இது போன்றே அண்ணா சாலை மற்றும் பிளாக்கர்ஸ் சாலை சந்திப்பில் (அதாவது மவுண்ட் ரோடு கீதா கேப் எட்டிஹிரில்) பாட்டா நிறுவனத்தின் கட்டடத்தை இடிக்கும் பணி நடை பெற்று வருகிறது. கட்டிடத்தின் இடிபாடுகள் அவ்வப்போது பிளாக்கர்ஸ் சாலையில் வந்து விழுகின்றன. பணி நடக்கும் இடத்தைச் சுற்றி எந்த விதமான தடுப்புகளோ ஏற்படுத்தப் படவில்லை. இதனால் அச் சாலையில் குறுகலான நடைமேடைப் பகுதியில் செல்லும் பாத சாரிகளுக்கும் சாலையின் இடது ஓரத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் (குறிப்பாக இருசக்கர வாக ஓட்டிகளுக்கு) விபத்து ஏற்படும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. சம்பந்தப்பட்ட காவல் துறையினரும், மாநகராட்சி துறையினரும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் நிகழவிருக்கும் விபத்துக்களைத் தடுக்க முடியும்.
21-ஏப்-2018 05:00:56 IST
"இது ஒரு கனாக் காலம் " என்பதுபோல் இது ஒரு 'சாமியார்கள்' மற்றும் 'ஜோதிடர்கள்' காலமாக மாறிக்கொண்டு இருக்கிறது. மூட நம்பிக்கையில் உள்ள மக்களும் மாக்களும் அவர்களை பின் தொடர்ந்துதான் சென்று கொண்டு இருக்கிறார்கள். உதாரணம், சச்சா தேரா சவுதா அமைப்பின் ராம் ரஹீம் சிங்கின் பின்னர் அலையும் ஒரு மூடர்களின் கூட்டம்/கூடம். மற்றும் அவர்கள் சமீபத்தில் நடத்திய அராஜக செயல்கள். இப்போது ஜோதிடர்களின் துணை கொண்டு முதல்வர் நாற்காலியைக் கைப்பற்ற கானா காணும் ஒரு இருவர் கூட்டம். அதே, அந்த ஜோதிடர் முன்பு ஒரு அம்மியையும் ஒரு குழவியையும் வைத்து ஒரு நல்ல 'தக்ஷிணையும்' தந்து இவற்றில் எது மிதக்கும் என்று கேட்டால் இரண்டில் ஒன்றை நமது முட்டாள் தனத்திற்கு ஏற்ப சொல்லுவார். நாமும் "ஜோதிடர் சொல்லி விட்டாரே" என்ற களிப்பில் முயற்சி செய்தோமேயானால் அது தோல்வியில்தான் முடியும். மீண்டும் அதே ஜோதிடரை அணுகினால் சோழிகளை குலுக்கி உருட்டிப் போட்டோ அல்லது விரல்களை விட்டு கூட்டியோ அல்லது கழித்தோ "நீங்கள் இப்போது நான் சொல்வதுபோல் மீண்டும் ஒரு முறை முயன்று பாருங்கள்" என்பார். அதாவது, அவர் சொன்ன அந்த அம்மியையோ அல்லது குழவியையோ "ஒரு தெர்மோகோல் பெட்டியிலோ அல்லது அடுக்கி வைக்கப்பட்டுள்ள தெர்மோகோல் ஷீட்டுகளின் அடுக்கின் மேலோ கட்டி வைத்து விட்டால் மிதக்கும் பாருங்களேன்" என்பார். அதற்கும் ஒரு கணிசயமான தொகையை மறக்காமல் வசூலித்து விடுவார். நம்ப ஆளும் " இதில் எந்த ஒரு வில்லங்கமும் வராதே" என்று அப்பாவித்தனமாக கேட்டால் " இந்த தெர்மோகோல் சமாச்சாரம் ஒன்றும் தமிழகத்துக்குப் புதியது இல்லை. ஏற்கனவே தெர்மோகோல் சமாச்சாரம் எல்லாம் பேப்பரில் வந்தாச்சு" என்று சொல்லி அடுத்த கிராக்கியை பிடிக்க நடையைக் கட்டுவார். நம்பாளும் ஒரு அசட்டுத் துணிச்சலுடனும்,சிரிப்புடனும் தனது இலக்கை நோக்கி நடையைக் கட்டுவார்.
இங்கு நடக்கும் கூத்தில் "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.இப்போது தமிழ் நாட்டிற்கு கனாக்காலமோ இல்லை வேறு ஏதாவது காலமோ ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது,'போதாத காலம்'
28-செப்-2017 04:24:07 IST
அதே கையோட அந்த லஞ்சம் கொடுத்த கோபி மற்றும் நாற்பது பேரையும் சேர்த்து கைது செய்யுங்கோ.லஞ்சம் வாங்குவது எப்படி குற்றமோ அது போன்றே தருவதும் குற்றம் என்று சட்டம் சொல்கிறது.
19-செப்-2017 03:54:17 IST
சபாஷ். சரியான குட்டு வைத்தார் நீதி அரசர் துரைசாமி.இதைப்போலவே இறுதி தீர்ப்பிலும் போக்கு வரத்து ஆணையருக்கு ஓங்கி ஒரு குட்டு வைக்கவேண்டும்.
13-செப்-2017 04:35:49 IST
என்னதான் மனித இனம் பகுத்தறிவாளனாகவோ அல்லது தொழில் நுட்பவாதியாகவோ இருந்தாலும் கூட இயற்கையை மீறி எதுவும் செய்ய முடியாது என்பதையே இர்மா புயல் காட்டுகிறது. செயற்கை முறையில் குழந்தை உற்பத்தி செய்ய முடியும். ரோபோக்களின் உதவியுடன் சுடுகாடுகளை பராமரிக்க முடியும் (லேட்டஸ்ட் செய்தி). ஆனால், ஒரு இர்மா புயலை செயற்கையாக உருவாக்க முடியாது. அதுபோன்றே, இவ்வாறு வரும் புயலையும் அது ஏற்படுத்தும் சேதத்தையும் தடுத்து நிறுத்த முடியாது.
11-செப்-2017 04:06:04 IST
இவனே ஒரு களவாணிப் பயல். இவன் இன்னொரு களவாணிக்கு வக்காலத்து வாங்குகிறான். ஒருவேளை அவன் இவன் வீட்டில் விருந்தாளியாக இருக்கிறானோ என்னவோ.
31-ஆக-2017 15:36:20 IST
"புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை" - இது பழைய திரைப்படப் பாடல்.
" உரிமம் பெற்ற அனைவரும் ஒழுங்காய் ஒட்டுவதில்லை. ஒழுங்காய் ஓட்டும் அனைவரிடம் உரிமம் இருப்பதில்லை" இது ஒரு புதிய பாட்டு.
எதோ, உரிமம் வைத்திருக்கும் அனைவரும் ஒழுங்காக வண்டிகளை ஓட்டுவது போலும் அது இல்லாதவர்கள் ஒழுங்காக ஒட்டுவதில்லை போன்றும் போக்கு வாரத்துக்கு கமிஷனர் சொல்லி இருப்பது சற்று சிந்திக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
உரிமம் பெற்ற அனைவருமே எதோ ஒரு வகையில் லஞ்சம் தராமல் உரிமம் பெற்றிருக்க முடியாது. எட்டு போட்டு விடுவதனால் மட்டும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி உரிமம் பெற தகுதி படைத்தவராக கருதி விட முடியாது.
இன்றளவும், முச்சந்தியில் வலது பக்கம் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் வலது புறமாக திரும்புவது சர்வ சாதாரண காட்சி. இவர்களை பிடித்து சாலை விதிகளை அறிந்து கொள்ளுமாறு ஒரு ரெப்பிரெஷர் கோர்ஸுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
29-ஆக-2017 02:30:10 IST