மாபியாவை எதிர்க்கிற அளவுக்கு துணிவு வந்துட்டதா? எப்படியோ அடுத்து ஆட்சி அமைக்கும் கட்சிக்கு பாலம் போட கூஜா தந்திரம் ஆரம்பித்தாகி விட்டது. பி.ஜே.பி யோட கூட்டணி வெச்சு ஜெயிச்சா இன்னும் சுரண்டலாம். இல்லேனா தோத்தாலும் சுரண்டினதுக்கு பாதுகாப்புண்டு ஜெயிக்கிற கட்சி மூலம். எப்படியோ தமிழ்நாட்டுக்கு மீண்டும் அடுத்த தேர்தலிலும் ஒரு சலுகையும் கிடைக்க போவதில்லை.
25-பிப்-2013 01:29:52 IST
எத்தனையோ ஊழல்கல்னால இந்த ஆட்சிய ஒண்ணுமே பண்ண முடியலை. கடந்த தேர்தல்ல கோட்டை விட்ட மாதிரி இந்த முறையும் விட மாட்டிங்க என்கிறதுக்கு உங்க கட்சி பலம் என்ன என்பதை காட்டுங்கள் முதலில். இல்லை இன்னும் பத்து வருடம் இப்படியே அறிக்கை விட்டுட்டு இருந்துடப்போறீங்க. கொஞ்ச நஞ்சம் இருக்கும் கறையை அடுத்த தேர்தலுக்கு உள்ளாவது துடைத்து காட்டுங்கள்.
25-பிப்-2013 01:09:20 IST
குட்ரோச்சிய நீங்க நிறுத்தினா கூட அமோக வெற்றி பெறுவீங்க. உங்க ஆருடம் பலிக்க நல்ல சாபம். அப்புறம் அவங்க ஜெயிக்கலேனா கூட அமைச்சராக்கும் தகுதி, திறமை காங்கை விட்டால் யாருக்கு இருக்கிறது சொல்லுங்க?. எதிர்கட்சி பலவீனமா இருக்கிற வர விடாதிங்க நல்லா சுரண்டி அனுபவிங்க. இன்னும் பல தலைமுறை ஆண்டு இல்லை சுரண்டி இந்தியாவில எங்க பாத்தாலும் ஆறாக நீர் பெருக்கெடுத்து ஓட சபதமிடுவதை தவிர வேறு வழி இல்லை..
25-பிப்-2013 00:59:00 IST
காலனி ஆதிக்கம் போது சுரண்டப்பட்டாலும் நாம் இன்னும் அனுபவிக்கும் நிறைய நாட்டு முன்னேற்றத்துக்கான நன்மைகள் பாரதத்துக்கு கிடைத்தன. ஆனால் இந்த சுரண்டல் ஒரு வழி அதுவும் வெளியே செல்லும் நஷ்ட வழி என்பது வேதனை. ஆப்பரிக்க நாட்டை சுரண்டிய சுயநல சர்வாதிகாரிகளுக்கும் ஜன நாயகம் போர்வையில் சுரண்டும் இந்த பேர்வழிகளுக்கும் வித்தியாசமில்லை. குடும்ப துர்சம்பவங்களிளிருந்து நிச்சயம் மாபியாக்களின் மிரட்டல் பிடியில் இந்த சுரண்டல் நடக்கிறது என்பதும் அதை எதிர் கொள்ள ஒரு தைரியமான ஆள் கூட எந்த கட்சியிலும் இல்லையே என்பது வேதனை. போதை பொருள் சாம்ராஜ்யம் மெக்ஸிகோ, தென் அமெரிக்கா தானும் சீரழிந்து, அண்டை நல்ல நாடுகளையும் சீரழித்து கொண்டுள்ளது போல ஊழல் எனும் புற்று நோயில் பாரதம் எதிர் காலம் இருள் நிறைந்த ஒன்று. ஆந்தைகள் வவ்வால்கள் நரிகள் அந்த இருளில் நாட்டை வேட்டையாடும் என்கிற அச்சமும் வருகிறது. ஒரே ஆறுதல் மக்களிடம் உள்ள கடவுள் பக்தி மட்டும்தான்.
