இப்படியே போனால் குடிகாரர்கள் எங்கும் நிறைந்து காணபடுவார்கள். அவர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க தெருவுக்கு தெரு குடி மையம் அரசே கூட திறந்து விடும். அரசின் நிர்பந்தத்தின் படி யாராவது ஒரு புண்ணியவான் இதை போன்ற குடி மையத்திற்கு தனது இடத்தை வாடகைக்கு விட கூடும். நம் வீடு இருக்கும் தெருவிலோ அல்லது ஏன் நம் வீட்டின் அருகே கூட குடிக்காரர்கள் கூட்டமாக நின்று குடித்து கொண்டிருக்கும் காட்சியை காண நேரிடும். குடித்து விட்டு அங்கயே விழுந்து கிடக்க போகிறார்கள். குடிக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், அதற்கான சூழ்நிலை நம் மாநிலத்தில் பக்காவாக நிலவும் நிலையில் இதையெல்லாம் எதிர்பார்க்க வேண்டி தான் உள்ளது. எப்படித்தான் இதை எதிர்கொள்வதோ?
18-ஜூன்-2013 17:23:20 IST
போட்டியிடுவதே வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து தானே. தோற்று போக வேண்டும் என்று யாராவது எதிலாவது போட்டியிடுவார்களா? கருணாவின் LOGIC எப்போதுமே சிறப்பு தான். திமுக என்ற கட்சியின் தலைவர் இப்படி தான் இருப்பார். இருக்க வேண்டும். கட்சியின் தலை முதல் கால் வரை ஊழல் புரையோடி விட்ட நிலையில் தனது வாரிசு என்று கூறி கொள்ள முடியாத ஒரு வாரிசை வழக்கிலிருந்து வெளியே கொண்டு வர இந்த தலைவர் எதை வேண்டுமானாலும் செய்வார். பிறகு என்னென்ன போராட்டங்கள் அறிவித்திருக்கிறார் பாருங்கள்.?? எவ்வளவு போராட்டங்க. அடுத்த ஒரு மாதத்துக்கு தலைவருடைய போராட்ட AGA நிரம்பி வழியும் போல. சும்மா ஒரு பேச்சுக்கு,, இந்த ஆட்சியை தற்போது உடனே அப்படியே இவரிடம் ஒப்படைத்து விட்டால் இந்த பிரச்சினைகளை இந்த தலைவர் உடனே களைந்து விடுவாரா. நாளையிலிருந்து நம் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து விடுமா? கரும்பு ஒரு டன்னுக்கு 3000 ருபாய் இவர் உடனே கொடுத்து விடுவாரா? பொது மக்கள் பயத்தின் கோர பிடியிலிருந்து விலகி நிம்மதியாக வாழ்வார்களா? விவசாயிகளின் அவல நிலை உடனே முடிவுக்கு வந்து விடுமா? கட்டுமான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உடனே கட்டுக்குள் வந்து விடுமா? வேண்டுமானால் ஒன்று நடக்கும்,,, சேது சமுத்திர திட்டம் நிறைவேற மாநில அரசின் NOC மத்திய அரசுக்கு உடனே கொடுக்கப்படும். பொது மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படும், முடிந்தால் தமிழத்தை வந்த விலைக்கு விற்று விடுவார்கள். அது வேண்டுமானால் நடக்கும் .
18-ஜூன்-2013 12:13:54 IST
அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகள். யார் எப்படி வேண்டுமானாலும் சாய்வார்கள். அந்த நேரத்திற்கு அவர்களுக்கு எது நன்மை ( வேறென்ன பணம் தான் ) தருகிறது என்று படுகிறதோ,, அங்கே சாய்வார்கள். உதிரிக்கட்சிகள் இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி நன்றாக காசு பார்த்து விடும். இப்படி அடித்து கொண்டு டில்லி சென்று அவர்கள் என்ன மக்களுக்கு நன்மை செய்யவா போகிறார்கள்? விட்ட பணத்தை பிடிக்கவும் அதற்கு மேல் நூறு மடங்கு ( தற்போதைய கால கட்டத்தில் லட்சம் மடங்கு ) சம்பாதிக்கவும் தான் செல்கிறார்கள். பணம் பதவி இது இரண்டை தவிர மக்கள் தொண்டு என்ற ஒன்றை பற்றிய நினைப்பு ஒரு சதவிகிதம் கூட இவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே. THEY ARE ALL TOO GREEDY .... ARE THEY FOR THE NEEDY ?? என்பது எவ்வளவு சரியானது.
18-ஜூன்-2013 12:03:14 IST
இந்த அரசியல்வாதிகளின் ""சொத்து குவிக்கும் வெறி"" மிக மிக விந்தையாக உள்ளது. சொத்துக்கள் வாங்குவதில் இவர்கள் காட்டும் முனைப்பு கண்டு வியப்பாக உள்ளது, பயமாக உள்ளது, எரிச்சல் வருகிறது. எதற்கு இப்படி? இவர்கள் இதனை சொத்துக்களை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறார்கள். இருப்பதற்கு ஒரு வீடு. ஒரு நல்ல குடும்பம், சம்பாதிபதற்க்கு கைவசம் ஒரு தொழில், அதில் சிலருக்கு வேலை வாய்ப்பு. மற்றும் உடல் ஆரோக்கியம். ஆகியவை இருந்தால் பல வருடங்கள் சந்தோஷமாக வாழலாமே. எல்லோரும் வாழ்த்துவார்களே. இதில் கிடைக்கும் சந்தோஷம், சொத்துக்களை வாங்கி குவித்து அதனால் எதிரிகளை ஏற்படுத்தி கொண்டு, முடங்கி உயிருக்கு பயந்து பயந்து வாழ்வதில் கிடைக்குமா? இப்படி வாழ்வது ஒரு வாழ்க்கையா? இவர்களுக்கு மக்கள் ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள். அதை வைத்து மக்களுக்கு ஒரு நல்ல வாழ்கை முறையை ஏற்படுத்தி கொடுத்தால் எல்லோரும் வாழ்த்துவார்கள். கிடைத்த வாய்ப்பை நல்ல முறையாக ஒழுங்கான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் உழைத்து முன்னேறலாம். அது தான் உறுதியான முன்னேற்றம். இதை போன்ற அடித்து பிடுங்கி சொத்து வாங்கி முன்னேறுவது என்பது வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட கூடியது.
18-ஜூன்-2013 10:00:57 IST
இந்த அரசியல் கட்சிகள் ஒட்டு அரசியலுக்காக கண்டதை பேசுவதை விட்டு மாநிலத்தில் GREEN COVER அதிகரிப்பதற்கு ஏதாவது செய்யலாம். மரங்களை தங்களது கட்சியின் சார்பில் நட்டு அதை பேணி பாதுகாத்து வளர்க்கலாம். காடுகளை அழிப்பதற்கு துணை போகாமல் இருக்கலாம். இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். மரங்கள் அதிகரித்தால் மழை பெய்து நாடு வளமடையும். இது இந்த வருடமோ அடுத்த வருடமோ நடந்து விடாது. ஆனால் எதிர்காலத்தில் நாம் தண்ணீர் விஷயத்தில் இப்படி நம்மை யாரும் அலைகழிக்காமல் இருக்கலாம். தான் செய்த சாதனையை பறித்து கொள்ள பார்க்கிறார். மறைக்க பார்க்கிறார். தனதாக்கி கொள்கிறார் என்று புலம்பும் இந்த கட்சி ஆட்கள் தனது கட்சி தொண்டர் பலத்தை வைத்து மரங்கள் நட்டு வளர்க்கலாமே. மக்களுக்கு தொண்டு செய்வதற்கு தானே அரசியல்வாதிகள் பிறப்பெடுத்து இருக்கிறார்கள். இதுவும் மக்களுக்கு செய்யும் தொண்டு தானே. மக்கள் தான் ஆயிரத்தெட்டு வேளைகளில் மூழ்கி இருக்கிறார்கள். மரங்களை பற்றி நினைக்க கூட நேரம் இல்லை. இந்த அரசியல்வாதிகள் தான் சதா சர்வகாலமும் மக்களை பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறார்களே, எப்படி எல்லாம் மக்களுக்கு நன்மை செய்யலாம் என்று சிந்தித்து சிந்தித்து செயல்படுகிறார்களே, இந்த பசுமை புரட்சியை ஏற்படுத்தி மக்களுக்கு நல்லது செய்யலாமே. இப்போது இல்லை என்றாலும் எதிர்க்கால சந்ததியினர் நன்மை பெறுவார்களே. யோசியுங்கள் கருணா. வேண்டுமானால் உங்கள் கட்சி சார்பில் நடப்படும் மரங்களுக்கு உங்கள் பெயரையோ, அல்லது குடும்பத்துக்குள் எதிர்ப்பு இருப்பின் உங்களது வாரிசுகள் பெயரையோ வைத்து கொள்ளுங்கள்.
17-ஜூன்-2013 11:42:11 IST
இந்த பெண்மணி நினைப்பது போலவும், அல்லது இந்த ஆலோசகர் கூறியது போலவும் ஒரு ஆண் இவருக்கு வாழ்கை துணையாய் அமைய வாழ்த்துக்கள். யாரும் பிரச்சினையை தேடி போவதில்லை. ஆனால் பிரச்சினை என்று வந்தால் அதை எப்படி சமாளித்து மீண்டு வருவது என்பதில் தான் இருக்கிறது நமது சாமர்த்தியம். வாழ்கை பாதை என்பது வெறும் பூக்களால் நிறைந்தது மட்டுமல்ல முட்களாலும் நிறைந்திருக்கும். ANYHOW ,, இந்த வாசகியை மேலும் மேலும் குழப்பாமல் இந்த ஆலோசகர் சொன்னதை போல ஒரு ஆண் இவருக்கு கணவரை அமைய வாழ்த்துவோம். .
12-ஜூன்-2013 14:40:56 IST
இந்த செய்தி கருணாவையும் திமுகவையும் இழிவு படுத்துவது போல உள்ளது. அது என்ன 2 G ஊழல் தொகையை விட இந்த தொகை பெரிதாக இருக்கிறது என்று செய்தி வருகிறது?? தொகை பெரிதாக இருந்தால் போதுமா, அதை வைத்தே இவர் தான் பெரிய :"திருடர்" என்ற பட்டம் கொடுத்து விடுவதா?? முதன் முதலில் தமிழனுக்கும் ஏன் இந்திய மக்களுக்கும் கூட இத்தனை பெரிய ஒரு தொகையை அறிமுகபடுத்திய நம் திமுகவையும் அதன் கட்சி தலைவர் கருணாவையும் அவ்வளவு சீக்கிரம் மறக்கடிக்கலாமா.?? இருட்டடிப்பு செய்யலாமா?? கருணாவின் புகழையும் திமுகவின் பெருமையையும் மறைக்கும் விதமாக இந்த செய்தி வெளியிடபட்டிருக்கிறது. தமிழனுக்கு அதுவும் உலக தமிழர்களுக்கெல்லாம் உள்ள ஒரே தலைவருக்கு ஒரு பெருமை கிடைப்பதை இப்படி தடுக்கலாமா? தற்போது யார் வேண்டுமானாலும் எவ்வளவு லட்சம் கோடிகள் வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம். அவை எல்லாமே IMITATIONS ஆகும். ..... கருணாவின் கொள்ளை தான் ஒரிஜினல். எதிலுமே ((கெட்ட விஷயங்களில் மட்டும்)) கருணா தான் முன்னோடி,, மற்றவர்கள் எல்லாம் அவர் பின்னாடி.
