கிரிகெட் கமெண்டரி செய்வதற்கு பெண்களை கவர்ச்சியான உடைகளில் இடம் பெற செய்தது உலக மகா தப்பு. அதை இந்த IPL செய்தது. கிரிகெட் அணி என்பது அந்தந்த நாட்டை சார்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் விளையாட்டு அணி. அதை உடைத்து மற்ற நாட்டை சார்ந்தவர்களும் கலவையாக இடம்பெற செய்து அந்த கிரிகெட் விளையாட்டின் போக்கையே கெடுத்து விட்டது இந்த IPL . இந்த IPL கிரிகெட்டை கெடுப்பதற்கு வந்தது. அதை வைத்து பணம் சம்பாதிக்க வந்தது. இதோ இந்த ஸ்ரீசாந்த் போன்ற அற்ப பிறவிகளும் கிரிகெட் வீரர் என்ற போர்வையில் உல்லாசமாகவும் தான்தோன்றி தனமாகவும் திரிவதற்கு பணம் சம்பாதிக்க வழி ஏற்படுத்தி கொடுத்தது இந்த IPL
22-மே-2013 12:27:33 IST
இந்த ஆதார் அட்டை இணையதளம் மூலமாக பெற வசதி செய்யலாமே. தற்போது எல்லாமே இணையதளத்தில் பெற முடிகிறபோது இதை பெறுவதற்கும் வசதி செய்து கொடுக்கலாமே.
22-மே-2013 11:05:42 IST
இந்த பல்லுயிர் பெருக்கம் மற்றும் அதனது தேவையை பற்றி ஒரு சாராருக்கு தெரிவதில்லையே. அவர்களை பொறுத்த வரை காட்டில் வாழும் உயிரினம் தேவையற்றது. அவை அழிக்கப்பட வேண்டும். அதை கொன்று விற்று பணம் சம்பாதிக்க வேண்டும். அந்த இனமே அழிந்தாலும் பரவாயில்லை என்று தானே நினைக்கிறார்கள். எந்த ஒரு உயிரினமும் தப்புவதில்லையே. உண்பதற்கு ஏற்ற உயிரினங்கலாகிய ஆடு மாடு கோழி பன்றி ஆகியவற்றை பண்ணை ஏற்படுத்தி உற்பத்தியை பெருக்குகிறார்கள். ஆனால் காட்டில் உள்ள விலங்குகளை பாதுகாக்க யாருக்கும் மனம் இல்லை. ஏன் என்றால் அது தேவையற்றது என்ற நினைப்பு. மனிதனை தவிர எல்லா உயிரினமும் அழிந்த பிறகு மனிதன் மட்டுமே இந்த பூமியில் இருக்கும்போது தெரியும் மற்ற உயிரினங்களின் அவசியம்.
22-மே-2013 11:02:24 IST
நிரந்தரமில்லாத ஆட்சி. ஆனால் அதை வைத்து கொள்ளை அடித்த பணம் மட்டும் நிரந்தரமாக பத்திரமாக பாதுகாக்கப்படும். இல்லையா கருணா? உங்கள் ஆட்சி, அந்த அம்மா ஆட்சி என்றெல்லாம் எங்களுக்கு பாகுபாடு இல்லை. உங்கள் இரு கட்சியும் தமிழகத்தை சுரண்டி சுரண்டி பிழைத்து வந்தீர்கள். நீங்கள் போனால் அவர்கள், பிறகு நீங்கள் என்று மாறி மாறி தானே மக்களும் உங்களுக்கு ஆட்சி புரிய வாய்ப்பு கொடுக்கிறார்கள். கிடைத்த வாய்ப்பை நல்ல விதமாக ஆட்சி செய்து தக்க வைத்து கொள்வதை விட்டு பணம் கொள்ளை அடித்து சம்பாதிப்பதற்கும் அராஜகம் செய்வதற்கும் தானே நீங்கள் இருவரும் உபயோகபடுதுகிரீர்கள். நீங்கள் செய்த அட்டூழியங்களுக்கும் அடித்த கொள்ளைகளுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது நாங்கள் எவ்வளவோ எதிர்பார்த்தோம். முடிந்தது திமுக சகாப்தம் என்று நினைத்தோம். அஞ்சா நெஞ்சன் மற்றும் உங்கள் கட்சியின் நிலம் பிடுங்கிகள் அனைவரும் இனி தலையெடுக்க முடியாது என்று நினைத்தோம். மக்கள் இனி நிம்மதியாக சொத்துக்கள் வாங்கலாம், விற்கலாம் என்று எண்ணினோம். ஆனால் உங்கள் மீது எந்த ஒரு கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது வெளியே சுதந்திரமாக இருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது தற்போதைய அதிமுக ஆட்சியையும் கொள்ளைகளையும் அராஜகத்தையும் ஊக்குவிக்கிறது என்று. எல்லாம் தமிழக மக்களின் தலைஎழுத்து.
