3 மாதத்தில் மின் வெட்டை போக்குவேன் என்று அம்மையார், தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி கொடுத்தார். வழக்கமாக திமுக ஆட்சியில் அனைத்து அரசு துறைகளையும் குட்டி சுவர் ஆக்கி விடுவது கருணவின் வேலை. ஆனாலும் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து துறை நிர்வாக சீர்கேடுகளையும், அம்மையார் அவர்கள் சீர் படுத்தி விடுவார்கள். இந்த முறை beyand repairs என்று சொல்லும் அளவுக்கு, அனைத்து அரசு துறைகளையும் சின்னா பின்ன படுத்தி விட்டார் கருணா. அதிலும் தமிழ்நாடு மின் வாரியத்தை குழி தோடி அதல பாதாளத்தில் புதைத்து, அடுத்து வரும் ஆட்சியாளர்கள் தோண்டி எடுத்து விடாத படி, ஒரு மீட்டர் கணத்தில் reinforced concrete போட்டு மூடி, மேலே செம்மொழி பூங்கா,அண்ணா நூலகம், புதிய தலைமை செயலகம் எல்லாம் கட்டி வைத்து விட்டார் நம் கருணா. அம்மையார் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மின் வாரியம் புதைக்க பட்ட இடத்தை தேடி கண்டு பிடித்து, மீட்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக சீர் படுத்தி வருகிறார். வரலாறு காணாத இந்த நிர்வாக சீர் கேட்டை ஏற்படுத்திய கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர் பார்ப்பு.
21-மே-2013 08:42:43 IST
மணமகன் சதீஸ் ஸ்டாலின் உதவியாளர் மட்டுமின்றி குடும்ப நண்பர். எனவே காலையில் நடை பயிற்சி யில் ஈடு படும் போது மிக மிக கவனம் தேவை. திமுக 5முறை ஆட்சியில் அமர்ந்து சாதித்தது தான் இந்த மின் வெட்டு, என்பது பாமரனுக்கும் தெரியும். திமுக ஆட்சியில் இருந்து செல்லும் ஒவ்வொரு தடவையும், கஜனாவை கழுவி குப்புற கவிழ்த்து விடுவது, மின் வாரியம் போன்ற அரசு துறைகளை பல ஆயிரம் கோடி கடனில் விட்டு செல்வது போன்ற சாதனைகளை தவறாது செய்தார்கள். அடுத்து ஆட்சிக்கு வரும் அம்மையார் திமுக செய்த கோணங்கி செயல்களை எல்லாம் ஒவ்வொரு முறையும் நிமிர்த்த வேண்டும். இது தானே தமிழ் நாட்டில் நடை பெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் தான் மின் வெட்டிற்கான காரணங்கள் மக்களிடம் பகிரங்கமாக சட்ட சபையில் அறிவிக்க பட்டது. பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள மின் வெட்டு பிரச்னை முதல்வர் அவர்களால், விரைவில் தீர்க்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது. அப்போது ஸ்டாலின் போன்றவர்கள் முக்காடு போட்டு கொள்வதை தவிர வேறு வழி இருக்காது.
21-மே-2013 05:54:18 IST
எதையுமே கேலி,கிண்டல் செய்த கருணா, மலிவு விலை உணவகம் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி வாய் மூடி மவுநியாக இருப்பது, முதல்வரின் திட்டம் மாபெரும் வெற்றி என்பதற்கு சான்று என்று சொல்லவும் வேண்டுமோ.
16-மே-2013 07:08:27 IST
கண் ஆபரேசனுக்கு வீட்டிலே வாங்கி வச்சிருந்த கருப்பு கண்ணாடியை இவர் பாட்டுக்கும் எடுத்து மாட்டிக்கிட்டு வந்துட்டாரு. அங்கே தேடிகிட்டு இருப்பாங்க.
16-மே-2013 06:41:50 IST
சிபிஐ க்கு தன்னாட்சி கொடுக்கும் சட்டம் இயற்ற ப. சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்க பட்டுள்ளது என்ற செய்தி நகைப்பிற்கு உரியது. இந்த பசி அவர்கள் தான், 2ஜீ மகா ஊழலுக்கு கதை, வசனம், இயக்கம், நடிப்பு, அத்தனைக்கும் சொந்தக்காரர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். சிவகங்கையில் இவர் தேர்தலில் பெற்ற வெற்றி க்கு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள மற்றொருவர் zero loss புகழ் கபில் சிபல், 15 நாள் நாராயணசாமி யும் இடம் பெற்றுள்ளது இன்னொரு வேடிக்கை. இது எப்படி உள்ளது என்றால், திருட்டை ஒழிக்க சட்டம் இயற்றும் வேலையை திருடர்களிடம் ஒப்படைததால் எப்படி இருக்கும், அப்படி உள்ளது. விளங்கிடும்.
