வன்முறையில் ஈடுபடும் அனைவருக்கும் இதே தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவேண்டும். இந்த வியாபார பெற நிறுவனக்காரர்களின் தாக்குதலால் பேருந்தில் பயணம் செய்தவர் இறந்து விட்டார். இந்த உயிரின் மதிப்பு தெரியாத மடையர்களின் முன்னால் அவர்களின் குடும்பத்தாரை நிறுத்தி கல்லால் அவர்களை விட்டே அடிக்க சொல்லவேண்டும். அப்போது தெரியும் அவன் வீட்ல உள்ளதெல்லாம் உயிர்...மற்றவெனெல்லாம் ...... இந்த கயவர்களை 3 வருடம் வெளிவர முடியாமல் தடுக்க வேண்டும். இவர்கள் வன்முறையில் மேலும் ஈடுபட்டால் தமிழக அரசு,பா.ம.க. வியாபார பேர நிறுவனத்தை உடனே கலைக்க அல்லது தடை செய்யப்பட்ட (சந்தர்ப்பவாத வியாபார பேர அரசியல் நிறுவனத்தை) நிறுனமாக சட்ட ரீதியாக அறிவிக்கவேண்டும். இவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்ப்படுகிறது என்ற கருத்தை வலியுறுத்தி ஒரு பொது மக்களுக்காவது இவர்களால் தீங்கு ஏற்ப்பட்டால் இதை செய்யவேண்டும். இது நடந்தால் இது எதிர்காலத்தில் மிக பெரிய வரலாற்று பதிவாக அமையும், இதை இன்றைய தமிழக முதல்வர் அவர்களால் மட்டுமே செய்யமுடியும். எதிர்காலத்தில் ஜாதிகட்சிகளே இல்லாமல் போய்விடும்,
11-மே-2013 10:41:34 IST
காலம் கடந்து செய்யும் எச்செயலும் இப்படித்தான், ஆனாலும் பா.ம.க. என்ற ஒரு நிறுவனம் எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்கள் உணர்கிறார்கள், கடந்த காலங்களைப்போல் அல்ல இப்போது, மீடியாக்களின் உதவியால் சிறு கிராமங்களின் பிரட்சனைகூட இப்போது வெட்ட வெளிச்சமாக்கி காட்டப்படுகிறது. எனவே மக்கள் இப்போது நடப்பவைகளை நன்கு அறிவர், பா.ம.க. என்ன நாடகமாடினாலும், அது இழந்த பெர்ம்பான்மையை பெறப்போவதில்லை, எனவே பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்காமல் பா.ம.க. நிறுவனத்தின் உரிமையாளர் அதன் அதன் கிளை நிருவனகளை கட்டுப்படுத்தவேண்டும். அரசின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை சோதித்து பார்க்க நினைக்கும் நேரமல்ல இது. உடல் முழுக்க வியாதியை சுமக்கும் நிறுவனரும், அவரின் மகனும் சற்று சிந்திக்க வேண்டும்.
08-மே-2013 11:11:34 IST
தயவு செய்து இத்திட்டத்திற்கு எதிராக கருத்து கூறும் நண்பர்கள் சற்று சிந்திக்கவும். இத்திட்டம் நிச்சயம் அனைவருக்கும் நன்மை பயக்கும். தொலைதூர பயணிகளுக்கு மட்டுமே இதன் வேதனை புரியும். சுகாதாரமற்ற உணவு, அவர்கள் நிர்ணயிக்கும் விலை, இவை அனைத்தும் ரொம்பவே மோசம். அம்மாவின் இத்திட்டம் கடைசிவரை நன்றாக செயல்படுமேயானால், இது அரசின் சாதனை திட்டம் என்பதில் ஐயமில்லை.
