பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் செத்து போனவனுக்கு ஓட்டுனர் உரிமம் கொடுப்பார்கள் நமது வட்டார போக்குவரத்து அலுவலர்கள். குறைந்தது நான்கில் ஒரு பங்கு தொகை கையூட்டு கொடுத்தே சாலைகள் அமைக்கும் உரிமை கிடைக்கிறது. பலரும் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது விமானத்தில் பறக்கிற உணர்வில் பறக்கிறார்கள். கார்களில் இருந்தால் தங்களை கடவுளுக்கு நிகராக நினைத்து கொண்டு ஓட்டுகிறார்கள். சாலை விதிகளை பற்றி பத்து சதவீதம் பேருக்கு மட்டுமே ஓரளவுக்கு தெரியும். குறிஈடுகள் பற்றி பலருக்கு தெரியாது. அல்லது அதில் நமது தலைவரின் / தலைவியின் / நடிகரின் பிறந்த நாள் வாழ்த்து இருக்கும். சாலைகள் பொதுவானது அதை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல், காட்டுக்கு சிங்கம் ராஜா இந்த ரோட்டுக்கு நானே ராஜா என்று வாகனத்தை செலுத்துவது மிக முக்கிய காரணம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
15-ஏப்-2013 04:09:42 IST
ஒரு புள்ளையை அனுப்பி பரிசு இன்னொரு புள்ளையை வைத்து முற்றுகை மற்றுமொரு புள்ளையை வைத்து மத்திய அமைச்சில் பதவி .....இதில் அதுக்கு விளம்பரம் இல்லை என்ற குறை .....உஸ்ஸ்ஸ்...அப்பா இப்பவே கண்ணை கட்டுதே.....
05-மார்-2013 11:32:53 IST
இங்கு ஆந்திர அமைச்சரை குறை கூறும் சிலர் தனது தங்கையை அவளது ஆண் நண்பருடன் இரவில் வெளியில் அதுவும் டெல்லியில் சென்று வர அனுமதிப்பீர்கள் ? என்னால் அதை அனுமதிக்க முடியாது.
25-டிச-2012 03:20:12 IST
திருமணம் எதற்கு செய்கிறோம் என்ற எந்த புரிதலும் இல்லாமல் திருமணம் செய்தால் அது எப்படி நிலைத்து நிற்கும் ? இப்போது உள்ள பெண்கள் ஆண்கள் கருப்பா சிவப்பா ? குட்டையா நெட்டையா ? கார் இருக்கா ? சொத்து இருக்கா ? ஸ்டைலா இருக்கானா ? என்று கேட்கிறார்களே ஒழிய ஒழுக்கமானவனா ? மது , புகை பழக்கம் இல்லாதவனா ? என்று கேட்பதற்கு நேரமில்லாமல் அலைகிறார்கள். அது போல ஆண்களும் வரப்போகும் மனைவி நல்ல குணம் உள்ளவளா ? பொறுமை நிறைந்தவளா ? அன்பும் அறிவும் உடையவளா என்று பார்க்காமல் அனுஷ்கா மாதிரி நமிதா மாதிரி என்று அலைகிறார்கள்.....விளைவு கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று நூறு நாட்களில் நீதிமன்ற படிகளில் ஏறிவிடுகிறார்கள்.......வெள்ளித்திரை சின்னத்திரைகளில் மற்றும் நாள் வார மாத இதழ்களில் காதல் திருமணம் செய்தால் இருபத்தி நாலு மணி நேரமும் இல்லறம் கற்கண்டை போல இனிக்கும் .......பெற்றோர் பார்த்து செய்த திருமணம் வேப்பங்காயை போல கசக்கும் என்ற ரீதியில் செய்திகளை வெளியிடுவதும் ஒரு முக்கிய காரணம்.....இதை எல்லாம் விட தனியாக குடித்தனம் செய்வதும் ....பிறகு குழந்தைகள் பிறந்ததும்.....அவர்களை கவனிக்க பெண்கள் குறிப்பாக தனது பெற்றோர்கள்தான் வர வேண்டும் என்பதும்......இப்போது மாநகரங்களில் நடக்கும் அவலம்......காதல் திருமணம் செய்யும் பிள்ளைகள் தனது குழந்தைகளை காதல் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்பார்களா ? கேட்டு பாருங்கள்............அவர்களின் முகம் போகிற போக்கை காண கண்கள் கோடி வேண்டும்......வேறு என்ன சொல்ல....திருமணம் என்பது வள்ளுவன் கூறியதை போல வாழ்க்கை துணை நலம் மக்கட்பேறு என்ற இரு அடிப்படை காரணங்களுக்காக செய்யப்படுகிறது................அது தெரியாமல் செய்து நாட்டையும் வீட்டையும் பாழாக்குகிறார்கள்.........
14-நவ-2012 06:28:27 IST
மரிய அல்போன்சு...கவிக்கோ அப்துல் ரகுமான் சிலப்பதிகாரத்தை இரண்டு வரியில் இப்படி கூறினார் &39&39 பால்நகையாள் வெண்முத்து பல்நகையாள் கால்நகையால் கழுத்துநகை இழந்த கதை.....அதே போல கருணாநிதியை பற்றி கூற வேண்டுமானால் இப்படி கூறலாம்...... தம்பி நீ நெல் கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன் கழகத்தின் வளர்ச்சிக்காக இருவரும் ஊதி ஊதி திங்கலாம்.....இதை உங்கள் மன சாட்சி நன்கு அறியும்.....
07-அக்-2012 10:09:02 IST