இந்த மாதிரி இனி நடக்காமல் இருக்க வேண்டுமானால் நாட்டில் மதுவிலக்கை கொண்டு வருவதே ஒரே வழி. மதுவிலக்கை கொண்டு வந்தால் நாட்டில் கள்ள சாராயம் தலை தூக்கும் என்பார்கள். . கள்ள சாராயத்துக்கும் கடுமையான சட்டங்கள் போடுங்கள். அதையும் மீறி கள்ள சாராயம் சாப்பிட்டு சாகிறவன் செத்து விட்டு போகிறான். நமக்கென்ன. மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை குடிக்க வைத்து அதில் வரும் வருமானத்தில் அரசாங்கம் நடத்தினால் இந்த மாதிரி சமாசாரங்கள்தான் நடக்கும், இனி இந்த மாதிரி அவலங்கள் நடக்காமல் இருக்க கடுமையான சட்டங்கள் தேவை. அதை இந்த நாட்டில் இந்த அரசாங்கங்கள் செய்யுமா என்பது சந்தேகமே. அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து சட்டங்கள் இயற்றிய மாதிரி தெரியவில்லை. இந்த நாட்டு மக்களை இறைவன்தான் காப்பாற்றவேண்டும். இறந்து போன மாணவி ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
29-டிச-2012 07:11:25 IST
இந்த மாதிரி பாலியல் குற்றங்களுக்கு முக்கிய காரணம் தண்ணியும் .......யும் தான். இந்த மாதிரி தவறு செய்தவர்கள் எல்லாம் குடிபோதையில்தான் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அப்படி என்றால் இவ்வளவு
தவறுதல்களுக்கும் யார் காரணம். அரசாங்கம்தான். இப்படி நாடு முழுவதும் டாஸ்மாக்கை திறந்து வைத்து குடிக்க வைத்து கெடுத்து குட்டி சுவராக்கி விட்டார்களே. இனி இந்த நாட்டை திருத்த முடியுமா. தான் வாழ
நாட்டையே அழித்து வருகிறார்களே. ஆண்டவன்தான் இந்த நாட்டை காப்பாத்த வேண்டும். அல்லது மக்கள் எதாவது புரட்சி செய்தால் தான் உண்டு. குஜராத்தில் இலவசமும் இல்லாமல் டாஸ்மாக்கும் இல்லாமல் ஒரு அரசாங்கம் இந்த நாட்டில் நடக்கத்தானே செய்கிறது. இனியாவது நாட்டை ஒழுங்கான வழியில் நடத்தி செல்ல முயற்சி செய்யுங்கள். இல்லையென்றல் மக்கள் இனியும் சும்மா இருக்க மாட்டார்கள்.
26-டிச-2012 09:14:30 IST