கடந்த பிப்ரவரி 24 -ல் இதே அம்பத்தூர் தாலூகா அலுவலகத்தின் அவலம் பற்றி நான் தினமலரில் தெரிவித்து பிரசுரமான வாசகர் கருத்து இதோ: தாலுகாஅலுவலகங்களில்கூட்டத்தைக்குறைக்கபுதுதிட்டம்:மக்களைச்சந்திக்கஅதிகாரிகள்செல்லஉத்தரவு...
திட்டங்களை உருவாக்கினால் மட்டும் போதாது. அதனை உரிய முறையில் செயல்படுத்த போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு மோசமான அனுபவம். அம்பத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு 2012 அக்டோபர் இறுதி வாரத்தில் சென்றேன். பட்டா மாறுதலுக்கு மனு செய்யும் வேலை. 11 மணி ஆனாலும், மனு செய்ய வந்த பொது மக்களின் கூட்டம்தான் நிரம்பி வழிந்தது. சர்வே அலுவலகத்தில் நாற்காலிகள் காலியாக இருந்தன. அக்டோபரில் நடக்க ஆரம்பித்த நான், பிப்ரவரி வரை, தி.நகரிலிருந்து, 5 முறை அம்பத்தூர் சென்று, ஒரு வழியாக, சர்வே அலுவலக உதவியாளர் மூலம்தான் காரியம் முடிந்தது. கடைசிவரை, சர்வேயரோ, தலைமை சர்வேயரோ தரிசனம் தரவில்லை. இதுதான் அங்குள்ள உண்மை நிலை. உயர் கல்வி படித்து, அரசு உயர் பதவியில் இருந்த எனக்கு இந்த அனுபவம் என்றால், படிக்காத மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு இந்த பிரட்சினையை கொண்டு செல்லலாம் என்றால், அந்தப்பதவி காலியாக இருந்தது. என்ன செய்ய? 24-பிப்-2013
22-மே-2013 07:16:07 IST
ஊருக்கும் சொந்தங்களுக்கும் உபதேசம் செய்யும் தலைவர், மருத்துவ கல்வியை பல ஆண்டு காலம் படித்ததாகவும் மேன்சனில் தங்கி மணிக்கணக்கில் சீட்டு விளையாடும் பழக்கம் கொண்டவர் என்றும், அருகில் வசித்த எனது நண்பர், 1970- களிலேயே சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றும் இவருக்கு கைவந்த கலை. மது விலக்கும் அவற்றில் ஒன்றுதான்.
30-ஏப்-2013 05:58:58 IST
'சுதேசி' இயக்கம் கண்ட காங்கிரசில் தற்போது கோலோச்சுவது 'விதேசி' தான் என்பது நாடறிந்த உண்மையாகிவிட்டது.காங்கிரஸ் தொண்டர்கள் தான் சிந்திக்க வேண்டும். பதவி ஆசை கொண்ட தலைவர்களுக்கு "தங்கள் கட்சியை ராமன் ஆண்டாள் என்ன, ராவணன் ஆண்டா என்ன?" என்பதுதான் கொள்கை.
21-ஏப்-2013 05:53:58 IST
தி.மு.கவினர் பகுத்தறிவு உள்ளவர்கள். அவர்களின் உள் மனதில் உள்ளதை மணிவண்ணன் பட்டவர்த்தனமாக கூறியுள்ளார் என்றே எடுத்துக்கொள்வர் தலைவரின் பிள்ளையை தவிர மற்ற எவரேனும் முரண்பாடாக இவ்வாறு இரு பதவிகள் வகிக்க (பொருளாளர் / இளைஞர் அணி செயலாளர்)கட்சியில் விட்டு விடுவார்களா? தி.மு.கவினர் நிச்சயம் சிந்திப்பார்கள்
14-ஏப்-2013 06:19:47 IST
இவர் திட்டமிடுவதற்கே 4 ஆண்டுகள் (அமைச்சராகி) பிடித்திருக்கின்றதென்றால், செயல்படுத்த எவ்வளவு ஆண்டுகள் ஆகப்போகிறதோ ? சகல வசதி படைத்தவர்களை பொறுப்புக்களில் அமரவித்தால் அவர்கள் சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்பதற்கு இவர் ஒரு "Standing Example"
04-ஏப்-2013 04:08:07 IST
We can come to a conclusion that both the Congress Govt.at the Centre and the Congress leaders are living in "Fools Paradise" as far as Sri Lankan Tamils' issue. Who will wake them up?
03-ஏப்-2013 01:54:19 IST
பல்லாண்டு ஒதுங்கி கிடந்த அம்மா மீண்டும் வெளிச்சத்திற்கு (limelight) வந்து அரசியலில் புத்துனவு பெற தி.மு.க.வும் காரணம் என்பதை அரசியல் தெரிந்தவர்கள் அறிவார்கள். இதனை மறுப்பதற்கில்லை.
20-மார்-2013 06:00:34 IST
உலகத் தமிழர்களையும், தமிழ் நாட்டு மக்களையும், இந்திய அரசாங்கத்தையும் பற்றி, மனதில என்ன நினைத்துக்கொண்டு இப்படி காய் நகர்த்துகிராரோ தெரியவில்லை. போர் நடைபெற்று ஈழத் தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டபோது இததகைய ஒரு முனைப்பை காட்டியிருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அயல் நாடு ஒன்று உள் நோக்கத்தோடு கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்திற்காக மெனக்கெட்டு இவ்வளவு போராட்டங்கள் நடத்தி இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியுமா என்பதற்கு வருங்காலம் தான் பதில் சொல்லும்.
20-மார்-2013 05:53:23 IST
இவர் நாட்டின் சரித்திரத்தையோ அல்லது கடந்த காலத்தில் இவரது கட்சித்தலைமை (காங்கிரஸ் அரசு) சோனார் பங்களாவை உருவாக்கித் தந்தையோ அல்லது இலங்கை அதிபர் ஜெயவர்த்தன-வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையோ அதன் பிறகு இலங்கைக்கு இந்தியா அமைதிப்படையை (IPKF) அனுப்பி வைத்ததையோ அறியாமல் பேசுகிறாரோ எனத் தெரியவில்லை. இவர்தான் நம் பாரத நாட்டிற்கு வாய்த்த வெளியுறவுத் துறை அமைச்சர்.[ உள்ளூர் அரசியலில் பேட்டை ரவுடியைப்போல் பேசுகிறவர் இவர்]. மாலத்தீவில் நடந்த புரட்சியின்போது இந்தியா தலையிட்டு உதவவில்லையா? இலங்கை விவகாரத்தில் செஞ்சீனத்தின் கை (china's hand) உள்ளதாக பலவேறாக சந்தேகிக்கப்படும் நிலையில் இந்தியா வெளியுறவுக்கொள்கை இலங்கை விவகாரத்தில் தள்ளாடுகிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
08-மார்-2013 23:44:22 IST