Advertisement
தினமலர் முதல் பக்கம் » Dr.R.Shanmuga Sundaram அவரது கருத்துக்கள்
Dr.R.Shanmuga Sundaram : கருத்துக்கள் ( 10 )
Dr.R.Shanmuga Sundaram
Advertisement
பிப்ரவரி
12
2013
பொது மத்திய பட்ஜெட்: வரி செலுத்துவோர் கனவு நிறைவேறுமா?
வருமான வரியை குறைத்தால் மக்களின் வாங்கும் சக்தி அதிகம் ஆகும்.சேமிப்பும் பெருகும்.பொருளாதாரம் வலுவடையும்.இந்தியாவில் மட்டும்தான் எல்லாவற்றிற்கும் வரி செலுத்த வேண்டி உள்ளது. செலவு ஒரு பக்கம், லஞ்சம் ஒருபக்கம்,வரிஒருபக்கம்.இப்படி இருந்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை எங்கனம் சிறக்கும்?தமிழக கோயில்களில் இப்பொழுது சாமி தரிசனம் கூட கட்டண சேவை ஆகி விட்டது...நல்ல சாலை வசதிக்கு கட்டணம்,பாத்ரூம் வசதிகளுக்கு கட்டணம்,மத்திய தர மக்கள் இப்படி எல்லாவற்றியும் பணம் கொடுத்து அனுபவிக்கும் போது வருமான வரியும் கூடினால் மக்கள் என்னதான் செய்ய முடியும்...நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் ஏதாவது வரிச்சலுகை கொடுத்தால் அது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்... 30% வரி என்பது உண்மையில் மிகபெரிய சுமை..   15:41:00 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
11
2013
எக்ஸ்குளுசிவ் சமஸ்கிருத ஆய்வு மையம் பணமின்றி முடக்கம் ; ஓலை சுவடிகள், "டிஜிட்டல்' மயமாவதில் தடை
வெளி நாட்டில் வாழும் இந்தியர்களில் 90% சமஸ்க்ரிதம் மேல் பற்று உள்ளவர்கள். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு டிரஸ்ட் அமைத்து அதில் அவர்களின் நன்கொடைகளை சேர்த்து அந்த பணத்தை கொண்டு சமஸ்கிரத கல்லூரியை காப்பாற்றலாம்.. இது போன்ற காரியங்களுக்கு அரசாங்கம் எந்த நன்மையையும் செய்யாது. ஏன் என்றால் இது வோட்டு வாங்கி தராது. தேவ பாஷையான சமஸ்க்ரிதம் அழிந்து போகாமல் இருக்க அந்த பாஷை மேல் பற்று உள்ளவர்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும். சமஸ்க்ரிதம் விரும்பும் மக்கள் ம்யுசிக் அகாடமியில் உட்கார்ந்து சமஸ்க்ரித பாடல்களை ரசிக்கும் பொது,அவர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த மொழியையும் காப்பாற்றலாமே. அப்படி இல்லை என்றால் தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமே இருக்காது.அவர்கள் தங்கள் அறிவையும், ஆளுமையையும் இந்த விசயத்தில் பயன்படுத்தி மொழியை வாழ வைக்கலாம்.மைய அரசாங்கத்திற்கும் மனிதவள மேம்பாட்டு துறைக்கும் கூட்டு விண்ணப்பம் அனுப்பலாம்....   11:08:30 IST
Rate this:
75 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
பொது 2011 முதல் 2013 வரை புதுப்பிக்க தவறியவர்கள் இம் மாதம் இறுதி வரை புதுப்பிக்க புதிய சலுகை
மிகவும் நன்றி.ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது என்பது மூட நம்பிக்கைகளில் ஒன்று என தோன்றுகிறது.அனைத்து வேலைகளுக்கும் பரீட்சை வைத்துதான் ஆட்களை தேர்வு செய்யும் போது வேலை வாய்ப்பு அலுவலகத்தின் வேலை என்னவென்ற தெரியாமல் பலரும் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.சீனியாரிட்டி என்பது தேவை இல்லாத ஒன்றாகிவிட்டது.இந்த சூழ் நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதும் புதிப்பிப்பதும் தேவைதானா?   09:35:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
4
2013
அரசியல் ராமர் கோவில் பா.ஜ.,வின் நிரந்தர கொள்கை: கல்ராஜ் மிஸ்ரா
தாராளமாய் ராமருக்கு கோயில் கட்டுங்க.ஆனா அதுக்கு முன்னால இந்தியாவோட பொருளாதாரம் மேம்பட, லஞ்சம் ஒழிக்க,வேலையில்லா திண்டாட்டம் ஒழிய,வறுமை ஒழிய,நேர்மையான அரசாங்கம் அமைய,நதிநீர் பிரச்னைகள் தீர,விலைவாசி குறைய,அணைத்து மக்களுக்கும் அடிப்படை வசதி கொடுக்க,தொழில் பெருக, விவசாயம் வளம் பெருக,இப்படி மக்கள் முன்னால காங்கிரஸ் கவெர்மெண்ட் வைத்திருக்கிற பிரச்னைகள் தீர முதலில் தீர்வுகள் சொல்லுங்க.அப்பத்தான் பீ,ஜெ,பீ மேல மக்களுக்கு நம்பிக்கை வந்து ஆட்சிய கொடுப்பாங்க.பசியட இருக்கிரவனால சாமி சரியா கும்பிட முடியாது.ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.எங்கும் உள்ள இறைவனுக்கு ஏதோ ஓரிடத்தில் மட்டும் கோயில் கட்டுவதுதான் உங்கள் கொள்கை என்றால் அதை மாற்றி கொள்ளுங்கள்.முதலில் உங்கள் கட்சியின் பிரதம மந்திரிக்கு யார் தகுதி என்பதையே இன்னும் நீங்கள் தீர்மானிக்காமல் இருக்க வேண்டாம்.காங்கிரஸ் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது.நீங்களாவது நல்ல அரசாங்கம் கொடுங்கள்.முதலில் மக்கள் பிறகுதான் எல்லாம்.ஆல் த பெஸ்ட்.   09:51:59 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

பிப்ரவரி
1
2013
பொது டீசல் ஒவ்வொரு மாதமும் விலை உயரும்: மொய்லி
மன்மோஹன்சிங் சோனியா காந்தி ராகுல் காந்தி வீரப்ப மொய்லி மற்றும் நம் மந்திரிகள் எல்லாரும் எப்போ பணம் கொடுத்து அவங்க வண்டிகளுக்கு பெட்ரோலும் டீசலும் போடுறாங்களோ அப்பத்தான் பெட்ரோல் விலை டீசல் விலை எல்லாம் குறையும். அடுத்த தேர்தல் வரும் வரை நீ வச்சதுதான் சட்டம். நீ எவளோ ஏத்தினாலும் தாங்கிக்கற மக்களை ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சிக்கோ.உங்களுக்கு வோட்டு போட்டவங்களுக்கு ஒரு பக்கம் விலை ஏற்றம் மறுபக்கம் பட்ஜெட்டில இன்கம் டாக்ஸ் ஏற்றம். மறுபடியும் ஆட்சிக்கு வர மாட்டோமுன்னு தெரிஞ்சி போச்சி.அதுக்குள்ள எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அடிச்சிக்கணும்.வேற யாருக்காவது வோட்டு போட்டாலும் மக்கள் நிலைமை மாறவா போகுது? ஒவ்வொரு மந்திரியும் வெளியில போகும்போதெல்லாம் ஒரு பெரிய பட்டாளமே அரசாங்க செலவில் கூடவே போகும். அதுக்கெல்லாம் டீசல் செலவு மக்களோட வரிப்பணம்தானே.நீங்களும் திருந்த மாட்டீங்க.மக்களும் திருந்த மாட்டாங்க.அனுபவி ராஜ அனுபவி.   17:04:19 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
30
2013
எக்ஸ்குளுசிவ் அறிவிப்போடு நின்றது தொழில்நுட்பம் : மீண்டும் அரசு பேருந்துகளில் டிக்கெட் கிழிக்கும் நடைமுறை
