும், பதவிக்கும் ஆசைப்படும் கூட்டங்களால் நம் பெருமை நாமே கெடுத்துக்கொள்கிறோம்.
09-மே-2013 08:01:19 IST
தனக்கான தலைமையை தேர்தெடுக்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. இங்கே கர்நாடக மக்களின் முடிவினை குறைசொல்ல முடியாது. நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மற்றவரும் அதனை செய்யக்கூடாது என்னும் மனநிலை மக்களிடம் என்று மாறுமோ?. இங்கே நாம் சொல்லும் கருத்துக்களால் அரசியலில் மாற்றம் வரும் என்று நினைப்பது வெறும் கானல் நீர்தான். எதோ மன ஆதங்கத்தை இங்கே கொட்டி தீர்த்துக்கலாம்.
08-மே-2013 09:39:24 IST
நமக்குதான் அரசுப்பள்ளியில் படித்தால் கேவலமாச்சேலே. அப்புறம் அது எப்படி போனா நமக்கென்னலே. அரசுவெலையின்னா அப்படி ஒரு சுகம். கேள்விகேட்ட சங்கம் வச்சு போராடுவோமிலே. மேலும் சாதி சங்கம் மூலமா அரசையே ஒரு கை பார்போமில.
30-ஏப்-2013 08:58:41 IST
கட்சிதமா காரியும் முடிஞ்சிருச்சு. இருவருக்குமே ஒரு புது அனுபவம் கிடைச்சிருச்சு. அது போதுமே, வேறென்ன இதுக்குமேல இருக்குன்னு நினைச்சு சத்தமில்லாமல் பிரிஞ்சுன்டாங்க. இதுல நாம எதுக்கு கலாச்சாரம் பற்றி எல்லாம் பேசணும். அது சீரளிஞ்சுதான் பலகாலம் ஆயிடுச்சே....நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல அவ்வளவுதான்.
30-ஏப்-2013 08:51:13 IST