அடுத்த பிரதமர் எனும் கனவில் இருக்கும் முதல்வர் தனது கனவை நினைவாக்க இந்த கம்னிஸ்ட் கட்சிகள் நாளை உதவக்கூடும் என்ற எண்ணத்தில்தான் இன்று சிவப்பு கட்சிகளுக்கு ராஜ்யசபா செல்ல பச்சை கோடி காட்டி உள்ளார்.
18-ஜூன்-2013 07:40:53 IST
பி ஜ பி அணியிலிருந்து நிதிஷ் வெளியே வருவது நல்ல விஷயம். அதே சமயம், இவர் மூன்றாவது அணியில் இணைவாரா அல்லது நான்காவது துவங்குவாரா என தெரியவில்லை. பிரதமர் பதவிக்கு தகுதி உள்ள நபர் இவர் ஆனால், பணபலம் மிக்க முலாயம் சரத்பவார் போன்றவர்களுக்கு இணையாக போட்டியிட முடியுமா என தெரியவில்லை. பாராளுமன்றதேர்தலில் காங்கிரஸ் பி ஜ பி அணிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணில் அமையவேண்டியது நாட்டுக்கு நல்லது. அப்படி ஓர் அணி நிதிஷ் போன்ற நேர்மையாளர்கள் தலைமையில் அமையும் பட்ச்சத்தில், மக்களும் முகுந்த ஈடுபாட்டோடு அவ்வணிக்கு வாக்களிப்பார்கள்.நிறைவேறுமா மக்களின் எதிர்பார்ப்பு????
16-ஜூன்-2013 08:15:58 IST
தமிழ் நாட்டிலிருந்து ஆறு ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது ஜெயலலிதாவால் ஒரு பெண் உறுப்பினரை கூட தேர்வு செய்யமுடியவில்லை என்பது துரதிஷ்டம். ஆகவே கவிஞர் கனி மொழி அவர்களை ராஜ்ய சபாவுக்கு எம் பி ஆக அனுப்புவது நல்லது. கடந்த முறை ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டியது நல்லது.ஏற்கனவே ராஜ்ய சபா உறுபினராக இருந்த போது கனிமொழி அவர்கள் பல ஆக்கபூர்வமான விசயங்களை பாராளுமன்றத்தில் பேசினார் என்பது உண்மை. கனி மொழி அவர்களை எம் பி ஆக்குவது காலத்தின் கட்டாயம்
14-ஜூன்-2013 08:03:54 IST
இடை தேர்தல் முடிவுகள் பொது தேர்தல் முடிவுகளுக்கு ஓர் முன்னோட்டமாக இருந்து விட முடியாது, அரசியல் கட்சிகள் சரி பல கூட்டல் கழித்தல்களுக்கு பிறகு தேர்தலையும் கடைசி நிமிட கூட்டல் கழித்தல் உணர்வுகளுக்கு பிறகு வாக்காளர்களும் தேர்தலை சந்திப்பார்கள்,ஆகவே முடிவு வேறு மாதிரித்தான் இருக்கும். இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி என்பது பொது தேர்தலில் கூட்டணி வைக்க பேரம் பேச உதவும். ஆனால் அதே சமயம் பொது தேர்தல் வெற்றிக்கு உதவும் என சொல்ல முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இந்தியா போன்ற பெரிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் சாத்தியமல்.
07-ஜூன்-2013 07:17:06 IST
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்களை பெற்று அதை தவறாக பயன்படுத்தும் நபகர்களின் மீது என்ன நடவடிக்கையை ஏற்ப்படுத்தும் இந்த சட்டம்?
04-ஜூன்-2013 08:21:31 IST
இது நிச்சயம் நாட்டு நலன் கருதி இருக்காது. எது எப்படியோ, கணவனை காட்டிக்கொடுத்த இந்த அற்ப்புத மனைவியின் செயல்பாடுகளை குறைந்த பட்சம் ஒருவருடத்திற்கு அதாவது புகார் கொடுத்தற்கு முன்னரும் புகார் கொடுத்ததற்கு பின்னர் ஒருவருடமும் கவனித்து பார்த்தால் எல்லா உண்மைகளும் தெரியும். கணவனே கண் கண்ட தெய்வம்
15-மே-2013 08:12:13 IST
பொறுப்பான திட்டம், வீடு கட்டுபவர்களும் பொறுப்பை உணர்ந்து சோலார் மின் சக்தியை பயபடுத்துவது எல்லோருக்கும் நல்லது. பல லட்சங்கள் சிலவு செய்து வீடு கட்டுபவர்கள் சில ஆயிரங்கள் சிலவு செய்து சோலார் மின்திட்டம் அமைப்பது நல்ல விசயமே.
25-ஏப்-2013 08:14:23 IST
தமிழனின் குரல் கர்நாடக சட்ட சபையினுள் ஒலிக்க அங்கு தி மு கவும் அ தி மு கவும் கூட்டணி வைப்பது தமிழன் நலன்சார்ந்த செயல்,செய்வார்களா அவர்கள்?????????????
13-ஏப்-2013 07:28:12 IST
நண்பர் மனு நீதி சோழன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. புருஷனை பற்றி இல்லாததும் பொல்லாததும் வெளியில் சொல்லி திரிந்து வாழ்க்கையையும் கெடுத்துக்கொண்டு வாழாத வாழ்க்கையை வாழும் பெண்களுக்கு இந்த அம்மையார் ஓர் நல்ல எடுத்து காட்டு
13-ஏப்-2013 07:25:06 IST