கலவரம் செய்வதற்காகவே தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஒரே கட்சி பா.ம.க.
02-மே-2013 14:25:48 IST
Rate this:
9 members
0 members
34 members
Share this Comment
ஜனவரி
1
1900
நம்பும்படியாகவும், திருப்திப்படுத்தும்படியாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை. எனவே இந்த மின்வெட்டு அவ்வளவு சீக்கிரத்தில் தீரும் என நம்பமுடியவில்லை.
16-ஏப்-2013 10:40:02 IST
அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு இந்தியா என்பதற்கான மிக சரியான காரணம் அவர்களின் மிகச்சிறந்த அடிமைகள் ஒவ்வொரு இந்தியனும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 1947 க்கு முன் இந்தியா வெள்ளையனிடம் உள்நாட்டிலேயே அடிமைப்பட்டு கிடந்தது. ஆனால் இன்று அவன் அவன் நாட்டில் இருந்து கொண்டே நம்மை அடிமையாக்கி வைத்துள்ளான். அமெரிக்கன் தரும் மிகக்குறைந்த சம்பளத்தில் இங்கு எத்தனையோ இந்தியர்கள் வேலை செய்து கொண்டிருகிறார்கள். அழகி பட்டம், பிடித்த நாடு, திரைபடத்திற்கு விருது இவைபோன்ற அனைத்தும் நம்மை அடிமையாக்கி வைப்பதற்கும் அவன் தொழிலை இந்தியாவில் நடத்தவும் மட்டுமே. அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு இந்தியா என்பதை படித்து பெருமை பட ஒன்றுமே இல்லை.
09-மார்-2013 11:00:45 IST
Mr. ராஜா GPS கருவி வெறும் கட்சி அமைப்பு மட்டும் இல்லை ஒலி அறிவிப்பும் சேர்த்து தான். இந்த மாதிரி GPS tem பெங்களூரில் பல வருடமாக இயங்கி வருகிறது.
01-மார்-2013 10:55:06 IST
இவங்கல பாத்தீங்களா? இந்தியாவ எப்படி முன்னுக்கு கொண்டு வரலாம்னு யோசிச்சுக்கிட்டே 1947 ல ஆழ்ந்து தூங்க ஆரம்பிச்சாங்க இன்னும் தூங்கிட்டு இருக்காங்க. அப்படினா இவங்க இந்தியா மேல எவ்வளோ அக்கறை வெச்சு இருக்காங்கனு நீங்களே பாத்துக்கங்க.
01-பிப்-2013 17:33:34 IST
படிக்காத சாதாரண பாமரனிடம் இன்றைக்கு இருக்கும் துடிப்பும், வேகமும், மனிதாபிமானமும் இன்றைய அரசியல் தலைவர்களிடம் இருப்பதேயில்லை. அரசியல் என்பதே எதையும் எதிர் பார்க்காமல் தேசத்தை காப்பாற்றவும், முன்னேற்றவும் மட்டுமே. ஆனால் இன்று ஒட்டு மொத்த தேசமே குடிபோதையில் தன்னை தானே அழித்து கொண்டிருக்கும் போது பூரண மது விலக்கை கொண்டு வருவதில் என்ன கேடு வந்து விட்டதென்றே தெரியவில்லை. பள்ளிக்கூடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் இணையானதொன்றாக இன்று மதுக்கடைகள் பெருகிவிட்டது. மக்கள் தவறான வழியில் செல்வதற்கு என்னவெல்லாம் சந்தர்பத்தையும், வாய்ப்பையும் உருவாக்க முடியுமோ அதையெல்லாம் என்றோ இந்த இந்திய அரசாங்கம் செய்து முடித்து விட்டது. குழந்தை பசிக்காக பலமணிநேரம் அம்மாவை பார்த்து அழுவதற்கும், தன் தேவைக்காக மக்கள் அரசிடம் கெஞ்சுவதர்க்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. மக்கள் எதிரெதிர் திசையில் நிற்பதாலேயே வேண்டியதை கேட்டு பெற முடிவதில்லை. மக்கள் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்து எதிர்ப்பை காட்டினால் அரசாங்கம் மது கடைகளை மூடியே தீர வேண்டும். இந்த கருத்தை படித்து கொண்டிருப்பவர்களில் உங்களில் எத்தனை பேர் போதை பழக்கம் உள்ளவர்கள் என்று உங்களுக்கே தெரியும். வருங்கால இந்தியாவில் உங்கள் மகனும், மகளும் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து கொண்டாவது இந்த கருமத்தை உடனே விட்டொழியுங்கள்.
மதுகடைகளை ஒழிக்க இரண்டே வழி. ஒன்று அதை இழுத்து மூட எதிர்ப்பை காட்டவும் அல்லது மது கடை பக்கம் போவதை குறைத்து அதை நஷ்டத்திற்கு கொண்டு போக வேண்டும்.
"மக்களால் தான், மக்களுக்காகதான் மத்திய அரசும், மாநில அரசும்". - ஜெய்ஹிந்த்.
29-டிச-2012 17:43:10 IST
ஒரு மாநிலத்தில் என்ன பிரச்சினை என்று கேட்பதற்கு 10 நிமிடம் முட்டாள் தனமான ஒன்றாகவே தெரிகிறது. பார்லிமென்டில் மட்டும் வார கணக்கில் கூட்டம் போட்டு பேசும் போது, தேசிய வளர்ச்சி கூட்டத்தில் மட்டும் ஏன் இப்படி? மாநிலங்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதே மத்திய அரசின் கடமை. அதற்கு தான் மக்கள் 5 வருடத்திற்கு ஒரு முறை வாக்களிக்கிறோம். தமிழக முதல்வர் வெளி நடப்பு செய்ததில் 1% கூட தவறே இல்லை. தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை மட்டும் வைத்து கொண்டு முதல்வர் வெளி நடப்பு செய்ததற்கு குறை கூறுவது கொஞ்சமும் சரி இல்லை. நாம் தான் வாக்களித்து முதல்வராக தேர்ந்தெடுத்தோம். அவரின் சில செயல்களில் இருக்கும் நியாயத்தை நாம் ஆதரிக்கவே செய்ய வேண்டும். கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எது செய்தாலும் எதிர் கட்சி தலைவர்களை போல் குற்றம் சொல்வது, மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விடும். இது ஒன்றும் திரைப்படம் இல்லை, 5 நிமிடத்தில் அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட. 10 நிமிடம் பேசுவற்கு, கோரிக்கைகளை புத்தகமாக அச்சடித்து கூரியரில் அனுப்பி வைத்து விட்டு வேறு வேலையை பார்க்கலாமே? சில நேரங்களில் நம் கண்டிப்பு தன்மையை காட்டினால் மட்டுமே பருப்பு வேகும். சென்ற ஆட்சியில் சட்ட சபைக்கும் செல்லாமல், கூடத்திற்கும் செல்லாமல், சினிமா விழாக்களுக்கும், பட்டி மன்றகளுக்கும் சென்று பொழுதை கழித்து விட்டவர்கள் மட்டும் சாதித்தது என்ன? விமர்சனத்திற்கு ஆளாகாதவர்கள் இந்த உலகில் யாருமே கிடையாது. மின்சாரமும், தண்ணீரும் இருந்து விட்டால் போதும் நம் பாதி தேவைகள் தீர்ந்து விடும். இனி வரும் காலங்களிலாவது நல்லதே நடக்கும் என நம்புவோம்.
28-டிச-2012 21:02:22 IST
தவறு செய்ய மிக சரியான வாய்ப்பை அளித்து விட்டு பிறகு ஊர் அறிய, நாடு அறிய தண்டனை தருவதே இந்த அரசுக்கு வாடிக்கை ஆகி விட்டது. கண்டிப்புடன் அரசாங்கத்தை நடத்துவதால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ந்து விட முடியாது. ஆளுங்கட்சியின் மீது மக்கள் மேலும் மேலும் அதிருப்தி அடையவதற்கு இந்த மாதிரியான ஊழல், குளறுபடிகள், பொறுப்பற்ற அதிகாரிகளின் மெத்தனப்போக்குகளே காரணமாக அமைந்து விடுகிறது.
26-டிச-2012 10:52:10 IST
மின்சார தட்டு பாட்டுக்கு முக்கியமான காரணமே தொழிற்சாலைகளில் உபயோகபடுத்தும் அளவுக்கு அதிகமான மின்சாரமும், திருட்டு தனமாக மின்சாரத்தை உபயோகித்தது, அரசியல்வாதிகள் மின் ஒளியில் நடத்திய பொது கூட்டங்கள் என அளவுக்கு மீறி உபயோகபடுதியதன் விளைவு இன்று பணக்காரர்கள், நடுத்தர குடும்பங்கள், ஏழைகள் என அனைவரும் கஷ்டப்பட வேண்டிய நிலைமை உண்டாகி உள்ளது. பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வைத்து எப்போதும் அரசாங்கத்தை குறை கூறி கொண்டு இருக்காமல் பொது மக்களும் நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே எதிர்காலத்திலாவது இந்த மின் தட்டுபாட்டு கொடுமையை தவிர்க்க முடியும். தமிழ் நாட்டை மற்ற மாநிலங்களின் முன் கேலி கூத்து ஆகாமல் மக்களை அதிருப்தி அடைய வைக்காமல் நடத்தும் அரசாங்கமே நிலைத்து இருக்க முடியும் என்பதை புரிந்து கொண்டால் சரி.
26-அக்-2012 22:51:44 IST