Advertisement
தினமலர் முதல் பக்கம் » Bala அவரது கருத்துக்கள்
Bala : கருத்துக்கள் ( 132 )
Bala
Advertisement
ஏப்ரல்
9
2013
பொது விவசாய பணியில் விறுவிறுப்பு காட்டும் இன்ஜினியரிங் பட்டதாரி
இவர் பல பட்டதாரிகளுக்கு ஒரு முன் மாதிரியாக தெரிகிறார். எந்த ஒரு தொழிலலையும் காலத்திற்கேற்ப மாற்றிக் கொண்டு செய்தால் தான் லாபம் வரும். எப்படி கார்ப்பரேட் நிறுவனங்களில் "multi task" ing முக்கியமோ அதைப் போலத்தான் விவசாயத்திலும் துணைத் தொழில்களும் முக்கியம். அந்த துணைத் தொழில்களில் இருந்து வரும் வருமானம் நமக்கு பேருதவியாக இருக்கும். பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பொய்த்துப் போனாலும் துணைத் தொழில்களில் இருந்து வரும் வருமானம் நம்மை நொடிந்துப் போகாமல் இருக்க உதவும்.    01:15:57 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
பொது நீர்நிலைகளை பாதுகாப்பதில் சின்னநாகபூண்டி கிராமம் முன்னுதாரணம்
இந்தச் செய்தியை வெளியிட்ட தினமலருக்கும் பசுமையினை சாதித்துக் காட்டிய ஊர் மக்களுக்கும் நன்றிகள்.   00:00:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
பொது மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்: மரிக்கவில்லை மனிதாபிமானம்
நாம் பார்க்கத்தான் படித்தவர்கள், நாகரீகம் தெரிந்தவர்கள், இன்னும் எத்தனை எத்தனை வார்த்தைகள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் நாம் எல்லாம் இதற்கு தகுதியானவர்கள் தானா என நீங்களே எண்ணிப் பாருங்கள். தயவுகூர்ந்து இந்த மாதிரி சமயத்தில் உதவி புரியுங்கள். அவ்வாறு உதவி புரியும்போது மறுமுனையில் உள்ளவர்கள் இறக்க நேரிட்டால் காவல்துறை உங்களை தொந்தரவு செய்யக்கூடாது. அதையும் மீறி உங்களை கோர்ட் கேஸ் என்று கூப்பிட்டால், நீங்கள் தெளிவாக எடுத்துக் கூறலாம் "வேலையின் காரணமாக என்னால் நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு வர இயலாத நிலையில் உள்ளேன்" என்று. இந்த மனிதாபிமானத்தில் தான் நாம் அமெரிக்காவை விஞ்சி நிற்கின்றோம் என்றால் மிகையாகாது. உங்களின் கவனத்திற்கு: ://blogs.rediff.com/roadaccident/2012/12/30/chennai-accident-helpline-2/ ://blogs.rediff.com/legalhelpindelhi/2012/12/14/chennai-accident-helpline/   21:22:57 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
19
2013
எக்ஸ்குளுசிவ் தமிழகத்தில் இலங்கை நாட்டினர் மீது தொடரும் தாக்குதல்: "அடாவடி' கட்சியினர் மீது குண்டர் சட்டம் பாயுமா?
செந்தில் நீங்கள் புரிவது வாதம் இல்லை பிடிவாதம். அதற்காக இராஜபக்ஷே செய்தது நியாயம் என்றும், அந்நாடு புத்த பிட்சுகளின் வார்த்தைக்கு கட்டுப்படுகிறது என்கிற வாதத்தையும் மறுக்கவில்லை. அதற்காக நாம் பிட்சுகளை அடிப்பது எந்த விதத்தில் நியாயம். போரிலே கூட எதிரி ஆயதங்களை இழந்து நிராயுதபாணியாக நிற்கும்போது "இன்று போய் நாளை வா" என்று கூறுவதுதான் வழக்கம். நீங்கள் தலைகீழாக நடந்தாலும் இந்திய அரசு தனி ஈழம் என்கிற கொள்கைக்கு உடன்படுமா என்பதில் சந்தேகமே. ஏனெனில் இந்தக் கொள்கையை நாம் முன்னிருத்தினால் ஜம்மு காஷ்மீரை அங்குள்ளவர்கள் இதேக் கொள்கையின் அடிப்படையில் பிரித்துக் கொடு என்று கேட்ப்பார்களோ என்கிற உணர்வு மத்தியிலே ஆளும் கூட்டணி அரசிற்கு உண்டு. ஆனால் இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. இலங்கையில் நடந்தது இனப் படுகொலை, காஷ்மீரிலே நடப்பது வேறு மாதிரியான விஷயம். இதனை பிரதமருக்கோ அல்லது சோனியாவிற்கோ எடுத்துச் சொல்லமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்கள் நாராயனன்களோ அல்லது மேனன்களோ ஆகும். இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் இது தான். முதலில் இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு விசா கொடுப்பதில் சிறிது கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் அல்லது கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இரண்டாவது, மத்திய அரசை நம் தமிழக கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து (?) தனி ஈழம் அல்லது அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த வேண்டும். (பிற நாட்டின் உள் விடயங்களில் தலையிடமாட்டோம் என்று கூறினால், பங்களாதேஷ் உருவான சரித்திரத்தை எடுத்துரைக்க வேண்டும்) முடிந்தால் நாம் தாரை வார்த்த கட்சத் தீவை திரும்பப் பெற வேண்டும்.   01:03:13 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
17
2013
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
ஒரு குறிப்பிட்ட கோட்பாடுகளை வைத்து அதனுள் வாழவேண்டும் என்று இந்து மதம் கூறவில்லை. பண்டைய காலத்தில் மனிதன் எவ்வாறு வாழ்ந்தானோ (ஒழுக்கமுடன்), அந்த வாழ்க்கை முறையிலிருந்து தோன்றியது தான் இந்து மதம். ஒருவனுடைய வாழ்க்கை முறையில் அவன் பிறர்த்தியாருக்கு கெடுதல் பண்ணினால் அவனுக்கும் அது வந்து சேரும் என்று இந்து மதம் கூறுகிறது. 'அந்துமணி' க்கு ஒரு கேள்வி: இந்து மதத்தில் ஆணுக்கு நிகராக பெண் தெய்வங்களையும் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம் (உதாரணமாக அர்த்தனாரீஸ்வரர்). கிறிஸ்த்துவத்தில் ஒரு பெண்ணை போப்பாக நியமித்திருந்ததாக எனக்குத் தெரியவில்லை. தெளிவுப்படுத்தவும். வாரப் பத்திரிகையில் வெளியிட எவ்வளவோ தகவல்கள் உள்ளன. அதையெல்லாம் விட்டு விட்டு இந்து மதத்தைப் பற்றி கேவலமாக எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள்..    01:19:48 IST
Rate this:
7 members
0 members
34 members
Share this Comment

