Advertisement
தினமலர் முதல் பக்கம் » JAY JAY அவரது கருத்துக்கள்
JAY JAY : கருத்துக்கள் ( 1093 )
JAY JAY
Advertisement
மே
18
2013
பொது பாச மனைவிக்காக நினைவிடம் கட்டிய முதியவர்
இந்த " பாய் " யின் செயல்களை விமர்சிப்பதை விட, அவரது அடங்கா அன்பு போல நாமும் வாழ கற்று கொள்வது தான் சிறப்பு என்பதனை உணர்கிறேன்... அன்புக்கு முன் எதுவும் பெரிதல்ல என்ற அவரது சித்தாந்தமும் எனக்கு பிடித்துள்ளது... பெண்களை கிள்ளு கீரையாக நினைக்கும் நம் ஊரில் இப்படி பட்டவர்கள் வாழ்வது நல்லதுக்கு தான்...   15:46:01 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மே
18
2013
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மே
18
2013
அரசியல் சொகுசு காரை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின் மகன்
அய்யய்யோ ..இந்த சம்மர் க்கு ஹம்மர் எல்லாம எப்படிங்க... ? உங்க பேரப்புள்ள தவியா தவிச்சிருமே.... எங்க தமிழ் தாத்தா க்கு தமிழ தவிர , தமிழன் உருவாகியது தவிர வேறதுவும் புடிக்காது.... அதனா தான் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்ற பாணியில் , இங்கிலீஷ் காரன் கண்டுபுடிச்ச ஹம்மர் கார CBI வசம் ஒப்படைத்து விட்டார்... தமிழ் தாத்தான்னா கொக்கா?   10:31:04 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

மே
17
2013
பொது 100 மி.லி., "குடிநீர் பாக்கெட் விலை...7 ரூபாய்! ஸ்டிரைக் எதிரொலி
இட்லி ஒரு ரூபாய்...100 மில்லி தண்ணீ 7 ரூபாய்... .பீர் " தண்ணீ " 90 ரூபாய்.... சூப்பர்.... நமது நாடு எங்கே சென்று கொண்டுள்ளது ? ..... தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கை, [ அதாவது போலி கேன் தண்ணீர் கம்பனிகளை அதிரடியாய் சீல் வைத்தது ] பாராட்டத்தக்கது என்றாலும், அதனை செயல்படுத்திய நேரம் கண்டிக்கத்தக்கது... இந்த கோடை வெயிலில் தான் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமா? ...அவனவன் சென்னையில் கேன் தண்ணீர் வாங்கி குடித்து விட்டு பழகி விட்டான்... அதனை மாற்றி தான் ஆக வேண்டும் ..வேறு வழியில்லை.... ஆனால் மழை காலங்களில், அல்லது டிசம்பர் மாதம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் அல்லவா? அப்படிஎன்றால் மாசு கட்டுபாட்டு வாரியம் இத்தனை நாளா தூங்கி கொண்டு இருந்ததா? ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கும் " பரந்த மனசு கார " அரசுக்கு, மக்களுக்கு சுத்திகரிக்க பட்ட தண்ணீர் கொடுக்க தெரியாதா? கேரளாவின் தலைநகரம் திருவனந்த புரம், நமது மக்கள் திட்டி தீர்க்கும் காங்கிரஸ் ஆளும் மாநிலம் தான்...ஆனால் அங்கு குழாயை திறந்தால் குளோரின் வாசனையுடன் சுத்திகரிக்க பட்ட தெளிவான தண்ணீர் வருகிறது...பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அந்த தண்ணீரை தான் காய்த்து வடிகட்டி, , வெட்டி வேர் அல்லது சீரகம் போட்டு கலந்து குடிக்கிறார்கள்... எந்த ஹோட்டலுக்கு போனாலும் சுடு தண்ணீர் தான் வைக்கிறார்கள்... சென்னை அளவில் பாதி மக்கள் தொகை கொண்ட , திருவனந்த[புறத்தில், அணைத்து மக்களுக்கும் சுத்திகரிக்க பட்ட தண்ணீர் 24 மணி நேரமும் வழங்கும் பொது, சென்னையில் குறைந்தது 2 மணி நேரமாவது குடிதண்ணீர் வழங்க முடியாதா? ..சென்ற ஆட்சியும் சரி, இப்போதைய ஆட்சியும் சரி, பீர் பாட்டில்கள் கணக்குகளை தான் மிக சிறப்பாக பார்கின்றன..... சென்னையில் மலிவு உணவகம் வேண்டி யாராவது அழுதார்களா? கேட்காமலேயே , மலிவு உணவகம் திறக்க தெரிந்த அரசுக்கு, குடி நீர் பிரச்சினையை தீர்க்க தெரியாதா? இந்த பிரச்சினையை இந்த கோடை காலத்தில் மட்டும் தீர்த்து வைத்து விடுவார்களா? ..ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டத்தின் பேரில், ஹெல்மெட் விற்பனை ஜரூரா நடந்தது.... ஹெல்மெட் விற்பனை முடிந்தவுடன், இப்போ, எவன் ஹெல்மெட் போடாவிட்டாலும், போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதில்லை....அது போல, வாட்டர் பியுரிபையர் அனைவரும் இந்த கோடை காலத்தில் வாங்குவதற்காக தான் இந்த திடீர் அதிரடி தடையா? போலி வாட்டர் கேன் நிறுவனங்களை தடை செய்வது அத்தியாவாசியமானது தான் .. அனால் அதேசமயம் கோடை காலத்தில் அதிரடியாய் இதனை செய்வது வாட்டர் பியுரிபையர் விற்பனையை அதிக படுத்த தான் என்பது நன்கு தெரிகிறது... இதோ நானும் இந்த கருத்தை எழுதி விட்டு புறப்பட்டு விட்டேன். வாட்டர் பியுரிபையர் வாங்க... .. நல்ல விஷயம் தான்.. சம்ப் இல் தண்ணீர் வாங்கி ஊற்றி, காய்த்து, வாட்டர் பியுரிபையரில் ஊற்றி, பின் குடிப்பதும் , சமைப்பதும்.... ஆனால் நமது அரசுகளோ, சுத்திகரிக்கப்பட்ட தெளிந்த குடிநீர் ஒவ்வொரு வீட்டு பைப்புகளிலும் அட்லீஸ்ட் 2 மணி நேரமாவது வருமாறு பார்த்து கொள்ள வேண்டும்...அது தான் ஒரு அரசின் , ஒரு மாநகராட்சியின் கடமையே அன்றி, ஒரு ரூபாய் இட்லி விற்பதும் டாஸ்மாக்கில் தன்னிறைவு அடைவதும் அல்ல.....   10:25:16 IST
Rate this:
1 members
3 members
214 members
Share this Comment

