அய்யா கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒருத்தனை puducherila இருந்து பிடிச்சப்ப நான்தான் அத்வானி யாத்திரையின் பொது குண்டு வைத்தேன் என்று சொன்னான் போலீஸ் அதிர்ச்சி மேலும் தீவிர விசாரணைன்னு போட்டு இருந்தாங்க (இதே தினமலர்ல தாங்க) அது என்ன ஆச்சு இப்போ திடீர்னு இவங்கதான் குண்டு வச்சவங்கன்னு கைது பண்ணி இருக்காங்க எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
27-மார்-2013 00:49:10 IST
என்ன கொடுமை எவ்வளவு கேவலமான செயல் ஒரு அரசாங்கமும் ராணுவமும் செய்த தவறுக்கு தனிமனிதன் எப்படி பொறுப்பேற்க முடியும் காவேரி பிரச்னைக்கும் ஈழ பிரச்னைக்கும் கூட்டமாக வாளெடுத்து அங்கே பொய் நேரிட்டு போரிடுங்கள் தனியாக வரும் பாவங்களிடமா உங்கள் வீரம் இந்த செயல் அங்கே இருக்கும் நம்ம சொந்தங்களை பாதிக்கும் என ஏன் உணர மாட்டேன் என்கிறீர்கள்
17-மார்-2013 10:57:50 IST
குஜராத்தில் மோடி அறிவித்துள்ள முதலீடுகள் முழுவதும் பொய்:சி.எம்.ஐ.இ
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி அறிவித்துள்ள நூறுகோடி டாலருக்கான முதலீடுகள் குறித்த புள்ளிவிபரங்கள் போலியானது என்பதை ஆவணங்கள் நிரூபிக்கின்றன. சென்டர் ஃபார் மானிட்டரிங் அகாடமி(சி.எம்.ஐ.இ) அண்மையில் குஜராத்தில் முதலீடுகள் குறித்து நடத்திய ஆய்வில் குஜராத்தில் முதலீடுகள் குறித்து மோடி அறிவித்திருப்பது மிகைப்படுத்தியது என்று தெரியவந்துள்ளது.
மோடி அறிவித்தவற்றில் பெரும்பாலானவை திட்ட அறிவுரைகள் மட்டுமே. 2001-2011 காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மிகக் குறைவானவையே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான பெரிய திட்டங்கள் குறித்த விளக்கங்கள் கூட கிடைக்கவில்லை. அறிவித்த திட்டங்களில் நான்கில் ஒன்றை கூட குஜராத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சி.எம்.ஐ.இ கூறுகிறது. அதுமட்டுமல்ல அவற்றில் பல திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
2009 ஜனவரி மாதம் 12 ட்ரில்லியன் ரூபாய் மதிப்பிலான 3,574 திட்டங்களில் கையெழுத்திட்டதாக மோடி அரசு அறிவித்தது. ஆனால், சி.எம்.ஐ.இக்கு 3,94,700 கோடி ரூபாய் மதிப்பிலான 220 திட்டங்கள் குறித்த விபரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
“அரசு இணைய தளங்களில் வெளியான புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான திட்டங்கள் குறித்த விபரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல, அவற்றில் பல திட்டங்கள் குறித்தும் அடிப்படை விபரங்கள் கூட கிடைக்கவில்லை. பெரும்பாலான திட்டங்களில் நிறுவனத்தின் பெயர், அமைந்திருக்கும் இடம், உற்பத்தி, செயல்படும் தன்மை ஆகியவற்றைக் குறித்து எவ்வித தகவலும் இணையதளத்தில் அளிக்கப்படவில்லை.” என சி.எம்.ஐ.இ அறிக்கை கூறுகிறது.
விபரங்கள் கிடைத்த 220 திட்டங்களில் கூட 1,64,000 கோடி ரூபாய் மதிப்பிலான 36 திட்டங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் 46,500 கோடி ரூபாய் மதிப்பிலான 33 திட்டங்கள் கைவிடப்பட்டன. 10,79,600 கோடி ரூபாய் மதிப்பிலான 31 திட்டங்களின் வளர்ச்சிக் குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஆக மொத்தத்தில் 21,700 கோடி ரூபாய் மதிப்பிலான 63 திட்டங்கள் மட்டுமே பூர்த்தியாகியுள்ளன. 54,000 கோடி ரூபாய் மதிப்பிலான 54 திட்டங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
2011-ஆம் ஆண்டைய நிலைமையும் வித்தியாசமானதல்ல. 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கையெழுத்திடப்பட்டதாக மோடி அரசு கூறியது. ஆனால், சி.எம்.ஐ.இக்கு இதுத் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. முன்பு போலவே இவற்றிலும் நிறுவனத்தின் பெயர், இடம், உற்பத்தி உள்ளிட்டவை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று சி.எம்.ஐ.இ கூறுகிறது.
