அதானே வேறு ஒருகாரணம் இருக்க நியாயம் இல்லை இவரது பேச்சின்படி பார்த்தால், MGR முதல்வராயிருந்த 1977 முதல், 1988 வரை முதலமைச்சராக முடியாததே தண்டனை தானே
16-ஏப்-2013 07:00:00 IST
இது என்ன மாதிரியான ஊர்? எத்தனை முறை அப்பீல் , விசாரணை ? எல்லாம் முடிந்தபிறகு அரசியல் கட்சிகளின் வேண்டுகோள், மற்றவர்களின் பாவ புண்ணிய விமர்சனம் அதற்கு பிறகு மீண்டும் ஒரு அப்பீல் மனு, மீண்டும் விசாரணை ஒத்திவைப்பு, வாய்தா ஒன்று மட்டும் நிச்சயம் உலகத்தில் எந்த பகுதியில் குற்றம் செய்தாலும், இந்தியாவில் விசாரணை வைத்து வழக்கு நடத்தினால், ஒரு பய தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை பாரத நாடு பழம்பெரு நாடு நீர் அதன் புதல்வர் நினைவகற்றாதீர்
16-ஏப்-2013 06:55:10 IST
விவேகானந்தர் சொன்னாலும் சொன்னார் அதற்கு அர்த்தம் வெறும் எண்ணிக்கை அல்ல விவேகானந்தரை புரிந்து கொள்ளும் திறன் படைத்த மாணவரை தான் அவர் சொல்லியிருக்க வேண்டும். கிட்ட தட்ட தற்காலத்தில் மாணவர் சமுதாயத்தை உபயோகபடுத்தும் எந்த தலைவருக்கும் சுவாமி விவேகானந்தரின் தகுதி இல்லை. இதில் தலைவர்களை மட்டும் சொல்லி குற்றம் இல்லை. எவ்வளவு வேகமாக வளரமுடியும் (வளர்ச்சி=பண வளர்ச்சி)என்ற எண்ணம் எல்லா இளைஞரிடமும் வெகு வேகமாக பரவி வருகிறது. அரசியல் கட்சிகளும் தன் பங்கிற்கு, 60 -70 வரை உள்ள இளைஞர்களையே தலைவர்களாக கொண்டு கட்சிகளை நடத்துகிறது. நம் நாட்டின் பெரிய கட்சியின் இளைஞர் 40+ வயதுடையவர். நடந்த சம்பவம் கொஞ்சம் வருத்தத்தை அளித்தாலும், மாணவர் சமுதாயம் தன் படிப்பை மட்டும் பார்த்தாலொழிய தானும் வளர்ந்து சமூக அக்கறையும் கொள்ளும் என்ற எண்ணம் உள்ளவர்களாக ஆக mudiyaadhu
04-ஏப்-2013 02:12:22 IST
இது மிகவும் நெகிழ வைக்க கூடிய நிகழ்வுதான். ஆனால் இது போன்று முன்பு ஒருமுறை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஒரு பிச்சைகாரர், பர்சை தவிக்கவிட்ட ஒரு மாணவருக்கு உதவ முன்வந்து அபராதம் கட்டாமல் காப்பாற்றினார். அன்று ரயில் ஊழியர் தம் கடமையை செய்வதற்கு உதவியாக பிச்சைகாரர் தன சம்பாத்யத்தில் இருந்து 50 ருபாய் கொடுக்க முன்வந்தார். அதை நான் ஒரு சாதாரண சம்பவமாக கண்டு சென்று விட்டேன். இந்த நிகழ்வு எனக்கு ஒன்று உணர்த்துகிறது. ஏழைகளும், பிசைகாரர்களும் தான் சமயத்தில் உதவ முன்வருகின்றனர். மற்றவருக்கு ( என்னையும் சேர்த்து ), கருத்து எழுத தான் முடிகிறது
03-ஏப்-2013 12:17:22 IST
இந்த மாதிரி கலாசாரம் இப்போது கொஞ்சம் ஜாஸ்தியாகிகொண்டு வருகிறது. ஒரு குற்றம் அல்லது ஒரு தாவா என்று வந்தால் கோர்டுக்கு போவார்கள். மேல் முறையீடு, அப்பீல் என்று பல வழிகளை கடந்து ஒரு தீர்ப்பு வந்த பிறகு அரசியல், மற்றும் பல வழிகளை கொண்டு தீர்ப்பை நிறுத்துவது, நீர்த்துபோகசெய்வது என்ற கலாசாரத்தை கொண்டு வந்த புண்ணியம் ராஜீவ் காந்திக்கு சொந்தம் ஷா பானோ வழக்கு இப்போது கொலை, கற்பழிப்பு, மற்றும் தெரு முனை யில் மூத்திரம் போன கேஸ் வரை வந்து விட்டது இதற்கு ஊடகங்கள்ன் பங்கும் நிறையவே உண்டு
02-ஏப்-2013 16:51:36 IST
என்ன எல்லாரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது? அதுதான் கடந்த 46 வருஷமாக இதே சொல்லி சொல்லி ஏமாந்து கொண்டு இருக்கிறோமே திமுக மட்டும் தான் ஏமாற்றுகிறதா? மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் என்ன ரொம்ப யோக்கியமா? திமுக, அதிமுக (பெரிய) கட்சிகள் தான் மக்களை ஏமாற்றுவது போலவும் மற்ற கட்சிகள் எல்லாம் யோகியமானவை போலவும் நாம் (பொதுமக்கள்) நினைத்துகொண்டு இருக்கிறோம் ஆனால் உண்மை என்ன? காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சிகள், இன்னும் இஞ்சி பச்சை