மே
17
2013
பொது பிரிக்க முடியாதது எதுவோ... கிரிக்கெட்டும் சூதாட்டமும்...
அரசியல் சூதாட்டத்த விடவா கிரிக்கெட் சூதாட்டம் வலியது.... ? நேர்மையான அரசாங்கம் நடக்கும் ஊரில் சூதாட்டம் பற்றி கவலை படலாம்... இங்கிலாந்து நாட்டில் சூதாட்டம் நடந்தால் அந்நாட்டு மக்கள் கவலை படலாம்... அமெரிக்க நாட்டில் சூதாட்டம் நடந்தால் , அந்நாட்டு மக்கள் கவலை படலாம்... நாம் ஏனுங்க கவலைப்பட வேண்டும்? .... நமது நாட்டிலும் அண்டைநாடான பாகிஸ்தான் நாட்டிலும் , அரசியலே ஒரு சூதாட்டம் போல தான் நடக்கிறது... ஜாதி / மத / இன அடிப்படையில் மக்கள் ஓட்டு போடுகிறார்கள்...பிறப்பு சான்ட்ரிதழ் வாங்குவதில் இருந்து , பிணவறை வரை ஊழல் ... இதில் CRICKET இல் சூதாட்டம் பற்றியெல்லாம் கவலை பட நமக்கு தகுதியே இல்லை ... கிரிக்கெட் சூதாட்டம் பற்றி நாம் பேசி கொண்டு இருக்கும் இதே வேளையில், இந்த ஒரு நொடியில் கோடி கணக்கான மக்கள் பணம் ஊழலாக, கருப்பு பணமாக கை மாறி இருக்கும் ... இந்தியாவே , ஒரு சூதாட்ட நாடு , .......இதுல போயி , கிரிகெட்டாம் ...சூதாட்டமாம் .... இதுல கொடுமை என்னன்னா , இந்த கிரிக்கெட் சூதாட்டத்தை களைய வேண்டிய அரசாங்கங்களே , மக்கள் பணத்தை வைத்து சூதாடி கொண்டு தான் உள்ளது... .. அதை தட்டி கேட்க துணிவு இல்லாத நாம் , கிரிகெட் சூதாட்டம் பற்றி பேசவே தகுதி அற்றவர்கள்...   20:08:45 IST
Rate this:
1 members
0 members
78 members
Share this Comment

