எப்போதுமே ஒரு சில நல்ல திட்டங்களில் சில வேட்டை நாய்கள் ஊடுருவும். அதற்காக அதை மூட சொல்ல கூடாது. அம்மா உணவகம் திமுகவில் உள்ள என்னை போன்றோர்களை கவர்ந்துள்ளது. அதற்காக மற்ற எல்லா ஜெயாவின் திட்டங்களும் சரி அன்று. இந்த ஒரு திட்டத்தை மட்டும் இன்று வரை தலைவர் கலைஞர் குறை சொன்னதில்லை. காரணம் இது நல்ல திட்டம். எதிர்கட்சி என்றாலும் நாங்கள் எதிரி கட்சி அல்ல. நல்ல திட்டங்களை யார் செயல்படுத்தினாலும் கலைஞரும் அவரை பின்பற்றும் தொண்டர்களும் ஆதரிப்பார்கள்.
18-ஜூன்-2013 01:24:57 IST
இந்தியாவிலேயே சாணக்கியத்தனம் வாய்ந்த சிறந்த அரசியல்வாதி கலைஞர் மட்டுமே. நிச்சயம் கனிமொழி ஜெயிப்பார். விஜயகாந்த் மூக்கில் விரல் வைத்து வியந்துபோவார். தலைவர் கலைஞருக்கு அரசியலில் காய்களை எப்படி "கை"யை உபயோகபடுத்தி நகர்த்த வேண்டும் என்று தெரிந்தவர்.
18-ஜூன்-2013 01:20:02 IST
இப்படி தினமும் அமைச்சர்களை மாற்றுவதால், அவர்களுக்கு வேலை புரிவதில்லை. செய்வதுமில்லை. கலைஞர் ஆட்சியில் பொதுப்பணி துறை என்றால் துறை முருகன், போக்குவரத்து துறை என்றால் நேரு, கல்வி துறை என்றால் பொன்முடி, சபாநாயகர் அன்பழகன், மின்சார துறை ஆற்காட்டார் என்று ஒவ்வொரு துறையிலும் நிரந்தர அமைச்சர்கள் இருப்பார்கள். அவர்கள் அந்தந்த துறையை நன்கு அறிந்து தெரிந்து வைத்துள்ளார்கள். அதனால் அவர்களை கலைஞரை நிரந்தரமாக வைத்திருப்பதால், அவர்களும் நன்றாக மக்களுக்கு சேவை புரிந்துள்ளார்கள். அவர்களின் வாரிசுகளும் இப்போது அரசியலில் இறங்கி தந்தையின் சேவைகளை கவனித்து வருகிறார்கள். நல்ல அனுபவம் பெற்று வருகிறார்கள். கலைஞர் அனுபவம் பெற்றவர்களை நம்புவார். அனுபவம் இல்லாத புது புது ஆட்களை அமைச்சர்களாக ஜெயா நிர்ணயித்து பின்னர் அவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று தினமும் மாற்றி கொண்டு இருக்கிறார். அனுபவம் கொண்ட நல்ல திறமை வாய்ந்த அமைச்சர்கள் திமுகவில் மட்டுமே உள்ளனர். திமுக அரசு மக்களின் குணங்களை அறிந்து நடக்கும் நல்ல அரசு. தினமும் அமைச்சர்களை மாற்றாத நல்ல அரசு. ஜெயா ஆட்சியில் ஒரு அமைச்சரின் பெயரையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. தேர்வில் மாணவர்கள் பரீட்சை எழுதி ரிசல்ட் வரும் முன்னரே கல்வி அமைச்சரின் பதவி பறிபோய்விடும். மக்களுக்கு நன்றாக சேவை புரியும் நிறைய அனுபவம் கொண்ட நிரந்தர அமைச்சர்கள் வேண்டுமெனில் திமுகவை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் அமைச்சர்கள் நிரந்தரம் என்பதால், அதிகாரிகள் பயப்பட்டு நன்றாக பணிபுரிவார்கள். அவர்களும் குட்டி ராஜாக்கள் போன்று அந்தந்த துறையில் செம்மையாக செயல்பட்டு சேவை செய்வார்கள்.