24-பிப்-2013 01:25:11 IST
எவரு ஆரம்பிச்சாரு, பாராட்டு விழாவுக்கு தகுதியானவர் என்பது இங்கு முக்கியமில்லை. தமிழர்களுக்கு வரிப்பணம் இவ்வாறு பயனடையும் விதத்தில் செல்ல வேண்டும். அப்புறம் நாளடைவில் இதுவும் ஒரு மின்சார வாரியம் மாதிரி தூர் வாரும் நிலைக்கு தள்ளப்படாமல் ஊழல் இன்றி, நீரை வீணாக்காமல் வெற்றிகரமாக செயல் பட்டு மக்கள் பயனடைய வேண்டும். தமிழன் ஒவ்வொருவனும் இதை மதித்து சிந்தித்து முறையாக செயல் பட ஒத்துழைக்க வேண்டும்.
23-பிப்-2013 03:35:01 IST
பணம் ஒன்றே எங்கள் உயிர், மூச்சு. எங்களித்தவிர வேற ஒரு பய புள்ளைகளும் பணம் சொத்து வெச்சிருக்கக் கூடாது. தி ருத்த மு டியாத க ட்சி.
23-பிப்-2013 03:22:46 IST
பாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இன்னொரு சம்பவம். வழக்கம்போல் அரசியலில் ஊழலை மறைக்க சதி என்றும் இல்லை கவிழ்க்க சதி என்றும் இவங்களுக்கும் அவங்களுக்கும் அறிக்கை போர் வரும். தினம் வெத்துவேட்டு வழவழா அறிக்கைகள் வரும். இன்னும் கொஞ்ச நாட்கள் காவல் பலப்படும். அப்புறம் ஓய்வு. தொய்வு. ஆக்கபூர்வ நடவடிக்கை இல்லாது பொறுப்பற்ற எச்சரிக்கையுடன் மட்டுமே மத்தி அமைப்பு முடித்து கொள்ளும். பிடி படுவோரை சட்டம் பல வருடம் விசாரித்து செல்வாக்கனவர்கள் தப்பித்தது போக ஒரு சிலர் தண்டனை பெறுவர். அடுத்து மீண்டும் நடந்து இந்த கதை தொடரும். மக்களாட்சியில் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். இசட் பாதுகாப்பு மக்களுக்கும் தேவை. தலைவர்கள் மக்களில் ஒருவர் தான். அசம்பாவிதம் மீண்டும் மீண்டும் நடந்தால் அரசு பெரிய விற்படையை எதிர்கொள்வதாக அர்த்தம். முந்தய சம்பவங்களில் ஓரிரு முன்வரிசை அம்பு எய்தவனை மட்டும் தண்டித்து விட்டு போர் முடிந்ததாக ஆகாது. படை தளபதியை வென்றால் மட்டுமே போரில் வென்றதாகும். உடலுறுப்புக்கு வெளி மருந்து வேலை செய்யவில்லை என்றால் எவ்வாறு அறுவை சிகிச்சை செய்கிறார்களோ அதுபோல அம்புடேஷன் வைத்தியம் தேவை.குண்டு எவ்வாறு தயாரிக்க பட்டிருப்பினும் அதனை செயல்படுத்திய மூளைக்கு தகவல் கொடுத்த தொடர்புகள் துண்டித்து எறியப்பட வேண்டும். கட்டளை மையம் தகர்க்க பட வேண்டும். அப்போது தான் நிம்மதி. இதை செய்ய சுயநலமில்லா ஆட்சியாளர் கிடைத்தல் அவசியம். சுருக்கமாக சொன்னால் நாட்டுக்கு நல்ல அறுவை சிகிச்சை நிபுணர் தேவையே அன்றி தற்போதய கூலிக்கு மருந்து கட்டும் பிற்போக்கானவர்கள் தேவையில்லை.