பம்பாய் போன்ற நகரங்களில் மின்னணு பயணசீட்டு முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.தமிழ் நாட்டு கண்டக்டர்கள் இருக்கையை விட்டு எழாமல் பயணசீட்டு கொடுப்பார்கள்.வண்டி காலியாக இருந்தாலும் கூட பயணிகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று டிக்கெட் கொடுக்க மாட்டார்கள். வண்டி காலியாக இருந்தாலும் வழியில் யாராவது பயணிகள் நிறுத்தினால் வண்டியை நிறுத்தவே மாட்டார்கள்.மாசம் பிறந்தால் சம்பளம், பண்டிகை வந்தால் போனஸ் இப்படி இருந்தால் அரசு பேருந்துகள் ஒரு நாளும் லாபம் பார்க்காது. இந்த லட்சணத்தில் மின்னணு கருவிகளை அவர்கள் எங்கே பயன் படுத்துவார்கள்?அந்த கருவிகளை விற்றவர்களுக்கு நல்ல லாபம். பொது மக்களுக்கு நன்மை கொடுக்கும் எந்த நல்ல திட்டங்களும் தமிழ் நாட்டிற்குள் நுழைய விடவே மாட்டார்கள்.ஒன்று இரண்டு பேருந்துகளை ஓட்டும் தனியார் நிறுவனங்கள் எப்படி லாபம் சம்பாதிக்கின்றனர்? அரசு பேருந்துகளை சரியாக சுத்தம் கூட செய்வதில்லை.எல்லாம் என்னால்தான் நடக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருந்தால், நடக்கும் எல்லாவற்றிற்கும் பொறுப்பு ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்பது வள்ளுவர் வாக்கு.   15:26:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
23
2013
பொது பணக்காரர்களுக்கு அதிக வரி: விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி ஆதரவு
உண்மையாக உழைத்து,கஷ்ட்டப்பட்டு படித்து ஒரு வேலையை வாங்கிக்கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றும் ஒரு நியாயமான மனிதன் வரி கட்ட வேண்டும்.ஆனால் காலை எழுந்தது முதல் இரவு படுக்க செல்லும் வரை இதுபோல எதுவுமே செய்யாமல் எந்த பொறுப்புகளும் இல்லாமல் வாழ்பவர்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்து ஒரு கும்பலை சோம்பேறிகளாக மாற்றி கொண்டு இருக்கிறது இந்த அரசாங்கம்.இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்களுக்கு என்று தனியாக சலுகைகள் தர வேண்டும்.நாம் கட்டும் வரியில்தான் மந்திரியும் மற்றவர்களும் எல்லா சௌகரியங்களையும் இலவசமாக அனுபவிக்கிறார்கள்.ஆனால் வரி கட்டும் குடிமகனுக்கு எந்த மரியாதையும் இல்லை.வரி கட்டும் அனைவருக்கும் இந்த அரசாங்கம் ஏதாவுது வசதி செய்து கொடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் எல்லோரும் தானே முன் வந்து வரி கட்டுவார்கள்.இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் 5 % வரி என்று கொண்டு வந்தால் வரி ஏய்ப்பு இருக்காது. எந்த கொம்பனுக்கும் ஜனாதிபதி முதல் பணம் சம்பாதிக்கும் பாமரன் வரை 5 % வருமானவரி கட்டாயம் ஆக்கவேண்டும்.அனைத்து இலவசங்களையும் உடனே தடை செய்ய வேண்டும்.உயிர் வாழ அனைவரும் உழைக்க வேண்டும்.படிக்க வேண்டும்.வருமான வரி கொடுக்கும் அனைவரும் மரியாதையாக சமூகத்தில் நடத்தப்பட வேண்டும்.எல்லோருக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்புகளை தர வேண்டும்.கல்வி திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்.இந்தியா முழுவதும் ஒரே பாட திட்டம் வர வேண்டும்.அரசாங்க வேலை வேண்டும் என்றால் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.நாட்டு பற்று, நேரம் தவறாமை ஒழுக்கம் நேர்மை இவைதான் அரசாங்க வேலைக்கு அடிப்படை தேவை என்ற நிலைமை வர வேண்டும்.இவை எல்லாம் வருமா??? என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.   10:05:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