15-மே-2013 06:19:30 IST
விஜயகாந்த் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் மக்களிடம் வரவேற்பு கிடைக்காது. ஏனென்றால் அதிமுக கூட்டனியை விட்டு வெளியேறியதற்கான காரணங்கள் இவருக்கே தெரியவில்லை. இவர் எங்கு கூட்டணி அமைத்தாலும் இதே நிலையை தான் மேற்க்கொள்வார்.குழப்பத்தின் உச்ச கட்டத்தில் இருக்கும் விஜயகாந்த் அவர்களின் அரசியல் இனிமேல் இறங்கு முகம் தான்.
12-மே-2013 05:30:45 IST
ஒவ்வொரு சித்திரா பவுர்நமி விழாவிலும்,ஜாதி பெயரில் பகிரங்கமாக வன்முறை செய்து வந்தவர்கள் இந்த பாமக கட்சியினர். இந்த முறைதான் இவர்கள் சட்டத்திற்கு முன்பு தமிழக அரசால் நிறுத்தப்பட்டு உள்ளார்கள். பாமக வன்முறையில் ஈடுபடவில்லை என்று ராமதாஸ் மன சாட்சியை அடகு வைத்து விட்டு பத்திரிகைக்கு பேட்டி அளிப்பாதை எவரும் நம்ப மாட்டார்கள். இதற்காக நடு நிலையாளர்கள் ராமதாசிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அனைவரும் வாய் மூடி மௌனிகளாக உள்ளனர். அதே சமயம் பேட்டியின் போது முதல் முறையாக அவரது நா தழுதழுத்தது. இனிமேலாவது ராமதாஸ் வன்முறையை கைவிட்டு அரசியல் செய்ய வேண்டும். வன்முறை என்றும் வெற்றி பெற்றதில்லை என்பதை இவர் உணர வேண்டும்.
12-மே-2013 05:10:24 IST
முன்பு அண்ணா காலத்தில் கைவிடப்பட்ட தனி திராவிட நாடு,இப்போது உடனடியாக இந்தியாவில் இருந்து பிரித்து திமுக விடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு மீது கருணா ஒரு வழக்கு போடவேண்டும். தமிழ் ஈழம் கருணாவின் கனவு என்பதால், தமிழ் ஈழததை இலங்கையிலிருந்து பிரிதது தனி நாடாக்க வேண்டும், என்றும் உச்ச நீதி மன்றத்தில் மேலும் ஒரு வழக்கை டெஸொ மூலமாக போடவேண்டும்.
11-மே-2013 15:13:01 IST
அன்புமணி அவர்கள் ஜாமினில் வரக்கூடாது. அவர் ஒரு உண்மையான தலைவனாக இருந்தால், அனைத்து கட்சியினரையும் விடுதலை செய்த பின்னர் நான் விடுதலை பெறுவேன் என்று சொல்லி இருக்க வேண்டும்.
10-மே-2013 09:31:51 IST
குமார் சொல்வது போல மரக்காணம் பகுதியில், சிறப்பு ஆயுத படையை அரசு போட்டிருக்கலாம். பாமாக தலைவரும் கட்சியினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட முன்பே முடிவு செய்து விட்ட நிலையில், ஆயுத படை போலிஸாரை அங்கு நிறுத்தி இருந்தால், ஒரு 50 பேராவது துப்பாக்கி சூட்டில் பலி ஆகி இருப்பார்கள். அந்த சூழலில் உங்களை போன்றோரின் அரசுக்கு எதிரான கூச்சல் சற்று அதிகமாகவே ஒலிக்கும் இல்லையா. எத்தனையோ ஜாதி கட்சிகள் தமிழ் நாட்டில் உள்ளன. ஆனால் பாமாக போன்ற லாஜிக் இல்லாமல் வன்முறையில் ஈடுபடும் கூட்டத்தை போல எவரும் இல்லை என்பது தான் உண்மை. வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என்பதை சில தலைவர்கள் இன்னும் உணரவில்லை என்பது துரதிஸ்டமே.
10-மே-2013 09:20:12 IST