Advertisement
தினமலர் முதல் பக்கம் » v.sundaravadivelu அவரது கருத்துக்கள்
v.sundaravadivelu : கருத்துக்கள் ( 332 )
v.sundaravadivelu
Advertisement
மே
19
2013
சம்பவம் ரூ.1.5 கோடிக்காக மில் அதிபர் மகன் கொலை *நண்பர்களே தீர்த்து கட்டியது அம்பலம்
முதற்கண் பதினெட்டு வயதில் குடிப் பழக்கத்திற்கு சென்றது தவறு.. அதைவிட தனது வயதினை ஒத்த நண்பர்களோடு பழகாமல் 25 வயது நபர்களோடு நட்பு கொண்டது மற்றொரு தவறு.. இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.. ஆனால் இவ்வித மன அமைப்பிற்கு ஆளான நபர்கள் அநேகம் பேர்கள் இன்டர்நெட்டையும் சினிமாவையும் கையைக் காட்டி தப்பிக்க நினைக்கின்றனர்.. கரண்ட் கையை வைத்தால் ஷாக் அடிக்கத்தான் செய்யும்.. விலகி நின்று அதன் உதவியை அனுபவிக்கப் பழகும் நாசுக்கு வேண்டுமே தவிர .. கையைக் கொண்டு போய் வைத்துவிட்டு ஐயோ ஆளைத் தூக்கி அடிக்கிறது என்று புலம்புவதும் கரண்ட்டை குற்றவாளி ஆக்குவதும் மகா கேணத்தனம்..    14:02:03 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
பெட்ரோல் உற்பத்தியில் சிறந்து விளங்குகிற அரபு நாடுகளில் கூட தண்ணீருக்கு இப்படி எல்லாம் தட்டுப்பாடு வராது போலும்.. இங்கே என்னடாவென்றால் நிலைமை இப்படி இருக்கிறது.. ஆக, போகிற போக்கைப் பார்த்தால் பெட்ரோல் போலவே தண்ணீருக்கும் தரித்திரம் தலை விரித்தாடும் போல தெரிகிறது.. மழையும் தொடர்ந்து ஆப்பு வைத்துக் கொண்டே இருக்கிறது.. எங்கே போய் முடியுமோ யாமறியோம் பராபரமே..   20:41:40 IST
Rate this:
0 members
0 members
45 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு பிரமாண்ட சிலை ஜெ., அறிவிப்பு
இதனை உருவாக்க இருக்கும் ஸ்தபதி அவர்களுக்கு.. வணக்கம்... அந்தத் தமிழ் தாயின் முகம் தமிழையும் தமிழர்களின் கலாசாரத்தை மட்டுமே பிரதிபலிப்பதாக இருக்கட்டும்.. தப்பித் தவறிக் கூட நமது நடிகைகளின் முகபாவனையையோ அரசியல்வாதிகளின் முகபாவனையையோ ஒத்திருப்பதாக அமைந்து விட வேண்டாம் ... அப்புறம் ஆளாளுக்கு டின்னு கட்ட ஆரம்பித்து விடுவார்கள்.. ஏனென்றால் சொத்தை சொள்ளை சொல்வதற்கென்றே ஒரு மெகா கூட்டம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.... பார்த்து..   14:17:47 IST
Rate this:
4 members
2 members
11 members
Share this Comment

மே
9
2013
பொது முதலிடம் பிடிப்பதில் தொடர்ந்து ஆதிக்கம்.நாமக்கல்! பிளஸ் 2 தேர்வில் வழக்கம் போல் மாணவியர் அபாரம்!
கோழிமுட்டையில் முதலிடம் வகிக்கிற நாமக்கல்லில்... எய்ட்ஸ் - இல் முதலிடம் பிடித்த நாமக்கல்.. இதோ, கல்வியிலும் முதலிடம்.. அபார சாதனை..   11:18:19 IST
Rate this:
4 members
1 members
8 members
Share this Comment

மே
1
2013
பொது சரவண பொய்கையில் தண்ணீர் விற்பனை "ஜோர்
இந்த மாதிரி புண்ணிய தளங்களில் பெரும்பாலாக அங்கே இதற்கென்றே ஒரு கும்பல் ஆன்மீகப் போர்வை போர்த்திய வண்ணம் சுற்றித் திரிகிறது.. ஆளாளுக்கு அப்பாவிப் பொதுமக்களுக்கு மொட்டை போடவே ஒரு சதிகார கும்பல் காத்துக் கிடக்கிறது.. இதை அடையாளம் கண்டு உஷாராகி விடுபவர்களும் உண்டு.., இதையெல்லாம் நம்பி இருப்பதை அவிழ்த்துக் கொடுக்கிற ஏமாளி மக்களும் உண்டு.. இப்படி ஏமாறுகிற அப்பாவிகளைக் கண்டால் , ஏமாற்றுகிற நபர்களுக்கு லட்டு சாப்பிடுவது போல..   14:41:14 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
27
2013
பொது மே 9 பிளஸ் 2 "ரிசல்ட்! மே 31ல் 10ம் வகுப்பு
