பாதிக்க பட்ட வர்களின் படத்தை காட்டுவதை விட தப்பு செய்தவர்களின் முகத்தை கட்டுவதே சிறந்தது.
இந்த பெண் ஒரு வருடமாக வெளியே தலை காட்டாமல் இருந்திருக்கின்றாள் ஆனால் அந்த அயோக்யர்கள் வெளியே உலா வந்து கொண்டு இருக்கின்றனர்.-ராம்ஜி
24-டிச-2012 10:08:26 IST
சில நாட்களுக்கு முன்பு வடபழனிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன், கூட்டம் அதிகமில்லை,என்னையும் சேர்த்து ஐந்து பேர் இருந்தோம்.
ஒரு இளைஞன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். ஒரு முதியவர் இருமிகொண்டிருந்தார் இரு பெண்மணிகள் (வேலைக்கு போய் கொண்டிருந்தார்கள் ) வேறு யாரும் இல்லை.
கண்டக்டர் "பேப்பர் ல என்ன தம்பி செய்தி ?" என்றார்
"என்ன அக்கிரமம் பாருங்க அம்பத்துர்ல ஒரு ஸ்கூல் பையன் வாத்தியார் திட்டினார்னு தூக்கு போட்டுகிட்டானாம் ..இந்த வாத்யாருங்களுக்கு எப்படி பாடம் சொல்லி தர்றதுன்னே தெரியல்ல ..பாவம் அந்த பையன் உசிரு போயிடுச்சி .."
"ஏன் தம்பி அந்த வாத்தியார் ஏன் திட்டினாராம்.?" என்றார் பெரியவர்.
"அது ஒண்ணும் இல்லைங்க அந்தபையன்தான் எப்பையும் கிளாஸ் பஸ்ட் வருவானாம் .. இந்தவாட்டி அவனுக்கு உடம்பு சரி இல்லை ரெண்டு மாசம் ஸ்கூல் போகல்ல அதுனால் என்ன பண்ணிட்டான் முழு ஆண்டு தேர்வுல
பிட் அடிச்சிட்டான் அதை அந்த வாத்தியார் பார்த்து கண்டிச்சிட்டு பேப்பர பிடிங்கிகிட்டு போயிட்டாரு .. இதுதான் விஷயம் ..இப்ப சொல்லுங்க அந்த வாத்தியார் பண்ணினது தப்புத்தான ??"
விவாதம் சூடு பிடித்தது
"என்ன தம்பி பேசற .. அந்த பைய்யன் செஞ்சது தப்புத்தான ?"
"அதுக்காக கண்டிக்கலாமா இப்படி அப்படின்னு திட்டலாமா? இப்ப பாருங்க பையன் செத்து போய்ட்டான் ?"
"சரி அவன்தான் நல்ல படிக்கற பையனாச்சே ஏன் பிட் அடிச்சான் தெரிஞ்சத எழுதினாலே பாஸ் ஆயிடுவானே ?"
"யோவ் பெருசு விஷயம் புரியாம பேசாத ..அவன் அவங்க வீட்டுக்கு ஒரே பையன் இப்ப என்ன ஆச்சு ..? யாரு பொறுப்பு ?"
"தம்பி ஆசிரியர்கள் கண்டிக்கனும்தான் அப்பத்தான் பசங்க ஒழுங்கா படிப்பாங்க
இந்த காலத்துல குடும்பம் சின்னதா போயிட்டுது .. ஒரே குழந்தையோட நிறுத்திகிட்டாங்க..ரொம்ப செல்லம் கொடுத்து கெடுக்கறாங்க..இதமாதிரி பசங்க எல்லாம் பின்னாடி எப்படி உருப்புடுவாங்க..? தாங்கும் சக்தி மனதுக்கு இல்ல .. கோழையா இருக்காங்க அந்த பையன் நல்லா படிக்கற பையன்னு சொல்றிங்க அவன் நிலவரத்த ஒழுங்கா தலைமை ஆசிரியர்கிட்டக்க சொல்லி இருந்தா காலாண்டு அறையாண்டு மார்க்க வெச்சியே பாஸ் போட்டிருப்பாங்க... இதுக்கு உதாரணங்கள் இருக்கு "
பெரியவர் காரசாரமாக விளாசிக்கொண்டிருந்தார்.
"தம்பி .. எங்க காலத்துல எங்க அப்பா ஆசிரியர் கிட்டக்க சொல்லுவாங்க " அய்யா என் பையன் ரெண்டு கண்ண மட்டும் விட்டுடுங்க மீதி என்ன வேணா செய்யுங்க" அப்படின்னுதான் சொல்லுவாங்க அதுனாலதான் நாங்க இந்த அளவுக்காவது நல்லா இருக்கோம் ... உங்களோட வாதம் தப்பு இதே நிலைல உங்க பையன வளர்த்து கெடுத்துடாதீங்க.... தங்கத்த அடிச்சாதான்
நகைய பண்ணலாம் ...கத்திய வெச்சித்தான் அறுவ சிகிச்சை செய்யணும் அதுக்கு பயந்த முடியுமா ? போப்பா வேலைய பாரு .."
கைதட்டல் கேட்டது . தட்டியது இரு பெண்மணிகள் -ஒருவிஷயம்.... இருவரும் ஆசிரியைகள்
-ராம்ஜி-சென்னை
10-பிப்-2012 19:34:42 IST
பஸ், பால் ஆகியவற்றின் விலை ஏற்றங்கள் தவிர்க முடியாதவைதான். இவற்றை வருடத்திற்கு கொஞ்சமாக ஏற்றி இருந்தால் மக்களுக்கு இதன் சுமை தெரிந்திருக்காது .எவ்வளவோ துணிச்சலாக முடிவெடுக்கும் முதலமைச்சர் இந்த இலவசங்களையும் உடனேயே நிறுத்தலாமே ? அனுபவ ரீதியில் பார்த்தல் எதனை பொதுமக்கள் இந்த விலை ஏற்றதிர்க்காக போராடினார்கள் ? வேறு வழியில்லாமலும் சற்றே சிந்தித்து பார்த்தும் தானே ஏற்றுக்கொண்டார்கள் ? இந்த விஜயகாந்த் அப்போது எங்கே போனார் ? மதிய அரசு பெட்ரோல் டீஸல் விலையை ஏற்றிய பொது இவர் என்ன செய்து கொண்டிருந்தார் ? இவர்கள் இருவரும் விடிய விடிய பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தபிறகு தானே கூட்டணி அமைத்தனர் இவருடன் கூட்டணி இல்லாமலும் ஜெயிக்க முடியும் என்பதை இவர்கள் உள்ளாட்சி தேர்தலிலும் , திருச்சி சட்டமன்ற தேர்தர்களிலும் தனித்து நின்று காட்டவில்லையா? விலை ஏற்றத்தை பற்றி பேசும் இவர் நடத்தும் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்று தருவாரா? விஜயகாந்த் போன்றவர்களை பேசாமல் விட்டாலே சட்டசபையில் நிச்சயம் சுய நினவு இன்றி தப்பு செய்வார். அப்போது மக்களிடம் இவரின் சுய ரூபம் வெளிப்படும். கருணாநிதியே எதிர் கொண்டவருக்கு இவர் எம்மாத்திரம் ? இந்த விஜயகாந்தால் குறைந்தது ஒரு மணிநேரம் எந்த ஒரு IAS அதிகாரியுடன் பேசமுடியுமா? இப்போது இந்த தண்டனை தேவையற்றது . ஜெயலலிதா தேவை இல்லாமல் எதிரிகளின் பலத்தை அதிகபடுதுகின்றார் .அவர்களை ஒன்று சேர்கின்றார்.
03-பிப்-2012 05:23:02 IST