பொதுவாக ஒரு வீட்டின் அத்தியாவசிய தேவை முடிந்த பின் தான் வீட்டை அழகு படுத்த தொடங்குவார்கள், அது போல் இப்பொழுது இந்த செலவுக்கு 4 கிராமத்துக்கு சோலார் பேனல் வாங்கி மின்சாரம் கொடுக்கலாம். மக்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து விட்டு உங்கள் 5 ம் ஆண்டின் இறுதியில் இதை செய்திருக்கலாம். மேலும் ஒரு கட்சியின் தலைவர் சமாதிக்கு அந்த கட்சிதான் செலவு செய்ய வேண்டும். மக்கள் வரிப் பணத்தை வாரி இரைக்க கூடாது. தென் தமிழகத்தையும், அதை தாண்டியும் ஆட்சி செய்த ராஜராஜசோழனின் சமாதியை கூட இன்று வரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அது தமிழனின் வரலாறு. இதுவரை எந்த நல்ல அரசனும் தன் சமாதியை அலங்கரித்துக் கொள்ளவில்லை. எம் ஜி ஆர் மற்றும் அண்ணாவாக இருந்தாலும் சரி, அவர்களே இதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் வாழ்ந்த விதம் அப்படி.என்றுமே நடுத்தர மக்களின் தலைவர்களாகவே இருந்தார்கள்.
10-டிச-2012 09:17:22 IST
அய்யா, நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஒருவேளை நான் அந்த "நாட்டின், 90 சதவீத" மக்களில் ஒருவனாக இருந்தாலும் தங்களின் கருத்தை உள்மனதோடு ஆதரிக்கிறேன். இன்று 50 ஆண்டுகளுக்கு மேல் மதச் சார்பற்ற கட்சிகள்தான் இந்தியாவில் ஆட்சியில் உள்ளது. ஆனால் மதம், மற்றும் சாதி ஒழியவில்லை. மேலும் இப்பொழுது இன வேறுபாட்டை வேறு உண்டாக்கி வைத்து இருக்கிறார்கள். கன்னடன், மலையாளி,மற்றும் சிங்களவனை நம்மவர்கள் ஒரு விரோதியை போல் பார்க்க வைத்துள்ளது இந்த அரசு. இதில் வெறும் வெள்ளையனை மட்டும் குற்றம் சொல்லி பிரயோஜனமில்லை. வருமான அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு அமல் படுத்தி, பள்ளிகளில் வெறும் இந்தியன் என்று மட்டுமே குறிப்பிட்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இது மறைய தொடங்கும்.பிரிவினை உள்ளதால் தான் அரசியல் கட்சிகள் நல்ல விசயங்களுக்கு கூட ஒன்று கூடுவதில்லை.
10-டிச-2012 08:26:21 IST
ஆள் கடத்தல் , கற்பழிப்பு வழக்கு செம்மண் திருட்டு, நிலமோசடி திருட்டு, கிரானைட் திருட்டு இப்படி இவ்வளவு திருட்டையும் இப்ப இருக்கிற இருட்டுல தேடச் சொன்னா எப்படி தேட முடியும்? இல்லையானால் அனைத்துக் கட்சி கூட்டத்தை சென்னையில் கூட்டவும். அனைவரயும் ஒரே அமுக்கா அமுக்கிடுவோம். இப்படிக்கு செங்கல்பட்டிற்கு அந்த பக்கமா இருக்கிற தமிழ் நாடு போலீஸ்.
07-டிச-2012 01:16:10 IST
வயசானால் எல்லோரும் இப்படித்தானோ? எந்த டென்சனும் இல்லாத இவரே மாத்தி மாத்தி பேசும்பொழுது நம்ம மு . க . பேசினால் என்ன தப்பு? இதுக்குத்தான் அரசியலுக்கும் படிப்பு, வயது வரம்பு வேணும்னு சொல்லறது. எல்லா வயசானவங்களும் சேர்ந்து வயதுவரம்பு பற்றி முடிவேடுக்கணும்னு நாம நினைகிறதே ஒரு முரண்பாடா தோணுதே&39
07-டிச-2012 01:05:56 IST
அரும்பாடு பட்டு அறுந்தினை உண்டாக்கிய ஐயா, அம்மா இருவருக்கும் வாழ்த்துக்கள். இப்படிக்கு, ஏமாற்றமும், ஏமாளிகளும் குடி கொண்டிருக்கும் தமிழக மக்கள்.
05-டிச-2012 00:22:10 IST
மிகச் சரியான பதில். ஆனால் மு. க. சம்பந்தமில்லாமல் இன்னொரு பதில் சொல்லுவார். பொதுவில் எந்த சாதி தலைவர்களையுமே ஊக்குவிக்காமல் இருப்பது தான் நம் சமுதாயத்துக்கு நல்லது.
04-டிச-2012 20:14:25 IST
கேரளா முதன்மந்திரியின் தீர்மானம் நியாயமானதே. ஒரு சமயம் என்பதும் மத சடங்கு என்பதும் அதில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே. தமிழகத்தைப் போல் இந்து மதத்தை மட்டும் திட்டி விட்டு, மற்ற மத நிகழ்சிகளில் கலந்து கொள்வதும், கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்துவிட்டு பணம் கட்டாமல் அனுபவிப்பது எல்லாம் இறை நம்பிக்கை அற்றவர்களால் மட்டுமே முடியும்.ஆனால் இறைவனின் தண்டனையில் இருந்து தப்புவது என்பது இயலாத காரியம். கர்மா பின் தொடரும்.
24-அக்-2012 19:40:37 IST