ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அணு உலை அமைப்பதற்கும், மனித உயிர்களுக்கு அரசாங்கமே மரியாதை கொடுக்காத நமது இந்திய நாட்டில் அணு உலை அமைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலை நாடுகள் ஒருவரது வீட்டிற்கு பின்னால் அணு உலை அமைத்தாலும் கூட அவர்கள் அந்த வீட்டில் வசிப்போருக்கு போதிய பாதுகாப்பை கொடுத்துவிட்டுதான் உலையை அமைப்பார்கள், ஆனால் நமது நாட்டில் அப்படி இல்லை. இதுதான் அணு உலை எதிர்ப்பாளர்களின் கவலை.
07-மே-2013 10:11:22 IST
கூடங்குளத்திலிருந்து 25 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அப்பால் உள்ளவர்கள் உங்களை போலதான் பேசுகிறார்கள். எனேற்றால் எந்த விபத்து ஏற்ப்பட்டாலும் அது உங்களை பாதிக்காது.
07-மே-2013 10:06:19 IST
கேணத்தனமான comparision. விலை நிலங்களும் மனித உயிர்களும் எந்த விதத்திலும் சமமாகாது. மேலும் 22000 கோடி செலவழித்து வெறும் 2000 மெகாவாட் மின்சாரம் பெறுவது நல்லதா இல்லை 3000 கோடி செலவழித்து 2000 மெகாவாட் மின்சாரம் பெறுவது நல்லதா. பொருளாதார பார்வையில் பார்த்தாலும் இந்த திட்டம் பயனற்றதே....தேர்தல் அடுத்த வருடம்தான் வருகிறது, எனவே அம்மா போராட்டக்காரர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள், எனவே கவலைப்படாதீர்கள்.
07-மே-2013 10:02:34 IST
நீங்கள் சொல்வதெல்லாம் தமிழன் காதில் விழாது, ஏனென்றால் தமிழனுக்கு சோறும் சாராயமும் கிடைத்தால் போதும், அதை நன்கு புரிந்து கொண்டு இரண்டையும் அரசாங்கம் கொடுக்கிறது. இனி தமிழன் வேறு எதை பற்றியும் கவலை படமாட்டான், வேண்டுமானால் மாவட்டம் தோறும் அணு உலைகளை திறந்து கொள்ள சம்மதிப்பான், இந்த முட்டாள் தமிழனுக்கு இந்த அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு கிடைக்காது என்பது கூட தெரியாது. அணு உலையை ஆதரிப்பவர்கள், மறைமுகமாக நமக்கு காவேரியில் தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவை ஆதரிக்கிறார்கள், முல்லை பெரியாரில பிரச்சனை ஏற்படுத்திய கேரளாவை ஆதரிக்கிறார்கள், ஏனென்றால் இங்கே தயாராக போகும் மின்சாரம் அண்டை மாநிலங்களுக்குத்தான் போக போகிறது, அதையும் பெருமையாக பார்த்து பல்லை இளித்துக்கொண்டு நிர்ப்பான் தமிழன்.
06-மே-2013 13:37:31 IST
அட.............. வேறு மாநிலங்களுக்கு கொடுப்பதற்காக கூடங்குளத்தில் அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய போகிறார்கள், அதற்கே இத்தனை ஆர்ப்பாட்டமா.... உதயகுமார் உங்களுக்கும் எனக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார். கடவுள் என்று ஒருவர் இருந்தால் இந்த உலை எந்த மனிதனாலும் இயக்க முடியாது. அந்த அளவுக்கு உதயகுமாரும் அவரது ஆதரவாளர்களும் போராடி இருக்கிறார்கள் இன்னமும் போராடுவார்கள்.
06-மே-2013 13:31:52 IST