மிளகாய் கட்சிகள், வைகோ, மருத்துவர், திருமா, காப்டன், கிருஷ்ணசாமி, தவிர ஜாதி மற்றும் மதகட்சிகள், சொல்லவே வேண்டாம்,பா ஜ க, சுப்ரமனியாச்வாமி, போன்றவர்கள், இவர்களின் செயல்கள்தான் தமிழ்நாட்டை நாசமாக்கி கொண்டு இருக்கிறது. இப்போது கூட பாருங்கள் திமுக, நிஜமாகவே காங்கிரசுடன் சேரவில்லை என்றால், பா ஜ க சேர்த்து கொள்ளாது என்று யாராவது நிச்சயமாக கூற முடியுமா? கடந்த சட்ட சபை தேர்தலில் பா ம க வை ஒதுக்கி வைத்தது போல தேசிய அரசியலில் சில கட்ச்களை தைரியமாக காங்கிரசும், பா ஜ கவும் செய்யட்டும் பிறகு பார்க்கலாம் சும்மா திமுக, அதிமுகவையே குற்றம் சொல்லாதீர்கள் மக்கள் எவ்வழி? மன்னன் அவ்வழி
31-மார்-2013 06:09:06 IST
மாணவர்களே சொந்தகாசில் ஒரு டீ வாங்க முடியாத நிலையில் தான் ஒவ்வொரு மாணவனும் இருக்கிறீர்கள் நன்றாக படித்து சம்பாதித்து நல்லமுறையில் வளர்ந்து உங்கள் உண்மையான உணர்வுகளை அரசியியல் கட்சிகளில் சேர்ந்தோ அல்லது வேறு ஒரு நல்ல இயக்கத்தின் மூலமோ உங்கள் கருத்துகளை கூறாமல், அசிங்கமான சீப் விளம்பரத்திற்காக பரீட்சை நேரத்தில் மற்ற மாணவர்களின் எதிர்காலத்தை பணயம் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டால் யாருக்கு நஷ்டம் போராட்டத்தை நடத்தும் மாணவர்களின் யாராவது ஒரு மாணவரின் பெற்றோர் நிம்மதியாக இருக்கிறார்களா? மற்ற விஷயங்களில் அரசியல் தலைவர்கள் கூறும் கருத்தை கேட்கும் மாணவர்களே திரு வைகோ சொன்னதைப்போல, உங்கள் உண்மையான பலம் நாட்டிற்கு தேவை உங்கள் படிப்பை முடித்துக்கொண்டு வாருங்கள் ஒழுக்கமான ஒரு இயக்கத்தை நடத்தி போராடுங்கள் எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு அதைவிட்டு விட்டு பரீட்சை நேரத்தில் உங்கள் பெற்றோரின் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் விரயமாக்காதீர்கள்
30-மார்-2013 14:57:15 IST
மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. வைத்தியன் கல்பிச்சது பாலு ரோகிக்கும் அதுதன்னே இஷ்டம். அது போல இருக்கிறது இவரது விலகல் நாடகம். இதுவரை எதிகட்சி சொன்னதை எதை கேட்டார். அப்படியென்றால் எத்தனை போராட்டத்தில் இவரை முதல்வர் பதவியை விட்டு விலக சொன்னார்கள் இப்போது 4 வருஷமாக நன்றாக இலாகா, இலாகா வாக ருசி கண்டுவிட்டு இப்போது காலி பாத்திரத்தை (பட்ஜெட் அறிவித்தபிறகு) கீழே போட்டு விட்டாராம். ரொம்ப வருத்தபடுகிறார். இதற்கு பெயர் பதவியை துச்சமென மதிப்பவர்கலாம் இவர்கள் நல்ல பஜனை
29-மார்-2013 07:24:43 IST
மத்திய அரசு செய்யும் காரியங்களுக்கு திமுக உடந்தை இல்லை என்ற கருத்தை கூறும் திமுக தலைவரும் சரி, தங்கைராஜாவும் சரி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள் திமுக அல்லது கருணாதியை விட்டால் தமிழ் இனமே காணாமல் போய்விடும் என்ற கூற்றுக்கு எப்படி பெருமையை பெற்றுகொண்டார்களோ அதுபோல இதுபோல இன ஒழிப்பு திட்டத்துக்கும் பெருமையை ஏற்கட்டும் இவர்கள் ஆட்சியில் பங்கெடுத்ததனால் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் ? அல்லது செய்யவில்லை? பெரிய வித்த்யாசம் ஒன்றும் இல்லை என்பது எங்களைபோன்றவர்களுக்கு ரொம்ப காலமாகவே தெரியும் அதை இப்போது ஒப்புக்கொண்டு இருக்கிறார் கலைஞர் அவ்வளவுதான் பாலு ரயில்வே நிலைகுழுவில் இருந்து ராஜினாமா செய்யவில்லையே என்று ஜெயலலிதா சொன்னால் முடியாது என்று சொல்லவேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டு சபாநாயகர் உரிமை பாராளுமன்ற உரிமை என்றெல்லாம் ஏன் பேசுகிறார் என் இஷ்டம் அப்படித்தான் விலக மாட்டேன் என்று சொல்லவேண்டியது தானே? பயம் தன எண்ணம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் முதலை கண்ணீர் விஷயம் தெரிந்து விடுமோ என்ற பயம்
29-மார்-2013 02:56:35 IST