பாசாகிறவர்களும் நல்ல மதிப்பெண் எடுப்பவர்களுக்கும் ரிசல்ட் என்பது பீதியான விஷயமே அல்ல.. ஆனால் பெயிலாகிறவர்களும் அதன் நிமித்தமாக மனமுடைந்து விபரீத முடிவெடுப்பவர்களுக்குமே இந்த செய்திகள் சற்று வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடும்.. அவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்கிற விதமாக ஏதாவது உருப்படியான டிப்ஸ் மற்றும் நம்பிக்கை ஊட்டுகிற கருவிகளாக ஊடகங்கள் செயல்பட வேண்டுமென்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.. சும்மா பாஸ் ஆகிறவர்களைப் பாராட்டியும் அவர்களை மட்டும் ஊக்குவித்தும் .. தோல்வி கண்டவர்களை மனசோர்வடைய செய்ய வேண்டாம்.. அப்போது தான் இந்தப் பரீட்சை தோல்விகளுக்கான தற்கொலைகள் தவிர்க்கப்படும்.. தினமலரே கூட அப்படிப் பட்டவர்களுக்கு ஓர் சிறு பத்தி ஒதுக்கி , மேற்கொண்டு வெற்றி பெற பாசிட்டிவாக எதையேனும் சொல்ல வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..   21:58:30 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
23
2013
சம்பவம் சிறுமி பலாத்காரம்: மற்றொரு குற்றவாளி சிக்கினான் டில்லியில் போலீசாருக்கு எதிராக பெரும் போராட்டம்
லட்சக் கணக்கான கற்பழிப்பு குற்றவாளிகள் இந்த பத்து வருட காலங்களுக்குள் ரிலீஸ் செய்யப் பட்டனர் என்கிற ஓர் செய்தியைப் படித்து கவலையும் ஆச்சர்யமும் பட்டேன்.. இனி மேற்கொண்டாவது இவ்விதம் இல்லாமல் கற்பழிப்பு என்கிற ஓர் தகுதியை மிகவும் சீரியசாக கையாளப் படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. கற்பழிப்புக் குற்றங்களில் கைதாகிற எவனானாலும் அவனுக்கு உயர்ந்த பட்ச தண்டனை அறிவிக்கப் பட வேண்டும் என்பது எல்லாரது எதிர்பார்ப்பும் ஆகும்.. அப்போது தான், இனி மேலாவது கொஞ்சம் அசம்பாவிதங்கள் குறையக் கூடும்.. அல்லவெனில், ரிலீசான உடனேயே கூட இதே தவறில் அவன் இறங்கக் கூடும்.. இன்னும் சொல்லப் போனால் இந்தப் பனாதிப் பேமானிப் பயல்களுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பதில் அரசு அவசரம் காண்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.. நன்றி..   08:58:31 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
21
2013
சம்பவம் அரசு மருத்துவமனை பெண் புரோக்கர்கள் குழந்தையை கடத்தியதாக கைது தாய் மீதும் சந்தேகம்
வர்த்தக ரீதியாக குழந்தைகளை - பெற்ற தாயே விற்பதும், பெற்ற தாய்க்குத் தெரியாமல் செவிலியர்கள் கடத்துவதும் - பெற்ற தாய்மார்களைக் கதற விடுவதும் - ஏன் இப்படி எல்லாம் கொடுமைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளனவோ புரியவில்லை.. ஒழுக்கக் கேடோடு குழந்தை பெறுகிற பெண்கள்.. திருமணம் ஆகாமலே குழந்தை பெறுகிற பெண்கள்.... இவர்களுக்கு மத்தியில் "குழந்தயின்மைக்காக" தீவிர மருத்துவ சிகிச்சை எடுக்கிற பெண்கள்.. அதற்காக அவர்கள் படுகிற மன உளைச்சல்கள்.. இதனைப் பயன் படுத்தி ,இந்த மாதிரி தம்பதியருக்கு திருடி விற்கிற பெண் புரோக்கர்கள்.. - குழந்தை இல்லாத தம்பதிகள் அதற்காகப் படுகிற சந்தோஷங்களும், குழந்தையைப் பறிகொடுத்த பெற்ற தாய் படுகிற வேதனைகளும், இதிலே சுளையாகப் பணம் பறிக்கிற ராக்ஷசப் பெண்டிர்களும்.. ஐயோ.. ஐயோ.. நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்தக் கோரங்களை எல்லாம் பார்க்கையில்   09:28:22 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
சம்பவம் செல்போன் கடையில் கொள்ளை
மக்களிடையே செல்போன் மோகம் சுனாமி போல பெருக்கெடுத்து ஓடுகிறது.. ஆகவே இதெல்லாம் ரொம்ப ரொம்ப சகஜம் மச்சி.. இதையெல்லாம் ஒரு புகார் என்று இனி போலீசில் கொடுக்கவும் வேண்டாம், இதையெல்லாம் ஒரு செய்தி என்று எந்த ஒரு பத்திரிகையும் பிரசுரிக்கவும் வேண்டாம் என்று பொது மக்கள் சார்பாக வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி.. ஹிஹிஹ்..   12:01:07 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
சினிமா சுந்தர்.சி-க்கு மட்டும் ஏன் கவர்ச்சி சலுகை சொல்கிறார் அஞ்சலி...
இப்டி எல்லாம் சொல்லி மாட்டிக்காதே பொண்ணு.. "சும்மா அந்த" ரேஞ்சுக்கு படம் எடுத்து அசத்தர டுபாக்கூர்ரு டைரக்டருக ஏகப் பட்ட பேருக இருக்காங்க.. பீ கேர்புல்...    05:43:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment