மட்டைப்பந்தாட்டம்(கிரிக்கெட்டு) பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்களும் விளையாட்டு இப்பொழுது நடைபெறுவதை எதிர்த்தனர். காரணம் இவ்விளையாட்டைக் குறியீடாகக் கொண்டு மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதுதான். எதிர்த்தது சரிதான். கமல் இன்னும் நிறைய அரசியல் பாடம் படிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் தமிழே விழி தமிழா விழி
23-ஏப்-2018 00:34:51 IST
பாசக ஆட்டம் காண்கிறது, அதனுடனான உறவு இனித் தேவையில்லை என அ.தி.மு.க. முடிவிற்கு வந்து விட்டது போலும். வீரமாக எதிர்த்துப் பேசியுள்ளார், அமைச்சர் செயக்குமார். வீர உணர்வுமங்கும் முன்னர் இருவரையும் கைது செய்து வழக்கு தொடுங்கள். பிறருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் தமிழே விழி தமிழா விழி
21-ஏப்-2018 02:47:34 IST
இவரது கைதிற்குக் காரணம் இவரின் ஒழுக்கக்கேடும் கொலைகளும்தான். திரித்துக் கூறுவதன் மூலம் நல்லவராகக் காட்ட முயலும் ஒழுக்கக் கேடர்களால் இத்தகைய கருத்துகள் பரவுகின்றன. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழிஎழுத்தைக்காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
05-பிப்-2018 04:29:27 IST
இவ்வாறு எழுதும் ஊடகங்கள், அவர் போட்டியிடாவிட்டால் அஞ்சிவிட்டார், தோல்வியை ஒப்புக்கொண்டு ஓடி விட்டார் என்றெல்லாம் கூறாவா? தேர்தலில் பணம் விளையாடும் இக்காலத்தில் செலவு மேற்கொள்ளவும் தினகரனால் இயலும். பாசகவின் நிழல் ஆட்சிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கச் செய்யவும் அவரால் இயலும். எனவே, தினகரன் இடைத்தேர்தலில் போட்டியிடீவதே சரி. - அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்/தமிழே விழி தமிழா விழிஎழுத்தைக்காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
16-அக்-2017 05:17:49 IST
உற்றார் உறவினருக்கும் தினமலர் ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வருத்தத்துடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க்காப்புக் கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
அகரமுதல - பன்னாட்டு மின்னிதழ்
10-அக்-2017 17:35:28 IST
முதல்வர் பழனிச்சாமியின் நிலைப்பாடு சரிதான். இதனை எப்படி நாம் பிடிவாதமாகக் கூற முடியும்? பத்துபேர் ஆதரவுகூட இல்லாமல், பா.ச.க.வின் பின்னணியை வைத்துக் கொண்டு, பன்னீர்செல்வம் முதல்வர் பதவிகேட்கும் பொழுது பெரும்பான்மை ச.ம.