Advertisement
தினமலர் முதல் பக்கம் » Nagarajan.Su அவரது கருத்துக்கள்
Nagarajan.Su : கருத்துக்கள் ( 382 )
Nagarajan.Su
Advertisement
ஜூன்
18
2013
அரசியல் நிதிஷ்குமார் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவோம் பா.ஜ.,
ஏற்கனவே எவ்வளவோ முறை மோடியை புகழ்ந்த நிதீஷ், தற்போது மோடியை, அவரின் வளர்ச்சியை பிடிக்காத சில பிஜேபியினரின் தூண்டுதலால்தான் இப்படி செயல்படுகிறார். இதனால் நஷ்ட்டமடையப்போவது நிதீஷ், பீகார் மட்டுமல்ல பிஜேபி மற்றும் இந்திய மக்களும் கூடத்தான். இது ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதற்கேற்ப மறுபடியும் ஊழல் காங்கிரஸ் ஆட்சிக்கு வழிவகுக்கும்.    10:15:12 IST
Rate this:
13 members
1 members
57 members
Share this Comment

ஜூன்
16
2013
அரசியல் "தி.மு.க., ஆட்சியின் சாதனையை சொந்தம் கொண்டாட முயற்சி கருணாநிதி
முதலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சும்மா வெட்டிபேச்சு, வீண் அறிக்கைகள் விடுவதை தவிர்த்து தமிழக மக்களின் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.   08:15:46 IST
Rate this:
0 members
0 members
40 members
Share this Comment

ஜூன்
16
2013
அரசியல் "தி.மு.க., ஆட்சியின் சாதனையை சொந்தம் கொண்டாட முயற்சி கருணாநிதி
இவர் கர்நாடக அரசுடன் சுமுகமாக பேசியதால் மேட்டூர் ஆணை நிரம்ப வில்லை.அபரிமிதமான மழையால், கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிந்ததால் தான் மேட்டூர் அணை நிரம்பியது. மேலும் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன் தான் அணையின் நீர் நிலைமையை பார்த்து ஜூன் 12க்கு பதில் ஜூன் 6 ஆம் தேதியே திறக்கச்சொன்னார். என்னவோ இவர்தான் மழையை வரவழைத்தது போலவும், கர்நாடக அரசு இவரைக்கேட்டு தான் மேட்டூர் அணையை நிரப்பியது போலவும் பேசுகிறாரே   08:13:09 IST
Rate this:
151 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
17
2013
அரசியல் மோடி - நிதிஷ் மோதலே 17 ஆண்டு கூட்டணி முறிவுக்கு காரணம்
மோடியின் மேல் ஏன் இத்தனை வெறுப்பு இவர்களுக்கு? ஒருவர் தன் சுய முயற்சியால் முன்னேறினால் இவர்கள் ஏன் பொறமை படுகிறார்களோ?   07:55:47 IST
Rate this:
24 members
0 members
75 members
Share this Comment

ஜூன்
10
2013
சம்பவம் பயணியை தாக்கிய பஸ் அதிபரிடம் போலீசார் விசாரணை
தனியார் பஸ்களின் கொள்ளை கணக்கில் அடங்காது. கட்டண கொள்ளை. சரியான நேரத்துக்கு வண்டிகளை ஒட்டாதது, பயணிகள் அதிக அளவில் வரவில்லை எனில் ட்ரிப்பை ரத்து செய்வது, பயணிகள் பயணத்தை ரத்து செய்தால் பணத்தை திருப்பிக்கொடுக்க மறுப்பது இப்படி பல தொல்லைகள்.   08:29:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
9
2013
பொது தமிழகம் முழுவதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல் கல்வித் துறை கெடுபிடியால் குழப்பம்
அரசின் செயல்பாடு சரியானது தான். ஒரு சாதாரண எந்த அடிப்படை வசதியும் குறிப்பாக கழிப்பிடம், உணவு உண்ணுமிடம், குடிதண்ணீர் போன்ற மிக முக்கிய வசதிகள் கூட இல்லாத மிகச்சிறிய இடத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு பலர் நர்சரி பள்ளிகளை நடத்துகின்றனர். இதற்கு 12 மாதமும் கட்டணம் செலுத்தவேண்டும். தினமலர் போன்ற சமூக அக்கறை உள்ள பத்திரிகைகள் இவர்களை படம் பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்தால் இவர்களை நம்பி ஏமாறும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.   08:02:06 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
9
2013
பொது ஓயாத மக்கள் அலை
ஆஹா என்ன ஒரு அருமையான செயல். இதைப்போல தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளும், நகராட்சிகளும், ஊராட்சிகளும் பொதுமக்கள் பங்களிப்போடு முன்வந்து அவர்கள் பகுதியுள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளை தூர்வார ஏற்பாடு செய்தால் தமிழகத்தில் நீர் ஆதாரங்கள் நிரம்புவதோடு மட்டுமல்லாமால் நிலத்தடி நீரும் பெருகும். கோவையை முன்மாதிரியாக கொண்டு செய்ய முன்வருவார்களா?   07:50:44 IST
Rate this:
1 members
0 members
45 members
Share this Comment

ஜூன்
9
2013
பொது தமிழகத்தில் 26.5 சதவீத மின் பற்றாக்குறை இருக்கும் மத்திய மின் ஆணையம் கணிப்பு
2013 மே மாதம் மின் உற்பத்தி தொடங்கும் என்ற கூடங்குளம் இன்னும் தொடங்கப்படவில்லை. ஜூனும் வந்து போகப்போகிறது. ஜூலை வரப்போகிறது. இன்னும் தொடங்க நேரம் வரவில்லையா ? அல்லது மொத்தமாக தொடங்கவே படாதா ?   07:40:57 IST
Rate this:
2 members
0 members
54 members
Share this Comment

ஜூன்
10
2013
பொது எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மீண்டும் ரூ.5க்கு புதிய பாட்டிலில் குடிநீர்
எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் மையங்களில், ஐ ஆர் சி டி சி அனுமதி பெற்ற கடைகளில் ஒரு லிட்டர் பாட்டில் "ரயில் நீர்" என்ற பெயரில் பயணிகள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விலை தினமலர் சொல்வதுபோல 5 ரூபாய்க்கு இல்லை. 15 ரூபாய்க்குத்தான் விற்க்கபடுகிறது. சில வியாபாரிகள் ஏமாறும் பொது மக்களிடம், குறிப்பாக முதியோர்கள், கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களிடமும் இளஞர்களிடமும் 18 ரூபாய்க்கு விற்கின்றனர். நேற்று நான் தண்ணீர் பாட்டல் வாங்கிய பொது சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 18 ரூபாய் வாங்கினார்கள். பாட்டிலில் உள்ள விலை விபரத்தைப்பார்த்து கேட்டவுடன் மீதம் 3ரூபாய் கொடுத்தார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பார்கள். மேலும் 5 ரூபாய் தண்ணீர் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்று கூறினார்கள்.   07:33:47 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
7
2013
பொது பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் எஸ்.எம்.எஸ்., பிரசாரம் செய்ய அரசு திட்டம்
எல்லா தனியார் டிவி ஒளிபரப்பு நிறுவங்களும் செட் ஆப் பாக்ஸ் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பாமலே பல தேவையற்ற சேனல் களை தங்களின் பாக்கேஜில் சேர்த்து கட்டணக்கொள்ளை அடிக்கின்றன. உண்மையில் தேவையான சேனல் மற்றும் பார்த்தால் மாதம் ரூபாய் 50க்கு மேல் வராது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் எல்லா தனியார் டிவி ஒளிபரப்பு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் பொதுமக்கள் காப்பாற்ற படுவார்கள்.   08:01:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment