எத்தனை கட்சிகளை உடைத்து, பிரித்து, ஒற்றுமையை குழைத்து மகிழ்ந்திருப்பீர்கள்? இன்று உங்களுக்கு என்று வரும் போது மட்டும் வலிக்குது. இன்றைய நிலைமையில் உங்களுடன் கூட்டணி வைக்க கூடிய ஒரே ஒரு தகுதியான ஆள் மாம்பழம் மாமா தான். காங்கிரஸ் வேறு இல்லை, கள்ள ஒட்டு போடவும் முடியாது, சிதம்பரம் வெற்றி பெற்ற சிதம்பர ரகசியத்தை போன்று அரங்கேற்ற முடியாது, எந்த தில்லு முல்லும் செய்ய முடியாது, அதனால் வேறு வழி இல்லை, துக்கடா கட்சிகளை வைத்து தான் நீங்கள் தேர்தலில் போட்டியிட முடியும். அப்போது தான் எங்களுக்கு உங்கள் எல்லாரையும் சேர்த்து குப்பையில் வீச முடியும்.
20-மே-2013 00:35:12 IST
தமிழ்நாட்டில் 40 க்கு 40 வாங்கிய ஒரு கட்சி, இன்று பரிதாபமான நிலையில் தோற்றுப்போனது. அந்த கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா MP கூட இல்லாத நிலையில் உள்ளது. நிச்சயம் பாஜக எடியுரப்பாவை அரவணைத்து வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவேண்டும் உண்மையில் எடியுரப்பா பிரித்த வாக்குகள் தான் பாஜக தோற்பதற்கு காரணம். பல தொகுதியில் எடியுரப்பா பத்து ஆயிரம் வோட்டுக்கள் வாங்கி காங்கிரசை ஜெயிக்கவைதுள்ளார். பாஜக விற்கு எடியுரப்பா நன்றி கடன் செலுத்தியுள்ளார். காங்கிரஸ் எதோ மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக நினைத்து கனவில் மிதக்கின்றார்கள், எடியுரப்பா மற்றும் JD கட்சிகள் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் காங்கிரஸ் இல்லாமல் போயிருக்கும். இதே போல தான் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வாக்குகளை பிரித்து வெற்றி பெறுகிறது. குஜராத்தில் கூட கேஷுபாய் படேலை வைத்து வெற்றி பெற்றிடலாம் என்று எண்ணியது, கேஷுபாய் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் குஜராத்தில் காங்கிரஸ் வழித்து எரியபட்டிருக்கும். சரி இந்த வருடத்தில் நடைபெற போகும் டெல்லி தேர்தலிலும், ராஜஸ்தான் தேர்தலிலும் இந்த வெற்றியை பெற்று காண்பிக்கட்டும். 2014 தேர்தலில் காங்கிரஸ் என்கிற கட்சிக்கு சங்கு ஊதி சமாதி கட்டவேண்டும். இன்று பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ் முயன்றது, அது என்ன என்றால் வாங்க தேசத்தை சுற்றியுள்ள இந்த பகுதிகள் பலவற்றை வங்கதேசத்துடன் இணைக்கும் மசோதா..... இந்த மசோதாவை எதிர் கட்சியினர் பிடுங்கி சென்று நிறைவேற்றாமல் தடுக்கப்பட்டது. அப்படியா பட்ட காங்கிரெஸ் கட்சியை கர்நாடக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். கர்நாடக மக்களுக்கு ஏழரை ஆரம்பம். தேர்தல் ஆணையம் புதிய கட்சிகள் தோன்றுவதை தடை செய்யவேண்டும். ஒரு மாநிலத்தில் பிரதான இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிட அனுமதிக்க வேண்டும். இந்த சிறு புதிய கட்சிகளால் தான் பிரதான கட்சிகளுக்கு பேராபத்து, இதனால் மக்கள் விரோத கட்சி ஆட்சிக்கு வந்துவிடுகிறது. இனி ஒவ்வொரு மாநிலத்திலும் மற்ற கட்சியினரை காங்கிரஸ் பிரித்து வாக்குக்களை பிரித்து வெற்றி பெற நினைக்கும், இது மிகவும் ஆபத்து.
08-மே-2013 14:37:45 IST
இன்று எடுத்த முடிவை 2009 எடுத்திருந்தால் ஒரு லட்சம் தமிழர்கள் காப்பாற்றபட்டிருப்பார்கள். சர்கள் பதவியை ரசித்து ருசித்து சாப்பிட்டுவிட்டு இப்போது நாடகம் ஆடுகிறார். கடைசியில் ஒரு பிட் போட்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் விவாதம் செய்யப்பட்டு தீர்மானம் கொடுவரட்டும் என்றார். இந்த தீர்மானம் அமெரிக்க ஜெனீவாவில் தானே கொண்டுவரபோகிரார்கள்? அல்லது இந்திய பாராளுமன்றதிலா? சு.சுவாமி சொன்னதை போல, நிச்சயம் இவரு திரும்ப UPA அரசாங்கத்தில் போய் ஒட்டிகொல்வார். ஒரு நாள் கூட இவரால் பதவி இல்லாமல் இருக்கமுடியாது. நீங்கள் எல்லாம் பார்க்கத்தானே போகிறீர்கள்.
20-மார்-2013 00:25:53 IST
நண்பர் கார்த்திக், தமிழன் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தால், நம்முடைய பிரச்சனைகள் முதல்வரின் கவனத்திற்கு செல்லவேண்டும் என்றால், திமுகவை தோற்கடித்து எதிர் கட்சியாகவே வைத்துகொள்ள வேண்டும். அப்போது தான் தமிழன் மீது அவர்களுக்கு பாசம் பீரிட்டு வரும், போராட்டங்கள் அதிகம் நடைபெறும். மரியா, 10 வரும் யாரிடத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரம் இருந்தது? அப்போது இந்த அதிகாரத்தை பயன்படுத்தி போரை தடுத்திருக்கலாமே? அப்போது இல்லாமல் இப்போது இந்த அக்கறைக்கு காரணம்? வேறு ஒன்றும் இல்லை லோக் சபா தேர்தல் தான்.
06-மார்-2013 09:05:53 IST
நானும் ஜெயிலுக்கு போறேன், நானும் ஜெயிலுக்கு போறேன் காமெடி போல இருக்குது. ஆளும் கட்சியாக இருந்த போது இலங்கை இன படுகொலைக்கு துணை போனார்கள். எதிர்கட்சியாக வரும் போது மட்டும் தான் இவர்களுக்கு மக்கள் மீது பாசம் பீரிட்டு வருகிறது. அதனால் கருணாநிதியின் மக்கள் சேவை தமிழக மக்களுக்கு முழுமையாக கிடைக்கவேண்டும் என்றால் இனி வரும் அணைத்து தேர்தல்களிலும் டெப்பாசிட் இழக்க வைத்து, தோற்கடித்து வைத்து கொள்ளவேண்டும், அப்போது தான் இவர்களின் மக்கள் நல சேவை தமிழக மக்களுக்கு பரிப்பூரனமாக கிடைக்கும்.
06-மார்-2013 01:39:51 IST
ஐயா தினமலரே, முதல்வர் கொடி அசைத்து புதிய ரயிலை துவக்கி வைத்தால் உடனே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு அச்சாரம் என்கிறீர்கள், பிறகு மோடி பதவி ஏற்ப்பு விழாவில் முதல்வர் கலந்துகொண்ட பிறகு பாஜக கூட்டணிக்கு அச்சாரமா என்கிறீர்கள், பிறகு மரியாதை நிமித்தமாக முதல்வர் வைகோ அவர்களை நடு வழியில் சந்தித்ததால் வைகோவுடன் கூட்டணி என்கிறீர்கள்..... பிறகு பாஜகவும் வேண்டாம், காங்கிரஸ் கட்சியும் வேண்டாம் என்று கூறும் போது தனியாக நிர்ப்பார் என்கிறீர்கள். உங்கள் யூகத்திற்கு ஒரு அளவே இல்லையா? மதவாத சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுக்கவே மத்திய அரசுக்கு ஆதரவு என்று அணைத்து தில்லு முல்லு வேலைகளையும் செய்தது, இப்போது மதவாத கட்சி மதசார்பற்ற கட்சியாக தெரியுமா மஞ்ச துண்டுக்கு? முதலில் திமுகவை நம்பி இனி யாரும் வாக்களிக்கமாட்டார்கள். இரண்டு முறை திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு அவர்களால் எந்த நன்மையையும் தமிழகத்திற்கு ஏற்படவில்லை, மாறாக கெடுதல்கள் தான் அதிகம் என்று மக்களுக்கு தெரியும். அப்படி இருக்கும் போது சிகப்பு தோழர்கள் எப்படி மஞ்ச துண்டிடம் சேர்வார்கள்? தோழர்கள் எப்போதும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தான் விரும்புவார்கள், தோற்கும் கட்சியுடன் அல்ல. இப்போது