இங்கு பல பேர் இப்படி கூட்டணி அமையும் , அப்படி கூட்டணி அமையும் என்று தங்களது கற்பனை குதிரைகளை கட்டவிழ்த்து விடலாம்.. ஆனால் ஓன்று , மதிமுக கட்சி , திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி சேராது.. திமுக , அதிமுகவிற்கு மாற்று மதிமுக தான் என்று வைகோ நாகர்கோவிலில் அறிவித்து விட்டார்,. அதையே தான் இதற்கு முன்பும் சொன்னார் , இப்போதும் சொல்லி வருகிறார்.. ஆகவே வரும் தேர்தலில் மதிமுக கட்சி பலம் பொருந்திய சில தொகுதிகளில் மதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தோ , தனித்தோ தேர்தலில் நிற்கும்.. கண்டபடி உண்மைக்கு புறம்பாக கருத்து கூறி நேர்மையான , ஊழல் கரை படியாத மனிதரை கொச்சை படுத்த வேண்டாமே :) மனசாட்சியுடன் கருத்தினை கூறுங்கள் தோழர்களே :) நேர்மையே வெல்லும்... நன்றி...
23-மே-2013 00:54:16 IST
அன்று - தமிழகத்துக்கு மேலும் தண்ணீர் திறந்து விட முடியாது - முன்னாள் கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷெட்டர் (பிஜேபி).
இன்று - இந்த ஆண்டு நல்ல மழை பெய்தாலும், தமிழ்நாட்டுக்கு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் - கர்நாடக முதல்வர் சித்தராமையா (காங்கிரஸ்).
இங்கே - வராத காவிரி தண்ணீருக்கு 50 கோடி செலவில் விழா எடுத்து ஜெ-வுக்கு ''பொன்னியின் செல்வி " சிலை அன்பளிப்பு. (அதிமுக)... என்ன கொடுமை... இப்போ எழுதுற கடிதத்துக்கும் ஏன் நீங்க ஒரு விழா எடுக்க கூடாது ???
22-மே-2013 12:12:58 IST
இன்று தினமலர் செய்தி நியாயமானது தான்.. நேற்று தினமணியில் ஒரு தலையங்கம்.. மின்மிகை மாநிலமாக மாறிவரும் தமிழகம் என்ற தலைப்பில்.. யாரோ ஒரு அதிமுக அடிவருடி எழுதியிருப்பார் போல.... ஒரே சிரிப்பாக தான் இருந்தது.. தேர்தல் வரும் போது ஒரு மாதத்திற்கு பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து மின்சாரத்தினை கடன் பெற்று மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்று ஒரு மாயையை உருவாக்கி விடுவார்கள்.. வழக்கம்போல ஏமாந்து வரும் தமிழக மக்களும் மீண்டும் ஏமாந்து ஓட்டினை போடுவார்கள்.. பிறகு தான் தெரியும் நமது முதுகில் அவர்கள் குத்தியது.. ஏமாந்து ஏமாந்து அலுத்து போய் விட்டது... 2013 அல்ல , 2014 கடைசியில் கூட மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு மாற வாய்ப்பில்லை.. வேண்டுமானால் எழுதி வைத்து கொள்ளுங்கள்.. துரித நடவடிக்கை எடுத்தால் 2015 ஆண்டு வேண்டுமானால் ஓரளவுக்கு மேல் தன்னிறைவு அடைய முடியும்.. இது தான் உண்மை.. முன்னால் திமுகாவும் , தற்போதைய அதிமுக அரசின் சோம்பேறித்தனமும் ஆக இவர்கள் இருவரின் நடவடிக்கையே மின்வெட்டிற்கு முக்கிய காரணம்.. மக்களே மறந்து விடாதீர்கள்..
22-மே-2013 09:02:07 IST
திரும்பவும் கடிதமா ??? இன்னும் எத்தன தடவை கடிதம் எழுதினாலும் பதில் வராது என்று தெரிந்து தான் மீண்டும் மீண்டும் கடிதம் எழுதுறாரோ ??? ஏன் இந்த முக்கியமான பிரச்சினைக்கு டெல்லி சென்று நேரில் பிரதமரை பார்த்து கோரிக்கை வைக்க கூடாது ??? பிற மாநில முதல்வரை பாருங்கள், தன் மக்களுக்கு எந்த பிரச்சினையானாலும் உடனே டெல்லி பயணம் தான்.. நமக்கும் தாம் வாய்த்து உள்ளார்களே :P முன்னாள் முதல்வர் குடும்ப சுயநலவாதி , இந்நாள் முதல்வர் கட்சி சுயநலம் கொண்ட மெத்தனவாதி... :P தமிழ் நாட்டு மக்களின் மீது இருவருக்குமே அக்கறை இல்லை.. பிரச்சினைகளை வழ வழ கொழ கொழ என்று ஜவ்வாக இழுத்து அதில் அரசியல் செய்திலையே இருவரும் குறியாக உள்ளனர்.. வெட்ககேடு... இந்திய அரசியலமைப்பு அதைவிட கொடுமை.. 2008ம் ஆண்டு ரிட் மனு தாக்கல் இன்னும் பதில் இல்லை :( பல வருசமாக நடைபெறும் சொத்து குவிப்பு வழக்குகே இன்னும் நீதி கிடைக்கல என்கிறீர்களா ?? நியாயம் தான்.. :) அரசியல்வியாதிகளுக்கு சாதகமாக இருக்கும் அரசியல் சட்டத்தை முதலில் மாத்தனும்.. அப்போதான் இதற்கெல்லாம் விரைவில் ஒரு முடிவு வரும்..
22-மே-2013 08:47:11 IST
சப்பா முடியல... கருணா இருந்தாலும் ரொம்ப ஓவரா தான்யா பீல் பன்றாரு.. :P கடந்த ஆட்சியில் பிரபாகன் படத்தினை , பேனர், போஸ்டரை எல்லாம் காவல் துறையை விட்டு ஓட ஓட கிழித்து எரிந்தது இவரே தான்... ஜெயாவும் அதே தான் செய்யிறார்.. இல்லை என்று சொல்லல.. இவங்க ரெண்டு பேரும் ஒருகொருவர் சளைத்தவர்கள் அல்ல... கருணாநிதி வெட்டி கட்டிய ஜெயலலிதா , ஜெயலலிதா சேலை கட்டிய கருணாநிதி.. நடுவில் பொது மக்களாகிய நாங்கள் படுகிறபாடு இருக்கே சொல்லி மாளாது.. அப்புறபடுத்த வேண்டும் இந்த குப்பைகளை.. :P
22-மே-2013 08:23:53 IST
முடிந்தால் IPL யை தடை செய்யுங்கள்.. இல்லையேல் குறைந்த பட்சம் சூது விளையாடுவதையாவது தடை செய்யுங்கள்.. நேற்று நடந்த சென்னை - பெங்களுர் அணிகள் விளையாடியது பெருத்த சந்தேகத்தை தான் கிளப்பி உள்ளது..
19-மே-2013 04:51:23 IST