நிச்சயம் பரத் ரத்னா விருதை வாங்குவார் 'சச்சினின் ரெகார்டை தாண்டியவுடன் ? கென்டகிலே கிரிக்கெட் எஜமான் விளையாட்டு, இங்கிலாந்து பொறுத்தவரை. ஆனால் இந்த விளையாட்டு அடிமை நாடாக இருந்த காலத்தில் இந்தியாவுக்கு வந்தது.. பிரெஞ்சு காரனுக்கு அடிமைப்பட்டிருந்தால் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு நமக்கு கிடைத்திருக்காது. கிரிக்கெட் மூலம் இங்கிலாந்து நம் மீது இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறதே? ஒலிம்பிக் தங்கம் நாம் நினைத்து கூட பார்க்கமுடியாது, இந்த கிரிக்கெட் மோகம் உள்ளவரை?
26-ஏப்-2018 15:20:23 IST
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆயுள் முழுவதும் சம்பாதிக்கு ம் வருமானம் IPL சீசனில் விளையாடும்
வெளிநாட்டுக்காரன் தட்டிக்கொண்டு போகிறானே இதை தடுக்க ,யாருமே முன்வரவில்லையே?
இந்த கேடுகெட்ட விளையாட்டை கண்டுபிடித்த லலித் மோடி எங்கே/?
வழக்கை ஆண்டு கணக்கில் தள்ளிப்போட யார் காரணம்? நீதிபதிகளை வெளியிலிருந்து இயக்கம் சக்தி எது?
நீதிபதிகள் நேர்மையாக நடந்துகொண்டால் மட்டுமே இந்தியாவின் சுதந்தரத்தை மட்டுமல்ல ஜனநாயகத்தையும் காப்பாற்ற முடியும்.....சொத்து குவிப்புவழக்கில் தீர்ப்பு தள்ளிபோனதற்கு யார் காரணம் என்ற உண்மை மட்டும் வெளிவந்தா1ல் போதும். அரசியலில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டுவிடும். பிரிட்டிஷ் ஆட்சியில் போடப்பட்ட சட்டங்களை நாம் மாற்ற தயங்குகிறோம்.ஆனால் தீர்ப்பு விழயத்தில் நீதி தள்ளாடுகிறது என்பது மறுக்க முடியாது
08-ஏப்-2018 19:50:59 IST
மணி மண்டபத்தில் குன்ஹா தீர்ப்பும் பார்ப்பன அக்ராஹார சிறை வாழ்க்கை படமும் இடம்பெறுவது எதிர்கால சந்ததியினருக்கு ஆட்சி அதிகாரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த கூடாது என்பது பாடமாக அமையும். வரலாறு மறக்காமல் இருக்க நிச்சயம் இந்த மணி மண்டபம் எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.. மாண்டவர் புகழ் பாடி ஆளும் ஆட்சி மாறும் போது காட்சியும் மாறும் .. எல்லாம் வல்ல இறைவன் தண்டனையிலிருந்து பொதுமக்களுக்கு சேவை செய்வதாக வேழம் போடும் ஊழல் அரசியல் தலைகள் தண்டனையிலிருந்து தப்பலாம் ,ஆனால் வரலாறு? உலகமே போற்றும் வண்ணம் சேவை செய்து புனிதர் என போற்றப்பட்ட அன்னை தெரசா வாழ்ந்தது இந்தியாவில் .
16-மார்ச்-2018 15:30:05 IST
மும்பை, குஜராத் தவிர இதர வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ் நாடு மிக வளம் பொருந்தியதாகவே உள்ளது. தொழிற்சாலைகள் உயர் கல்வி, வர்த்தக மையங்கள் வியாபார சந்தை இயற்கை வளம் அனைத்தும் ஒருங்கே வளர்ந்துள்ள மாநிலம் தமிழ் நாடு. வளர்ச்சிக்கு ஒரு காரணம் இங்கே கடந்த ஐம்பது ஆண்டுகளாக பொருளாதாரம் பெருகியுள்ளதே.ஊழலும் லஞ்சமும் தாராளமாக இருப்பதால் இங்கே பண புழக்கமும் அதிகம். நகை கடைகள் ,மால்கள், ஹோட்டல்கள், பங்களாக்கள் பல மாடி குடியிருப்புகள்,தெருவில் நிறுத்திவைக்கப்படும் ப்ளாட்பாரம் கார்கள் மீடியாக்கள் , தொழில் கூடங்கள், என பல்லாயிரம் கோடிகள் புரள்வது இங்கே.தான். .இயற்கை வளங்களுக்கும் குறைவில்லை...கடந்த அரை நூற்ராண்டுகளாக ஆட்சிக்கு வருபவர்கள் மக்கள் நலனைவிட ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள என்னென்ன இனாம் கொடுக்கலாம் என்பதை சிந்திக்கிறார்களே தவிர வரிகள் மூலம் நிதி ஆதாரங்களை பெருக்கவும், மக்கள் நல திட்டங்களை செயல் படுத்தவும் முயலவே இல்லை. ஆட்சி அதிகாரத்தில் அமரும் அரசியல் தலைவர்கள் அதிகாரிகளை மிரட்டி பணியவைத்து கோடி கோடியாக லஞ்சம் வாங்குவதை மட்டும் நன்றாக கவனமாக முனைப்புடன் செய்ய தவறுவதில்லை... சட்ட சபை என்பது சட்டங்கள் போட, நிதி அரசு நிர்வாகம் திறம்பட செய்ய,செலவினங்களை கண்காணிக்க மக்கள் பிரதிநிதிகள் கோலோச்சும் இடம்.. மேஜையை தட்டவும் தனி நபர் புகழ் பாடவும் அல்ல. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வாக்குப்படி தமிழ் நாட்டில் இருப்பது கிலோ அரிசியை குடும்ப கார்டுதாரர்களுக்கு வழங்குவது சாதனை வரவேற்க தக்கது. ஆனால் இந்த அரிசியை வாங்கும் சக்தி இல்லாத ஏழை மக்களுக்கு கொடுத்தால் .நல்லாட்சி எனலாம் ..வருமான வரி கட்டுபவனும் கார், பங்களா ,என செல்வந்தர்களும் கூட பிச்சைக்காரனை போல் அரிசியை ஓசியில் அள்ளும் அவலத்தை ஏன் அரசு தடுத்து நிறுத்த கூடாது.? வேலைக்கு செல்லும் மகளிருக்கு இருபத்தைய்யாயிரம் மானியம் ஸ்கூட்டருக்கு கொடுக்கும் போது அவர்களுடைய குடும்ப அட்டையை ஏன் (என்) கார்டாக மாற்ற கூடாது? சிஸ்டம் சரி இல்லை. சட்டம் போட துப்பில்லை.. 1919 இல் போட்ட சென்னை மாநகராட்சி சட்டமும் (பெருநகர என்பது செல்லாது மாற்றம் செய்து சட்டம் இயற்றாததால்) 1920 நகராட்சி சட்டமும் வெள்ளைக்காரன் போட்டது . புதியதாக இன்றுள்ள நிலைக்கேற்ப மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிதி ஆதாரத்தை பெருக்கமுடியும். வீட்டு சொத்து வரி இருபது வருடத்துக்கு முன் போட்டது. இன்றுள்ள நிலையில் வாடகை மதிப்பு பன் மடங்கு உயர்ந்து விட்டது. . உதாரணமாக ஒரு கோடி மதிப்புள்ள சொத்துக்கு ஆயிரம் ரூபாய் வருடத்துக்கு வரி என்றால் கூட நகரங்களில் நிதி தேவை உபரியாகிவிடும்...மனித இனம் பிறப்பது ஒருமுறை தான் . அனைவருமே என்றாவது ஒருநாள் சாவது மட்டும் நிச்சயம். ஜன நாயக நாட்டில் .ஒருவருக்கு ஒரு ஓட்டு. எல்லோரும் சமம்.. அனைத்து மக்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத்தருவதோடு, இயலாதவர்களுக்கும் வாழ்வளிக்கவே ஆட்சி பொறுப்பில் மக்கள் பிரதிநிதிகள் ,மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள்,நீ திபதிகள்,
15-மார்ச்-2018 20:18:39 IST
கொலை,கொள்ளை, போன்ற கடும் குற்றங்களை போன்றதல்ல ஹெல்மெட் அணியாததும் , ஸீட் பெல்ட் போடாததும் . . வாகன ஓட்டிகளின் உயிரை இவைகள் அப்படியே காப்பாற்றப்போவதில்லை..இந்த சட்டங்கள் போலீஸ் பணம் பறிக்க ஒரு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் வர பிரசாதம் . ஐம்பதோ நூறோ வாகன ஓட்டிகளிடம் வசூலிக்க ஒரு எளிய வழி இதுதான்..இதுபோன்ற சட்டங்கள் குற்றங்களை தடுக்க அல்ல. போலீஸ் பணம் பண்ணத்தான் ..ஹெல்மெட் இருந்தாலும் கனரக வாகனத்தில் அடிபடும் போது உயிர் பிழைக்க போவதில்லை.சாவு எந்த நேரத்திலும் வரலாம் என்பதை அறிந்தே தான் இருசக்கர வாகன ஓட்டிகள் ரோட்டிற்கு வருகின்றனர்.காரில் பயணம் செய்ப்பவர்கள் நெடும் சாலைகளில் வெகு வேகமாக செல்லும்போது ஸீட் பெல்ட் அணிவது மேலை நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இதை அணியாமல் நெரிசல் மிக்க பகுதிகளில் மெதுவாக வாகனம் ஓட்டினால் எந்த வித ஆபத்துமில்லை.சட்டம் போட மசோதா தயாரிக்கும் போது அதில் நோக்க காரிய காரண விளக்கம் கடைசியில் குறிப்பிடப்படும். இந்த நோக்கம் நெடும் சாலைகளுக்கு மட்டுந்தான் என்றிருக்கும்..சட்ட வந்தபின் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வாகனங்கள் ஓட்டிகளை நகர சாலைகளில் மெதுவாக செல்லும் போது அணிய வேண்டும் என்று கேஸ் போட படுகிறது. இதுவும் தேவையற்றதுதான். விமானத்தில் பறக்கும் பொது டேக் ஆப் செய்ய ஏற்படும் குலுங்களுக்கு ஸீட் பெல்ட் புதிதாக செல்பவர்கள் போட்டுக்கொள்வார்கள். அடிக்கடி செல்பவர்களுக்கு இல்லாமல் பழகிவிடும். அதுபோலத்தான் காருக்கும் ஸீட் பெல்ட். நெரிசல் உள்ள இடங்களில், தேவையே இல்லை..வெகு சுலபமாக போலீஸ் பணம் பண்ணும் வழிகளை அடைக்க அரசால் சட்டம் இயற்ற முடியும் .ஆனால் செய்யமாட்டார்கள். பிரிட்டிஷ் காரனுக்கு போலீஸ் தேவைப்பட்டது போல் இன்றுள்ள ஆட்சியாளர்களுக்கும் போலீஸ் உதவி, தயவு எப்போதும் தேவைப்படுவதால்.. இன்றைய பண பரிவத்தனைகளுக்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ,அல்லது சொடக் போன்ற கூப்பன்கள் போதும்.அப்படியே போலீஸ் பணம் தேவைப்பட்டால் இருநூறோ அல்லது பத்து ரூபாய் காசுகளோ மட்டும் தான் அவசர தேவைக்கு வைத்துக்கொள்ளலாம் என்று சட்டம் போடட்டும். பணியில் இருக்கும்போது கத்தை கத்தையாக லஞ்சம் வாங்கிய நோட்டுகள் வைத்திருந்தால் அதன் மொத்த மதிப்பில் இருபது பங்கு அதிகமாக முதல் முறை தண்டனையும் அடுத்ததாக இதே மாதிரி கணக்கில் வராத பணம் வைத்திருந்தால் பதவி இரக்கமும் பனி நீக்கமும் செய்ய படுவார்கள் என்று சட்டம் இயற்றினால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும். கடல் இருக்கும்வரை அலை ஓயாது, போலீஸ் காரன் சட்டையில் பைகள் இருக்கும் வரை வாங்கி கொண்டுதான் இருப்பார்கள் , 58 வயது வரை.. சிப்பாய் கலகத்துக்கு பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி போட்ட 1860 இந்திய தண்டனை சட்டத்தினை மாற்ற இன்று வரை நாட்டினை ஆட்சி செய்யும் அரசுக்கோ அல்லது இதனை சுட்டிக்காட்ட நீதி மன்றங்களுக்கோ அக்கறை இல்லையே என்பதை நினைக்கும் பொது இன்னும் இந்தியா முழுமையாக சுதந்திரம் அடைந்ததாக கருத முடியாது .மனிதன் பிறப்பது ஒருமுறை தான். சாவது நிச்சயம் .எவனாக இருந்தாலும்,எந்த உயர் பதவி வகித்தாலும். ஒருவனுக்கு ஒரு ஒட்டு ஜனநாயகம் அளித்த உரிமை.. கேவலம் பணத்துக்காக உயிரை பறிக்கும் போலீஸ்காரனும் என்றாவது ஒரு நாள் சாகத்தான் போகிறான்.
08-மார்ச்-2018 21:21:58 IST
பாரதியார்,சிதம்பரனார்,ராஜாஜி,பெரியார்,பாரதி தாசன்,R வெங்கட்ராமன், RK ஷண்முகம் செட்டியார், VV கிரி,காமராஜர் ,சி..சுப்ரமணியம், அப்துல் கலாம்,,போன்ற எண்ணற்ற மா மனிதர்கள் வாழ்ந்த தமிழ் நாட்டில் 1969 க்கு பின்னர் ஒரு இருண்டு சகாப்தம் ஆரம்பம் ஆனது. அண்ணாவின் மறைவு அதற்க்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அடித்த கொள்ளைகள் இன்றுவரை ஓயவில்லை.ஊழல் அரசியல் மூலம் தமிழ் நாட்டில் அரசியலில் பதவி வகித்தவர்கள் குவித்த சொத்துக்களால் தமிழ் நாடு செழிப்புடன் இருப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. குறுக்கு வழியில் கிடைத்த பல்லாயிரம் கோடிகளை வைத்து கொண்டு நேற்று முளைத்த தியாக தலைவியின் வாரிசு அடிக்கும் கோமாளி கூத்துக்கு அளவே இல்லை. குடித்து கும்மாளம் போடும் கூத்தாடிகளெல்லாம் தமிழ் நாட்டை ஆள நினைப்பது வேதனை.. ஆட்சிக்குவருவதற்கு இனாம் கொடுத்தே பழகிவிட்ட நிலையில் அரசு கொண்டுவந்ததாக உருப்படியான திட்டங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் எதுவுமே இல்லை. காவல் துறையும் நீதி துறையும் உயர் அரசு அதிகாரிகளும் நேர்மையாக செயல்பட்டால் நிச்சயம் நாடு வளம் பெரும் ,ஆனால் செயல்படவில்லையே?காரணம் கட்டுப்படுத்த நேர்மையான துணிவுள்ள, சட்டங்கள் இயற்றும் அறிவுள்ள பொது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசியல் வாதிகளை இதுவரை மக்கள் தேர்ந்தெடுக்காதது தான்?
06-மார்ச்-2018 10:59:46 IST
எம் ஜி ஆர் ,மக்களோடு மக்களாக பழகியதால் "மக்கள் திலகம்" என்று போற்றப்பட்டவர்.புன்னகை மன்னன் .வள்ளல் .இவரது இல்லத்தில் வருபவர்களுக்கெல்லாம் அன்னதானம் பாகுபாடு இல்லாமல் அரசியல் தலைவர்களுடன் பழகியதோடு மட்டுமல்லாமல் சிறு சேமிப்பு போன்ற அரசு பதவிகளிலும் DMK ஆட்சி காலத்தில் இருந்தவர்.கட்சியை விட்டு பிரிந்தபோது அரசியலில் முக்கிய பொறுப்பு வகித்த வர்கள் துணை நின்றனர். 1977 இல் வெற்றிபெற்று ADMK ஆட்சி அமைத்தபோது மூத்திரத்தை தலைவர்களான நாவலர்,,மதியழகன்,நாஞ்சிலார், பண்ருட்டியார் போன்ற முக்கியமான அனுபவ சாலிகளை ஆட்சிபதவிகளில் அமர்த்தி கண்ணியமாக நடந்து கொண்டார்.மேலும் அதிகாரிகளுக்கு மதிப்பளித்து சட்ட விதிகளை மீறாமல் நேர்மையான ஆட்சியை கொடுத்தார்.ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் நேர்மையான ,மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆட்சி என்பதால் தொடர்ந்து தேர்தல் வெற்றிகள் ..யாரையுமே பகைத்து கொள்ளாத பண்பு.எல்ல கோப்புகளும் தமிழில்தான் இருக்கவேண்டுமென்றும் அனைத்தையும் துறைகளும் அமைச்சர்களும் தெரிவிக்கும் பரிந்துரைகளை ஏற்று முடிவெடுக்கும் பண்பாளர் MGR என்ற மா மனிதர். ஆனால் இப்படிப்பட்ட பண்புகளில் ஒரு சிறிதும் இல்லாத உணர்ச்சி வசப்படும் நபர் , ஒரு உதாரணம், ஜெமினி சினிமா போட்டோக்ராபர் படம் எடுத்துவிட்டார் என்பதற்காக கன்னத்தில் அறைந்த செய்தி மறக்கப்படவில்லை..தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது, ஆள மட்டும் ஆசை ? மக்களை திருப்தி படுத்துவது சுலபமல்ல . பல்வேறு பிரச்சினைகள் .அண்டை மாநிலங்கள் பகை .ஆளுக்கொரு கட்சி .சமாளிப்பது எளிதல்ல. புகைப்படம் எடுத்து கொள்ளவே எத்தனை கொடுபிடி?? முதல்வராக வேண்டுமானால் நடிக்கலாம் .நடைமுறையில் கனவு மட்டுமே ? ரசிகர்கள் அனைவரும் மேதைகளாக இருந்தால் ,??? நிச்சயமாக எது நல்லது என்று சிந்திப்பார்கள்.
05-மார்ச்-2018 23:35:51 IST
இலவச திட்டங்கள் செயல்படுத்துவதில் இந்தியாவில் முன்னோடியாக இருப்பது தமிழ் நாடுதான்.. இதுவரை போட்ட இலவச திட்டங்களில் மிக அதிகமான மானியம் ரூபாய் இருபத்தையாயிரம் அதுவும் வேலைக்கு சென்று ஓரளவு நன்றாக சம்பாதிக்கும் மகளிருக்கு மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து அள்ளி கொடுப்பது மிக அருமையான எவர் மூலையிலும் இதுவரை உதிக்காத ஒன்று என்பதை மறுக்கமுடியாது. அன்றாடம் பிழைப்புக்கு அல்லாடும் கோடிக்கணக்கான மக்களுக்குத்தான் ஏற்கனவே இனாம் அரிசி , மிக்ஸி,பேன் கிரைண்டர் என பல பிச்சாத்து திட்டங்கள் இருந்ததால் சம்பாதிக்கும் மகளிர்( நிச்சயமாக ஒரு வேலை சோத்துக்கு வழி இல்லாதவர்களோ அல்லது செலவ
சீமாட்டிகளாகவோ இருக்கமாட்டார்கள்) இந்த திட்டத்தினை கண்டிப்பாக ஆவலுடன் வரவேற்பார்கள்.. போட்டி மிக கடுமையாக இருக்கும். பயனாளிகளை தேர்வு செய்வதில் ஆளும் கட்சிக்கு அதிக வாய்ப்பு கிட்டும்.அவர்கள் யாரும் அங்கெ இங்கே போககாமல் இருப்பது ஒரு எதிர்பார்ப்பு.. பொருளாதாரத்தில் இந்த திட்டத்தால் பல்வேறு பின் விளைவுகள் எதிர் பார்க்கலாம். ஸ்கூட்டர் கம்பெனிகள் லாபம்., கணிசமான கமிஷன் , ஓட்டுநர் பயிற்சி ,லைசென்ஸ் வழங்குதல், இன்சூரன்ஸ், பழுது பார்க்க கடைகள்.பெட்ரோல் உபயோகம் ,அதோடல்லாமல் புதிதாக ஓட்டுபவர்களால் விபத்துகள் ,என பணப்புழக்கம் பெருகும். . பின் விளைவு? பெட்ரோல் விலை ஏறினால்? அல்லது தட்டுப்பாடு ஏற்பட்டால் ?? மத்திய அரசு இதையெல்லாம் சிந்திக்காது???இப்போதுள்ள வாகன பெருக்கத்தில் பெட்ரோலை நம்பி மட்டும் இருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. இதுபோன்ற ஒரு விலை மதிப்புள்ள யாருமே கேட்காத எதிர்பார்க்காத திட்டத்தினை பாரத பிரதமர் தமிழ் நாட்டில் துவக்கி வைக்கிறார் என்பதால் நிச்சயமாக இந்த திட்டம் ஒரு உன்னததமான பயனளிக்கும் திட்டம் என்பதில் சந்தேகமே இல்லை என்றுதான் கருதவேண்டும். இதே மாதிரி திட்டத்தினை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும்
'அம்மா ஸ்கூட்டர்'(படம் நிச்சயம் வாகனத்தில் உண்டு என்பதால் குற்றவாளி என்ற பிரச்சினை அடி பட்டு விடும்
' விபத்துகளில் அடிபட்டாலும்), திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன்வரும்படி பாரத பிரதமர் பரிந்துரைப்பதோடு இதற்காக செலவி ற்கும் முழு மானியம் மத்திய அரசு நிதியிலிருந்து கொடுக்கலாமே? 2019 இல் தேர்தல் கூட்டணிக்கு இது ஒரு அச்சாரம் என்பதோடு நிறுத்தி கொள்ளாமல் எப்படியோ, ஆளும் கட்சிக்கு இந்த திட்டம் நிச்சயமா பூஸ்ட் தான்
இலவச திட்டங்கள் செயல்படுத்துவதில் இந்தியாவில் முன்னோடியாக இருப்பது தமிழ் நாடுதான்.. இதுவரை போட்ட இலவச திட்டங்களில் மிக அதிகமான மானியம் ரூபாய் இருபத்தையாயிரம் அதுவும் வேலைக்கு சென்று ஓரளவு நன்றாக சம்பாதிக்கும் மகளிருக்கு மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து அள்ளி கொடுப்பது மிக அருமையான எவர் மூலையிலும் இதுவரை உதிக்காத ஒன்று என்பதை மறுக்கமுடியாது. அன்றாடம் பிழைப்புக்கு அல்லாடும் கோடிக்கணக்கான மக்களுக்குத்தான் ஏற்கனவே இனாம் அரிசி , மிக்ஸி,பேன் கிரைண்டர் என பல பிச்சாத்து திட்டங்கள் இருந்ததால் சம்பாதிக்கும் மகளிர்( நிச்சயமாக ஒரு வேலை சோத்துக்கு வழி இல்லாதவர்களோ அல்லது செலவ
சீமாட்டிகளாகவோ இருக்கமாட்டார்கள்) இந்த திட்டத்தினை கண்டிப்பாக ஆவலுடன் வரவேற்பார்கள்.. போட்டி மிக கடுமையாக இருக்கும். பயனாளிகளை தேர்வு செய்வதில் ஆளும் கட்சிக்கு அதிக வாய்ப்பு கிட்டும்.அவர்கள் யாரும் அங்கெ இங்கே போககாமல் இருப்பது ஒரு எதிர்பார்ப்பு.. பொருளாதாரத்தில் இந்த திட்டத்தால் பல்வேறு பின் விளைவுகள் எதிர் பார்க்கலாம். ஸ்கூட்டர் கம்பெனிகள் லாபம்., கணிசமான கமிஷன் , ஓட்டுநர் பயிற்சி ,லைசென்ஸ் வழங்குதல், இன்சூரன்ஸ், பழுது பார்க்க கடைகள்.பெட்ரோல் உபயோகம் ,அதோடல்லாமல் புதிதாக ஓட்டுபவர்களால் விபத்துகள் ,என பணப்புழக்கம் பெருகும். . பின் விளைவு? பெட்ரோல் விலை ஏறினால்? அல்லது தட்டுப்பாடு ஏற்பட்டால் ?? மத்திய அரசு இதையெல்லாம் சிந்திக்காது???இப்போதுள்ள வாகன பெருக்கத்தில் பெட்ரோலை நம்பி மட்டும் இருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. இதுபோன்ற ஒரு விலை மதிப்புள்ள யாருமே கேட்காத எதிர்பார்க்காத திட்டத்தினை பாரத பிரதமர் தமிழ் நாட்டில் துவக்கி வைக்கிறார் என்பதால் நிச்சயமாக இந்த திட்டம் ஒரு உன்னததமான பயனளிக்கும் திட்டம் என்பதில் சந்தேகமே இல்லை என்றுதான் கருதவேண்டும். இதே மாதிரி திட்டத்தினை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும்
'அம்மா ஸ்கூட்டர்'(படம் நிச்சயம் வாகனத்தில் உண்டு என்பதால் குற்றவாளி என்ற பிரச்சினை அடி பட்டு விடும்
' விபத்துகளில் அடிபட்டாலும்), திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன்வரும்படி பாரத பிரதமர் பரிந்துரைப்பதோடு இதற்காக செலவி ற்கும் முழு மானியம் மத்திய அரசு நிதியிலிருந்து கொடுக்கலாமே? 2019 இல் தேர்தல் கூட்டணிக்கு இது ஒரு அச்சாரம் என்பதோடு நிறுத்தி கொள்ளாமல் எப்படியோ, ஆளும் கட்சிக்கு இந்த திட்டம் நிச்சயமா பூஸ்ட் தான்
22-பிப்-2018 14:58:53 IST
தமிழ்நாடு இந்த அளவுக்கு செல்வசெழிப்புடன் இருப்பதற்கு காரணமே கடந்த அரை நூற்றாண்டுகளில் இருந்த முதல்வர்கள் காரணம்?அனைத்துமே தாராளமயமானதால் பொருளாதாரமும் வளர்ந்து விட்டது தான் நிதர்சனமான உண்மை.
07-பிப்-2018 22:44:40 IST
பால் கலப்படமில்லாமல் இருந்தால் சரி பசியால் வாடும் குழந்தைகளைவிடவும் சினிமா சூப்பர் ஹீரோ கட்டவுட்டுகளுக்கும்,அம்மன்களுக்கும் பாலாபிழேகம் செய்வது நமது கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்டது.
02-பிப்-2018 14:01:25 IST