மே
17
2013
சினிமா உற்சாகத்தில் நயன்தாரா...
கார்த்தி - நயன் ஜோடி நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்...   12:53:23 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
16
2013
சம்பவம் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அம்பலம்! பணம் வாங்கி "விளையாடிய 3 வீரர்கள் கைது
இங்கே சூதாட்டத்தை பற்றி கடுமையாக தான் எல்லாரும் கருத்து எழுதியுள்ளார்கள்... இந்த சூதாட்டம், தனிப்பட்ட எந்த நபரையாவது, அல்லது நாட்டின் வளச்சியை பாதித்துள்ளதா? இதற்க்கு நாம் ஆவேச படவேண்டியது இல்லை...உலக நாடுகள் அனைத்திலும் விளையாட்டில் சூதாட்டம் பிரபலம் தான்... அதனால் மேற்கூறிய 3 நபர்களையும் ஆயுள் தடை விதிப்பதன் மூலம் இந்த பிரச்சினையை மறந்து விட வேண்டியது தான்... IPL ஐ தடை பண்ணவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை...ஆனால் IPL ரொம்ப லெங்க்த் ஆக போயி கொண்டுள்ளது... இதனை சுருக்கலாம்... ஒரு மாதத்துக்கு தான் [ மே மாதம் மட்டும் ] IPL என்று சுருக்கலாம்.... கிரிக்கெட் IPL ஆக சுருங்கியுள்ளது, ஒரு பரிணாம வளர்ச்சி தான்... இந்திய கிரிக்கெட் என்றால் 15 பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்...அனால் IPL மூலம் நூற்றுகணக்கான , ஆயிரக்கணக்கான கிரிகெட் வீரர்கள் அடையாளம் காணபடுகிரார்கள்... அதே சமயம் IPL க்கு அதிகம் வரி விதிக்க வேண்டும்... IPL ரசிகர்களை மகிழ்விக்க வில்லை, என்று சொல்வது முட்டாள்தனம்...   11:11:06 IST
Rate this:
5 members
0 members
43 members
Share this Comment

மே
17
2013
பொது ம.ஜ.த., தலைவர் மகன் திருமணத்துக்கு 15 ஆயிரம் ரூபாயில் அழைப்பிதழ்
அதெப்படி சுரங்கத்துக்கு அதிபராக முடியும்? இவனுகள எல்லாம் ஓட ஓட துரத்தி விட்டு, மண்ணுக்கு அடியில் , வெளியில், கடலில் இருக்கும் வளங்கள் அனைத்தையும் அரசு கையகபடுத்த வேண்டும்....இது போன்ற அநியாய திருமணங்களை யாரும் வாழ்த்த மாட்டார்கள்... சாபம் தான் அதிகம் கிடைக்கும்.... அதுசரி...... நம்மளுடைய வாழ்த்துக்களை எவன் கேட்டான்....அத்தோட நம்முடைய சாபம் எவனுக்கு பலிக்குது?   10:35:26 IST
Rate this:
1 members
0 members
95 members
Share this Comment

மே
16
2013
அரசியல் தமிழ்த் தாய்க்கு சிலைஆங்கில பாடமொழியா? கருணாநிதி கேள்வி
இந்த தமிழ் தாய் .......தமிழ் தாத்தா ......... - இவர்களினால் இந்த தமிழ்நாடு படும் அல்லோகலம் இருக்கே..... அப்பப்பப்பபப்பாபா...........அம்மம்மம்மா.....   10:00:26 IST
Rate this:
2 members
0 members
50 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
தமிழ் தாய்க்கு சிலை வைப்பது அவசியம் இல்லை என்று கூற வருவது நல்ல விஷயம்....ஆனால் ஆங்கில வழி கல்வி , ஏழை குழந்தைகளுக்கு கிடைப்பதை சந்தடி சாக்கில் குற்றம் சொல்வதை இந்த தருணத்தில் ஏற்று கொள்ள இயலாது..... அதெப்படி ஒரு நல்ல விஷயத்தையும் [ ஏழை குழந்தைகளுக்கும் ஆங்கில வழி கல்வி ] , தேவையில்லாத விஷயத்தையும் [ சிலை அமைப்பது ] - தொடர்பு படுத்த முடிகிறது .....?   10:11:35 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment