டெஸோ அறிவித்துள்ள 12ஆம் தேதி 'பந்த்'துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டுமாம்.
கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அடப்பாவிகளா..
ஐ.நா. மனித உரிமைக் கமிஷனில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வரப்போகிற தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காகத்தானே கருணாநிதி 'பந்த்' அறிவித்தார். இப்போது அதே மத்திய அரசு 'பந்த்'ஐ ஆதரிக்க வேண்டும் என்கிறாரே.. இது என்ன பைத்தியக்காரத்தனம் ..? அப்படியானால், யாரை எதிர்த்து பந்த்.. எதற்காக பந்த்..? கருணாநிதிக்கு என்ன ஆச்சு..? ஏதாவது... ...
09-மார்-2013 09:09:23 IST
ஞானதேசிகன் முதலில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகளை மூட உத்தரவிடுமாறு சோனியாவை வலியுறுத்திப் போராடட்டும் . அதன் பிறகு தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தட்டும். இல்லையேல் காங்கிரசை விட்டு வெளியேறி புதுக் கட்சி அல்லது பொதுநல அமைப்பு ஏதேனும் ஒன்றை ஆரம்பித்து அதன் சார்பில் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தட்டும்.
29-டிச-2012 12:03:53 IST
ஆட்சியில் இல்லாதபோதே இவர்கள் இப்படி ஆடுகிறார்கள். மீண்டும் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் எத்தனை கோடிகளை அரசின் துணையோடு கொள்ளையடித்திருப்பார்கள். நல்லவேளை.. மக்கள் தூக்கியெறிந்துவிட்டார்கள். மீண்டும் வெற்றி பெற்றிருந்தால், தமிழகத்தையே இவர்கள் தங்கள் குடும்பச் சொத்தாக மாற்றியிருப்பார்கள். தமிழகம் தப்பித்தது.
13-டிச-2012 13:05:31 IST
நான் தீபாவளி கொண்டாடுவதில்லை - கருணாநிதி.
கருணாநிதி உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.
ஏனெனில், கருண்நிதியால் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியாது.
தீமையை நன்மை வென்றதன் வெற்றி விழாவே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. கருணாநிதியை ஒரு தீய சக்தி என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரே கூறியிருக்கிறார். இந்நிலையில் தீமையை நன்மை வென்றதற்கான விழாவை ( தீபாவளியை ) கருணாநிதியால் எப்படிக் கொண்டாட முடியும் ..?
14-நவ-2012 15:12:50 IST
அன்று குஜராத் என்றால் காந்தி
இன்று குஜராத் என்றால் நாட்டிலேயே சிறந்த மாநிலம் அதற்கு காரணம் மோடி.அவர் மீண்டும் பெரும் வெற்றி பெறப்போவது நிச்சயம்.
07-அக்-2012 18:57:40 IST
இன்று மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும், பொது வாழ்வில் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்களுக்கும் அவர் ஒரு முன்னுதாரணம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு.
03-ஜூன்-2012 10:11:09 IST
உங்கள் ( கருணாநிதி )குடும்பத்தினர்களின் ஆட்டத்தை ஒடுக்கி தமிழகத்தை உங்கள் குடும்பம் என்கிற ஆக்டோபஸ் விழுங்கி விடாமல் தடுத்து நிறுத்தியதுதான் முதல்வரின் மிகப்பெரும் சாதனை.முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழர்களின் மனமார்ந்த நன்றி.
17-மே-2012 09:58:59 IST