06-மே-2013 10:31:05 IST
அரசின் அஜாகிரத்தை. ராமதாஸ் எப்போது அனைத்து சாதி கூட்டம் என்ற பெயரில் கூட்டம் கூட்ட தொடங்கினாரோ அப்போதே அவரை கைது செய்திருக்க வேண்டும். மதுரை கலெக்டர் அவரை மதுரைக்குள் விட அனுமதிகாதபோதே ராமதாஸ் தண்டிக்கப்பட்டிருந்தால் இந்நிலை வரபோவதில்லை. பா.ம. க. வை உடனே, தேடும் இயக்கமாக அறிவிக்க வேண்டும். பொது சொத்துக்களுக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் ஊரு விளைவிக்கும் இவர்களுக்கு வெளியிலிருந்து நிதி வருகிறதோ? இதுபோன்ற கலவரத்தை தூண்டிவிடும்படி, அந்நிய நாட்டின் கைபாவையோ என சந்தேகிக்க தோன்றுகிறது. இப்படி இவர்களை விட்டுவிட்டால் பின்னால் மற்றவரும் இவரை பார்த்து இதே நிலையை கையிலெடுப்பார்கள்.
02-மே-2013 17:15:13 IST
ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களுக்கு முறையான 5 அல்லது 10 நாட்களுக்கு அரசு பயிற்சி அளித்து அவர்களுக்கு லைசன்சு வழங்கப்படவேண்டும். அவர்களால் மட்டுமே ஆழ்துளை கிணறு தோண்டப்பட வேண்டும். பயிற்சியின்போது ஆழ்துளை கிணறு தோண்டி மீதப்பணியோடு நிறுத்தும்போது 4 அடி சுற்றளவு அல்லது கிணறுக்கு ஏற்ப பலகை அல்லது இரும்பினாலான மூடி அமைக்கப்படவேண்டும் அதை சுற்றி முள் அல்லது அதை நெருங்காதவாறு தடுப்பு போடப்படவேண்டும். இப்பணி சாதாரண படிப்பரிவில்லாதவர்கலாலேயே பெரும்பாலும் செய்யப்படுவதால் விழிப்புணர்வு இருக்கப்போவதில்லை, அரசாங்கம் இதுபோன்று பதிவு அடிப்படையில் இப்பணி நடக்க ஆவன செய்யவேண்டும், இப்படி முறையான பயிற்சி மற்றும் லைசென்சு இல்லாமல் இப்பணி செய்வோருக்கு 6 மாத தண்டனை (ஜாமீன் இல்லாத) வழங்கப்படவேண்டும். இப்பணியின்போது லைசென்சு பெற்ற யாரவது ஒருவர் பணிமுடியும்வரை கூட இருந்தாலே போதுமானது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அவரே முழு பொறுப்பும் அவரே ஏற்க்கவேண்டும். இது ஒன்றே நிரந்தர தீர்வு. ஆண்டுக்கு இரண்டு அல்லது 3 முறை இந்நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது, இதை நேரலையாக ஒளிபரப்பும் தொலைகாட்சிகள் பொது நல நோக்கோடு இதை தடுக்கும் வழியை விளம்பரமாக ஒளிபரப்பவேண்டும்.
28-ஏப்-2013 10:10:57 IST
இந்தியாவில் பல எண்ணற்ற ஜாதி சங்கங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் இவரைபோல் தன சொந்த அரசியல் ஆதாயத்துக்காக "ஜாதியை" கையில் எடுக்கவில்லை. மேலும் இவர் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்து தன மகன் செல்வாக்கான பதவியில் இருந்தபோது ஏன் இதை வலியுறுத்தவில்லை. அப்போது திருமா வளவனுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு நம்மை ஏமாற்றிய இந்த ராமதாஸ் இப்போது தன கட்சி அங்கீகாரத்தை இழந்துவிட்டது என்பதை அறிந்து நம்மிடம் அரசியல் நாடகமாடுகிறார், தமிழக அரசு இவரது சங்கத்தை தடை செய்யப்பட இயக்கமாக அறிவிக்க வேண்டும், தீவிரவாதிகள் ஒரு இடத்தில்தான் பாம் வைப்பார்கள் ஆனால் இந்த ராமதாசின் செயலால் தமிழகத்தில் எதிர்காலத்தில் மிகபெரிய கலவரம் உருவாகுமோ என்ற அச்சம் ஏற்ப்படுகிறது. இவர் தீவிரவதிகளைவிட மேலும் கொடூரமானவர், எனவே கட்சி என்ற போர்வையில் பதுங்கி இருக்கும் தீவிரவாதியாகவே இவர் தெரிகிறார். எனவே தமிழக அரசு எதிர்கால நலன் கருதி இவரை கைது செய்ய வேண்டும். இவரது கட்சி மற்றும் சங்கத்தை தடை செய்யப்பட இயக்கமாக அறிவிக்க வேண்டும். இந்திய உலக அரங்கில் பல சவாலான எதிர்ப்புகளை சந்தித்து வரும் வேளையில் நமக்கு இந்தியர் என்ற ஒற்றுமைதான் வேண்டும். எனவே இந்தியாவில் பிரிவினையை உண்டு பண்ணும் இவரை இந்தியாவை விட்டு நாடு கடத்தவேண்டும். இவராலும், இவர்க்கு எதிரானவர்களாலும் பொது மக்களுக்கு எதிர்காலத்தில் பேராபத்துகள் ஏற்படும்.
27-ஏப்-2013 10:28:26 IST
வருத்தமளிக்கிறது...இவர்கள் படும் கஷ்டங்களை நீங்கள் கூறியுள்ள விதம் நன்று. இவர்களை வலி நடத்த இவர்களுக்கு தனியான ஒரு அமைப்பு தேவை. சில பொது இடங்களில் இவர்களில் சிலர் செய்யும் விசமங்கள் நமக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. ரயில், கடைதெருக்கள் போன்ற இடங்களில் இவர்களில் சிலர் தவறாகவும் நடந்து கொள்கின்றனர். எனவே இவர்களை ஒருங்கிணைத்து இவர்களை நல்வழிப்படுத்த ஒரு நல்ல அமைப்பு தேவை. இது இந்த உங்கள் கட்டுரையின் மூலமாகவும், தினமலரின் மூலமாகவும் உலகுக்கு தெரியட்டும்.
21-ஏப்-2013 10:27:23 IST
கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் இதுதான் நடக்கிறது எதாவது பெரிய அரசியல் கட்சியில் இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர், இவர் வீட்டில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர் ஆனால் அதில் யாரவது தண்டிக்கப்பட்டு இருப்பார்களா? ஒருபோதும் இருக்காது 6 பேரை காட்டி அவர்களை பின் ஜாமீனிலும் எடுத்திருப்பார்கள். இதற்க்கு எப்பொழுது விடிவு காலம். எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் துப்பாக்கி வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுமோ? இல்லையென்றால் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது.
06-ஏப்-2013 11:19:22 IST
ஒரு ஏழை குடும்பம் ( 6 பேர் அடங்கிய ) 2 வருட சாப்பாட்டு செலவு... இவங்களால் எப்படிப்பா ஏழைகளுக்கு உதவ முடியும். காமராஜரை நினைத்து பாருங்கள்.
04-ஏப்-2013 10:11:18 IST
கேரளா கொலைவழக்கை பெரிதுபடுத்துகிறார்கள், தமிழ் மீனவர்களை கொல்லும் இலங்கைக்கு எதிராக வாயை திறக்கவில்லை பிரதமர் என்று கூறும் நண்பர்களே... கேரளாவில் இரண்டு பேரை மட்டும்தான் கொன்றார்கள். ஆனால் கேரளாவின்,முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், மற்ற கேரளா கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு டெல்லி சென்றது... தமிழ் நாட்டில் உண்மையான மக்கள் தலைவன் எவன் இருக்கான். கடைசி தலைவன் எம்.ஜி.யாரோடு முடிந்துவிட்டது. இப்போதுள்ள தலைவர்கள், பெண்ணுக்கு வளைகாப்பு போடா பத்திரிக்கை கொடுக்கவும், மகனின் வேலை சிபாரிசுக்கும், போவார்கள் டெல்லிக்கு, மக்கள் பிரச்சனை என்றால் தபால் போடுவார்கள். தபால் துறையே அரசு போடும் கடிதங்களினல்தான் இயங்கிகொண்டு இருக்கிறது...
14-மார்-2013 10:24:14 IST