ராகுல் கொஞ்சம் அப்படி இப்படி தான். கொஞ்சம் விழித்துகொண்டால், உற்சாகமாக பேசுவார். பின்னர் உறங்க போய்விடுவார். இளைஞரணி தலைவருக்கு வயது பத்தவில்லை. ஸ்டாலினை போன்று கொள்கையில் முதிர்ச்சி அடையவில்லை,
24-மே-2013 04:10:27 IST
அரசிடம் உள்ள பங்கை மேலும் தொழிலாளிகளிடமே மத்திய அரசு விற்பதன் மூலம், மின் உற்பத்தி பெருகும். தொழிலாளிகள் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள். பங்கை தனியாரிடம் விற்க கூடாது என்பதே திமுகவின் கொள்கையாகும்.
24-மே-2013 04:07:49 IST
நான் வரதட்சணை கேட்கமாட்டேன். அவர்களே கொடுத்தால் வாங்கி கொள்வேன் என்று பேசும் மாப்பிள்ளைகள் பசு தோல் போர்த்திய புலிகள். நீங்கள் செய்வதை முறைப்படி செய்துவிடுங்கள் என்று சூசகமாக சொல்லும் மாப்பிளையின் பெற்றோர் நயவஞ்சகர்கள். வரதட்சணை அந்த பையனுக்கு அவ்வளவு கொடுத்தாக, இந்த பையனுக்கு அவ்வளவு கொடுத்தாக, எங்களுக்கும் வந்துச்சே ஒண்ணு என்று சூசகமாக சொல்லி குத்திக்காட்டி பேசும் மாப்பிளையின் பெற்றோர் மற்றும் சகோதரி நரிகள். வரதட்சணை இந்தியாவின் சோதனை. எளிதாக களைந்துவிட கூடிய நோயை, களையாமல் சொரண்டி பெரிதாக்கும் நம் இந்திய மக்களின் மனது விரியும்வரை, இந்த நோய் நம்மை விட்டு போகாது. அந்த விசால மனசு வரும்வரை, இந்தியா ஒரு ஏழை நாடாகத்தான் இருக்கும் என்பது ஆண்டவனின் சாபம்.
24-மே-2013 04:04:17 IST
சூதாட்டமும் ஒரு வகையான ஆட்டமே. கால்பந்து விளையாட்டில் மேலை நாடுகளில் சூதாட்டத்தை முறைபடுத்தி ஒரு லாட்டரி போன்று சட்டபூர்வமாக்கியது போன்று இந்தியாவிலும் ஆக்கினால், அரசிற்கு மேலும் வரி வருமானம் கிடைக்கும். இப்போது, ஒரு சிலருக்கே போய் சேரும் இந்த வருமானத்தை அரசு எடுத்து கொள்வதில் தவறில்லை. மது பானத்தை அரசே விற்கும்போது, கிடைக்கும் வரிவருமானத்தை போன்று விளையாட்டின் சூதாட்டிலும் அரசிற்கு வரி வருமானம் கிடைத்தால், ஏழைகளுக்கு பல வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றமுடியும். பணம் இருப்பவன் சூதாட போகிறான். குடிப்பவன் குடிக்க போகிறான். அரசிற்கு இதனால் வருமானம் கிடைத்தால் நல்லதுதானே.
24-மே-2013 00:58:26 IST
திமுகவில் தலைவர் கலைஞர் மட்டுமே முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட தலைவராக விளங்குகிறார். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் சண்டை வருமா என்று சில நரிகள் ஏங்கி கொண்டு இருக்கின்றன. ஸ்டாலின் எதையாவது சொல்லி, பின்னர் அழகிரியுடன் சண்டையிட செய்ய முடியுமா என்று சிலர் கங்கணம் கட்டி கொண்டு திரிகிறார்கள். திமுக ஒரு ஆலமரம். தமிழகத்தில் கலைஞர் கட்டிய தாஜ்மஹால், அதை உடைக்க நினைப்பவர்கள், உடைந்து போய்விடுவார்கள். கலைஞர் வீட்டின் கைத்தறியும் கவிதை பாடும்போது, அவரின் புதல்வர்களுக்கு தெரியாதா? வீடு ரெண்டுபட்டால், அக்கம்பக்கதோர் கூத்தாடுவார் என்று. அழகிரியை இந்தியாவிற்கும்,ஸ்டாலினை தமிழகத்திற்கும் தலைவர் கலைஞர் அர்பணித்துள்ளார்.
23-மே-2013 01:20:55 IST
நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்தால், அதற்குஎற்றவாறு மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். செலவு அதிகரித்தால், வருமானத்தை கூட்ட வேண்டும். இது கூட தெரியாமல் பதவியில் இருப்பவருக்கு சப்பை கட்ட வேண்டாம். கலைஞரின் ஆட்சியில் தமிழகம் செழித்து வளர்ந்தது. இப்போது இருண்ட உலகமாக காட்சி அளிக்கிறது.
22-மே-2013 01:24:54 IST
தலைவர் கலைஞர் ஆறு முறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்து தமிழ்நாட்டை அதிக ஆண்டுகள் ஆண்டவர். இன்று தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட வளர்ச்சி பெற்று இருப்பதற்கு தலைவர் ஆற்றிய அரும்பணிகளே காரணம். ஆனால் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் ஏதோ தாங்கள் அரசு வேலை போன்று நிரந்தர பணி என்று கருதுகிறார்கள். தமிழர்கள் இந்த ஐந்து வருடம் முடிந்தவுடன், ஜெயாவின் பவர் கட்டின் சாதனைக்காக அவருக்கு நிச்சயம் ஓய்வு கொடுத்துவிடுவார்கள். அப்போது, தலைவர் கலைஞர் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்வார். திமுக தொண்டர்களின் மீது,இப்போது போடப்பட்டுள்ள பொய் புகார்கள் தூக்கிவீசப்படும். ஜெயாவின் கூலி ஆட்களுக்கு ஆப்பு இருக்கிறது என்று சூசகமாக தலைவர் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.
22-மே-2013 01:21:31 IST
சிபிஐ மத்திய அரசின் அங்கம். அதற்கு கட்டுபட்டே நடக்க வேண்டும். இல்லையெனில் எதிர்கட்சிகாரர்களின் சதி வேலையில் சிபிஐ சிக்க நேரிடும். அந்நிய நாடுகள் இந்தியாவை சின்னாபின்னமாக்க நேரம்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். சிபிஐ அதிகாரிகளுக்கு ஊழல் கொடுத்து, வேண்டுமென்றே இந்தியாவின் இறையாண்மைமிக்க காபினெட் அமைச்சர்களின் மீது புழுதியை வாரி இறைக்க வைத்து இந்தியாவின் பொருளாதாரத்தை சந்தி சிரிக்க வைத்துவிடுவார்கள். சிபிஐ அரசின் கட்டுபாட்டில் இருப்பது நல்லது.
18-மே-2013 00:45:43 IST
தோணி, சச்சின் போன்ற பெரிய வீரர்களுக்கே விளம்பரம் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. மற்ற வீரர்கள் புறக்கணிக்க படுவதால், அவர்கள் மூன்றாம் தர வேலையில் இறங்கி குறுக்கு வழியில் பணம் சம்பாரிக்க ஆசைபடுகின்றனர். அவர்களும் பெரிய வீரர்களுடன் விளையாடுகிறார்கள். ஆனால் பணம் மட்டும் பெரிய அளவில் கிடைப்பதில்லை. அதுவரை சூதாட்டத்தை தடுக்க முடியாது. சூதாட்டத்தால், மக்களுக்கு ஒரு இழப்பும் இல்லை. இதனை அரசு பெரிதாக எடுத்துகொள்ள தேவை இல்லை. இதில் செலுத்தும் கவனத்தை, மக்களின் நலத்திட்டங்களுக்கு செலுத்தினால், நல்லது.
18-மே-2013 00:39:41 IST