நவீன தமிழ் இலக்கியத்தில் சுஜாதாவின் பங்கு மகத்தானது. அறிவியலை தமிழ் படுத்தியதில் அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவில் நிற்கும்.
05-மே-2013 08:41:31 IST
சீன பகுதியில் சாலை வசதிகள் இல்லை என்பது வடிகட்டிய பொய். நமது எல்லை பகுதி வரை நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டு இருப்பதை கூகிள் எர்த் பார்த்தாலே தெரியும். அறுபது வருடங்களுக்கு முன்னால் கத்தியின்றி ரத்தமின்றி திபெத்தை ஆக்கிரமித்ததை போல இதுவும் ஒரு நீண்ட கால ஆனால் உறுதியான ஆக்கிரமிப்பே. நமது அரசுக்கோ வெளியுறவு துறை அதிகாரிகளுக்கோ இதை பற்றி எல்லாம் கவலை இருப்பதாக தெரிய வில்லை. இதை போலதான் இப்போது வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் இந்தியர்களை விட பங்களாதேசிகளே அதிகமாகி விட்டனர். அரசு இப்போதும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் நம் நாடு அவ்வளவுதான்.
27-ஏப்-2013 07:29:53 IST
உண்மை. ராணுவம் போன்ற ஆட்சி தேவை ஆனால் ராணுவ ஆட்சி தேவை இல்லை.ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை தரும் அரசு வந்தால் வரும் காலம் பொற்காலம்தான்.
06-ஏப்-2013 17:15:55 IST
சிம்பிள் ஐயா.. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கருணாநிதி ஈழ தமிழர்களுக்காக பதவியையே துறந்தோம் என்று பம்மாத்து காட்டுவார். அதை மக்கள் நம்பாமல் இருக்கவும் அதையும் தாண்டி தான் ஈழ தமிழர்கள் மேல் அக்கறை உள்ளவர் என்று காண்பித்து கொள்ளவும் தான் இந்த ஆக்சன் எல்லாம்.
26-மார்-2013 18:16:41 IST
அமெரிக்கா போன்ற நாடுகளில் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களது வெளியுறவு கொள்கை மாறுவதில்லை. ஆட்சியாளர்கள் நாட்டின் நலனை மட்டுமே பார்க்கின்றனர். இந்தியாவின் தலை எழுத்து உருப்படியான வெளியுறவு கொள்கை என்பதே இல்லை. அதையும் நமது அரசியல்வாதிகள் கொஞ்சமும் ஐ எப் எஸ் அதிகாரிகள் மொத்தமாகவும் நாசம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியா தனது அரைவேக்காட்டு வெளியுறவு கொள்கைகளால் தன தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்கிறது.
13-மார்-2013 07:44:38 IST
ஏன் என்றால் மற்ற எந்த கட்சிகாரனும் நாங்கள் தான் பகுத்தறிவுக்கு மொத்தக்குத்தகை என்று கூச்சல் போடுவதில்லை. மேடைகளில் இந்து கடவுள்களை பற்றி கேலி பேசிவிட்டு பரிகாரத்துக்கு மஞ்சள் சால்வையும் குடும்ப பெண்களை கோவில் கோவில்களாக போக விடுவதில்லை. கடவுளை கும்பிடுவோம் என்று ஒத்துகொண்டால் யார் என்ன விமர்சிக்க போகிறோம்? ஜெயலலிதா கோவில் கோவிலாக போகிறாரே, யாராவது எதுவும் சொல்கிறார்களா? ஏன் என்றால் அவர் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதில்லை.
06-மார்-2013 08:17:45 IST
நம்ம நாட்டிலே இதுவெல்லாம் சகஜமப்பா... முப்பது வயதிலே வழக்கு போட்டால் நம் பேரன் பேத்தி காலத்திலேதான் தீர்ப்பு வருது. இதை பொய் ஒரு செய்தின்னு போட்டுக்கிட்டு....
31-ஜன-2013 09:13:08 IST