திருச்சி ஏர் போர்ட்ல நடக்கும் அக்கிரமம்..,
திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் " பிரிக்க முடியாதது எதுவோ?" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக " இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார் இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும் நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை
லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம் என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும் அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம் என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம் சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு
அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம் என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்
சம்பவம் ஒன்று.
விமானத்தை விட்டு இறங்கி ஒரு பேருந்தில் கொண்டு போய் குடிநுழைவு வாசலில் ( Immigration Check point ) இறக்கிவிட்டனர். என்னதான் அடிக்கடி வந்துபோனாலும் விமானத்தில் ஏறியதுமுதல் சொந்த பந்தங்களை காணும் ஆவல்தான் வீடு போய் அவர்களை பார்க்கும்வரை இருக்கும் ஒவ்வொருவருமே அந்த ஆசைகளை சுமந்துதான் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஒரு விமானம் முழுவதும் வந்த பயணிகளுக்கு மூன்றே மூன்று அதிகாரிகள்தான் அதுகூட மிட்நைட் என்பதால் அதிகாரிகள் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம் ஆனால் அதன்பிறகு நடந்ததுதான் கொடுமை
நாங்கள் வரிசையில் நிற்கும்போதே ஒருவர் உள்ளே இருந்து வந்து ஒரு பெயரை சொல்லி அழைத்துக்கொண்டே வந்தார், உடனே அவர் பெயர் சொல்லி அழைத்த நபர் தன் மனைவியோடு வரிசையின் கடைசியில் இருந்து வந்து எந்தவித கூச்சமும் இல்லாமல் வாயெல்லாம் பல்லாக வரிசையில் நிற்பவர்களை கடந்து அந்த ஊழியரை பின்தொடந்து சென்றார் அதிகாரிகளும் அவர்களுக்கு முதலில் செக் செய்து அனுப்புகின்றனர் அந்த ஒருவர் மட்டும் அல்ல அதன் பிறகும் இதேபோல இன்னும் இரண்டுபேரை அந்த ஊழியர் அழைத்துக்கொண்டு சென்றார் எந்த நாட்டு இன்டர் நேசனல் ஏர்போர்ட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது அருகில் நின்று கொண்டிருந்தவர் சொன்னார், அவர்கள் அந்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஏதாவது ஒரு அதிகாரிக்கு உறவாக இருக்கும் என்று அப்படியே உறவு இல்லையென்றாலும் இதேபோல் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்
அதாவது, நம்மை வரவேற்க வந்தவர்கள் இதற்கென சிலரை பிடித்து தள்ளுவதை தள்ளி நாம் பெயரை அவர்களிடம் கொடுத்துவிட்டால் போதும், அவர்களும் கடமை தவறாமல் நம்மை வரிசையில் நிற்கவிடாமல் உறவு என்று சொல்லி அழைத்துவிடுவார்கள் இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், சிங்கபூர் நான் பிழைக்க வந்த நாடுதான், ஆனால் நிரந்தரவாசியாக இருந்தால்கூட போதும் எந்த நாட்டிற்கு போனாலும் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் குடிநுழைவுக்கு எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம், எனது இந்தியன் பாஸ்போர்ட்டை வைத்து ஆட்டோ ஸ்கேனிங்கில் வந்து விடலாம். ஆனால் சொந்த நாட்டில் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துகொண்டு இந்த அவலங்களை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
சம்பவம் இரண்டு.
ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து வந்தால் அடுத்து லக்கேஜ் கலெக்சன். இந்த முறை எனக்கு ஒரே ஒரு செக் இன் லக்கேஜ் மட்டுமே, இங்கு ஐ.டி. ஷோவில் வாங்கிய ஒரு LED T.V . இங்கு அதை செக் இன் செய்து கன்வேயரில் அனுப்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், இதுபோல எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களுக்கு தனி கன்வேயர் ஆனால் திருச்சி கன்வேயர் பற்றி சொல்லவே வேணாம், புது விமான நிலையத்தில் இப்படி ஒரு டிசைனிங்? அந்த கன்வேயரில் வரும் உங்கள் லக்கேஜ் சேதப்படாமல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் சரி.. அதைப்பற்றி தனியாகவே எழுதலாம் அவ்வளவு இருக்கு பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த காரணங்களால் டிவி போன்ற ஹேண்டில் கேர் ஐட்டங்களை கன்வேயரில் அனுப்பாமல் தனியாக சைடில் உள்ள வாசல் வழியாக எடுத்து வைப்பார்கள், எனது டிவி யையும் எடுத்து வைப்பார்கள் என்று காத்துகொன்டிருந்தேன், ஆனால் எடுத்துவைத்தபாட்டைக் காணும் ஆனால் மற்றவர்கள் ஒவ்வொருவராக எடுத்துகொண்டு சென்றார்கள். சரி.. அருகில் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றேன், நான் போனதுமே அங்கு உள்ள ஒரு ஊழியர் வந்து " உங்களது என்ன பொருள் சார்?" என்றார், நானும் டிவி என்று மாடலையும் சொன்னேன், கேட்டுக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார், நானும் பரவாயில்லை நல்ல சர்வீஸ் என்று நினைத்தேன் ஆனால் கொஞ்ச நேரத்திலே என் நினைப்பில் அவர் மண் அள்ளிப்போட்டார் வேகமாக வெளியில் வந்து " இருக்கு சார், கொஞ்சம் கவனிங்க எடுத்துட்டு வர்றேன்" என்றார்
எனக்கு முதலில் புரியவில்லை, பின்னர்தான் கவனித்தேன் அருகில் இருப்பவர்கள் நூறு ரூபாயை அவர் கைகளில் திணித்துவிட்டு தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டனர் நான் அவரிடம் கேட்டேன் " ஏன் சார்..பணம் கொடுக்கலைனா நம்ம திங்க்ஸ எடுக்க முடியாதா? எடுத்து வைக்கிறதுதானே அவங்க வேலை? என்றேன், அவரும் " சார்.. நாம சண்டை போடலாம்.. முதலில் நமக்கு நேரம் இல்லை. இரண்டாவது உங்க டிவி 40,000 ரூபாய்னு வைங்க, இந்த நூறு ரூபாய்க்கு பார்த்தா, உள்ளேயே வச்சு சம்திங் டேமேஜ் பண்ணிட்டு கன்வேயர்ல டேமேஜ் ஆயிருச்சுன்னு சொல்வாங்க" என்றார் அதிர்சியுடனே அந்த நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசிவிட்டு டிவியை எடுத்துகொண்டு வந்தேன் இதையும் மீறி நகரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் " தம்பி.. கொடுக்கவேண்டியதை கொடுத்திட்டிங்களா? என்றார் இத்தனையும் கன்வேயர் ரூமுக்குள் இருந்த ஒரு கஸ்டம் ஆபிசர் நன்றாக கண்காணித்துக் கொண்டிருந்தார் யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று கூட்டுக்கொள்ளை
சம்பவம் மூன்று.
டிவியை எடுத்துகொண்டு அடுத்து சுங்கச் சோதனை கண்டிப்பாக டிவி போன்ற சாதனங்களுக்கு சுங்கவரி ( TAX ) உண்டு என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை கட்டி இருப்பதால் அதற்கு தயாராகவே வந்தேன். தனியாக இதற்கென இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் சென்று எனது டிவி மாடல் மற்றும் விலைகளை சரி பார்த்து 3750 ரூபாய் கட்ட சொன்னார்கள் எனக்கும் சந்தோசமே, ஏனென்றால் இதற்குப் பில் கொடுத்துவிடுவார்கள் ஒரு பைசா கூட அந்த அதிகாரிகள் எடுக்க முடியாது சரி என்று கட்டப் போகும்போது அதில் இருந்த ஒரு அதிகாரி எனக்கு பின்னால் வந்து மெதுவாக " தம்பி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அந்தப்பக்கம் சைட்ல சோபால உட்காந்திருக்கதுதான் எங்க சீனியர் ஆபிசர் அவர் இப்ப போயிருவார், அவர் போனதும் 2000 மட்டும் கொடுத்திட்டு உங்க டிவிய எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்
மேலும் " நேரம் காலம் தெரியாம இங்க வந்து உக்காந்துகிட்டு எங்க பொழப்புல மண்ண போடறான்" என்று அந்த சீனியர் ஆபிசரையும் திட்டிக்கொண்டே சென்றார் இந்தியன் படத்துல நிழல்கள் ரவிய கமல் கொல்லப்போகும் போது அவருக்கே லஞ்சம் கொடுக்கிறேன்னு நிழல்கள் ரவி சொல்லும்போது கமல் ஆயாசமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சொல்லுவாரே " உன்னை கொல்றதுல தப்பே இல்லடான்னு" அதுதாங்க அப்ப மனசுல வந்துச்சு சரி நீ ஆணியே புடுங்க வேண்டாம்னு முழு தொகையும் கட்டிட்டு டிவியை எடுத்துக்கிட்டு வெளில வந்துட்டேன்
சம்பவம் நான்கு.
எல்லாத் தொல்லைகளும் முடிந்து அப்பாடான்னு வெளில வந்து லக்கேஜ் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு திரும்பினா, நான் கொண்டுவந்த ட்ராலிய வாங்குறதுக்காக ஒரு ஊழியர் தயாராக நின்றார் பரவாயில்ல... இந்த சர்விசாவது நல்லா இருக்கு என்று நினைப்பதற்குள் அதற்கும் ஒரு சம்மட்டி அடி ட்ராலியை எடுத்துகொண்டு தலைய சொரிந்தார் அந்த ஊழியர், " என்னப்பா என்ன வேணும்?" என்றேன், "பார்த்து கவனிங்க சார், ட்ராலிய தள்ளிட்டு உள்ள போகணும்" என்றார் நானும் விடாமல் " போங்க.. அதுக்குதானே உங்களுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க?" என்றேன்,
" என்ன சார் நீங்க? ஒவ்வொருத்த ரெண்டு வெள்ளி, பத்து வெள்ளின்னு கொடுத்துட்டுப் போறாங்க, இதுக்குப் போய் கணக்கு பார்க்குறீங்க?" என்றார் சாதரணமாக எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடம் சொன்னேன் " அண்ணே. இன்னும் சிங்கபூர்ல தினக்கூலிக்கு வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஒரு நாள் சம்பளமே 18 வெள்ளிதான் இங்க ட்ராலி தள்ளியே அவ்வளவு சம்பாதிக்க முடியும்னா எனக்கும் ஒரு வேலை இங்க வாங்கித் தாங்க, நானும் வந்து ட்ராலி தள்ளுகிறேன்" என்றேன் அந்த முனகியபடியே திரும்பிச் சென்றார் கண்டிப்பாக கெட்ட வார்த்தையில் திட்டியபடியே சென்றிருப்பார்
சம்பவம் ஐந்து.
எல்லாவற்றையும் கடந்து வீட்டுக்குச் செல்லும் ஆர்வத்தோடு விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால், கொஞ்ச தூரத்தில் போலிஸ் செக் போஸ்ட் அதை தொடும் முன்னரே ஒரு போலிஸ் வந்து நிறுத்தச் சொல்லி கை காட்டினார், நிறுத்தியவுடன் டிரைவர் சீட் பக்கம் குனிந்தார் அவர், என்னவோ என்று கண்ணாடியை இறக்கினால் குப்பென்று அடித்தது சரக்கு வாடை டிரைவர் சீட்டில் இருந்த என் மாமாவிடம் " என்ன புதுசா? கவனிச்சிகிட்டு போய்க்கிட்டே இருங்க, ஐயா உள்ளதான் இருக்காரு" என்றார்
உடனே என் மாமாவும் ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டவும் " ஓக்கே ரைட்..போய்க்கிட்டே இருங்க" என்று கை காட்டி அனுப்பி வைத்தார் நான் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன், அவர் சொன்ன ஐயா, நன்றாக தூங்கியபடி டியூட்டி பார்த்துக் கொண்டிருந்தார் மாமாவிடம் கேட்டேன் " நாம பணம் கொடுக்கலைனா என்ன பண்ணுவாங்க?" என்று, "என்ன பண்ணுவாங்க? சந்தேகமா இருக்கு செக் பண்ணனும்னு லேட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் மோசமான ஆளுங்களா இருந்தா, கஞ்சா பாக்கெட்ட அவங்களே போட்டு நம்ம கார்ல இருந்துதான் எடுத்ததா வழக்கு போடுவாங்க" என்றார் அரசாங்க அதிகாரிகளைப் பற்றிய மக்களின் இந்தப் பயம்தான் அவர்களை மேலும் லஞ்சமயமாக வாழவைத்து கொண்டிருக்கிறது
சம்பவம் ஆறு.