22-மே-2013 10:33:24 IST
இந்த கேவல விளையாட்டை காண்பதற்காக இங்கு சென்னையில் மேட்ச் நடக்கும்போதெல்லாம் கூட்டம் அலைமோதும். ஆயிரக்கணக்கில் பணத்தை தண்டம் அழுது டிக்கெட் வாங்கி மேட்ச் பார்ப்பார்கள். பௌண்டரி அடித்தால் ஆரவாரம், விக்கெட் எடுத்தால் ஆரவாரம், செவ்வாய் கிரகத்துக்குள் எல்லாம் பந்தை அடித்து விரட்டுவார்கள் என்று சமூக வலைதளங்களில் பெருமை பட்டு கொள்வார்கள் ரசிகர்கள். CHEER GIRLS ஒவ்வொரு பௌண்டரிக்கும் ஆடி ஆடி கலைத்து விட்டார்கள் என்று படம் போட்டு விளக்குவார்கள். தற்போது தான் தெரிகிறது இவர்கள் அடித்த பௌண்டரிகளின் லட்சணம். இந்த விளையாட்டை அரசாங்கம் தடை செய்கிறதோ இல்லையோ ஆனால் மக்கள் இதை புறக்கணித்தால் தானாகவே இந்த IPL காரர்கள் ஊரை பார்க்க ஓடி விடுவார்கள். கிரிகெட்டுக்கு என்று ஒரு தரம் உண்டு ஒரு மரியாதை உண்டு. அதை கெடுத்து குட்டிசுவர் ஆக்கினது தான் IPL செய்த ஒரே விஷயம்.
20-மே-2013 16:16:55 IST
முதன் முதலில் 2000 ம் வருடத்தில் இதை போன்ற MATCH FIXIING ஆரம்பித்தது. தென் ஆப்ரிக்காவின் கேப்டன் ஹன்சி குரோனே தான் ஆரம்பித்து வைத்தார். கிரிக்கெட் விளையாட்டில் கூட சூதாடி பணம் சம்பாதிக்கலாம் என்ற வழியை திறந்து காட்டியவர் அவர். அவர் இறந்து விட்டாலும் அவரது அடியொற்றி செவ்வனே அந்த சூதாட்ட விளையாட்டை அனல் பறக்க ஆடுகிறார்கள். நமது கிரிகெட் ஆர்வலர்களும் போட்டி போட்டு கொண்டு தெரிந்தோ தெரியாமலோ இதனை ஊக்குவிக்கிறார்கள்.
20-மே-2013 14:30:15 IST
இந்த சூதாட்டகாரர்கள் எதையோ வைத்து சூதாடட்டும். அவர்களுக்கு இந்த விளையாட்டு போட்டி தானா கிடைத்தது? அவர்கள் தான் சூதாடுகிறார்கள்,,, அவர்களிடம் இந்த கிரிகெட் வீரர்கள் பணிந்து போகிறார்களே. பணத்துக்காக விலை போகிறார்களே. கோடிகணக்கான ரசிகர்களின் மன உணர்வோடு விளையாடுகிறார்களே, இந்த IPL கிரிகெட் அந்த கிரிகெட் விளையாட்டே அல்ல. அது உண்மையான கிரிகெட் விளையாட்டை பாழ் படுத்தி விட்டது. விளையாட்டின் போக்கையே மாற்றி விட்டது. டெஸ்ட் கிரிகெட் விளையாடும் போது கூட இதே ஆட்ட போக்கை தான் ரசிகர்களிடம் எதிர்பார்க்க வைக்கும். இதை தடை செய்வதில் எந்த வித தயக்கமும் இருக்க கூடாது. பணம் மட்டுமே பிரதானம் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இந்த போட்டிகள் முதலில் தடை செய்யப்பட வேண்டும்.
20-மே-2013 14:14:35 IST
அது சரி அரசியல் பேச்சாளர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா. தப்பி தவறி அரசியல் மேடை பேச்சுக்கள் நடக்கும் வழியில் செல்ல நேர்ந்தால் நாம் தான் காதை பொத்தி கொண்டு செல்ல வேண்டும். அந்த அளவுக்கு இருக்கிறது இன்றைய பேச்சாளர்களின் திறமை. இதில் கட்சி பாகுபாடெல்லாம் கிடையாது. அந்த கட்சியினர் நன்றாக பேசுவார்கள் இந்த கட்சியினர் அநாகரீகமாக பேசுவார்கள் என்ற விஷயமெல்லாம் கிடையாது. எல்லா கட்சியினருமே அநாகரீகமாக தான் பேசுவார்கள். கருணா அவர்கள் பாவம் ரொம்ப மன வேதனையோடு பேசி இருக்கிறார். எங்கே கட்சி நான்காக பிரிந்து விடுமோ. எங்கே நம் வாழ்நாளிலேயே இந்த கட்சியை காண வேண்டி வருமோ என்ற பதபதைப்பு அவருக்கு வந்து விட்டது. இவர் உருவாக்கி வளர்த்து விட்ட ஒரு விஷயம் தற்போது இவரது கட்சிக்கே உலை வைத்து விட்டது. பார்ப்போம். கடவுள் ஒருவன் இருக்கிறான். தீய விஷயங்கள் இந்த பூமியை விட்டு விலகும். இந்த தீய அரசியல்வாதிகளும் இந்த பூமியை விட்டு மறைவார்கள்.
20-மே-2013 12:16:09 IST
சிறையில் பொழுது போக வில்லை என்றால் அங்கு என்ன புத்தகங்கள் இருக்கிறதோ அதை தான் படிப்பார்கள். அதனால் மட்டும் அவர்கள் ஆன்மீக வழியில் இறங்கி விட்டார்கள், காந்தி எழுதிய நூல்களை படிப்பதனால் அவர்கள் காந்தீய வழியில் திரும்பி விட்டார்கள் என்று நினைத்து விட கூடாது. சிறையில் இதை போன்ற புத்தங்கங்கள் தான் இருந்திருக்கும் அதை எடுத்து படிக்கிறார்கள். வெளியில் விட்டு பாருங்கள். பிறகு தெரியும் இவர்கள் ஆன்மீக புத்தகங்கள் காந்தி புத்தகங்கள் படித்த தெளிந்த லட்சணம்.
18-மே-2013 16:57:00 IST
வீட்டை அபகரித்தார் என்ற வழக்கு வரும்போது "" என்னை கைது செய்யுங்கள்"" என்று VOLUNTEER ஆக முன்வந்து கையை நீட்டுவது. பிறகு அந்த வீட்டின் உரிமையாளரை தனியாக சந்தித்து பணத்தை கொடுத்து விஷயத்தை அப்படியே அமுங்கி போக செய்ய வேண்டியது. சட்டவிரோத கார் இருக்குமதி விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும்போது ""பழி வாங்கும் செயல், இதை சட்டப்படி சந்திப்போம்"" என்று சூளுரைத்து விட்டு பிறகு யாருக்கும் தெரியாமல் அந்த வாகனத்தை சி பி ஐ இடம் ஒப்படைப்பது.... என்ன இருந்தாலும் கருணா குடும்ப வழி யாருக்கும் வராது. அவர்களுக்கு இருக்கும் ஞானம் இந்த உலகில் யாருக்கும் இருக்காது. ஆனானப்பட்ட அறிவாளர்கள் எல்லோரும் கருணா குடும்பத்து ஆட்களிடம் கையேந்த வேண்டும். ஒருவேளை இந்த வாகனத்தை நிறுத்துவதற்கு இவர்கள் வீட்டில் போதிய இடம் இல்லை என்று நினைத்து சி பி ஐயிடம் கொடுத்து இருப்பார்களோ. நாங்களாக எடுத்து கொள்ளும் வரை பத்திரமாக வைத்திருங்கள் என்று கூறி அங்கு விட்டு வைத்திருப்பார்களோ. யார் கண்டது. இருந்தாலும் இருக்கும்.
18-மே-2013 15:13:49 IST