பொருளாதார வளர்ச்சி என்று கூறுகிறீர்கள். தற்போது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றதை பார்க்க முடிகிறது. உலக அளவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால் பல முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களே இந்த வருடம் கல்லூரிகளுக்கு சென்று திறமை மிகுந்த மாணவர்களை கேம்பஸ் தேர்வு செய்யாமல் நிறுத்திவிட்டது. சென்ற வருடம் தேர்வு செய்த மாணவர்களுக்கு இனி வேலை கிடைக்குமா என்பதும் மிகவும் சந்தேகமே. பலர் காத்திருப்பில் உள்ளனர். முதலில் உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிற்கு ஏதும் பாதிப்பு இருக்காது என பொருளாதார மேதைகளான நிதி அமைச்சர் ப.சி ,மன்மோகன் சிங் ,அன்றைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால் பிறகு சிறிது நாட்களிலேயே தங்களுடைய கூற்றை திருப்பி விட்டனர். உலக அளவில் பாதிப்பு ஏற்பட்டால் அது இந்தியாவிற்கும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்தர் பல்டி அடித்து விட்டனர். தற்போது இந்தியாவிலும் பல இடங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருவதை கண்கூடாக க் காண முடிகிறது .எனவே பொருளாதார வளர்ச்சி நிரந்தரம் இல்லை .பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டால் அந்த நாட்டில் பிச்சைக்காரர்கள் இருக்கக் கூடாது ,வறுமை இருக்கக் கூடாது.ஆனால் நம் நாட்டில் இது இரண்டும் குறையவே இல்லை .இவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது .எனவே நாம் காண்பது உண்மையான வளர்ச்சி இல்லை இது கானல் நீர் வளர்ச்சியே
20-மே-2013 13:55:33 IST
கோடி மரம் வெட்டிய அபூர்வ அரசியல்வாதி ஆக வேண்டாமா அவர் ,நலம் பெற்று மீண்டு வரட்டும் அன்று அசோகர் மக்களின் நலன் கருதி மரம் நட்டார் ,அவர் சரித்திர கல்வெட்டில் இடம் பெற்றார் ,இவர் மரத்தை வெட்டி கல்வெட்டில் தன் பெயர் கட்டாயம் இடம் பெறச்செய்யப்போகிறார் .
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
20-மே-2013 11:38:20 IST
ஒரு வழியாக இளைஞர் முதல் பெரியவர்கள் வரை பொன்னான நேரத்தை சீரழிக்கும் கிரிக்கெட் விளையாட்டை அழித்து விட்டீர்கள் ,உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் .
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
20-மே-2013 07:55:12 IST
உங்களுக்கு சைபர்தான் ,பெரிய முட்டை மார்க்தான் மக்கள் போட்டு உள்ளார்கள் ,வரும் தேர்தலிலும் முட்டை" சீட் " தான் ,உங்களுக்கு கிடைக்கும் .அந்தத் தேர்வில் நீங்கள் நிச்சயம் பெயில் தான் அதை மீறி மக்கள் உங்களின் ஊழலை மறந்து மக்கள் உங்களை தேர்ந்து எடுத்தால் மக்களுக்குத் தான் முட்டை மார்க் போடவேண்டும் .
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
20-மே-2013 06:24:59 IST
கூட்டுறவு வங்கிகளிடம் மட்டுமா அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் அரசியல்வாதிகளின் தலையீடு உள்ளது அவர்கள் சிபாரிசில் பல பிரபலங்களுக்கு ,பண முதலைகளுக்கு வழங்கப்பட்ட பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய் கடன் தொகை இன்னும் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது .இதன் மதிப்பு கிட்டத்தட்ட 200 லட்சம் கோடிகளாக இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன நீதிமன்றங்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமா ?.இது பொது மக்களின் சேமிப்புப்பணம் இதை எப்படி அரசியல்வாதிகள் தள்ளுபடி செய்ய முடியும் ?அரசாங்கம் எப்படி இதற்கு ஒப்புக்கொள்கிறது ,தெரியவில்லை .ஓட்டுக்காக செய்கிறதா இல்லை தேர்தல் செலவவுகளுக்கு பல பிரபலங்கள் பண உதவி தந்து கைமாறு செய்வதால் இதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்களா அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம் .
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
20-மே-2013 06:19:33 IST