விடுமுறையை சந்தோசமாக கழித்துவிட்டு திரும்ப சிங்கை வர அதே திருச்சி விமான நிலையம் சரி.. எந்தப் பிரச்னையும் இருக்காது, ஏனென்றால் என்னிடம் செக் இன் லக்கேஜ் இல்லை ஒரு ஹேன்ட் லக்கேஜ் மற்றும் லேப் டாப் மட்டுமே என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் அப்போதும் லஞ்சம் தன் கோரப் பற்களை காட்டியபடி என்னை வரவேற்றது இந்தமுறையும் இமிக்ரேசனில் நீண்ட வரிசை இன்னும் கொடுமை என்னவென்றால், மூன்று விமானங்கள் குறைந்த நேர இடைவெளியில் கிளம்பும், மூன்று விமான பயணிகளையும் கையாள அதே மூன்று அதிகாரிகள் மட்டுமே நான் சிங்கைக்கு வரும் பயண நேரத்தைவிட விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகம் ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து உள்ளே போகும் முன் ஒரு கஸ்டம் ஆபிசரும் அவருக்கு துணையாக ஒரு போலிசும் இருந்து பாஸ்போர்ட்டை செக் செய்து அனுப்புவார்கள்.
என் பாஸ்போர்ட்டை வாங்கி புரட்டிப் பார்த்த அந்த போலிஸ் " என்ன தம்பி.அடிக்கடி வந்து போவீங்க போல? உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதே இல்லை, கவனிச்சிக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார் அந்த நேரம் பார்த்து டைகர் ஏர்வேசின் செக்கிங் எஜன்ட் வர, நான் நழுவி எஸ்கலேட்டரில் ஏற ஆரம்பித்தேன், அவரும் விட வில்லை என் பின்னாடியே வந்துவிட்டார் " தம்பி..கவனிச்சிட்டு போங்க" என்று திரும்பவும் மேலே ஒரு பெண் என் போர்டிங் பாஸை செக் செய்து ஓக்கே சொல்லவும் உடனே உள்ளே போய் விட்டேன் உள்ளே போய் எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்தபின் திரும்பிப் பார்த்தேன், அப்பவும் அவர் இடுப்பில் கை வைத்து என்னை முறைத்தபடியே நின்றார் என்னைப்போல அடிக்கடி வந்து செல்பவர்களையே இவர்கள் இந்தப் பாடு படுத்தினால், அதிகம் படிக்காமல் முதல் முறை வெளிநாடு செல்பவர்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள்? பணம் கொடுத்தால்தான் பயணமே சாத்தியம் என்று சொன்னாலும் சொல்வார்கள் இவர்களுக்கு ஏன் இந்தப் பிழைப்பு?
இந்த நீண்ட கட்டுரையை படித்து முடிக்கும் உங்களுக்கே இவ்வளவு ஆயாசமாக இருக்கும்போது, இதை ஒவ்வொரு பயணத்திலும் அனுபவிக்கும் பயணிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள் பல வெளிநாட்டினர் வந்துபோகும் இது போன்ற இடங்களில் நம் மானத்தை நேரடியாக விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊழல் அதிகாரிகள் இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் லஞ்சத்தை தவிர்த்து வாழவே முடியாத சூழ்நிலையில் கொண்டுவந்து தள்ளிவிட்டது இந்த அதிகார வர்க்கம் லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாத குழந்தைகளை லஞ்சம் கொடுத்துதான் பள்ளியில் சேர்க்கிறோம் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்று போதிக்க வேண்டிய ஆசிரியரே லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலைக்கு வருகிறார் லஞ்சம் வாங்குவதை கண்காணித்து கண்டிக்க வேண்டிய காவல்துறை லஞ்சத்தில் திளைத்து கொண்டிருக்கிறது சட்டங்களை கடுமையாக்க வேண்டிய மந்திரிகள் லஞ்சத்தை கமிஷன் என்று பெயர் மாற்றி வைத்து வாங்குகின்றனர் ஆக மொத்தம் இந்தியாவிற்கு தேசிய வியாதி என்று ஒன்றை தேர்வு செய்தால் அதற்கு சரியான தேர்வு இந்த லஞ்சம்...
செயல் படாத தமிழ்நாடு வக்ப் வாரியம் தேவையா ? தகவல்கள் கோரினால் கிடைக்கும் விந்தையான பதில் " தகவல் இல்லை அல்லது தெரியாது . தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு சம்மந்தப்பட்ட தகவல்கள் கேட்டாலும் .... பதில்..... தகவல் இல்லை " என்பதே . ஏன் மாண்புமிகு முதலமைச்சர் தனிப் பிரிவிலிருந்து பதில் கோரினாலும் பதில்கள் அதுவே .... அரசு இயந்திரத்தை முடக்காதீர்கள் ..... விந்தையான தமிழ்நாடு வக்ப் வாரியம் ........ திருந்துமா வக்ப் வாரியம்......
தமிழ்நாடு வக்ப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு முஸ்லிம் பள்ளிவாசல்களில் கட்டாயமாக பதிவு எண் எழுதப்பட வேண்டும் . அன்றியும் பள்ளிவாசலின் நிர்வாகிகள் பெயர் விலாசம் கைப்பேசி எண் மற்றும் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கண்காணிப்பாளர் பெயர் கை பேசி எண் எழுதப்பட வேண்டும் . பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வக்ப் வாரியம் முயற்சி செய்தாலே பல மோசடிகள் குறைய வாய்ப்புக்கள் உண்டு. வக்ப் வாரியம் இப்பணியினை விரைவாகச் செய்யுமா ?...
திருச்சி மாநகராட்சியின் இன் நடவடிகையை பாராட்டுகிறோம் அதே சமயத்தில் காந்தி மார்க்கெட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் பொது மக்களுக்கு இடையுறு ஏற்படுத்தி மக்களுக்கு சிரமம் செய்வதையும் அதிகாரிகள் தடுக்கவேண்டும் இங்கு அதிகாரிகளை மிரட்டியும் கையுட்டு கொடுத்ததும் நடைபாதைகளை ஆக்ரமித்து வருகிறார்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பள்ளி செல்லும் சிறார்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை பலன் பெறுவார்கள்....
உறங்குகிறதா தமிழக பள்ளித் துறை சென்னையின் இருதயப் பகுதியில் இருக்கும் மேனிலை பள்ளியில் கடந்த பல வருடங்களாக தட்டச்சு படப் பிரிவு உள்ளது . அதில் மாணவர்கள் எண்ணிக்கையோ 3 அல்லது 5 மட்டுமே .தட்டச்சுப் பொறியோ 19ம் நூற்றாண்டில் உருவானது . இத்தொழில் பிரிவுக்கு நிரந்த ஆசிரியர் . இவர் சம்பளமோ எத்தனை ஆயிரங்களோ இப்பிரிவு இன்னமும் அங்குத் தேவையோ...
கிரண் குமார் ரெட்டி அவர்களே அரசியலும் , கிரிக்கெட்டும் சூதாட்டங்களே நீங்கள் எங்கு இருந்தால் என்ன பணம் தானே உங்களுக்கெல்லாம் குறி. மக்களுக்கு சேவை அல்லவே...
நான் குடும்பத்தினருடன் ஞாயிறு அன்று ராமேஸ்வரம் செல்ல ஆன்லைனில் மாலை 7 மணிக்கு பதிவு செய்து [இரவு 8.40 பேருந்து ] பஸ் நிலையம் சென்றேன். என்னுடைய பயணசீட்டை பார்த்து நடத்துனருக்கு ஒரே குழப்பம் . அவரிடம் கொடுக்கப்பட்ட முன்பதிவு விவர பட்டியல் மாலை 6 மணிக்கு எடுக்கப்பட்டது. அதை வைத்து அவர் மற்ற பயணிகளுக்கு உட்கார பயணசீட்டுகளை அளித்துவிட்டார் . படாத பாடுபட்டு மற்ற பயணிகளை முறைப்படுத்தி ,சமாதானப்படுத்தி அமர வைத்ததை பார்த்து எனக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது . ஆன்லைனில் புரோகிராம் வடிவமைத்தவர் ரயிலில் செய்வதுபோல் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பை காண்பிக்கும்படி வடிவமைத்தால் இம்மாதிரியான குளறுபடிகளை தவிர்க்கலாமே ....
பொதுமக்கள் உடமை உயிர் மற்றும் பொது சொத்துக்களுக்கு பங்கம் விளைவிப்பவர்களுக்கு சிறை தண்டனை அபராதம் கட்டசொல்லுதல் போன்ற தண்டனைகள் வழங்குவதால் குற்றங்கள்குறைவதில்லை அதைதவிர்த்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையாக அவர்கள் குடும்பத்திற்கு 20 ஆண்டுகளுக்கு அரசு வேலை கொடுக்ககூடாது 20 ஆண்டுகளுக்கு மானியம் இல்லாத காஸ் மற்றும் அனைத்து அரசு சலுகைகளையும் நிறுத்தினால் மட்டுமே இதுபோன்ற குற்றம் செய்பவர்களை 90 % வரை கட்டுபடுத்த முடியும்(ரேஷன் கார்டு என்பது இந்திய பிரஜை என்ற அடையாளமாக மட்டுமே குற்றவாளிகளுக்கு இருக்கவேண்டும்) இதனை அரசு மற்றும் நாட்டின் முதுகெலும்பான நீதித்துறை உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் . குற்றம் நிரூபிக்கப்படவேண்டும் அதேபோல் பழிவாங்கும் நடவடிகையாக அமையாமல் உரிய கவனத்துடன் செயல்பட ஆவணம் செய்ய வேண்டும்...
தினமலருக்கு மேலும் சிறப்பூட்டுவது அதனுடன் வெளிவரும் இணைப்பு புத்தகங்கள்.அனைத்துமே தகவல் களஞ்சியங்கள். எனது கணிணியில் இந்த தமிழ் மென்பொருளை நிறுவ உதவியதே திருச்சியில் வெளிவந்த பெண்கள் மலரில் இருந்த சிறுகுறிப்புதான்....
பத்தாம் வகுப்பு சமஸ்கிருத தேர்வில் குழப்பம். கடைசி ரொமன் லெட்டரில் 15 மதிப்பெண்களுக்கு அவுட் ஆப் போர்ஷன் வந்துவிட்டது.இதை பற்றி எந்த ஆசிரியரும் பேசவில்லை.அதனால் மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். SO PLEASE CLAIM FOR US TO GET FULL MARKS....
TENTH SSLC TAMIL NADU SANSKRIT-PAPER 2 EXAMINATION WAS HELD ON 3/29/2013(IN TRICHY)IN THAT LAST ROMAN LETTER WAS OUT OF PORTION FOR 15 MARKS(NOT IN THE BLUE PRINT). SO PLEASE CALIM FOR US TO GRANT FULL MARKS....
ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மூன்று நிகழ்வுகளை இன்றைய வியாழனில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்கின்றனர்.ஆண்டவரின் அன்பை வெளிப்படுத்தும் பாஸ்கா விழா,அந்த அன்பை அடையாள முறையில் கொண்டாடும் நற்கருணை விழா,நற்கருணையை செயல் படுத்தும் குருத்துவ விழா..சிறப்பாக கால்களைக் கழுவும் அடையாளச் சடங்கு அன்புப் பணி புரிய அழைக்கிறது.அன்றைய பாலஸ்தீன சாலைகள் பெரும்பாலும் சேறும், சகதியுமாக இருந்தன.ஆதலின் ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் தண்ணீர் நிரம்பிய தொட்டி காணப்படும்.வருவோரின் கால்களைக் கழுவ அடிமை ஒருவரும் இருப்பார்.வீட்டுக்கு வரும் விருந்தினரின் கால்களைக் கழுவி விருந்துக்கு அழைத்து வருவது அவரின் வேலை.அந்த அடிமையின் பணியை இயேசு செய்த அடையாள நிகழ்வு இன்றும் அரங்கேறுகிறது,அன்புப் பணி செய்ய அதிகாரமோ,பதவியோ,பட்டமோ ஒரு பொருட்டே அல்ல...பணியின் உச்சத்தில் பலியாகும் இயேசு இன்றும் அவ்வாறு வாழ அனைவரையும் அழைக்கிறார்......
எங்கள் பள்ளியானது கவுண்டம்பாளையத்திலிருந்து டி.வி.எஸ் நகர் செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது. எங்கள் பள்ளியில் LKG முதல் 12–ம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் இருபாலாரும் படித்து வருகிறார்கள். எங்கள் பள்ளிக்கு அருகில் சுமார் ½ கி.மீ தூரத்திற்குள் அரசு மதுபானக் கடை அமையவிருப்பதாக அறிந்தோம். கோடை விடுமுறை நெருங்கும் சமயத்தில் அவசர அவசரமாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தடுக்க யாரை அணுக வேண்டும்?...
இந்த இலங்கைப் பிரச்சனைக்காக கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துவது தேவை இல்லாதது மொதல்ல படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போங்கப்பா ,இந்த அரசியல்வாதிகளுக்கு மத்தவங்களை கெடுக்கறதுதான்
பிழைப்பு ,அப்பத்தான் அவங்க வண்டி நல்லா ஓடும் ,ஆனா ,உங்களுக்கு
அப்படியா ?கையில வேலை இல்லை என்றால் ,உழைத்து சம்பாதித்து ,கையில ,நாலு காசு வைத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களை நாய் கூட மதிக்காது .
ஜி.எஸ்.ராஜன்
சென்னை ....
கரூர் - சேலம் அகல ரயில் பாதைப் பணிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு நிறைவு பெற்ற பின்னரும் மக்களுக்கு பயன் படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது வேதனை .பயணிகள் ரயில் விடுவதில் இன்னும் தாமதம் ஏனோ ?புரியவில்லை .தி மு க இருந்தால் முட்டுக்கட்டை போடும்,ஆனால் இதுவரை போட்ட முட்டுக்கட்டையே அதிகம் தான் .அது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுதிவிட்டுதான் இறுதி நேரத்தில் வெளியேறி உள்ளது ,ஆனால் மாற்றாந்தாய் மனப்பக்குவம் உள்ள அனைத்து இந்திய இந்திரா காங்கிரஸ் ரயில்வே பணிகளை விரைந்து முடித்து அ,தி மு க ஆட்சி செய்யும் தமிழகத்திற்கு உதவப்போவது என்பது சந்தேகமே ..மக்களை என்றும் மாக்களாக கருதும் மத்திய அரசாங்கம் பொது மக்களுக்கு எப்பொழுதும் தொல்லையைத்தான் கொடுக்கும் நிம்மதியாக இருக்க விடாது . இப்போது தேவையே இல்லாமல் மக்கள் திருச்சி சென்று ,அல்லது ஈரோடு சென்று தான் சென்னைக்கு ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது .திண்டுக்கல் ,கரூர்,ஈரோடு மார்க்கமாகவும் ,சேலம் மார்க்கமாகவும் ரயில்களை இயக்கினால் பொதுமக்களுக்கு பெரும் பயன் உள்ளதாக அமையுமே
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .....
பீகார் மாநில அரசு முறைகேடாக சேர்த்துள்ள அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன இதே போல முறைகேடாக ,குறுகிய காலத்தில் சம்பாதித்த தவறு ,சுருட்டிய அரசியல்வாதிகளின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்ய எப்போது சட்டம் கொண்டு வரப்போகிறீர்கள் ?அதுதான் தற்போதைய முக்கிய பிரச்சினை ,அந்த சட்டத்தை நீங்கள் கொண்டு வரவில்லை என்றால் மக்கள் தாங்களே சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அரசியல்வாதிகளை ஓட ஓட விரட்டுவார்கள்.அவர்கள் மக்களை பார்த்து பயந்து ஓடி ஒளியும் காலம் வெகு தொலைவில் இல்லை.ஒரு ரூபாய்க்கு வழி இல்லாமல் ரயிலில் டிக்கெட் எடுக்க வக்கு இல்லாதவர்கள் கூட உலகப் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளதைப் பார்க்கும் போது சட்டத்தில் உள்ள ஓட்டைகள் நமக்கு நன்கு புலப்படுகிறது மிகவும் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்து உள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்களை மக்கள் நிச்சயம் பறிமுதல் செய்வார்கள் .அதில் துளிக்கூட சந்தேகமே இல்லை .மொத்தத்தில் இந்திய அரசாங்கம் திவாலாகி விட்டது ,அவர்கள் கொழுத்த பணக்கார்கள் ஆகிவிட்டனர் ,பல தலை முறைக்கு சொத்து சேர்த்து விட்டனர்.
ஜி.எஸ்.ராஜன்
சென்னை ....
சென்னையைத் தவிர மத்த எல்லா இடத்துக்கும் பேசாம இருபத்தி நாலு மணி நேரமும் மின்சாரத்தை நிறுத்திடுங்க ,கரண்ட் பில் நிச்சயமா யாருக்கும் வராது ..நீங்கல்லாம் நல்லா வருவீங்க . ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் மற்றும்
கல்வித்துறைக்கு ஓர்அன்பான வேண்டுகோள்
பள்ளிகல்லுரிகளுக்கு லேட்டாக வரும்மாணவர்களை கதவை மூடி வெளியே அனுப்புவதால் மாணவர்கள் சினிமா மற்றும் வெளியே சென்று
சுற்றுகிறார்கள் அதுவே அவர்கள் படிப்பில்
கவனம் குறைவதற்கு காரணமாக இருக்கிறது.இதனைத்தவிர்த்து
மாணவர்களை
வெளியே அனுப்பாமல் அவர்களை பள்ளி கல்லூரிகளிலே வெய்டிங் ரூம் காத்திருக்க வைப்பது அல்லது வேறு ஏதாவது பணிகள் கொடுப்பதன் மூலம் மாணவர்களை
நேரம்தவறாமல் வரவைப்பது மற்றும் தவறான வழிகளுக்கு
செல்லாமல்
தடுக்கலாம் .இதற்க்கு
கல்வி துறை' மற்றும் அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும்
அல்லது
அன்பான
வேண்டுகோள்
...