டெசோ மானத்தில் பங்கேற்றால் முதல்வரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும், அடுத்த ஆண்டு வரும் ராஜ்யசபா MP தேர்தலில் தோழர்களுக்கு கொடுக்கவிருந்த ஒரு MP கூட அம்மா கொடுக்கமாட்டார். அதே போல, பாஜகவும் முதல்வரின் கோபத்திற்கு ஆளாக மாட்டார்கள். ஏன் என்றால் லோக்சபா தேர்தலில் 40 தொகுதியும் அம்மா அவர்கள் கைப்பற்றுவார்கள் என்று தெரியும். அப்படி இருக்கையில் அம்மாவை பகைத்து கொள்ள மாட்டார்கள். இப்போதைக்கு அல்ல, எப்பவுமே திமுகவுடன் மாம்பழம், முரசு, கை, குருமா போன்ற கட்சிகள் மட்டுமே சேர்வதற்கு தயாராக உள்ளது. முழ்கும் கப்பலில் பயணிக்க யாருக்கும் தைரியம் இல்லை. இன்னும் லோக் சபா தேர்தல் வர ஒரு வருடம் உள்ளது, இன்னும் என்ன என்ன யூகங்கள் வரபோகிறதோ? டெசோ எப்பவும் புஸ்சோ தான்.
24-பிப்-2013 01:38:17 IST
இப்போ பாருங்க மரியாவை. எல்லாம் திமுக ஆட்சியில் தொடங்கிய திட்டம் என்று கூறுவார். பிறகு திமுக ஆரம்பித்த திட்டங்களை ஜெயலலிதா அம்மையார் கிடப்பில் போடுவதே வேலை என்று கூறுவார். எது எப்படியோ, இதற்க்கு 900 கோடி ரூபாய் செலவு செய்து திட்டம் போடப்பட்டது. இதில் எவ்வளவு கோபாலபுர கஜானாவுக்கு சென்றது என்பதை மரியா வசதியாக சொல்ல மறந்துவிடுவார். இது ஒரு அற்புதமான திட்டம் ஆனால் இதற்கு ஆன செலவில் 70 சதவிகிதம் திமுக தட்சிணாமூர்த்தி கஜானாவுக்கு சென்றிருக்கும்.
23-பிப்-2013 00:58:50 IST
அப்படி என்றால் கருணாநிதி ஆரம்பித்த திட்டத்தை எதுவும் முதல்வர் கைவிடவில்லை என்பதை இப்போவாவது ஒப்பு கொள்கிறீர்களா மிஸ்டர் மரியா? காவேரி ஆணையம் உங்க தலைவரால் வந்ததா? சரி அரசிதழில் வெளியிடுவதை மட்டும் செய்துவிட்டு ஏதோ என்னால் தான் ஆணையமே வந்ததை போல பில்ட் அப். கரக்ட். மத்திய அரசில் யார் 10 ஆண்டு காலம் கோலோச்சியது? அதிமுகவா இல்லை திமுகவா? இடத்தையும் செய்ததாக கூறும் நீங்கள் ஏன் ஒரு முறை கூட மிக முக்கியமான ஒரு திட்டம், அரசிதழில் வெளியிடுவது செய்யவில்லை? விருப்பம் இல்லையா அல்லது கர்நாடகாவில் உள்ள உங்கள் சொத்துக்கள் சேதாரம் வரும் என்பதாலா? ஒரு திட்டத்தை யார் பிள்ளையார் சுழி போடுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை, யார் அதை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார்கள் என்பது தான் முக்கியம். 10 வருடமாக நீங்கள் செய்யாததை அம்மா செய்துள்ளது உங்களுக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றம் வருடத்திற்கு ஒரு முறை கூடுவதற்கு, வெளிநடப்பு செய்வதற்கு, அடுத்தவர் சேலையை உருவுவதர்க்கு, நாக்கை துருத்தி சண்டை செய்வதற்கு எதற்கு இவ்வளவு பெரிய கட்டிடம் ? வருடம் முழுவதும் மக்களுக்கு பயன்பட கூடிய மருத்துவமனை வந்தால் நல்லது தானே? அதுவும் தமிழ்நாட்டில் AIIMS மருத்துவமனை போல வந்தால் மக்களுக்கு நல்லது தானே. இப்போது உள்ள ஒரு அரசு மருத்துவமனை கூட சுகாதார தரத்துடன் இல்லை, சுகாதார தரத்துடன் ஒரு மருத்துவமனை அகில இந்திய அளவில் வந்தால் நல்லது தானே. சொல்ல முடியாது நீங்களே அங்கு சென்று வைத்தியம் பார்க்கும் நிலைமை வரலாம். உங்க தலைவர் வெறும் அறிவுப்புக்களை மட்டுமே அறிவித்து சென்றார், அனைத்தையும் செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது முதல்வர் அவர்கள் தான். இந்த மருத்துவமனை மட்டும் அகில இந்திய அளவில் வந்தால் இது சரித்திரத்தில் ஒரு பெரிய மைல் கல், அப்போது ஒரு ஜெலுசில் வாங்கி வைத்து கொள்ளுங்கள். .
