மதுரையில் அரசியல் பின்புலத்தில் ரௌடிகள் உருவாகிறார்கள். அரசியல்வாதிகள், தங்களுக்கு பக்க பலமாக பல பேரை தங்களுடன் வைத்துக்கொண்டு தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு ஏற்பட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள் தான் பெரும்பாலும் ரௌடிகளாக மாறி வருகின்றனர். படிக்காததினால் அவர்களுக்கு எதிர்காலத்துக்கான சரியான பாதை தெரியாமல், மற்றவர்கள் மூலம் தவறான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவர்களின் கண்களுக்கு பணம் ஒன்றே பிரதானமாக தெரிகிறது. அவர்களுக்கு மற்றவர்களின் வலி, கண்ணீர் எதுவும் பெரிதாக தெரிவதில்லை. "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"... வாத்தியார் சொன்னது... நினைவில் நிறுத்துவார்களா?
18-ஜூன்-2013 07:43:37 IST
அருமையான கதை. இதை படிக்கும் பொது ஒரு விசு-வின் படம் பார்த்த்த உணர்வு ஏற்பட்டது. ஆனால் இக்காலத்து தலைமுறையினர் திருந்துவார்களா என்றால்... அதுதான் கேள்விக்குறி. இன்றைய குழந்தைகள் நாளைய பெற்றோர்கள். "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது கணியன் பூங்குன்றனாரின் கூற்று. வினை விதைத்தவன் வினை அறுப்பான். உணர்ந்தால் சரி...
17-ஜூன்-2013 07:30:03 IST
இந்த செய்தி எந்த விதத்தில் தமிழக மக்களுக்கு உபயோகமானது என கூற முடியுமா? மக்களை நல்வழி படுத்துவதில் பத்திரிக்கைகளும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து விட்ட இந்த சூழ்நிலையில் மற்றவர்களை குறை கூறும் முன்பு, நம்மை முதலில் திருத்திக் கொள்ளவேண்டும். மீடியா தான் மக்களின் மனமாற்றங்களுக்கு முக்கிய காரணம் என்பதற்கு இதற்கு மேல் ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமா?
17-ஜூன்-2013 07:11:28 IST
அருமையான சேவை. அதை அந்த அளவுக்கு அனுபவித்தவன் நான். நான் மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவாக இருந்த காலகட்டத்தில் அலுவலக உபயோகத்திற்காக அதை அளவுக்கு அதிகமாக உபயோகித்திருக்கிறேன். தந்தி என்றாலே பலபேருக்கு பயம் தான் வரும். என்னவோ ஏதோ என்று. ஆனால் அதில் வாழ்த்து தந்தி சேவையும் உள்ளது. அதை கூட நீங்கள் உபயோகித்து உங்கள் நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள், முக்கியமான விழாக்கள் ஆகியவற்றிற்கு வாழ்த்து தந்தி அனுப்பி அவர்களை வியப்பில் ஆழ்த்தலாம். என்னுடைய நண்பர்கள் பல பேர் தங்கள் வாழ்க்கையில் முதன் முதலாக (வாழ்த்து) தந்தியை பெற்றது என்னால் தான். இந்த செய்தியை படிக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது... இன்னும் நம்மில் பலபேர் இந்த தந்தி சேவையின் அனுபவம் அறியாமல் இருப்பார்கள். ஜூலை 15 வரை நம்மால் உபயோகிக்க முடியும். அதன் பின்பு நீங்கள் நினைத்தாலும் முடியாது... Try செஞ்சு தான் பாருங்களேன்...
13-ஜூன்-2013 09:29:03 IST
எனக்கு இதில் ஒரு சந்தேகம்... யாரேனும் பதில் சொல்லுங்கப்பா ப்ளீஸ். இந்த மாதிரி சாதனை செய்யுரப்ப ஒருத்தர் பேர் மட்டுமே பெரிதாக பேச படுது... இந்த செய்தியில் கூட ஒரு மாணவன் பெயர் மட்டுமே highlight ஆகி இருக்கு. மற்ற ஏழு பேரோட பெயர் ஏன் வரல?
05-ஜூன்-2013 06:47:12 IST
"காலத்தினார் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது"... சென்ற தேர்தலுக்கு முன் வரை இந்த சாந்தி யார் என்றே தமிழக மக்களுக்கு தெரியாது... இந்த அளவுக்கு வளர்த்து விட்டவரை எட்டி உதைக்க எப்படித்தான் இவர் போன்றவர்களுக்கு மனம் வருகிறதோ தெரியவில்லை. சேர்ந்த இடமாவது நல்லதா... அதுவும் இல்லை. மதிப்பு கொடுக்க தெரியாத "அம்மா"-விடம் தஞ்சம் புகுவதால் என்ன கிடைக்க போகிறது. இது நாள் வரை இருந்த நல்ல பேரும் போகப்போகிறது. நட்புக்கு இலக்கணமான கர்ணன், தன்னுடைய சகோதரர்களுக்கு எதிராக இக்கட்டான சூழ்நிலையில் தோழனுக்கு தோல் கொடுத்த வரலாறு தெரியாது என்று நினைக்கிறேன்.
30-மே-2013 07:56:36 IST
இதில் என்ன வியப்பு உள்ளது... இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லையே.... அடுத்த வருடமும் இதே போல் தான்... அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், 4ம் தேதி வெள்ளிக்கிழமை வரும். ஜூன் மாதம் 6ம் தேதியும் வெள்ளிக்கிழமை... மேலும், ஆகஸ்ட் மாதத்தில் 8ம் தேதியும், அக்டோர் மாதம் 10ம் தேதியும், டிசம்பர், 12ம் தேதியும் வெள்ளிக்கிழமையே...
29-மே-2013 09:54:53 IST
யப்பா... கோடி கோடியாய் திருப்பதி மற்றும் கோவில்களில் கொண்டு போயி பணத்தை கொட்டும் தனவான்களே... அதை விட மேலானது ஒரு உயிரை காப்பாற்றும் புண்ணியம். தயவு செய்து இந்த பெண்ணுக்கு உதவுங்களேன்... ஒரு குடும்பமே உங்களை தங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை வாழ்த்தும்...
23-மே-2013 10:55:30 IST
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்புகள் நடக்காது... அனைத்து ரௌடிகளும் ஆந்திராவிற்கு ஓடி விடுவர் என தேர்தலின் போது கூறிய "அம்மா" அவர்களே... தினம் தினம் நாளிதழை பார்க்கும் போது நீங்கள் கூறியது உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா? ( மறந்திருந்தால் தேர்தல் நேரத்திய தினமலர் நாளிதழை பார்க்கவும் ), முதியவர்களுக்கு இலவச பஸ் பயண பாஸ் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆச்சோ... நீங்கள் சொத்து சேர்த்து குவித்ததாக எதிர் கட்சிகள் பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தது பழைய வரலாறு... இப்போது மக்கள் அதை மறந்து விட்டனர்... தி.மு.க.வின் குடும்ப அரசியல் மற்றும் 2G ஸ்பெக்ட்ரம் ராஜா, கனிமொழி-யின் ஊழல்களை முன் வைத்து ஆட்சியை பிடித்த "அம்மா", இப்போது அதனையும் மக்கள் மறந்து விட்டனர். அப்போ அடுத்து வரப்போவது யாரு? புரிந்து கொண்டு ஆட்சி செய்யாவிட்டால் தமிழக மக்களிடம் உங்களுக்குரிய இடத்தை நீங்கள் இழப்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
21-மே-2013 13:26:34 IST
தினமலரில் இந்த Article-ஐ எழுதியது யார் என்று தெரியாது. ஆனால் இந்த செய்தியில் கடைசியாக அவர்கள் முடித்திருப்பது அருமை. "அவர்களுக்குத் தெரியாது நேர்மையின் விலை ரூ. 1.9 கோடியை விட அதிகம் என்று..." அருமையான வரி. உண்மையில் இந்த டிரைவர் போன்று நேர்மையாக இருப்பவர்கள் இந்த உலகில் வெகு சிலரே. பெரும்பாலான மனிதர்கள் "ஏதோ வாழ்க்கை... நாமும் வாழ்கிறோம்..." என்று பூமிக்கு பாரமாகத்தான் வாழ்கிறார்களே தவிர, மண்ணுக்குள் புதையும் முன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் தவிர, வேறு எதுவுமே நமக்கு சொந்தமில்லை என்று எப்போது மனிதன் உணர்கிறானோ அப்போது தான் அவனால் சாதிக்க முடியும். தான் மட்டும் நல்லவன் என்றும் தன்னை சுற்றி உள்ளவர்கள் செய்வது அனைத்தும் தவறு என்றும் நினைக்கும் வரை மனிதன் தன்னை உணரப்போவதில்லை. சுயமாக சிந்தித்து ஒழுக்கமாக எளிமையாக வாழ்ந்து காட்டும் மனிதர்கள் வெகு சிலரே உன்னத நிலையை அடைகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறார்கள். மனிதர்களே நாமும் கொஞ்சம் திருந்துவோமா?
15-மே-2013 14:08:06 IST