18-ஜூன்-2013 01:13:07 IST
கனிமொழி ஜெயிப்பார். அது வரும் பொது தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது திமுக அள்ளும் என்பதை மக்களுக்கு இப்போதே சொல்லி காட்டும். கனிமொழியை விட வேறு எவரும் தமிழகத்தை சிறப்பாக பிரதிநிதிக்க முடியாது. பிரதமர் வரை செல்வாக்கு கொண்ட கனிமொழியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருக்காது. தமிழர்களுக்கு பெருமை சேர்க்க கனிமொழியின் தேர்வு முக்கியம்.
18-ஜூன்-2013 00:59:35 IST
காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் மூன்றாம் அணியின் ஒரே தலைவர் கலைஞர் மட்டுமே. தமிழன் ஒருவர் பிரதமர் ஆக போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
15-ஜூன்-2013 02:10:28 IST
மிக சந்தோஷமான செய்தி. மனித வளம்தான் உலகத்திலேயே சிறந்த வளம் என்று மேலை நாட்டவர்களே ஒத்து கொள்கிறார்கள். ஜப்பானில் ஒரு குழந்தை பிறந்தால், உதவி செய்வதற்கு இன்னும் ரெண்டு கைகள் நமக்கு கிடைத்து விட்டன என்று அந்த குட்டி நாடே சந்தோஷப்படும் போது நமக்கென்ன? நிலமா இல்லை? இந்தியாவில் இருநூறு கோடி மக்கள் வளமாக வாழலாம். இந்தியாவில் மக்கள் தொகை பெருக பெருக பொருளாதாரம் பெருகும். வளமாக வாழ்வோம். வெறும் முப்பது கோடி மக்கள் இருந்தபோது, இந்தியர்கள் பட்டினியாக கிடந்தனர். இப்போது நூத்திருபது கோடி, தொந்தியும் தொப்பையுமாக உள்ளோம். இது எதை காட்டுகிறது? உலகமே நம்மை கண்டு அலறுகிறது? அது எதை காட்டுகிறது. மக்கள் தொகை பெருக பெருக, நமது வளம் பெருகும். பொருளாதார வல்லமை பெருகும்.
15-ஜூன்-2013 02:08:40 IST
விஜயகாந்தே திமுகவில் இன்னும் கொஞ்ச நாளில் அடைக்கலம் தேடி ஓடுவார். இந்த விசுவாசிகள் என்ன செய்ய போகின்றனர்? இப்போது ஓடிய ஒடுகாலிகலும் ஒருகாலத்தில் தாங்கள் விஜயகாந்தின் குடும்பத்திற்கு விசுவாசிகள் என்று உரைத்தவர்களே.
15-ஜூன்-2013 02:02:40 IST
இந்தியாவிலேயே தலைவர் கலைஞருக்கு பின் ஒரு நல்ல தலைவர் நிதிஷ் குமார். அவர் பிஜேபி துணையின்றி நிச்சயம் பீகாரில் ஜெயிக்க முடியும். மூன்றாம் அணியை அவர் கலைஞரின் தலைமையில் அமைத்தால், மத்திய அரசை நிச்சயம் பிடித்துவிடலாம்.
15-ஜூன்-2013 01:44:14 IST
மத்திய அமைச்சருக்கு மிரட்டல் என்பது நம்ப முடியாத ஆச்சரியமாக உள்ளது. அப்படியெனில் லட்சகணக்கான ராணுவம், போலீஸ்களின் திறமையை இவர் கேலி செய்கிறாரா? அல்லது வேண்டுமென்றே எதையாவது சொல்லி அனுதாப அலை தேடி கொள்கிறாரா? என்று புரியவில்லை. நிஜமாகவே அப்படி மிரட்டல் வந்தால், மிரட்டியவர்களின் மீது இதுநாள் வரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? அல்லது ஊழல்களை மறைக்க அப்பாவி வேஷம் போடுகிறாரா?
15-ஜூன்-2013 01:41:49 IST