11
2013
பொது இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: சிறந்த பாடல் விருதுக்கு தமிழ் பாடல்
அதிக மக்கள் தொகை,விலைவாசி உயர்வு,பாலியல் கொடுமை,அரசியல்வாதிகளின் அட்டகாசம்,சுகாதாரம் அற்ற சுற்றுப்புறங்கள்,இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தியர்கள் அதிலும் பெண்கள் ஆஸ்கர் வரை பரிந்துரைக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.பாம்பே ஜெயஸ்ரீ அவர்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை எல்லோரும் வேண்டி கொள்வோம்.   10:12:12 IST
Rate this:
1 members
1 members
57 members
Share this Comment

ஜனவரி
8
2013
பொது எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நெல்லை பல்கலை.,யில் டாக்டர் பட்டம்
இதுவரை சிவாஜிகணேசன் டி எம் எஸ், பீ சுசீலா, எம் எஸ் வீ , நாகேஷ், மனோரமா இவர்கள் எல்லாம் எந்த பட்டங்களும் இல்லாமல் வாழ் நாள் சாதனை படைத்தவர்கள்.ஹிந்தி படங்களில் நடித்தவர்களுக்கு மட்டும்தான் மத்திய அரசாங்கம் பட்டங்கள் கொடுக்கும்.தெற்கிலே உள்ளவர்களுக்கு குறிப்பாக மலையாளம் தவிர வேறு மொழியில் நடித்தவர்களுக்கு விருதுகள் கிடைத்ததில்லை. நெல்லை பல்கலைகழகம் திரு எம் எஸ் வீ அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை ஒரு தமிழனாக மனதார பாராட்டுவோம்.   10:57:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
29
2012
கோர்ட் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
மாண்புமிகு முதல்வர் அவர்களே, சென்னையில் உள்ள அடுக்குமாடி வியாபார ஸ்தலங்களும், செல்போன் விளம்பரம் மற்றும் அணைத்து விளம்பர போர்டுகளும் எப்படி எப்பவும் தடை இன்றி மின்சாரம் பெறுகின்றன? அணைத்து தொலைக்காட்சி சேனல்களும் எப்படி மின்சாரம் பெறுகின்றன? எம் எல் யேக்களும் எம் பி க்கள் மந்திரிகள் எப்படி மின்சாரம் பெறுகின்றனர்? போயஸ் தோட்டம் எப்படி தடையின்றி மின்சாரம் பெறுகின்றது? இதையெல்லாம் முதலில் யோசித்துவிட்டு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருங்கள்? மின்சார நிலைமை சரியாகும் வரை அரசு விழாக்கள் பொதுக்கூட்டம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தடை போடுங்கள். இரவு நேர சினிமாக்களுக்கு தடை போடலாம். நீங்கள் கலந்துகொள்ளும் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் தேவை இல்லாமல் வீணாகும் மின்சாரத்தை மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். கடந்த ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டுக்கு போயிருந்தால் அவர்கள் எல்லாம் வீட்டுக்கு போயிருக்க மாட்டார்கள். பரவாஇல்லை இப்பொழுது நீங்கள் பழியை மத்திய அரசாங்கத்தின் மீது சாமார்த்தியமாக போட்டுவிடலாம். கருணாநிதியை விட நீங்கள் அரசியல் அருமையாக செய்கிறீர்கள். பாவம் மக்கள்.உங்கள் இருவரை தவிர வேறு யாரும் அவர்களை காப்பாற்ற முடியாது. கேப்டன் தண்ணி அடிக்கவும், சினிமால நடிக்கவும் மட்டும்தான்.நல்ல நாடு நம் நாடு....டாக்டர் சுந்தரம் மும்பை.   15:11:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment