முதற்கண் பதினெட்டு வயதில் குடிப் பழக்கத்திற்கு சென்றது தவறு.. அதைவிட தனது வயதினை ஒத்த நண்பர்களோடு பழகாமல் 25 வயது நபர்களோடு நட்பு கொண்டது மற்றொரு தவறு.. இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.. ஆனால் இவ்வித மன அமைப்பிற்கு ஆளான நபர்கள் அநேகம் பேர்கள் இன்டர்நெட்டையும் சினிமாவையும் கையைக் காட்டி தப்பிக்க நினைக்கின்றனர்.. கரண்ட் கையை வைத்தால் ஷாக் அடிக்கத்தான் செய்யும்.. விலகி நின்று அதன் உதவியை அனுபவிக்கப் பழகும் நாசுக்கு வேண்டுமே தவிர .. கையைக் கொண்டு போய் வைத்துவிட்டு ஐயோ ஆளைத் தூக்கி அடிக்கிறது என்று புலம்புவதும் கரண்ட்டை குற்றவாளி ஆக்குவதும் மகா கேணத்தனம்..
19-மே-2013 14:02:03 IST
பெட்ரோல் உற்பத்தியில் சிறந்து விளங்குகிற அரபு நாடுகளில் கூட தண்ணீருக்கு இப்படி எல்லாம் தட்டுப்பாடு வராது போலும்.. இங்கே என்னடாவென்றால் நிலைமை இப்படி இருக்கிறது.. ஆக, போகிற போக்கைப் பார்த்தால் பெட்ரோல் போலவே தண்ணீருக்கும் தரித்திரம் தலை விரித்தாடும் போல தெரிகிறது.. மழையும் தொடர்ந்து ஆப்பு வைத்துக் கொண்டே இருக்கிறது.. எங்கே போய் முடியுமோ யாமறியோம் பராபரமே..
18-மே-2013 20:41:40 IST
இதனை உருவாக்க இருக்கும் ஸ்தபதி அவர்களுக்கு.. வணக்கம்... அந்தத் தமிழ் தாயின் முகம் தமிழையும் தமிழர்களின் கலாசாரத்தை மட்டுமே பிரதிபலிப்பதாக இருக்கட்டும்.. தப்பித் தவறிக் கூட நமது நடிகைகளின் முகபாவனையையோ அரசியல்வாதிகளின் முகபாவனையையோ ஒத்திருப்பதாக அமைந்து விட வேண்டாம் ... அப்புறம் ஆளாளுக்கு டின்னு கட்ட ஆரம்பித்து விடுவார்கள்.. ஏனென்றால் சொத்தை சொள்ளை சொல்வதற்கென்றே ஒரு மெகா கூட்டம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.... பார்த்து..
14-மே-2013 14:17:47 IST
இந்த மாதிரி புண்ணிய தளங்களில் பெரும்பாலாக அங்கே இதற்கென்றே ஒரு கும்பல் ஆன்மீகப் போர்வை போர்த்திய வண்ணம் சுற்றித் திரிகிறது.. ஆளாளுக்கு அப்பாவிப் பொதுமக்களுக்கு மொட்டை போடவே ஒரு சதிகார கும்பல் காத்துக் கிடக்கிறது.. இதை அடையாளம் கண்டு உஷாராகி விடுபவர்களும் உண்டு.., இதையெல்லாம் நம்பி இருப்பதை அவிழ்த்துக் கொடுக்கிற ஏமாளி மக்களும் உண்டு.. இப்படி ஏமாறுகிற அப்பாவிகளைக் கண்டால் , ஏமாற்றுகிற நபர்களுக்கு லட்டு சாப்பிடுவது போல..
02-மே-2013 14:41:14 IST
பாசாகிறவர்களும் நல்ல மதிப்பெண் எடுப்பவர்களுக்கும் ரிசல்ட் என்பது பீதியான விஷயமே அல்ல.. ஆனால் பெயிலாகிறவர்களும் அதன் நிமித்தமாக மனமுடைந்து விபரீத முடிவெடுப்பவர்களுக்குமே இந்த செய்திகள் சற்று வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடும்.. அவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்கிற விதமாக ஏதாவது உருப்படியான டிப்ஸ் மற்றும் நம்பிக்கை ஊட்டுகிற கருவிகளாக ஊடகங்கள் செயல்பட வேண்டுமென்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.. சும்மா பாஸ் ஆகிறவர்களைப் பாராட்டியும் அவர்களை மட்டும் ஊக்குவித்தும் .. தோல்வி கண்டவர்களை மனசோர்வடைய செய்ய வேண்டாம்.. அப்போது தான் இந்தப் பரீட்சை தோல்விகளுக்கான தற்கொலைகள் தவிர்க்கப்படும்.. தினமலரே கூட அப்படிப் பட்டவர்களுக்கு ஓர் சிறு பத்தி ஒதுக்கி , மேற்கொண்டு வெற்றி பெற பாசிட்டிவாக எதையேனும் சொல்ல வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..
