மிகவும் வரவேற்கதக்கது. உங்களுடைய பகீர்வும் மிக அருமை மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் வலிமைவாய்ந்த விழிப்புணர்வு தேவை.(எல்லோரையும் விரைவில் சென்றடைய)
22-டிச-2012 03:15:34 IST
கண்டிப்பாக சமமாக மின்பங்கிடு செய்தால் தற்போதுள்ள மோசமான நிலையை தவிர்க்க முடியும். மின்பங்கீடு செய்வதில் மின்சார வாரியம் குறுக்கீடாக இருக்காது. அதில் உறுதியாக தற்போதைய அரசு தான் குறுக்கீடாக இருக்க வேண்டும். தலைநகரில் கலவரம் ஏற்பட்டால் தலையாய பிரச்சினையாகும் என்று கருத்தில் கொண்டு மின்பகீர்மான பேச்சையே எடுப்பதில்லை. இனி மின்பிரச்சினை தீர்ந்தால் கூட இந்த அரசு மீண்டும் ஆட்சியை பிடிப்பது இயலாத ஒன்று. நம் நிலை மாற நிச்சயம் ஒரு மாற்ற அரசாங்கம் தேவை .சர்வாதிகாரமான அரசு தேவை. நிச்சயம் வரும்.
05-டிச-2012 08:38:59 IST
அரசியல் அமைப்பினர் நாடு முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர மக்களிடம் வன்முறையை தூண்டக்கூடாது. தன் மாநில மக்களுக்கு உண்மை நிலவரத்தை கூறி வன்முறையைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். உச்சநீதிமன்றம் இரு தரப்பினரின் கருத்தை ஆராய்ந்தே முடிவு எடுத்துள்ளது. அம்முடிவுக்கு கட்டுப்படுவது நம் கடமையாகும். இதை அரசியல்வாதிகள் சுயநல நோக்குடன் தவறாக ஈடுபவது கண்டிப்புக்குரியது. தவறான போராட்டங்களில் ஈடுபடுவோர்களுக்கும் தூண்டுபவர்களுக்கும் கடுமையான தண்டனைச் சட்டம் இயற்ற வேண்டும்.
01-அக்-2012 08:44:31 IST
இன்றளவும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பது இயல்பாக உள்ளது. இதை கல்வி நிறுவனங்களும் கண்டும்காணாமல் செல்கிறார்கள். அரசின் நடவடிக்கை தீவிரமடைய வேண்டும். இதில் அரசு எந்தவித இலாபநோக்கின்றி செயல்பட வேண்டும். இதை முற்றிலும் இல்லாமல் செய்வதே எங்களின் விருப்பமும்.(அரசின் கவனத்திற்கு)
29-செப்-2012 08:00:05 IST
இதுப்போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. ஆனால் வன்முறையில் இறங்குவது நியாயமற்றது. நாம் எதையும் அமைதியான முறையில் தீர்வுகான வேண்டும்.
29-செப்-2012 07:40:14 IST