மார்ச்
30
2011
கார்டூன்ஸ் வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கட்டுப்பாடு
மத்தியில் இதற்கு முன்னாள் ஆட்சி செய்த பா.ஜ.க -விடம் நான்கரை வருடங்கள் இருந்து எல்லா சுகத்தையும் அனுபவித்துவிட்டு தேர்தல் வரும் சமயத்தில் "பா.ஜ.க - ஒரு மதவாத கட்சி" ஆதாலால் மதச் சார்பின்மை கட்சியினருக்கே என் ஆதரவு என்று கூறி அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்து நல்ல வளத்தைப் பெருக்கிக் கொண்டார். "வரலாறு மீண்டும் திரும்புகிறது" - இவரால் தமிழ் இனத்திற்கே கேவலம்.   00:36:30 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
17
2013
விவாதம் சம்பள நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடலாமா?
குடிப் பழக்கத்தை தவறு என்றே கருதுபவன் நான். சரி, இப்பொழுது உள்ள நிலையில் எவ்வாறு குடிப் பழக்கத்தை ஒழிக்க முடியும் என்று நினைக்கும்போது முதலில் நம் நினைவிற்கு வருவது &39குடி&39 -யை எட்டாக் கனியாக்கவெண்டும். அந்த வகையில் இது நல்லதொரு முடிவிற்கு ஆரம்பமாக இருக்கட்டும்.   22:24:26 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
13
2013
பொது இந்திய ராணுவ ரகசியங்களை திருடிய சீனா
நாராயனன்களும், மேனன்களும் பிரதமரின் ஆலோசகராகவும், வெளியுறவுத் துறையிலும் இருந்து கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேலும் DRDO -ல் வேலை செய்பவர்களின் இலட்சணத்தைப் பார்த்தீர்களா? ஒரு இ-மெயில் தெரியாதவர்களிடம் இருந்து (அதுவும் DRDO -க்கு வெளியில் இருந்து) வந்தால் என்ன பண்ணவேண்டும் என்று கூட தெரியாதவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள். இது தானாகவே நடந்ததா அல்லது தெரிந்து தான் அந்த நபர் இ-மெயிலை திறந்தாரா?   02:30:29 IST
Rate this:
4 members
1 members
113 members
Share this Comment

மார்ச்
8
2013
அரசியல் ஆறு சிலிண்டர்கள் போதுமே: அமைச்சரின் பேச்சால் கொந்தளிப்பு
உடம்பைப் பார்த்தாலே தெரியுது இந்தம்மா சமையலறைப் பக்கமே எட்டிக் கூடப் பார்த்திருக்க மாட்டார் என்று   03:13:40 IST
Rate this:
1 members
0 members
59 members
Share this Comment

மார்ச்
6
2013
பொது கோவில்களில் லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை நடத்த தடை
அது என்ன இந்துக்களுக்கு ஒரு நியாயம் கிறிஸ்த்து மற்றும் இஸ்லாமியர்களுக்கு மற்றொரு நியாயம் ? சர்ச் மற்றும் மசூதிகளில் வசூலாகும் பணத்தையும் அரசே எடுத்துக் கொள்ளவேண்டும் அல்லது கோவில் உண்டியல் பணத்தை தொடக் கூடாது. இது நம் உரிமையை பறிக்கும் செயல் இல்லையா? "இந்து சமய அறநிலையத் துறை" என்பதை "சர்வ சமய அறநிலையத் துறை" யாக மாற்றி அமைக்க வேண்டும். இதைச் செய்ய அரசு முன்வராவிடில் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.   00:52:21 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment