இந்தாளு ராமதோசை கைது செய்து உள்ள வச்சதுக்கப்புறமா, கொசு மருந்து அடிக்கவேண்டியதுதானே. உலகத்துல கொசுத்தொல்லை அதிகமாயிருச்சே நாராயணா.
02-மே-2013 06:48:41 IST
ஏம்பா. இந்த அரசியல் கட்சிகளோட உட்கட்சி, உள்கோஷ்டி தேர்தலையெல்லாம் சனங்க நடமாட்டம், பஸ், லாரி, கார் இல்லாத சகாரா பாலைவனத்துல நடக்கறதுக்கு யாராவது ஏற்பாடு செய்யப்படாதா? ஒருபக்கத்துல மரக்காணத்துல பாமக பஞ்சாயத்து, இன்னொரு பக்கம் திமுகவோடது.
29-ஏப்-2013 02:45:35 IST
உணவுப் பண்டங்கள், சேவை என்ற பெயரில் தரமற்ற பண்டங்களை மிக மிக அதிக விலைக்கு விற்று கொள்ளையடிக்கும் ஓட்டல்களுக்கு எதிராக பாரத யுத்தம் நடத்துவது கூட நியாயமே. எனக்குத் தெரிந்து உணவுக்குக் கூட விற்பனை, சேவை வரி விதிக்கும் ஒரே நாடு உலகிலேயே இந்தியா மட்டுமே. இதில் யாரை யார் குறை கூறுவது?
28-ஏப்-2013 18:11:36 IST
துப்பு கெட்ட தேசவிரோத காங்கிரஸ் கட்சியிடம் நாட்டைக் கொடுத்தால், இதைத்தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும். நாட்டை ஆளும் தகுதியோ, திறமையோ மருந்துக்கும் இல்லாத கூட்டம் இது.
26-ஏப்-2013 17:18:04 IST
மிகமிக வேதனை அளிக்கும் செய்தி. மேற்படி வங்கிக்கு ஓரிரு முறை சென்று பணப்பரிவர்த்தனை செய்த நினைவு வருகிறது. மேற்படி விதிமீறல் புரிந்த நிருவனங்கள், கட்டட உரிமையாளர்கள் உதவிய அதிகாரிகள் அனைவரையும் எங்கு எந்தத் துறையில் இருந்தாலும் டிஸ்மிஸ் செய்வது மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும். சகட்டு மேனிக்கு விபத்துக்கள், ஊழல், ஒழுங்கீனங்கள் ஆகியவற்றைக் கண்டு கூச்சல் இட்டதை முடிவுக்குக் கொண்டு வந்து ஆணிவேரைக் கண்டு அதற்கு வைத்தியம் செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது என்று கூறுவேன்.
26-ஏப்-2013 02:43:32 IST
திட்டம் சிறப்பானதுதான். ஆனால், மானியத் தொகையைப் பாதியாகக் குறைத்துக் கொண்டு நவீன ரக இயந்திரங்கள், கருவிகள், தொழில்நுட்பம் போன்றவற்றை கொண்டுவருவது உண்மையிலேயே நன்மை பயக்கும்.
26-ஏப்-2013 02:29:10 IST
அபத்தமான செய்தி இது. எந்த ஒரு சாத்திரத்திலும், நூலிலும் அட்சய திருதியை அன்று வாங்கும் பொருட்கள் பன்மடங்கு பெருகும் என்று கூறப்படவில்லை. வணிக நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து கட்டிவிட்ட கதை. மற்றபடி அட்சய திருதியை என்பது வரலட்சுமி விரதம், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற மிகவும் விசேஷமான மற்றொரு நாள். அட்சய திருதியை அன்றுதான் திருமால் பரசுராமனாக அவதரித்து "தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்ற கூற்றுக்கு உதாரணம் கற்பித்தார். அதேபோல், ஆதிசங்கரர் தனது கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றிய நாளும் இதுவே. மற்றபடி தங்கம் வாங்கும் நாள் இல்லை.
26-ஏப்-2013 02:14:01 IST
இதென்ன இது. இவர் கும்பிடுவதைக் கண்டால் கூட்டணி குறித்துப் பேச வந்தது போலத் தெரியவில்லை. அம்மையாரின் அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்று எதிர்பார்த்து வந்தது போலல்லவோ தெரிகிறது.
23-ஏப்-2013 06:21:36 IST