22-பிப்-2013 04:24:13 IST
இது இத்தாலி மாபியாக்கள் ரெண்டு பேர் அடிச்சுகிட்டதால அம்பலமானதென நினைக்கிறேன். அவங்க சொல்லலேன இங்க ஒரு பயலுக்கும் தெரிய போறதில்லை. அப்புறம் என்னமோ புதுசா இப்பதான் லஞ்சம் வாங்கிற மாதிரி வேற பில்டப்பு. இத்தாலியோட உள்நாட்டு சமாச்சாரம்னு விட்டுட்டு அடுத்த கொள்ளை எங்க எப்படின்னு யோசிக்கறது நல்லது. இந்தியா வல்லரசு கனவெல்லாம் கனவு தான். அப்படியே REPUBLIC OF INTHALI னு என் பாஸ்போர்ட்டை மாத்தி கொடுத்தாங்கன்னா அங்க ஒரு ரவுண்டு போய் சாமி கும்பிட்டு inthaali's famous சீஸ் சாப்டுட்டு வந்துடுவேன்.
19-பிப்-2013 07:05:28 IST
இவங்க தொல்லைகாட்சியிலே திரும்ப திரும்ப ஒரு சாமியாரின் படுக்கை காட்சிகளை ஒளிபரப்பினார்களே அது எந்தவகையில்?. அப்புறம் ஜெ யின் சொத்து பட்டியலை என்னமோ பொருட்காட்சி மாதிரி திருப்பி திருப்பி காட்டினார்களே அப்போ மட்டும் மீறல் இல்லையா? பொதுவாழ்காஇக்கு வந்தப்புறமும் இன்னும் மன்னர் சாம்ராஜ்யம் என்று நினைப்பு. மடியில் கனம் இல்லேன்னா எலும்புக்கூடு கூட நல்ல தெரியும். அதுவே சுயநலமில்லாத அரசியல்வாதிக்கு லட்சணம். அப்படி ஒரு மகராசா/ராணி வரும் காலம் எப்பவோ.
19-பிப்-2013 06:44:50 IST
அதுக்குள்ளேயே முடிஞ்சிருச்சா?இப்பதான இன்னொரு புகார் போயிருக்கு. நாற்தரப்பு பேச்சுவார்த்தை அல்லவா நடத்தியிருக்க வேண்டும். எப்படியோ சீருடை இல்லாத பாடசாலைல கலர் சட்டை போட்டுட்டு சுதந்திரமா போகமுடியாத சூழல் நிலை தான் வருது. பச்சை வெள்ளை நூலிகள் நிறைந்த கருப்பு சட்டை என்கிற காரணத்தால் அதில் உள்ள பச்சை கலர் கோடுகளை எல்லாம் பிடிக்காத சக மாணவர்கள் எதிர்ப்பார்கள் என்று தலைமை ஆசிரியை நீக்க சொல்லி தீர்வுகண்டு இப்போ குறுக்கே ஓடும் வெள்ளை நூலிழகளையும் பிரித்தெடுக்க வேண்டும் என்று அதனை பிடிக்காத இன்னொரு சாராரின் வேண்டுகோளையும் நிறைவேற்றுவது முறை என்று அதையும் நீக்கினால் அதை அணிபவரின் நிலை என்ன?. மற்றும் அதனை தான் மற்றவர்கள் சட்டை என்று கருத முடியுமா? சாதாரண ஒரு சட்டையில் பிரிவு பட்டால் தேச ஒற்றுமை என்ன என்பது மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். ஆரம்பம் முதல் நான் கூறி வருவது பாரபட்சமற்ற அணுகுமுறை அது சட்டையை சட்டையை பார்பதுதானே தவிர எதையும் ஆழமாக சம்பந்தபடுத்தி ஆராய கூடாது. நமக்கென்ன முதல் போட்டவன் பாடு அதுன்னு போக முடியலை. பொதுமக்களிடம் தான் கூடி வாழ்ந்தால் நாற்பது நன்மை சொல்ல வேண்டி அடுத்த நாற்பது டிக்கெட் சிந்தாம சிதராம கிடைக்கனும்னு திருப்பி திருப்பி விமரிசிக்க வேண்டி உள்ளது. நன்றி தினமலர்.
04-பிப்-2013 01:23:35 IST