28-ஏப்-2013 21:58:30 IST
லட்சக் கணக்கான கற்பழிப்பு குற்றவாளிகள் இந்த பத்து வருட காலங்களுக்குள் ரிலீஸ் செய்யப் பட்டனர் என்கிற ஓர் செய்தியைப் படித்து கவலையும் ஆச்சர்யமும் பட்டேன்.. இனி மேற்கொண்டாவது இவ்விதம் இல்லாமல் கற்பழிப்பு என்கிற ஓர் தகுதியை மிகவும் சீரியசாக கையாளப் படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. கற்பழிப்புக் குற்றங்களில் கைதாகிற எவனானாலும் அவனுக்கு உயர்ந்த பட்ச தண்டனை அறிவிக்கப் பட வேண்டும் என்பது எல்லாரது எதிர்பார்ப்பும் ஆகும்.. அப்போது தான், இனி மேலாவது கொஞ்சம் அசம்பாவிதங்கள் குறையக் கூடும்.. அல்லவெனில், ரிலீசான உடனேயே கூட இதே தவறில் அவன் இறங்கக் கூடும்.. இன்னும் சொல்லப் போனால் இந்தப் பனாதிப் பேமானிப் பயல்களுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பதில் அரசு அவசரம் காண்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.. நன்றி..
23-ஏப்-2013 08:58:31 IST
வர்த்தக ரீதியாக குழந்தைகளை - பெற்ற தாயே விற்பதும், பெற்ற தாய்க்குத் தெரியாமல் செவிலியர்கள் கடத்துவதும் - பெற்ற தாய்மார்களைக் கதற விடுவதும் - ஏன் இப்படி எல்லாம் கொடுமைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளனவோ புரியவில்லை.. ஒழுக்கக் கேடோடு குழந்தை பெறுகிற பெண்கள்.. திருமணம் ஆகாமலே குழந்தை பெறுகிற பெண்கள்.... இவர்களுக்கு மத்தியில் "குழந்தயின்மைக்காக" தீவிர மருத்துவ சிகிச்சை எடுக்கிற பெண்கள்.. அதற்காக அவர்கள் படுகிற மன உளைச்சல்கள்.. இதனைப் பயன் படுத்தி ,இந்த மாதிரி தம்பதியருக்கு திருடி விற்கிற பெண் புரோக்கர்கள்.. - குழந்தை இல்லாத தம்பதிகள் அதற்காகப் படுகிற சந்தோஷங்களும், குழந்தையைப் பறிகொடுத்த பெற்ற தாய் படுகிற வேதனைகளும், இதிலே சுளையாகப் பணம் பறிக்கிற ராக்ஷசப் பெண்டிர்களும்.. ஐயோ.. ஐயோ.. நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்தக் கோரங்களை எல்லாம் பார்க்கையில்
22-ஏப்-2013 09:28:22 IST
மக்களிடையே செல்போன் மோகம் சுனாமி போல பெருக்கெடுத்து ஓடுகிறது.. ஆகவே இதெல்லாம் ரொம்ப ரொம்ப சகஜம் மச்சி.. இதையெல்லாம் ஒரு புகார் என்று இனி போலீசில் கொடுக்கவும் வேண்டாம், இதையெல்லாம் ஒரு செய்தி என்று எந்த ஒரு பத்திரிகையும் பிரசுரிக்கவும் வேண்டாம் என்று பொது மக்கள் சார்பாக வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி.. ஹிஹிஹ்..
18-ஏப்-2013 12:01:07 IST
இப்டி எல்லாம் சொல்லி மாட்டிக்காதே பொண்ணு.. "சும்மா அந்த" ரேஞ்சுக்கு படம் எடுத்து அசத்தர டுபாக்கூர்ரு டைரக்டருக ஏகப் பட்ட பேருக இருக்காங்க.. பீ கேர்புல்...
14-ஏப்-2013 05:43:50 IST