நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதற்கு மட்டும் இவர்கள் இரண்டு கையையும் நீட்டுவார்கள், நியாயமான கோரிக்கை என்று வந்துவிட்டால், கை விரித்துவிடுவார்கள். "சிந்து நதியின் மிசை ....வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்" என்று என் பார் போற்றும் பாரதி நூறு வருடங்களுக்கு முன்பு பாடினார். ஆனால், இன்று எவ்வளவோ வசதிகள் இருந்தும், நதி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த இந்த கையாலாகாத காங்கிரஸ் அரசு ஏனோ முயற்சி செய்யவேயில்லை. காரணம், ராகுல் தமிழகத்திற்கு வந்தபொழுது தெரிவித்த கருத்துக்கள். நதிநீர் இணைப்பு என்பது சாத்தியம் இல்லை என்று கூறியதுதான். நாட்டின் நலனைக் கருத்தில் கொள்ளாத ஒரு இளைய தலைமுறையை எப்படி தலைவன் என்று ஏற்றுக்கொள்வது??? வெட்கம்.
08-மார்-2013 06:21:56 IST
2010 ம் வருடம் நடைபெற்ற ஊழலை விசாரிப்பதற்கு இந்திய ராணுவ அமைச்சகம் (?) சி.பி.ஐ.கு உத்தரவு. இது நிஜம்தானா?? இந்த விசாரணையாவது ஒழுங்காக நடைபெற்று, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? அல்லது போபர்ஸ் ஊழல் போல நீ........ண்டுகொண்டே போய், கடைசியில் நிர்வாக செலவு காரணமாக விசாரணை கைவிடப்பட்டதே அதுபோல இந்த விசாரணையும் இருக்குமா?? எல்லாம் அந்த ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்.
13-பிப்-2013 03:53:59 IST
நித்தம் உறவாடும் உங்களுடைய சுயரூபத்தையே மத்திய அரசால் புரிஞ்சுக்க முடியல. அப்புறம் எங்கே அவர்கள் மகிந்தா ராஜபக்ஷே-வுடைய சுயரூபத்தை புரிஞ்சுக்க முடியும். இதுகூட உங்களுக்குத் தெரியலையே வெட்கம், வேதனை, அவமானம். சீனாவின் துயரம் மஞ்சள் நதி, தமிழரின் துயரம் நீங்கள்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து எப்பொழுதும் எழுந்ததில்லை.
06-பிப்-2013 13:46:45 IST
திரு மகிந்தா ராஜபக்ஷே உங்களிடம் அரசியல் பாடம் பயிலவாவது ஒருமுறையேனும் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். அப்பொழுது தான் முதல் நாள் கூறிய கருத்தை எப்படி மறுநாள் மாற்றிப்பேசுவது என்ற விவரம் அவருக்குத் தெரியவில்லை.
06-பிப்-2013 13:43:44 IST
தமிழக முதல்வர் அவர்களின் பிடிவாதம் ஒரு புறம் இருக்கட்டும். இத்தனை வயதான பின்பும் உங்களின் பிடிவாத குணம் மாறாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று மக்களுக்குத் தெரிவியுங்கள்.
எத்தனை கோடி செலவழித்து நீங்கள் புதிய தலமைச்செயலகத்தைக் கட்டினீர்கள்?
கட்டிட திறப்புவிழாவிற்கு எத்தனை கோடிகள் செலவு செய்தீர்கள்?
முழுவதும் கட்டி முடிக்கப்படாத தலைமைச் செயலகத் திறப்பு விழாவிற்கு பாரத பிரதமரை எதற்கு அழைத்தீர்கள்?
புதிய தலைமைச் செயலகம் போன்ற ஒரு மாதிரியை வைத்துத் திறப்பு விழா செய்தீர்கள். இதற்கு ஆன செலவுகள் எத்தனை கோடிகள்?
உங்கள் பெயரை தமிழக வரலாற்றில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன், வீண் பிடிவாதத்திற்கும், வரட்டு கௌரவத்திற்காகவும் மக்கள் பணத்தை வீணடித்த திட்டங்கள் எத்தனை??
முதலில் நீங்கள் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்ளுங்கள். பிறகு அடுத்தவரை குறை கூறலாம்.
02-பிப்-2013 13:26:55 IST
அடக் கொடுமையே இதுக்கு பேருதான் "அரசியலா"? தமிழக முதல்வர் காவிரி நீர் கேட்டு கர்நாடகா அரசிடம் முறையிட்டு கோர்ட்டுக்கு சென்றால், அது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை. கமல்ஹாசன் தமிழகத்தை விட்டுச் சென்றால் அவருக்கு பெங்களூருவில் தங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் கூறியிருப்பது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றது. இதே கமல்ஹாசன் காவிரி நீர் பிரச்சனையில் தமிழக அரசிற்கு ஆதரவாக ஏதேனும் ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தால் உங்களது இதே நிலைப்பாடு தொடர்ந்து இருக்குமா??
முதலில் உங்களது ஆட்சி கர்நாடகாவில் தொடர்ந்து நீடிக்குமா என்று பாருங்கள், ஆட்சியில் நீங்கள் நீடிக்கவில்லையெனில் உங்களுக்கு எங்களது தமிழகத்தின் எந்தஒரு மூலையிலும் தங்குவதற்கு நாங்கள் இடம் அளிக்கின்றோம்.
02-பிப்-2013 04:18:38 IST
நம் நாட்டு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், திரைத்துறை அன்பர்கள், என்று பட்டியல் நீளும் நம்மவர்கள் அயல்நாட்டில் பதுக்கிவைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுவாருங்கள். இந்திய பொருளாதாரம் இன்றல்ல, நாளையல்ல இனி ஒரு யுகங்களுக்கு எந்த நாட்டையும் கையேந்தி நிற்கும் நிலை வராது.
வருமான வரி ஏய்ப்பு நடவடிக்கையில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனைக்குள்ளான ஒவ்வொருவரிடமும், தண்டனைக்காக காத்துக்கிடக்கும் பல்வேறு வழக்குகளையும் விரைந்து முடித்து தண்டனையை உடனடியாக நிறைவேற்றி வட்டியும் முதலுமாக வரியை வசூலித்தாலும் நமது பொருளாதாரம் நிச்சயம் மேம்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
நடவடிக்கை எடுக்க உங்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குத் துணிவு இருக்கிறதா??
நமது நாட்டின் மிக உயரிய பதவிகளில் வீற்றிருக்கும் ஜனாதிபதி திரு பிரணாப் முகர்ஜியும், பிரதமர் பதவியில் இருக்கும் திரு மன்மோகன் சிங்கும் மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்கள் தான்.
உங்களிடம் அனைத்து அதிகாரமும் இருக்கும் சமயத்தில், நீங்கள் யாரையும் கையேந்தி நிற்கும் அவல நிலை தேவையில்லையே???
மெத்தப் படித்த உங்களுக்கு என்னைப்போன்ற சாமானியர்களின் அறிவுரை தேவைதானா ?? உங்கள் புத்தியை எங்கு அடகு வைத்துள்ளீர்கள்???
கடந்த எட்டு வருட உங்களது மத்திய ஆட்சியினால் பொது மக்களுக்கு இதுவரை எந்தஒரு நன்மையையும் இல்லை. நீங்கள் ஆட்சியை விட்டுப் போகும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்பதை ஒரு நிமிடம் உணர்ந்துகொண்டு, நாட்டை ஆளும் பொறுப்பிலிருந்து விடைபெறும் நேரத்திலாவது எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு ஏதாவது நல்லது செய்துவிட்டுப் போங்கள். உங்களுக்குப் புண்ணியமாக போகட்டும்.
02-பிப்-2013 02:37:05 IST
தற்போது நகைக் கடைக்கான ஒரு தொலைக்காட்சி விளம்பரம் எந்த தயக்கமும் இல்லாமல் ஒளிபரப்பப் பட்டு வருகிறது. அதில் அக்கினி வளர்த்து ஹோமம் செய்யும் ஒரு அந்தணர் மிகைப்படுத்தப் பட்ட உச்சரிப்புகளுடன் 'ஸ்வாஹா..ஸ்வாஹா' என்று காமடி செய்வார்.
திரு வடுவூறான் அவர்களே, தங்கள் கருத்தை நான் முழுமையாக ஆமோதிக்கின்றேன். நம் இருவரின் மனோ நிலையும் இதில் ஒத்துப்போகின்றன. 26-01-2013 தேதியன்று சம்பந்தப்பட்ட நகைக்கடை அலுவலகத்திற்கு பிரத்தியேகமாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளேன். அவர்கள் உடனடியாக அந்த விளம்பரத்தை தடை செய்யவில்லையெனில், நான் நிச்சயம், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடரவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பதிலுக்குப் பதில் என்று நாமும் களத்தில் குதித்தால்தான் உண்டு, இல்லையேல், நம் மீது ஏறி மிதித்து சென்றுவிடுவார்கள்.
29-ஜன-2013 02:57:21 IST