21-பிப்-2013 15:06:05 IST
அவர் தொடர்ந்து கடந்த ஓரிரு மாதமாக வழக்குகளை தொடுத்தது ஒன்றே அவரின் சாதனை.... மரியா, அப்படினா உங்க தலைவர் மாதிரி அங்கு ஒரு சிலையும் இங்கு ஒரு சிலையும் வைத்து முடித்திருக்க வேண்டும் என்கிறீர்களா? காவேரி ஆணையம் அமைத்தது உங்க தலைவர் என்கிறீர்கள், அதனால் இன்று வரை என்ன பயன் நமக்கு கிடைத்துள்ளது என்பதையும் தெரிவியுங்கள். மேலும், 10 ஆண்டு காலம் உங்க தலைவர் மத்திய ஆட்சியில் பங்கு கொண்டுள்ளார், ஏன் ஒரு முறை கூட மத்திய அரசிதழில் வெளியிட முயற்சிக்கவில்லை. என்னதான் VP சிங்க், உங்க தலைவர் ஆணையம் அமைக்க காரணம் என்று கூறினாலும், இந்த ஆணையங்களின் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளிய்டாதவரை தண்ணீர் திறந்துவிட மறுப்பு தெரிவித்து வந்துள்ளது. உடனே உங்க தலைவர் என்ன செய்திருக்கவேண்டும், மத்திய அரசில் தமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அரசிதழில் வெளியிட்டுக்கவேண்டும். அம்மா அவர்கள் நீதிமன்றம் சென்று, நீதிமன்றம் குட்டு வைத்த பிறகும் முதல் கெடுவில் அரசிதழில் வெளியிடவில்லை, அதற்க்கு என்ன காரணம், உங்க தலைவரின் முட்டு கட்டை தான். மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று குட்டு வைத்த பிறகு வேறு வழி இல்லாமல் feb 20 க்குள் மத்திய அரசிதழில் வெளியிடவேண்டும் என்று கேடு விதித்தால் வெளியிட்டுள்ளார்கள். அதன் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது? உங்க தலைவரோ, மத்திய அரசாங்கமோ இதை தன்னிச்சையாக செய்யவில்லை. இதுவே உங்க தலைவர் என்றால் சமரசம் பேசலாம் வாங்க என்று அழைத்திருப்பார். பிறகு சிலை நிறுவி ஏமாற்றியிருப்பார். ஏன் ஒரு முறை கூட 10 வருட காலம் மத்திய அரசில் பங்கேற்று அரசிதழில் வெளியிட முயற்சிக்கவில்லை என்று விளக்குங்கள் மரியா அவர்களே.
21-பிப்-2013 12:28:01 IST
கருணாநிதி: காவேரி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட கடந்த ஏழு வருடங்களாக திமுக வலியுறுத்தி வந்துள்ளது தமிழக மாக்கள் நன்கு அறிவர். அதன் காரணமாக தான் இன்று அரசிதழில் வெளிவந்தது, இதில் அம்மையாருக்கு எந்த பங்கும் இல்லை. நேற்று கூட நாங்கள் வலியுறுத்தியதால் தான் மத்திய அரசாங்கம் அரசிதழில் வெளியிட்டுள்ளது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் கர்நாடக அரசு தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.கன்னடர்களால் தமிழர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் ஏற்படாதவாறு கர்நாடக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் வன்முறைக்கு இடம் தராமல் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுகொள்கிறேன். இப்படிக்கு கருணாநிதி.
20-பிப்-2013 15:00:52 IST