12-ஜூன்-2013 11:17:58 IST
மக்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால் இவர்கள் நான் நீ என்று ஊழல் செய்வதில் யார் பெரியவன் என்று போட்டி போடுகிறார்கள் போல தெரிகிறது. 2 G ஊழல் பெரிதென்றால் அதை விட தொகையில் பெரிதாக உள்ளது இந்த COLGATE ஊழல். அடுத்து எதில் எத்தனை லட்சம் கோடிகள் ஊழல் வெளி வர போகிறதோ. இந்த காங்கிரஸ் நம் நாட்டை மற்ற முன்னேறிய நாடுகள் கூட இந்த விஷயத்திலாவது அண்ணாந்து பார்க்கும்படி செய்து விட்டார்கள். நம் நாட்டை எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்.
12-ஜூன்-2013 11:00:42 IST
பார்த்து தளபதி,,,,, எதற்கு மன்னிப்பு கேட்பதற்கு கூட ஆவேச படுகிறீர்கள்.?? உங்கள் ஆவேசத்தை கண்டு உங்கள் கட்சிகாரர்கள் வேண்டுமானால் பயப்படலாம். அவர்கள் வேண்டுமானால் ""அடடா தளபதி ஆவேசப்பட்டு விட்டாரே, என்ன நடக்க போகிறதோ"" என்று எண்ணி பதைபதைப்புடன் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தெரியும் உங்கள் ஆவேசத்தை பற்றி...... ஒன்றும் நடக்க போவதில்லை. பாவம் ஏன் இப்படி எல்லாம் பேசி உடம்பை வருத்தி கொள்கிறீர்கள்? கூட்டு குடிநீர் தானே, மக்களுக்கு தானே செல்கிறது. யார் கொடுத்தால் என்ன. நல்ல விஷயம் தானே. மக்கள் பயனடைந்தால் நல்லது தானே. அது தானே மக்கள் சேவகனான உங்களுக்கு தேவை. அது நடக்கிறது அல்லவா. யார் செய்தால் என்ன. விடுங்கள். உடம்பை கவனித்து கொள்ளுங்கள். இப்படி எல்லாம் ஆவேசபடாதீர்கள். அது உங்கள் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல.
11-ஜூன்-2013 15:58:16 IST
மேடை கிடைத்தால் எதையாவது பேச வேண்டியது. அதையும் படிப்பறிவில்லாத மற்றும் சுய அறிவு இல்லாத திமுகவினரும் கேட்டு விட்டு கை தட்டி ""நம் தளபதி போல வருமா"" என்று கூறி கொண்டே கிடைத்த பிரியாணி பொட்டலத்தை காலி செய்து விட்டு கொடுத்த பாட்டிலை வாயில் கவிழ்த்து கொண்டே நடையை கட்டுவார்கள். பிறகு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் யாரால் நிறைவடைந்தது, அதில் தண்ணீர் வந்ததா, அது உண்மையிலேயே திமுக தான் தொடங்கியதா அல்லது அதிமுக தொடங்கிய திட்டமா என்றெல்லாம் எண்ணி பார்க்கும் நிலையில் இருக்க மாட்டார்கள். அடுத்த பொது கூட்டம் தளபதி எந்த ஊரில் போடுவார். அங்கு ஆளுக்கு எவ்வளவு பொட்டலமும் பாட்டிலும் கிடைக்கும்,, பணம் எவ்வளவு தருவார்கள் என்று கணக்கு போட்டு கொண்டே தளபதியின் பின்னால் ஊர் ஊராக சுற்றுவார்கள். திமுகவினர் அல்லவா அப்படி தான் இருப்பார்கள். அவர்களிடமிருந்து இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. அவர்களை வைத்து தானே இந்த ஸ்டாலின் கருணா போன்றவர்களின் பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது. அத்தகைய திமுகவினர் வேண்டுமானால் நம்பலாம் திமுகவின் பேச்சுக்களை.
11-ஜூன்-2013 15:22:33 IST