சரி, ஆனது ஆச்சு, அவரு ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி ரெண்டு பேருக்கும் துரோகம் பண்ணாமல் வாழட்டும். ஆனால் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு மட்டும் பண்ணிருவோம்.
23-ஏப்-2013 16:25:20 IST
கள்ளுல போதை இருக்கு, இல்லைங்கிறது ரெண்டாவது பிரச்னை. அதை அரசு அனுமதிச்சா குடிமகன்களின் செலவு குறைந்து (compare to brandy whisky) அவங்க குடும்பத்தோட வருமானம் அதிகரிக்குமே, அந்த குடும்பம் நிம்மதியா சாப்பிடுமே. புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் எல்லாம் கள்ளு, பிராந்தி, விஸ்கி, நாட்டு சாராயம் இப்படி எல்லாமே கிடைக்குது, யாருக்கு எது வேணுமோ வாங்கி சாப்பிட்டுக்கலாம். அதே போல நம்ம அரசாங்கமும் கொண்டு வந்தா என்ன?.
09-மார்-2013 16:44:06 IST
இங்கே என் உறவுகள் தங்களது உள்ளக்குமுறல்களை கருத்துக்களாக பதிவு செய்திருக்கிறார்கள். எனக்கும் எண்ணிலடங்கா வேதனைகள் இருக்கிறது, என் நெஞ்சை கிழித்துக்கொண்டு வெளியே வர துடிக்கிறது. ஆனால் நான் அதை வெளிக்காட்டவோ அழுது தீர்க்கவோ மாட்டேன். ஏனென்றால் தமிழீழம் வென்றெடுக்க வேண்டும் என்ற என் மன வைராக்கியம் குறைந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். என்னுடைய வேண்டுதல், எதிர்பார்ப்பு, லட்சியம், கொள்கைகள் எல்லாமே இதுதான், தமிழகத்தில் வைகோ திருமாவளவன் சீமான் ராமதாஸ் வீரமணி தியாகு மணியரசன் சுப வீரபாண்டியன் மற்றும் தமிழின உணர்வு கொண்ட தலைவர்கள் அனைவரும் அய்யா நெடுமாறன் அவர்களின் தலைமையில் அணிவகுத்து மாநில அரசையும் மத்திய அரசையும் பணிய வைத்து இலங்கையை மண்டியிட வைத்து ஈழத்தை வென்றெடுக்க வேண்டும்.
19-பிப்-2013 14:48:48 IST
ஆண்மை நீக்கம் என்பதும் மரணதண்டனைக்கு இணையானது தான். கொலைக்கு கொலை எப்படி தீர்வாகாதோ அதே போல் கற்பழிப்புக்கு ஆண்மை நீக்கமும் தீர்வாகாது. ஏன் இந்த பாலியல் குற்றம் நடைபெறுகிறது?, இதற்கான காரணங்கள் என்ன?, இதன் ஆணிவேர் எங்கிருக்கிறது? அதை கண்டுபிடித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரை இந்த ஆணிவேர்கள் மூன்று, 1. சினிமா 2. மது 3. கல்வியறிவு இல்லாதது. சினிமாவை அரசு ஊக்குவிக்கக்கூடாது, மதுக்கடைகளை மூட வேண்டும், நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்வியறிவு கிடைத்திட அரசு வழிவகை செய்ய வேண்டும். இதை செய்வதன் மூலம் மட்டும் தான் கற்பழிப்பு போன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும்.
04-ஜன-2013 15:21:35 IST
ஒரு பொண்ணோட மானம் பறிபோயிருக்கு, இத வச்சி கூட அரசியல் பண்றாங்களே??? இவங்க குடும்பத்துலயும் பெண்கள் இருக்காங்கங்கிறத மறந்துட்டாங்களா??????? ஒருவேளை, அவங்களுக்கும் இந்த கதி (வரக்கூடாது என்று இறைவனை பிரார்த்திப்போம்) வந்தால் அதை வைத்தும் கூட அரசியல் பண்ணுவாங்களோ?????????
26-டிச-2012 11:19:16 IST
இதற்கு பதிலடியாக இந்தியா பெருசா என்ன செஞ்சிரும், இந்தியா சீனா நட்புறவில் விரிசல் இல்லை. அது மேலும் பலப்படுத்தப்படும் என்று ஒரு அறிக்கை விடும் அவ்வளவு தான்...............................
08-டிச-2012 10:56:14 IST