மோடி மஸ்தான் வேலை எடுபடும் என பா.ஜ.க வெகுவாக நம்பி எடியூரப்பாவை புறந்தள்ளியது. இப்போ மோடி நிலைமை ஆடிப்போய்க் கிடக்கிறது. ( இவர் பிரச்சாரத்திற்கு வராமல் குஜராத் வெற்றியை ருசித்தபடியே இருந்திருக்கலாம். இவர் குஜராத்தைத் தாண்டி ஒன்றும் கிழிக்க முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது ). எடி வைத்த வெடியில் எடியும் காணோம் பா.ஜ,க-வின் பிடியும் காணோம். இதற்குப் பெயர்தான் சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்பது. இங்கே தமிழகத்தின் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அம்மாவுக்கும் இதே போன்று இருக்கிறது சும்மா பெரிய ஆப்பு (சட்டம் ஒழுங்கு, மின்சாரம், தண்ணீர் பற்றாக்குறை போன்றவையே போதும்.. ஆப்புக்கு அழகு சேர்க்க)
08-மே-2013 21:17:37 IST
வர வர வைகோ அவர்களுக்கு நடை பயணம் ஒரு பொழுது போக்கு பயணமாகிவிட்டது. உண்மையிலேயே மதுவிலக்கு கொண்டுவரச்செய்து சாதிப்பதுதான் இவரது தலையாய நோக்கம் என்றால் இவருடன் நல்ல நட்பில் இருக்கிற ஜெ-வை பலமுறை சந்தித்து வற்புறுத்த வேண்டியதுதானே..வைக்கோவுக்குத் தெரியும் ஜெ-வின் பதில் என்னவாக இருக்கும் என்று. வேறென்ன.. அரசுக்கு மதுவிலக்கு இருக்க வேண்டுமென்பது கொள்கைமுடிவும் விருப்பமும்தான். ஆனால் கஜானாவை நிரப்ப இதனைவிட்டால் வேறு வழியில்லை என கையாலாகாத பழைய பல்லவியைத்தான் சொல்ல முடியும் என்பதுதான். ஆக, இதற்கு மு.க அல்லது ஜெ. யார் பதவியிலிருப்பினும் இந்த பதிலைத்தவிர வேறேதும் சொல்ல முடியாது என்பதை நன்றாகவே() அறிந்த வைகோ அவரையும் அவரது கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவே இதுபோன்ற பொழுதுபோக்கு பயணம் மேற்கொள்கிறார். ஒருபோதும் அவரது கட்சி அரியணையில் அமரப்போவதில்லை. அவர் நினைத்ததை சாதிக்கப் போவதுமில்லை. இதுவே யதார்த்தமான உண்மை.
16-ஏப்-2013 02:30:35 IST
இது தே.ஜ. கூட்டணியில் மோடிக்கு பெரும் பின்னடைவு என்பதையே பறைசாற்றுகிறது. பா.ஜ.க-வுக்கு கிடைக்கும் ஆதரவில் பீகார் இல்லையென்றால் அதன் நிலைமை இன்னும் அந்தோ பரிதாபம்தான். மோடி மஸ்தான் வேலை பீகாரில் பலிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஆக, எப்படியோ மெத்தப்படித்த மேதாவிகளெல்லாம் மோடி பிரதமரானால் நாட்டையே வளம்கொழிக்கச் (இந்தியா என்பது குஜராத் மட்டுமே அல்ல) செய்துவிடுவார் என்று ஆதீத கற்பனையில் இருக்கும் நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அது தவறான கற்பனை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார். ஏனைய மாநிலங்களில் இந்து அல்லாத மற்ற மதத்தினரை இந்த மெத்தப் படித்த மேதாவிகளோ மோடிக்கு சிந்துபாடும் பத்திரிக்கைகளோ நினைத்துப் பார்ப்பதில்லை. அதன் எதிரொலியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் உணர்த்தும்போது புரிந்துகொள்வார்கள் என்றே நம்புகிறேன்.
14-ஏப்-2013 15:14:48 IST
இது அம்மா என்று அழைக்கப்படுபவரின் அபாய ஆட்சியில் தொடரும் அவலம். ஜெ.ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இயற்கை படுத்தும்பாடு. திமுக ஆட்சியிலும் குறைகள் இருந்திருப்பினும் இந்தளவுக்கு மோசமாக இருந்ததில்லை என்பதே உண்மை. உடனே இதற்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்பவர்கள் இங்கே அதிகம். அது நியாயமான கேள்வியாகக் கூட இருக்கலாம். ஆனால், மனம் போல் மாங்கல்யம் என்பது போல் அரசாட்சி புரிபவர்களின் நல்லெண்ண மனப்பான்மையை ஒட்டியே நல்லாட்சி அமைய முடியும் என்பதே யதார்த்தம். மக்களுக்கு ஆட்சி என்பதைவிட மாற்றுக்கருத்து உள்ளவர்களை மறைந்துபோகச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட ஆட்சியாகச் செயல்படுபவர்களின் புண்ணியத்தைத்தான் நாம் அனுபவித்து வருகிறோம்.
14-ஏப்-2013 15:01:47 IST
கொஞ்சம் பொறுங்கள் நண்பர்களே.. விஜயகாந்த் சொன்னது தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் புறக்கணித்தால் தேமுதிக-வும் புறக்கணிக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர அவரது கட்சி மட்டும் புறக்கணிக்கும் என்று சொல்லவில்லை. மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாவது.. ஒதுங்குவதாவது.. அப்படி ஒன்று நடந்துவிட்டால் தமிழக அரசியல்வாதிகளுக்கு கோயில் கட்டித்தான் கும்பிட வேண்டும். ஆனாலும் விஜயகாந்த் போகாத ஊருக்கு வழி சொல்லிக்கொண்டிருக்கிறார். அதையும் நம்பி குட், நல்ல முடிவு எனப் பாராட்டியிருக்கும் உங்களை என்னவென்று சொல்வது?
02-ஏப்-2013 01:59:15 IST
ஆஹா.. இன்றைக்கிருக்கும் தமிழக மக்களின் அவல நிலையையும் ஜெ. அரசின் கையாலாகத்தனத்தையும் மறைப்பதற்காக இலங்கை விவகாரத்தைக்கொண்டு திமுக மீது வசைமழை பொழிந்தால், வரவிருக்கும் தி.மு.க-தே.மு.தி.க கூட்டணியை மக்கள் ஆதரிப்பதை தடுத்துவிடலாம் எனக் கனவு காண்கிறது அ.தி.மு.க. அதற்குத் துணையாக ம.தி.மு.க வேறு. அது மட்டுமா திமுக மீது காழ்ப்புணர்வு கொண்ட பத்திரிக்கைகளும் கூட. ஒன்று மட்டும் நிச்சயம்..இலங்கைத் தமிழர்கள் படுகொலை நடந்தபோதே சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களை வென்றது என்பதை நினைவில் கொள்ளவும். 2ஜி மாயையைத் தோற்றுவித்துத்தான் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வை தோற்கடிக்க முடிந்தது. ஆனால் இன்றைக்கு அதிமுக மீது தமிழக மக்கள் கொண்டுள்ள வெறுப்பு, வரும் தேர்தலில் மிகத் தெளிவாக எதிரொலிக்க இருப்பதை யாராலும் என்ன சூழ்ச்சி செய்தாலும் தடுத்துவிட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அதன்பிறகு அதிமுக-வும் பத்திரிக்கைகளும் முகத்தில் கரியைப் பூசிக்கொள்ள வேண்டியதுதான். இலங்கைப் பிரச்சினையில் மக்களின் உணர்வு வேறு.. தேர்தலில் எதிரொலிக்கும் பிரச்சினைகள் (விலைவாசி, ஊழல், சட்டம்-ஒழுங்கு, போன்றவைகள்) வேறு என்பதையே இதுகாறும் தமிழகத்தில் கிடைத்த தேர்தல் முடிவுகள் சொல்லியிருக்கின்றன. ஆக, அதிமுக-வும் பத்திரிக்கைகளும் கனவு காணலாம். ஆனால் அது பகல் கனவாக பட்டுப்போகும் என்பதில் ஐயமில்லை.
27-மார்-2013 22:13:28 IST
பாதுகாப்பு என்ற பெயரில் இதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதோ?. இன்று இவர்களுக்கென்றால் நாளை அவர்களுக்கு. சூழ்ச்சி தெரிந்தவர்களுக்கு சுழற்சியும் தெரிந்திருக்க வேண்டும்.ம்ம் நடக்கட்டும்..நடக்கட்டும்.. எத்தனை காலம்தான் ஏற்றத்திலிருப்பார்.. என்றேனும் ஒரு நாள் இறக்கத்தில் வருவார், அன்று தெரியும் ஆடிய ஆட்டத்தின் விளைவு.
23-மார்-2013 03:31:55 IST
கேரள மீனவர்கள் இருவர் சுட்டுத்தள்ளப்பட்டதற்கே மத்திய அரசு இவ்வளவு தீவிரம் காட்டுகிறதென்றால், எண்ணற்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் நடக்கிற கொடுமைகளுக்கு ஏன் செவி சாய்க்க மறுக்கிறது? தமிழன் இளிச்சவாயன் என்பதாலா? திராவிட நாடு திராவிடர்க்கே என்ற அண்ணாவின் கொள்கையினை தமிழ்நாடு தமிழர்க்கே என்பதாக மீண்டும் தூசி தட்டி எடுக்கவேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுவார்கள் என்பதை மத்திய அரசு நினைவில்கொள்ள வேண்டும்.
22-மார்-2013 03:37:05 IST
திமுக. மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அக்கட்சி எதைச்செய்தாலும் அதைக் குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கும் சிலரிடத்தில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. என்னமோ திமுக நினைத்திருந்தால் இலங்கையை அப்படியே அலக்காக தூக்கியிருக்கலாம் என்பது அறிவிலிகளின் கூற்று. இதற்கு இங்கே சொம்பு சத்தம் காதைப் பிளக்கிறது. இம்முறை மு.க. எடுத்திருக்கும் நிலையைப்பார்த்து ஆடிப்போனதின் விளைவுதான் இந்த வயிற்றெரிச்சக் குமுறல். மு.க.வின் முடிவின் மீதான கருத்த மக்கள் வரும் நாடாடுமன்றத் தேர்தலில் தெரிவித்த பிறகு விவாதம் தொடருமேயானால் அதுவே நியாயமான ஒன்றாக இருக்க முடியும்.
20-மார்-2013 22:54:28 IST