அந்த அளவுக்கு தியாகம் செய்த ஒரு மனிதரை மக்கள் இந்த அளவுக்கு நேசிப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நல்ல தலைவர் நல்ல மக்கள். இது மாதிரி ஒரு தன்னலமற்ற ஒரு தலைவர் இன்றைக்கு நம் இந்தியாவுக்கு தேவை.
15-ஜூன்-2013 10:53:27 IST
இந்த கிரிக்கெட் ஆட்டத்தை விட இவிங்க ஆடுற ஆட்டம் சூப்பரா இருக்கே. எல்லோரையும் பிடிச்சு உள்ளே தள்ளி போலீஸ் ஒரு ஆட்டம் ஆடினாதான் இவிங்க அடங்குவானுங்க.
04-ஜூன்-2013 16:24:09 IST
இங்கு கருத்து எழுதி இருக்கும் நண்பர்களே நீங்கள் கிரிகெட்டை பார்க்கவில்லை என்றால் இந்த IPL மாட்சை பார்ப்பதற்கு அல்லது BCCI நடத்தும் ஒவ்வொரு மாட்சை பார்ப்பதற்கு எல்லா மாநிலத்திலும் லட்ச கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதே IPL முதலில் 300 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்பட்டது. ஆனால் இன்று ருபாய் 750. ஆனாலும் கூட்டத்தை பாருங்கள். எவ்வளவோ கூதல்கள் இந்த விளையாட்டில் நடக்கின்றன. தெரிந்தும் ஓடி ஓடி போய் விழும் ரசிகர்களின் கூட்டத்தை பாருங்கள். இந்த வெறித்தனமும் இதில் மூலம் புழங்கும் கோடிக்கணக்கான பணமும்தான் இந்த கிரிக்கெட்டை நடத்துபவர்களின் பலம். ஆகவே இவர்களை குறை சொல்லி எந்த பயனும் இல்லை. இந்த மாதிரி இருக்கும் வரை பூக்கிகளின் காட்டில் மழைதான்.
20-மே-2013 11:34:06 IST
நண்பா ஜெமினி கணேசன் என்கிற பார்ப்பனர்தான் மூன்று கட்டி கொண்டார். ஜாதியை முன் நிறுத்தி பேசுகிறீர்கள். அப்படி என்றால் ஒரு சில மதங்களில் இல்லாததா? அனால் அவர் பொது மக்கள் சேவை என்றும் கட்சி என்றும் அடுத்தவர்களுக்கு புத்திமதி சொல்ல முன் வரவில்லையே
14-மே-2013 10:41:03 IST
கரன்ட் பிரச்சனை இருக்கும். மற்ற மாநிலங்களுக்கு பகிராமல் நம் தமிழ் நாட்டுக்கே கூடன்குளத்தில் உற்பத்தி செய்யபடும் மின்சாரம் கொடுத்தால் மின் வெட்டு நேரம் குறைக்கப்படும். நல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள்.
06-மே-2013 12:20:24 IST
பெயர்களை பாருங்கள் வடிவேலு படத்தில் வருகிற மாதிரி காடு வெட்டி, மரம் வெட்டி, மாட்டு ரவி, சாரை பாம்பு என்று. மனித இனம் மரங்களை அழித்து இயற்கை வளங்களை சின்னா பின்னமாக்கி விட்டது. மனித இனம் அழிவதற்கு இயற்கையின் சீற்றம் தேவை இல்லை. ஜாதி என்கிற ஒரு சிறு துரும்பு போதும். வெந்து தணிந்து விடும்.
04-மே-2013 09:43:42 IST
இதை விட கேவலம் எங்காவது உண்டா? உலகத்துக்கே தெரிந்து பல லக்ஷம் கோடிகளை சுருட்டி வாயில் போட்டு வெந்நீர் கொட்டி கொண்டார்கள். இந்த கோடிகளினால் நம் இந்தியாவுக்கு எவ்வளவு நன்மை செய்யலாம். எவ்வளவு முன்னேற்றங்களை கொண்டு வரலாம். கொள்ளை அடித்த பணத்தை கக்க வைக்கறதை விட்டு விட்டு, இன்னும் வாதம், விவாதம், கோர்ட், பாராளுமன்ற குழு, கூட்டு பாராளுமன்ற குழு என்று வழக்கை ஜவ்வு மாதிரி இழுத்து கொண்டே போகிறோம். இதில் இவர் அவரின் மேல் பழி, அவர் இவரின் மேல் பழி என்று தாங்கள் தப்பிப்பதற்கு. மனசாட்சி கொண்ட ஒவ்வொரு இந்தியனும் நினைத்து பாருங்கள். இதெல்லாம் யாருடைய வியர்வையில் இருந்து சிந்திய ரத்தங்கள் அல்லது இந்த கொள்ளைக்கு யாருடைய வியர்வையும் ரத்தமும் உருஞ்ச பட போகின்றன என்று. நீதியை விட்டு விட்டு இந்த அளவுக்கு விவாதங்கள் தேவையா என்பதுதான் கேள்வி? சூத்திரதாரிகளை யாரும் இயக்க வேண்டியது இல்லை.
20-ஏப்-2013 10:29:05 IST
நடுநிலையை பார்க்க வேண்டியது நியாம்தான். உச்சகட்ட போரின் போது அப்பாவி மக்கள் கொல்லபடுவது எந்த விதத்தில் நியாயம்? no firing zone உள்ள மக்களின் மீது சரமாரியாக குண்டுகளை போட்டது எந்த விதத்தில் நியாயம்? பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது எந்த விதத்தில் நியாயம்? இரவில் பெண்களின் கதறல்களும், சிறுவர்களும் சிறுமியர்களும் ஈவு இறக்கம் இன்றி கொல்ல பட்டது, மகளின் முன் தந்தையும், மகனின் முன் அம்மாவும் நிர்வாணமாக சரண்டர் ஆக சொன்ன இலங்கை ராணுவத்தின் வெறி செயல் கண்டிக்க தக்கதே. இதற்கு இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் சர்வ தேச விசாரணையில் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
23-மார்-2013 11:57:35 IST