ஏற்கனவே மின்சாரம் தட்டுப்பாட்டால் தமிழகமே அல்லல் படுகிறது. அதுபோல, சென்னையில் செயற்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்த ஏதாவதொரு எதிர்கட்சியின் சதியாக இருக்குமோ?
18-மே-2013 14:47:40 IST
எல்லா பத்திரிகைகளிலும், டிவி செய்தி களிலும் வரும் செய்திகள் எல்லாம் பொய்யா? பா.ம.க.,வை வன்முறை கட்சி என்ற பெயரை ஏற்படுத்த இவர்கள் முயர்ச்சிக்கிறார்களா? பா ம க வைப்போல அகிம்சையை போதிக்கும் ஒரு கட்சியை உலகிலேயே பார்க்க முடியாதோ? எவ்வளவு பேருந்துகள் சேதம், எவ்வளவு பேருந்துகள், கார்கள், கண்டைனர், எரிக்கப்பட்டது? எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டன? எத்தனை பேர் தாக்கபட்டார்கள்? அதில் எத்தனை பேர் இறந்தனர்? இதல்லாம் அகிம்சையாளர்கள் செய்யும் செயலா? தமிழக வட மாநில, கிழக்கு மற்றும் மேற்கு மாநில மக்கள் உங்கள் செயலால் வீட்டை விட்டு வெளியே வரவே, பேருந்துகளில் பயணம் செய்யவே பயப்படுகிறார்களே? இந்த கொடுஞ்செயல்களால் பா ம க கட்சி வளரும் என்றோ ஆட்சியை கைப்பற்றலாம் என்றோ நினைக்காதீர்கள். அனைத்து பிரிவு மக்களும் நியாயமான வன்னியர்கள் உட்பட உங்களின் செயல்பாடுகளால் வெறுப்புற்று இருக்கின்றனரே இது உங்களுக்கு தெரிய வில்லையா? "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்பதுபோல இந்த செயல்களுக்கான பதில் வரும் தேர்தலில் எதிரொலிக்கும்.
05-மே-2013 17:31:41 IST
பாமாகாவினர் இவ்வளவு கொடுமையாக வன்முறைகள் செய்திருக்கிறார்கள். இதற்கு அதன் தலைவர் அன்புமணியோ வன்முறைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஆனால் தொண்டர்களை அமைதியாக இருக்கவும் தினமலருக்கு பேட்டி அளித்துள்ளாரே?
03-மே-2013 07:24:18 IST
வட தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகு பொதுச்சொத்துக்களுக்கு வேண்டிய அளவு சேதம் விளைவித்த பின்பும் , பொதுமக்களுக்கு பேருந்துகளை இயக்க முடியாமல் இடையூறு செய்த பின்பும் "வன்முறைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் ஆனால் தொண்டர்களை அமைதியாக இருக்ககோரி அவர்களுக்கு அறிக்கை வெளியிட்டு உள்ளேன் என்கிறாரே
03-மே-2013 07:13:34 IST
30 ஆண்டுகளாக நகராட்சியும் ஊராட்சியும் உயர் மின்னழுத்த கம்பிகளை மாற்ற எழுதிக்கொடுக்காமல் என்ன செய்கின்றன? இந்த ஓட்டு அரசியல் வியாதிகள் என்ன செய்கிறார்கள்?
14-மார்-2013 08:36:19 IST
முதல்வர்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களும் குஜராத் முதல்வர் திரு நரேந்திர மோடி அவர்களும்தான். ஆனால் அவர்கள் ஏன் இந்த விலை ஏற்றத்தை மெளனமாக பார்த்துகொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.
14-மார்-2013 08:25:40 IST
இந்த ரேஷன் கொள்ளையை எப்படித்தான் தடுக்க போகிறார்களோ ? பேசாமல் ரேஷன் பொருட்களை தினசரி ஒரு ஏரியா என்று வீடு வீடாக நடமாடும் ரேஷன் கடை மூலம் கொடுத்தாலாவது இந்த கொள்ளைகள் தடுக்கப்படலாமோ?
24-பிப்-2013 08:26:01 IST
ஏற்கனவே சென்ற ஆறுமாதத்திற்கு முன் இந்த குவாரி விவகாரம் பற்றி தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. ரயில்வே மத்திய அரசு துறை என்பதால்தான், குவாரிகள் கொடுக்கவும், தேவையான நிலங்கள் கையகப்படுத்தி கொடுக்கவும் தமிழக அரசு தாமதம் செய்கிறதோ? இது தமிழக அரசின் மெத்தனத்தால் நடைபெறுகிறது. இனியாவது முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக தீர்வு காணவேண்டும்.
24-பிப்-2013 08:19:30 IST
நல்ல திட்டம் தான். திட்டத்தின் பெயரிலேயே AMMA என்றிருப்பதால் இது அதிமுக வின் திட்டம் என்று பிற்காலத்தில் மாற்றாமலிருந்தால் சரி. மேலும் அலுவலகம் சென்று வாங்கும் தற்போதைய நடைமுறையில் உள்ள முதியோர் ஓய்வூதியம் , விதவைகள் ஓய்வூதியம், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டாக்கள், வீட்டு மனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு, ஜாதி சான்றிதழ்கள் வாரிசுரிமை சான்றிதழ் ஆகியன பெறுவதில் லஞ்சம் தாண்டவமாடுகிறது. நடக்க இருக்கும் முகாம்களிலாவது லஞ்சம் இல்லாமல் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட சேவைகள் கிடைக்குமா? அல்லது இதிலும் புகுந்து விளையாடுவார்களா?
24-பிப்-2013 08:09:24 IST
இந்த மாதிரி வெறிச்செயல் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கவேண்டும். எல்லா கடைகளிலும் ஆசிட் சுலபமாக கிடைக்கிறது. மத்திய மாநில அரசுகள் அனைத்து விதமான கடைகளிலும் ஆசிட் விற்பதை தடை செய்யவேண்டும். ஆசிட் வேண்டுமென்றால் எதற்காக என்று விளக்க கடிதம் பெற்று அதனுடன் வாங்குபவரின் புகைப்படம் இணைத்து கேட்டால் மட்டுமே, அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். இப்படி செய்தால் ஆசிட் மூலம் நடக்கும் வன்முறையை ஓரளவாவது கட்டுப்படுத்தலாம்.
24-பிப்-2013 07:58:27 IST