ஏற்கனவே எவ்வளவோ முறை மோடியை புகழ்ந்த நிதீஷ், தற்போது மோடியை, அவரின் வளர்ச்சியை பிடிக்காத சில பிஜேபியினரின் தூண்டுதலால்தான் இப்படி செயல்படுகிறார். இதனால் நஷ்ட்டமடையப்போவது நிதீஷ், பீகார் மட்டுமல்ல பிஜேபி மற்றும் இந்திய மக்களும் கூடத்தான். இது ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதற்கேற்ப மறுபடியும் ஊழல் காங்கிரஸ் ஆட்சிக்கு வழிவகுக்கும்.
18-ஜூன்-2013 10:15:12 IST
முதலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சும்மா வெட்டிபேச்சு, வீண் அறிக்கைகள் விடுவதை தவிர்த்து தமிழக மக்களின் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.
17-ஜூன்-2013 08:15:46 IST
இவர் கர்நாடக அரசுடன் சுமுகமாக பேசியதால் மேட்டூர் ஆணை நிரம்ப வில்லை.அபரிமிதமான மழையால், கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிந்ததால் தான் மேட்டூர் அணை நிரம்பியது. மேலும் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன் தான் அணையின் நீர் நிலைமையை பார்த்து ஜூன் 12க்கு பதில் ஜூன் 6 ஆம் தேதியே திறக்கச்சொன்னார். என்னவோ இவர்தான் மழையை வரவழைத்தது போலவும், கர்நாடக அரசு இவரைக்கேட்டு தான் மேட்டூர் அணையை நிரப்பியது போலவும் பேசுகிறாரே
17-ஜூன்-2013 08:13:09 IST
தனியார் பஸ்களின் கொள்ளை கணக்கில் அடங்காது. கட்டண கொள்ளை. சரியான நேரத்துக்கு வண்டிகளை ஒட்டாதது, பயணிகள் அதிக அளவில் வரவில்லை எனில் ட்ரிப்பை ரத்து செய்வது, பயணிகள் பயணத்தை ரத்து செய்தால் பணத்தை திருப்பிக்கொடுக்க மறுப்பது இப்படி பல தொல்லைகள்.
10-ஜூன்-2013 08:29:06 IST
அரசின் செயல்பாடு சரியானது தான். ஒரு சாதாரண எந்த அடிப்படை வசதியும் குறிப்பாக கழிப்பிடம், உணவு உண்ணுமிடம், குடிதண்ணீர் போன்ற மிக முக்கிய வசதிகள் கூட இல்லாத மிகச்சிறிய இடத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு பலர் நர்சரி பள்ளிகளை நடத்துகின்றனர். இதற்கு 12 மாதமும் கட்டணம் செலுத்தவேண்டும். தினமலர் போன்ற சமூக அக்கறை உள்ள பத்திரிகைகள் இவர்களை படம் பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்தால் இவர்களை நம்பி ஏமாறும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.
10-ஜூன்-2013 08:02:06 IST
ஆஹா என்ன ஒரு அருமையான செயல். இதைப்போல தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளும், நகராட்சிகளும், ஊராட்சிகளும் பொதுமக்கள் பங்களிப்போடு முன்வந்து அவர்கள் பகுதியுள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளை தூர்வார ஏற்பாடு செய்தால் தமிழகத்தில் நீர் ஆதாரங்கள் நிரம்புவதோடு மட்டுமல்லாமால் நிலத்தடி நீரும் பெருகும். கோவையை முன்மாதிரியாக கொண்டு செய்ய முன்வருவார்களா?
10-ஜூன்-2013 07:50:44 IST
2013 மே மாதம் மின் உற்பத்தி தொடங்கும் என்ற கூடங்குளம் இன்னும் தொடங்கப்படவில்லை. ஜூனும் வந்து போகப்போகிறது. ஜூலை வரப்போகிறது. இன்னும் தொடங்க நேரம் வரவில்லையா ? அல்லது மொத்தமாக தொடங்கவே படாதா ?
10-ஜூன்-2013 07:40:57 IST
எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் மையங்களில், ஐ ஆர் சி டி சி அனுமதி பெற்ற கடைகளில் ஒரு லிட்டர் பாட்டில் "ரயில் நீர்" என்ற பெயரில் பயணிகள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விலை தினமலர் சொல்வதுபோல 5 ரூபாய்க்கு இல்லை. 15 ரூபாய்க்குத்தான் விற்க்கபடுகிறது. சில வியாபாரிகள் ஏமாறும் பொது மக்களிடம், குறிப்பாக முதியோர்கள், கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களிடமும் இளஞர்களிடமும் 18 ரூபாய்க்கு விற்கின்றனர். நேற்று நான் தண்ணீர் பாட்டல் வாங்கிய பொது சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 18 ரூபாய் வாங்கினார்கள். பாட்டிலில் உள்ள விலை விபரத்தைப்பார்த்து கேட்டவுடன் மீதம் 3ரூபாய் கொடுத்தார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பார்கள். மேலும் 5 ரூபாய் தண்ணீர் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்று கூறினார்கள்.
10-ஜூன்-2013 07:33:47 IST
எல்லா தனியார் டிவி ஒளிபரப்பு நிறுவங்களும் செட் ஆப் பாக்ஸ் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பாமலே பல தேவையற்ற சேனல் களை தங்களின் பாக்கேஜில் சேர்த்து கட்டணக்கொள்ளை அடிக்கின்றன. உண்மையில் தேவையான சேனல் மற்றும் பார்த்தால் மாதம் ரூபாய் 50க்கு மேல் வராது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் எல்லா தனியார் டிவி ஒளிபரப்பு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் பொதுமக்கள் காப்பாற்ற படுவார்கள்.
08-ஜூன்-2013 08:01:25 IST