Advertisement
தினமலர் முதல் பக்கம் » Sekar Sekaran அவரது கருத்துக்கள்
Sekar Sekaran : கருத்துக்கள் ( 1185 )
Sekar Sekaran
Advertisement
மே
22
2013
பொது வேகமாக காலியாகிறது ரேஷன் அரிசி கையிருப்புநெருக்கடி! மத்திய அரசு ஒதுக்கீடு, கொள்முதல் குறைவு காரணம்
ஏழைகளுக்கான அம்மாவின் பாசம் விட்டுப்போகாது.இலவச அரிசி விநியோகம் தொடர நடவடிக்கை எடுப்பார்.. அம்மா என்ன சென்ற ஆட்சியினரை போல தினமும் பாராட்டு விழா என்றா அலைகின்றார்..? நிச்சயம் பாசமிகு நமது நிருபரின் சேகரித்த செய்தியை கண்டு அதற்கான நடவடிக்கையை தொடருவார். அம்மா இருக்க பயம்வேண்டாமே..   02:27:43 IST
Rate this:
458 members
2 members
20 members
Share this Comment

மே
22
2013
பொது திருமலையில் இனி எல்லா பொருட்களின் விலையும் உயரும் "ஏழுமலையான் வரி விதிக்க,தேவஸ்தானம் முடிவு
பக்தர்களின் மனதை காயப்படுத்தி இந்த வரியை உயர்த்த வேண்டுமா? இது காலப்போக்கில் பக்தி மார்கத்தை குறைக்க வழிவகுக்கும்..ஆத்திகவாதிகளை தேவஸ்தானத்தில் நியமிக்க வேண்டும்..சந்தடி சாக்கில் நாத்திகம் பேசுவோர் இதுபோன்று குழுக்களில் நுழைந்து இப்படிப்பட்ட வரிகளை விதிக்கின்றனரோ என்கிற சந்தேகம் வருகின்றது. சாமி பெயரில் நடக்கும் கொள்ளை இது. ஏழுமலையானுக்கு சோதனையோ இது. தேவுடா..நாத்திகத்தை திணிக்கும் நயவஞ்சகத்தை தடுத்திடுப்பா...   02:19:11 IST
Rate this:
12 members
0 members
71 members
Share this Comment

மே
22
2013
அரசியல் தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி பற்றி தி.மு.க., முடிவு ஸ்டாலின்
ஏக்கம் என்று சொன்னால் அப்படிப்பட்ட ஏக்கம்..பார்லி தேர்தலோடு சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் வாராதா என்று ஏங்கும் ஏக்கம் சொல்லி மாளாது..ரெண்டே ரெண்டு வருடத்தில் மக்கள் இதே து. முதல்வராக ஸ்டாலின் வரகூட்டாதா என்று ஏங்கி ஏங்கி துரும்பாய் போய்விட்டனர். ஒரே ஓர் திருத்தம்ம்ம்...மக்கள் என்பது இவர் வீட்டு மக்கள் என்று பொருள் கொள்க. பக்குவப்படாத ஸ்டாலின்..பதவிக்கு துடிக்கும் ஸ்டாலின்..அறுபதை கடந்தும் இளைஞர் அணி பதவியை விடாத போதே இவரது ஆசை தெரிந்துபோனது..பார்லியில் வாங்கபோகும் அடியை எப்படித்தான் சமாளிப்பாரோ..ஹ்ம்ம் லண்டன் பயணம் தொடர வாழ்த்துக்கள்..இப்போதே..   02:07:28 IST
Rate this:
217 members
2 members
449 members
Share this Comment

மே
21
2013
அரசியல் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு ஜெ., கடிதம்
2008இல் தனது சொந்த பொறுப்பில் வழக்கு தொடர்ந்துள்ளார் அம்மா அவர்கள்..கச்சத்தீவை மீட்டெடுக்க நித்தமும் போராடுகின்றார்..ஆனால் பிரதமரோ..செவிடன் கணக்காக கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்.கருணா செய்த மாபெரும் தவற்றினை சரிசெய்ய எந்த அளவுக்கு போராடவேண்டி உள்ளது பாருங்கள். காவிரியில் அன்றைக்கு செய்த தவற்றால் இன்றுவரை போராட்டம்தானே? தமிழகத்திற்கு என்று இதுவரை அம்மா மட்டுமே தொடர்ந்து போராடி நமக்கு உரிமை உள்ளவற்றை பெற்று தருகின்றார். கடந்த பதின்மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மட்தியீல் பதவியில் இருந்தும் ஒரே ஓர் சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத இந்த திமுக கச்சத்தீவு பிரச்சினையில் வழக்கின் தன்மையை பார்க்கும்போது அம்மாவுக்கு எங்கே பேர் கிடைத்துவிடப்போகிறதே என்று அவ்வபோது குரல் கொடுப்பது..அதுவும் சப்தமில்லாத குரல். டெசோ என்கிற நசுங்கிய டப்பா மூலம் சுப்ரீம் கோர்டில் வழக்கு பதிவது..ச்ச்சும்மா போட்டுவைப்போமே என்கிற மாதிர்தான்..நாளைக்கு அம்மாவுக்கு இந்த விஷயத்தில் கிடைக்கப்போகும் புகழில் தானும் போராடியதால் கிடைத்த வெற்றி என்று சொல்லிக்கொள்ள..ஆனால் அம்மாவின் போராட்டம் மத்திய அரசாங்கத்தை நெருக்கி பாராளுமன்ற நடவடிக்கை மூலம் சட்டமியற்றி செய்து காட்டுவார். இது ஒன்றும் கேனா பானா அறிக்கை போல அல்ல..தொடர் கடிதம்..பிரதமருக்கான கட்டாய நெருக்கடிக்கு உள்ளாகும் செயல்பாடு..சிம்மம் கர்ஜிக்கின்றது..   03:42:36 IST
Rate this:
66 members
0 members
12 members
Share this Comment

மே
21
2013
கோர்ட் கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் பி.சி.சி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்தால் எதற்காக தடை கோரி வழக்குகள் பதிவாகின்றது? 125 நாடுகளில் விளையாடப்படும் இந்த விளையாட்டு இப்படியே தொடர்வதால்..என்ன லாபம்..ஒரு சிலர் சம்பாதிக்க பலர் இழக்கும் தொகை கணக்கில் அடங்காததை நீதி அரசர்கள் கணக்கில் கொள்ளாதது ஏன்? விளையாட்டை தடை செய்வதை கோரவில்லை..IPL என்கிற சூதாட்டத்தை மட்டுமே தடை கோருகின்றனர். தீவிரவாத புள்ளிகள் களமிறங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் தானே? ஜென்டில்மேன் தீர்ப்பு அல்ல என்பதே கருத்து..பதினோரு பேர் விளையாடி பல லட்சம் பேரை முட்டாளாக்கும் விளையாட்டுக்கு ஒட்டு மொத்த தடையை விதித்தாலும் தவறே இல்லை. பல லட்சம் கோடிகளை விழுங்கிய 2 G ஊழலையே கண்டுகொள்ளாத நாட்டாமைகள் உள்ள நாடு..இப்படிப்பட்ட தீர்ப்புகள் வருவது ஒன்றும் புதிதல்ல..   03:31:42 IST
Rate this:
3 members
1 members
12 members
Share this Comment

மே
21
2013
அரசியல் ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல கருணாநிதி
எச்சரிக்கை இல்லையாம்..எண்ணிப்பார்க்க வேண்டுமாம்..இதே கருணா அவர்கள்தான் அன்றைக்கு "எனது தம்பிகளை" "தட்டிவிட்டால்" போதும் என்று முதல்வர் அவர்களுக்கு "எச்சரிக்கை"விடுத்தார். திருமண நிகழ்ச்சி என்றால் தட்டிகளை அடிக்கொன்றாக வைக்க சொல்லி போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்வார்களாம்..அதுவும் இவரது அருமை புதல்வனை பாராட்டி புகழ்ந்து ஐ நா சபைக்கு சென்றதெல்லாம் புகைப்படத்தோடு அருவருப்பாய் மக்கள் முகம் சுளிக்க ஊரெல்லாம் வைத்து பாதுகாப்புக்கு குந்தகம் வைக்கும் அளவுக்கு செய்தால்..எண்ணி பார்க்கவேண்டியது யார்? இனி இவருக்கு திண்ணையை தவிர பதவி என்கிற வீட்டில் குடிபுக முடியவே முடியாது..காடு நோக்கிதான் செல்லவேண்டியதுதான் பாக்கி..அதாவது காட்டுக்கு ஹாய்யா உலா போவதை சொன்னேன். நாட்டில் இவருக்கு மதிப்பில்லை என்பதால் அப்படி சொன்னேன். சும்மா உதார் விட்டு கேனா பானா வேண்டாம்..இப்படித்தான் ஒருத்தர் பத்து மணிக்கு மேல் பேசுகின்றேன்..முடிந்தால் என் மீது வழக்கு தொடருங்கள் பார்ப்போமே என்றார்..வழக்கும் பாய்ந்தது...தப்பித்தேன் உயிரோடு வருவேனா என்று பயந்துபோனேன் என்று சொல்லி மக்கள் மத்தியில் இருந்த மரியாதையையும் கெடுத்த காட்சியை கண்டோம்..எச்சரிக்கை என்பதற்காக "இதனை:" சொல்லவில்லை..எண்ணிப்பார்க்கவேண்டும் என்று சொல்லுவதிலே தயக்கமில்லை..திண்ணையிலிருந்து ஓர் முனகல்..நித்தமும்..   03:23:26 IST
Rate this:
27 members
0 members
57 members
Share this Comment

மே
20
2013
அரசியல் காவிரி விவகாரத்தில் அரசியல் புகுத்தப்படாது சித்தராமையா
அரசு கெஜெட்டில் வெளிவந்துவிட்டது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. கொடுக்கப்பட வேண்டிய நீரின் அளவை மேற்ப்பார்வையிட குழு அமைப்பதுதான் இனி. அப்படி இருக்கையில் தாக்கல் செய்யப்படும் மனு உடனே நிராகரிக்கும் சாத்தியமே அதிகம். இங்கே வந்துகூட அல்ல..முட்டுக்கட்டை போடுவதற்கான ஆலோசனையை கருணாவின் வாரிசு மூலமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்..அல்லது இங்கே வந்து திண்ணையில் முடங்கி கிடப்பவரிடம் ஆலோசனை கேட்டால் தாராளமாக தருவார்..உங்களின் இறுக்கமும் குறைய வாய்ப்புண்டு,   02:31:06 IST
Rate this:
20 members
0 members
35 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அப்பாவி பெண்கள் பயங்கரவாதிகளா? பவார் பாய்ச்சல்
தொடர்ந்து மூன்றாவது முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் மோடி அவர்கள். அவரது வெற்றியை தடுக்க "இயலாத" ஓர் கூட்டத்தின் பிரதிநிதி இந்த பவார். மகளுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பவர்..அமைச்சர் பொறுப்பு போதாதென்று கிரிக்கட் வாரிய பதவிக்காக அலைந்த நபர் இவர். வீணாகும் உணவை ஏழைகளுக்கு கொடுக்க சொன்ன சுப்ரீம் கோர்ட்டாரின் ஆலோசனையை மதிக்க தெரியாதவர் இவர். முஸ்லிம்களை ஏமாற்றிய காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. தமிழகத்தில் அதன் தாக்கம் மிக தெளிவாக தெரிந்தது போல இனி இந்தியா முழுக்க தெரிந்துவிடும். மைனாரிட்டி ஓட்டுக்களுக்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேச இவர் போன்றோர் பலர் உண்டு. சாயம் வெளுத்து நாட்கள் பலவாயிற்று..நரிகளின் ஊளை இனி அடித்து விரட்டப்படும். பவார் அந்த ஊளையை ஊருக்குள் வந்து துவக்கி வைத்துள்ளார்...ஓட ஓட விரட்டப்படும்போது ஒழிய இடமில்லாமல் ஓடுவார். சாதனையை சொல்லி ஒட்டுகேட்க வக்கில்லாதவர்..முஸ்லிம்களை ஏமாற்றி ஒட்டு கேட்டு வந்துவிட்டார். இவர்களால் முன்னேற்றம் அடைந்த முஸ்லிம்கள் எத்தனை பேர் என்று கணக்கு சொல்ல இயலுமா? ஏமாற்றுக்காரரின் பித்தாலாட்டாத்தின் துவக்கம் இது. மோடிமீதான பய பிராந்தி..தடுமாறுகின்றனர் காங்கிரசும் அதன் கூட்டாளிகளும்..   02:25:20 IST
Rate this:
45 members
1 members
215 members
Share this Comment

மே
20
2013
அரசியல் இளைஞர் பாசறை மூலம் லோக்சபா தேர்தலுக்கு அ.தி.மு.க. ஆயத்தம்
பாராளுமன்றத்தில் திமுக போன்ற கட்சிகளை இனி அனுமதிக்கவே கூடாத அளவுக்கு தேர்தல் முடிவுகள் அமையவேண்டும். தமிழர்களை தலைகுனிய செய்த ஊழல்கள்..தமிழர்கள் என்றாலே திருடர்கள் என்று அசிங்கப்படுத்தியது இந்த திமுகதான்..தமிழகத்திற்கு என்று இவர்கள் எதையுமே செய்யவில்லை..மாறாக இவர்கள் வளம் கொழிக்கும் அமைச்சு பொறுப்புகளை விரும்பி வாங்கி நம்மை கேவலம் செய்துவிட்டனர். எந்த காலத்திலும் திமுக ஒரே ஓர் சீட்டுகூட பெறவே கூடாது. சட்டசபை தேர்தலில் எப்படி ஓட ஓட விரட்டினோமோ அதனை விட வேகமாக ஒழித்தே தீரவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை. நாற்பதும் நமதே என்று அம்மாவுக்கே வெற்றியை கொடுத்தாக வேண்டும். உரத்துறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்ன சாதித்தார்..கப்பல் துறை அமைச்சரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? சேது சமுத்திர திட்டம் நிறைவேற அவர்கள் துடிக்கும் துடிப்பு என்ன என்கிற விளக்கம் நாம் அறிந்தால்...இவர்களை டெபாசிட் கூட வாங்கமுடியாத அளவுக்கு தோற்கடிப்போம். இளைஞர்கள் பாசறை என்பது திமுக போல "கிழடு" தட்டிப்போன பாசறை அல்ல..இது துடி துடிப்பான பாசறை...பெண்கள் அமைப்பும் அபாரமானது..அம்மாவை பிரதமர் பதவிக்கு அமர வைக்க துடிப்பான செயல்பாட்டினால் நிச்சயம் அம்மாவுக்கே வெற்றி காத்துக்கொண்டுள்ளது. பிற விமர்சங்கள் வழமை போன்றதுதான்..தேர்தல் முடிவுகளுக்கு பின்னர்..மயான அமைதியாகி..பின்னர் சமாதியாகிவிடும் திமுக போன்ற கட்சிகள். திட்டமிடுதலால் கட்சியை இமயம் போன்று வளர்க்கும் ஆற்றல் பெற்றவர் அம்மா அவர்கள்..திமுகவின் அத்தியாயத்தை முடிக்க வந்துள்ள பாசறைகள்..   02:16:45 IST
