ஏற்கனவே பல ஆண்டு காலம் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம், கிராஜுவிட்டி, விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் என பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் பல போக்குவரத்து கழகங்களிலும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்ற பணியாளர்கள் இனியுள்ள காலம் யாரை தான் நம்பி வாழ்வது. சுய கவுரவத்துடன் வாழ நினைக்கும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் இந்த டீஸல் விலை உயர்வால் மீண்டும் பல மாதங்களும் பல ஆண்டுகளும் கடந்து தான் கிடைக்கும். அது வரை எத்தனை பேர் உயிருடன் இருப்பார்கள். வாழ்நாள் முழுதும் உழைத்ததின் பலன்கள் உயிருடன் இருக்கும்போது கிடைக்காமல் செத்த பிறகு மற்றவர்களுக்கு கிடைப்பதினால் வறுமையுடன் வாழ்ந்து உயிர் விடும் பணியாளர்களின் ஆத்மா சாந்தியடையுமா? மத்தியிலாகட்டும் மாநிலத்திலாகட்டும் ஆளுபவர்கள் இவர்களை பற்றி சிந்திக்க வேண்டும்.
28-ஜன-2013 16:41:02 IST
திரு. அருண் அவர்களே, நான் பட்ட அவஸ்தை உங்களுக்கு எங்கே தெரிய போகிறது. என் வீட்டிலிருந்து B S N L டவர் 100 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. சிக்னல் கிடைக்கவில்லை என்று கடந்த மாத காலமாக SDE , DE , AGM , (9444000262 , 9444405577 ) முதலிய அதிகாரிகளுக்கெல்லாம் எத்தனையோ தடவை தொடர்பு கொண்டும் எந்த பயனுமில்லாமல் போன பிறகு தான் VODAPHONE க்கு MNP வசதி பயன்படுத்தி மாறினேன்.ஒவ்வொரு முறையும் புகார் செய்த போதும் AGM (GSM ) தொடர்ந்து " we have escalated this issue with our GM Madam and she assured that something will be done " என்ற ஒரே பதிலை தான் தேய்ந்து போன gramaphone ரெகார்ட் மாதிரி சொன்னாரே தவிர மனசாட்சியுடன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலில் நீங்கள் எந்த காலத்தில் இருகிறீர்கள் என தெரிந்த பிறகு மற்றவர்களை கேள்வி கேளுங்கள் Mr அருண். உங்களை விட பொது துறை நிறுவனங்களின் மீது எங்களுக்கு அக்கறை உண்டு. ஆனால் அது சிறப்பாக பணி புரியும் வரைக்கும் தான். தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பவர்கள் யார் என்பது இப்போது இந்திய மக்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது. நீங்கள் ஒழுங்காக பணி புரிந்தால் நாங்கள் ஏன் தனியாரிடம் போக வேண்டும். ஒரு வேளை நீங்கள் B S N L பணியாளரோ அல்லது அதனால் பயன் பெறுபவரோ ஆக இருக்கலாம். இரண்டொரு நாளில் என் வீட்டில் உள்ள மற்றவர்களின் B S N L எங்களையும் மாற்றவுள்ளோம். எங்கள் ஏரியாவில் நிறைய பேர் மாறி விட்டார்கள். இன்னமும் எங்கள் பகுதியில் அருகாமையில் டவர் இருந்ததும் சிக்னல் இல்லை என்பது கோவையில் இருக்கும் உங்களுக்கு எப்படி தெரியும். B S N L is not connecting இந்திய, It is disconnecting . வெளிநாட்டிலுள்ள என் மகனுடன் பேச, மகப்பேறுக்கு போன என் மருமகளுடனும் உறவினர்களுடனும் பேச நான் பட்ட அவஸ்தை பிறரை குறை கூறி பரிசை வாங்க நினைக்கும் உங்களுக்கு எப்படி தெரியபோகிறது.
23-ஜூன்-2012 22:34:43 IST
இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. தினம் தினம் செத்து பிழைப்பது போல் ஒரு போதும் சரியாக சிக்னல் அல்லது டவர் கிடைக்காமல் B S N L உடன் போராடி எந்த ஒரு அதிகாரியும் (G M உட்பட) புகாருக்கு பதிலளிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லாத நிலையில் ஏர்டெல் ஒரு நாள் வேலை செய்யாதது தாங்கி கொள்ளலாம். தற்போது வோடபோன் பரவாயில்லை.. ஏர்டெல் பயனீட்டாளர் புகாருக்கு செவி சாய்ப்பதில்லை. சேவை B S N ல் போல் மோசமாகி கொண்டு தான் வருகிறது. TRAI கண்ணிருந்தும் குருடர்கள் போல் செயல்படுகிறது. இந்திய குடிமகன் இளிச்ச வாயன், ஏமாளி. பொறுமைக்கும் எல்லை உண்டு. சாது மிரண்டால்.....
23-ஜூன்-2012 14:12:17 IST