டிரைன் என்பது பல பெட்டிகளுடன் நீளமாய்த்தான் இருக்கும். அதுபோலத்தான் ரயில்வே மந்திரிப் பதவிகளும் பலரால் வகிக்கப்படும். எல்லாருக்கும் சம பங்கும் சம வாய்ப்பு உரிமைகளும் வழங்க வேண்டாமா? இததான் உண்மையான ஜன(பண)நாயகம் என்பது.வாழ்க பாரதம்.
18-ஜூன்-2013 04:53:19 IST
பல கோடிகளில் இன்று புரளும் பல கேடிகள் நாட்டில் மலிந்து விட்டனர். அடுத்த ஆண்டு அவர்கள் மக்களை ஓட்டுக்காக நாடி வருவர். இந்தமுறையாவது மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையேல் இந்தியாவின் கதி அதோகதிதான். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாட்டிற்கு அடகு வைக்கப்பட்டிருக்கும். அந்த நாட்டவர்கள் வந்து அமர்ந்து கொண்டு ஆட்சி அமைக்க முயற்சிப்பர். அப்போது அண்டை ஊர்களான திருப்பதி மற்றும் பெங்களூரு செல்வதற்குக்கூட பாஸ்போர்ட் தேவைப்படலாம்.
12-ஜூன்-2013 06:07:19 IST
அப்படியே விட்டாக்க அவருடைய ஏழு ஜன்மத்திற்கும் பாதுகாப்பு கேட்பார் போல் இருக்கிறதே? எதோ ( மந்திரியாக ) வந்தோமா ( காசை ) பார்த்தோமா, அதை அனுபவித்தோமா போனோமா என்று இல்லாமல் இது போன்ற சில்லறைத் தேவைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுகி அதன் காலத்தையும் நேரத்தையும் வீணாக்கிகொண்டு இருக்கிறார்கள் இது போன்ற அரசியல் வியாதிகள். அவர்கள் மந்திரிகளாக இருந்தபோது யாருக்காவது ஏதாவது தவறு இழைத்து இருக்கலாம். மடியில் கனம் இருப்பதால்தானே போகும் வழியில் பயம் தோன்றுகிறது.,
06-ஜூன்-2013 04:14:34 IST
திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களின் நாணய சேகரிப்பு முயற்சிக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற செய்திகளைத் தரும் தினமலர் நிருபர் பேட்டி எடுப்பவரின் மொபைல் எண்ணையோ அல்லது விலாசத்தையோ சேர்த்து செய்தியை தரலாமே? இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வரும் நாணயங்களில் பழைய ஒரு ரூபாய் நாணயத்திற்கும் புது இரண்டு ரூபாய் நாணயத்திற்கும், மற்றும் பழைய ஐம்பது பைசா நாணயத்திற்கும் புது ஒரு ரூபாய் நாணயத்திற்கும் (உருவத்தில்) வித்தியாசம் தெரியாமல் தயாரிக்கப்பட்டு பொது மக்களின் புழக்கத்திற்கு வெளியிடப்பட்டு உள்ளன. அது போன்ற ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பையும் அறிந்து கொள்ள அதன் மதிப்பு பொறிக்கப்பட்டுள்ள பக்கத்தைப் பார்த்துத்தான் அறிந்து கொள்ள வேண்டி உள்ளது. அன்றாடம் சில்லரைக் காசுகளை எண்ண வேண்டிய பணியில் இருப்போர்கள், உதாரணத்திற்கு பஸ் கண்டக்டர்கள், காய்கறி வியாபாரிகள், பேப்பர் விற்பவர்கள், சில்லறை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் படும் அவலங்களும் துயரங்களும் சொல்லி மாளாது. புது இரண்டு ரூபாய் நாணயங்களில் 2 என்று தோன்றும் பகுதியின் கீழ்ப்பகுதி ரிசர்வ் வங்கியில் இருந்து வரும்போதே தேய்ந்து காணப்படுகிறது. தினமலர் ஆசிரியர் திரு, இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களே ஒரு மிகச் சிறந்த நாணயவியலாளர். அவர் மனது வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தால் பொது மக்களுக்கு ஏதாவது விமோசனம் உண்டாகலாம். இல்லையேல் வாய்மூடி மௌனிகளாகவே இந்தியர்கள் எக்காலமும் இருக்கவேண்டும்.
06-ஜூன்-2013 03:57:41 IST
குற்ற நடவடிக்கைகளுக்கு சிறைச்சாலைகளின் வெளிப்பகுதி கல்லூரி போன்று இருந்தால், சிறைச்சாலை என்பது Ph D. படிக்கும் சர்வகலாசாலை போல ஆகிவிட்டதே?
03-ஜூன்-2013 04:24:58 IST
பணமே பந்தாக விளையாடும் ஒரு விளையாட்டின் பெயர்தான் கிரிகெட். நிஜ விளையாட்டில் ஆடு களத்தில் பீல்டிங் அணி பந்துகளைப் பொறுக்குகிறார்கள். பேட்டிங் அணி ஓட்டங்களைச் சேகரிக்கிறார்கள். மறைமுகமாக பெட்டிங் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் தவறான வழியில் காசைச் சேகரிக்கப் பார்க்கிறார்கள். இவ்வாறு, தவறான வழியில் பணம் சேர்க்க விரும்பும் இந்தப் பணம் விரும்பிகளை ஒரு அறையில் பத்து நாட்கள் அடைத்து வைத்து, அந்த அறை முழுவதும் அவர்கள் விரும்பும் விதத்தில் கரன்சி கட்டுகளை அடுக்கி வைத்து விட வேண்டும். அந்த பத்து நாட்களும் அவர்களுக்கு ஒரு இட்லிகூட (அது அம்மா இட்லியோ அல்லது சரவண பவன் இட்லியோ) அல்லது ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது. பத்து நாட்கள் கழித்து அவர்கள் (உயிருடன்) இருந்தால் அந்தப் பணம் முழுவதற்கும் அவரைச் சொந்தக்காரர்கள் ஆக்கி விடலாம். வருமான வரி கூட செலுத்த வேண்டாம் என்ற சட்டம் இயற்றி விடலாம். அவர்கள் சிறை பிடித்து வைக்கபட்டிருந்த பத்து நாட்களும் அந்தப் பணத்தையே உணவாகவும் (பருகும்) பானமாகவும் (முடிந்தால்) உபயோகபடுதிக் கொள்ளட்டும்
01-ஜூன்-2013 04:05:06 IST
அரசாங்க சொத்தை பாழாக்கிய அந்தக் (கருப்பு) ஆடுகளை அப்படியே விடலாமா? வெட்டிப் பலியிட்டு பிரியாணி ஆக்கி காலனி பூராவும் விருந்து வைக்க வேண்டாமா?
29-மே-2013 02:00:02 IST
என்ன ஒரு பொறுப்பற்றதனமான பதிலை அந்த அதிகாரி சொல்லிவிட்டார். பின்னே இவருக்கு எதுக்கு அரசாங்கம் (தண்ட) சம்பளமாக மாதா மாதம் ஒரு தொகையைத் தருகிறது. தவறுகள் நடைபெறாமல் கண்காணிப்பது இவராது கடமையல்லவா?
28-மே-2013 04:10:31 IST