அறிவிக்கப்பட்ட 8,380 திட்டங்களில் 1,88,300 கோடி ரூபாய் மதிப்பிலான 175 முதலீடு திட்டங்கள் குறித்த தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றில் 1,51,400 கோடி ரூபாய் மதிப்பிலான 87 திட்டங்கள் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளன. ஆனால், அவை வளர்ச்சி அடையும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். மேலும் 5200 கோடி ரூபாய் மதிப்பிலான 19 திட்டங்களும் நடைமுறைப்படுத்த முயற்சித்த 150 கோடி ரூபாய் மதிப்பிலான 2 திட்டங்களும் கைவிடப்பட்டன. 11,900 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்று சி.எம்.ஐ.இ அறிக்கை கூறுகிறது. 18,100 கோடி ரூபாய் மதிப்பிலான 43 திட்டங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 13 திட்டங்கள் மட்டுமே பூர்த்தியாகியுள்ளன.அதாவது மோடி மிகைப்படுத்தி அறிவித்த முதலீடுகள் குறித்த ஆய்வு செய்ததில் வெளியான அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சமமாகவே உள்ளன.
மோடி கட்டவிழ்த்துவிட்ட போலியான புள்ளிவிபரங்கள் இதர மாநில முதல்வர்களுக்கு அங்கலாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் சுவராஸ்யம். அண்மையில் மேற்குவங்காள முதல்வர் மமதா பானர்ஜி ஒரு செய்தியாளரிடம், “ஏன் எனது மாநிலம் குஜராத்தைப்போல திறனுடையதாக மாறவில்லை” என்று தன மன எரிச்சலை கொட்டிக்கொண்டார். இதைப்போலவே இதர மாநில முதல்வர்களும் குஜராத்தைப் போல தங்களுடைய மாநிலமும் ஆகவில்லையே என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், பொருளாதார வளர்ச்சியிலும் முதலீடுகளை ஒருங்கிணைப்பதிலும் இதர மாநிலங்களுடன் சமமாக கூட குஜராத்தால் மாற முடியவில்லை என்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
2006-07, 2010-11 காலக்கட்டத்தில் குஜராத்தின் வளர்ச்சி 9.3 சதவீதமாகும். இது சாதனைதான் என்றாலும் இந்திய மாநிலங்களின் தரத்தில் குஜராத்திற்கு 6-வது இடமே கிடைத்துள்ளது. இக்கால அளவில் ஒடீஸா கூட 9.4 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றது. மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்த மாநிலம் பீகார் ஆகும். அதன் வளர்ச்சி சதவீதம் 10.9.சட்டீஷ்கர் 10, ஹரியானா 9.7, மஹராஷ்ட்ரா 9.6.இம்மாநிலங்களுக்கு பிறகுதான் மோடியின் குஜராத் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
16-மார்-2013 13:24:22 IST
இந்த பொழப்புக்கு ....................... நம்ம வெலிஉரவுதரைலாம் என்ன பண்றாங்கப்பா இத்தாலி ambassador கூப்பிட்டு கைதிகளை ஒப்படைக்க வலியுறுத்த வேண்டும் மேலும் நம் நாட்டுக்கும் அவர்களுக்கும் கைதிகள் பரிமாறும் ஒப்பந்தம் உண்டு எனில் அந்த வலியையும் நாட வேண்டும். ஆனா அவங்களுக்கு ஜாமீன் கொடுதப்பயே சொன்னங்க நிறைய பேர். நமது நீதிமன்றத்தை கேலி கூத்தாக்கும் இத்தாலி நாட்டுடன் கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்
12-மார்-2013 00:04:39 IST
நச்சுன்னு சொன்னீங்க அய்யா தப்பு செஞ்ச தண்டனைன்னு தெரிஞ்சாதான் திருந்துவாங்க, சட்டப்படி சட்டப்படி என கூறுவோர் வீட்டில் இதுபோன்றதொரு சம்பவம் நடந்ததால் சட்டப்படி நடப்பரா? இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
09-மார்-2013 13:01:15 IST
அய்யா சமீப காலமாக நீங்கள் வெளியிட்ட கட்டுரைகளிலே இதுதான் சிறந்தது. என்ன முக்கிய செய்தியாக வெளியிட்டிருக்க வேண்டிய கட்டுரை நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா
07-மார்-2013 14:42:02 IST