Rate this:
124 members
0 members
43 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
இந்த முன்னாள் து.முதல்வர் சாதனை சும்மா ஹம்மர் கார் அளவுக்கு மிக காஸ்ட்லியானது. சேட்டு வீட்டை பிள்ளைக்கும் மருமகளுக்கும் கட்டாய குடிபுக செய்துவிட்டு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்க மறுத்ததும்.. பின்னர் அந்த சேட்டு புகார் கொடுத்ததும்...புகார் கொடுத்ததை அறிந்ததும்..நானே கைதாகிறேன் என்று சொல்லி தனது நூறு அடியாட்களோடு என்னை கைது செய்யுங்கள் என்று சொன்னதும்..போலீசார்..விசாரணையே முடியாமல் எப்படி கைது செய்வது என்று திகைத்து நிற்க...இவரது அரசியல் சித்துவிளையாட்டு பின்னர் சேட்டு வீட்டு தேடி சென்று கொடுக்கப்படவேண்டிய பணத்தை "செட்டில்" செய்த கதை போல இல்லையே..மின்வெட்டு யாரால் ஆரம்பிக்கப்பட்டது..? அவர்கள் சாதனை என்ன? இப்போதைய முதல்வராலேயே சரி செய்ய முடியாத அளவுக்கு மின்சாரத்துறையில் ஊழலும்..நிர்வாக சீர்கேடும்..சொல்லிமாளாது..மூன்று மாதங்களில் சரிசெய்துவிடலாம் என்று வாக்குறுதி கொடுத்து வந்தவருக்கு பெரிய தலைவலியே இந்த து.முதல்வர் அவரது அப்பாவும் செய்த மின்துறை நிர்வாக சீர்கேடுதான்.மின்துறையில் ஏற்பட்ட கடன் அளவை குறைக்கவே தடுமாறிவிட்டார்கள் அம்மா அவர்கள். இப்போதுதான் மெல்ல மெல்ல உயிர் பெற்றுவருகின்றது. எழுந்து நடமாட இந்த வருடம் ஆகிவிடும். அடித்து பிடுங்கிய நிலங்களை வழக்குகள் போட்டு சுமார் ஆயிரம் கோடிகளுக்கு மேற்பட்ட நிலங்களை திரும்ப பெற்றுத்தந்து அம்மாவின் சாதனை என்றால்..இவர்கள் சாதனை தமிழகத்தில் உள்ள நிலங்களை எல்லாம் கொல்லையடித்ததுதானே? அஞ்சா நஞ்சுவின் பிள்ளைக்கு உள்ள நிலங்கள் இரண்டாயிரத்து நானூறு ஏக்கர் என்று பத்திரிக்கை செய்திகளை படிக்கும்போது..இந்த முன்னாள் து.முதல்வரது பேச்சு வாய்கொழுப்பு என்று சொல்லும் அளவுக்கு உள்ளதே. சட்டசபைக்கு சென்று பேச திராணி இல்லாதவர்..சட்டசபையில் இவர் பேசும்போதே..அமைச்சர் ஓர் விளக்கம் கேட்டதும்.."டக்" என்று அமர்ந்துகொண்டு தனது பக்கத்து சீட்டில் உள்ள இன்னோர் திமுக எம் எல் ஏ அவர்கள் விளக்கம் சொல்வார் என்று "பயந்து" போய் நடுங்கிய இந்த மனிதரின் பெயர்..தளபதியாம்..இப்படி நூறுபேர் கூடி நின்றால் மட்டுமே "தில்" வந்துவிடும்..பாடி ஸ்ட்ராங்..பேஸ்மட்டம் ரொம்போ வீக்..   02:04:40 IST
Rate this:
312 members
1 members
223 members
Share this Comment