உ. ஆதரவு உள்ள பழனிச்சாமி ஏன் அப்பதவியை விட்டுத் தர வேண்டும்? மேலும் மக்கள் ஆதரவு தனக்கு உள்ளதாகப் பன்னீர் கூறுவதும் ஊடகத்தினர் ஏற்படுத்திய மாயைதான். அவரது ஊரிலேயே மக்கள் கிணற்றுச் சிக்கலில் அவருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்ததில் இருந்தே அவரது ஊழல் நடவடிக்கைகளும் மக்களின் ஆதரவின்மையும் தெளிவாகின்றது. மேலும் இணைப்பு என்று சொல்வதும் தவறுதான். விலகி நிற்பவர்கள் மீண்டும் சேரலாம். ஆனால், இணைப்பாகக்கூறு முடியாது. பன்னீர் அணியினர் விரும்பினால் தன்னலக் கோரிக்கைகளைக் கைவிட்டு அதிமுகவில் இணையலாம். ஆனால், பாசகவின் அடாத செயல்களால் அதிமுகவிற்குப் பாதிப்பை உண்டாக்கி அச்சம் ஏற்படுத்திப் பன்னீருக்கு வலிமை உள்ளதுபோல் காட்டும் போக்கால்தான் இணைப்பு என்கின்றனர். பன்னீர் அணியினர் தனித்துச் செயல்பட முடியாது. எனவே, அதிமுகவில் மீண்டும் சேர வேண்டும். அல்லது வேறு கட்சியில் சேர வேண்டும். மக்கள் செல்வாக்கு என்று ஏமாற்றிக்கொண்டு பாசகவைக் கொண்டு மிரட்டி இணைப்பு என்று உளறக்கூடாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
30-ஜூலை-2017 04:40:07 IST
பணத்தாளில் அகரவரிசைப்படிதானே எழுத்துகள் குறியிடப்படவேண்டும். தொடக்கத்தில் பி முதல் ( B. BA, ....BZ, .... Ha, ... Hz .. எனப் ) பல எழுத்துகள் வந்துவிட்டன. இப்பொழுதுதான் ஏ வரிசை வருகிறது என்றால் ஊழல்தானே முதலிலேயே ஏ வரிசைகளையும் அடித்துவிட்டுத் தவறான புழக்கத்திற்குப் பயன்படுத்தியதுபோக எஞ்சியவற்றை இப்பொழுது வெளியிடுவதாகக் கூறுகிறார்களோ என்ற ஐயம் வருகிறதே
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழிஎழுத்தைக்காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்/
14-ஜூன்-2017 04:57:06 IST
அரசியல்நோயர்களே - மன்னிக்கவும் - அரசியல்நேயர்களே பணம் கிடைக்கும் பணிகளில்மட்டும் கருத்து செலுத்தாமல், நாட்டு நலன் கருதிச் சிறிதேனும் செயல்படுங்கள் நாட்டு அமைப்பு அவர்களை முதன்மையாகக் கொண்டு சுழல்வதால் அரசியல்நேயர்களைக் குறிப்பிடுகின்றோம். ஆனால், படித்த மேதைகளே தமிழ் தொடர்ந்து அழிக்கப்படுவது கண்டும் காணாமல் உங்கள் ஊதிய வேலையை மட்டும் பார்க்காதீர்கள் விளம்பர ஆர்வம் கொண்ட தமிழ் அமைப்பினரே கூட்டங்கள் நடத்தினால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது என்பதை உணருங்கள் அந்தக்கூட்டங்கள் முதுகு சொரிவதாக இல்லாமல், தமிழுக்கு வரும் தீங்கினை உணர்த்தும் விழிப்புணர்வுக் கூட்டங்களாக இருக்க வேண்டும் என்பதற்கேற்ப செயற்படுங்கள்
இந்தித்திணிப்பை எதிர்க்கிறோம் என்று சொல்வதால் பயனில்லை. சிலர் மொழிச்சிக்கலுக்குத்தீர்வு இந்தியை எப்படியெல்லாம் கற்றுத்தரலாம் என்று சொல்லி திசை திருப்பிக் கொண்டுள்ளார்கள். இந்தி ஒவ்வொரு நாளும் திணிக்கப்பட்டு உள்ளது என்பதை உணருங்கள். எவ்வாறெல்லாம் திணிக்கப்படுகின்றது என்பதை அறிந்து அதன் தீமைகளை மக்களுக்கு உணர்த்தி மக்களை ஒன்று திரட்டி, இந்தியை விரட்டுங்கள் இதுவே நீங்கள் செய்யும் முதற்பணி எனக் கருதித் தொண்டாற்றுங்கள்
இந்தி முதன்மையை அல்ல இந்தியையையே தடுப்போம்
தமிழைக் காப்போம் தமிழினத்தை நிலைக்கச் செய்வோம்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
07-மே-2017 04:01:26 IST