கலைஞர் கண் கேட்ட பிறகாவது சூரிய நமஸ்காரம் செய்கிறார். ஆனால் அம்மாவோ கண்ணிருந்தும் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.அதற்க்கு என்ன பெயர் என்று சொன்னால் நன்றாக இருக்கும்....
திராவிட கட்சிகளினாலேயே இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கவில்லை. ஒருவர் மாறி ஒருவர் குறை கூறி குற்றம் கூறி தங்களது
சண்டைகளினால் இலங்கை தமிழர்களுக்கு தீங்கு வருகிறது. இந்த ஒரு விசயத்தில் மட்டுமாவது ஒற்றுமையாக இருக்க வேண்டாமா. எல்லோரும் ஒற்றுமையாக இருந்து போராடி இருந்தால் இந்திய அரசும் அமெரிக்காவும் ஒரு நல்ல தீர்மானத்தை கொடுத்து இலங்கைக்கு பயத்தை கொடுத்து இருக்கும். 2009 இல் அ.தி.மு.க என்ன செய்தது என்று தெரியவில்லை. சாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு இப்போது சவடால் அடிக்கிறது. குறைந்தது இந்திய பார்லிமெண்டில் ஆவது ஒரு கருமையான தீர்மாணன் போட்டு இருந்தால் உலக அரங்கத்தில் ஓர் விழிப்பு ஏற்படுத்தி இருக்கும். வெறும் தமிழ்நாட்டு சட்டசபையில் தீர்மானம் போட்டு என்ன செய்துவிட்டார்கள். அ.தி.மு.க வினால் போராளிகள் இறந்தது தான் மிச்சம். அப்படி செய்த அ.தி.மு.க வுக்கும் உப்போது வைகோ துணை போகிறார். என்ன கலிகாலம். தமிழா உனக்கு எப்போது விடிவு காலம் வரும்.இன்னாமும் தமிழ்நாட்டு வேஷம் போடும் தமிழர்களை நம்புகிறாயா.இன்னமும் உனக்கு தெளிவு பிறக்கவில்லையா....
இன்று இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் கிடைத்த வெற்றி உலக தமிழர்கள் மற்றும் மாணவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி
.இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் உலக தமிழர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...
மத்திய அரசுக்கு கச்சாப்பொருள் எவ்வளவு விலை உயர்ந்தாலும் அதை வாங்க காசு இருக்கு ,ஆனால் ரயில்வேத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க காசு இல்லை என்று முழக்கணக்கில் மக்கள் காதில் பூ சுற்றுகின்றனர் ..பஞ்சப்பாட்டு பாடுகின்றனர் .ஒரு முறை முதலீடு செய்தால் போதும் பிறகு ரயில்வேத் துறைக்கு வருமானம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது .பராமரிப்புக்கு என சில கோடிகள் செலவு செய்தாலும் சரக்கு ரயிலில் வருமான மழைதான் .போதாக்குறைக்கு பயணிகள் கட்டணம் வேறு நேரடியாகவும் ,மறைமுகமாகவும் நினைத்தபோது உயர்த்திக்கொண்டே செல்கின்றனர். சுதந்திரம் பெறுவதற்கு முன் பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்ட பாதை கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன .அதற்கு பிறகு இந்தியாவில் நமது ஆட்சியாளர்கள் போட்ட ரயில்வே பாதைகள் மிகவும் சொற்பமே..இருக்கின்ற மீட்டர் கேஜ் ரயில் பாதைகளை மட்டும் அகல ரயில் பாதைகளாக மாற்றினர் .அதனால் புதிய ரயில்பாதைகள் மிகக் குறைவான தூரத்திற்கு மட்டுமே போடப்பட்டது .
ஜி..எஸ்.ராஜன்,
சென்னை ...
விவசாய நாடான இந்தியா விவசாயத்தில் அக்கறை செலுத்தாமல் கோட்டை விட்டு விட்டு பாடாவதி பாமாயிலை சமையல் எண்ணெய்யாக பாவித்து இறக்குமதி செய்கிறது ,நமது நாட்டில் விளையும் நல்லெண்ணெய் ,கடலெண்ணெய் ,தேங்காய் எண்ணெய் நமது உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது , எந்த வித கேடும் விளைவிக்காதது.இங்க விவசாயத்தை கவனிக்காமல் முற்றிலும் சாகடித்து விட்டு பாடாவதி பாமாயிலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டுமா?அது கெடுதல்கள் நிறைந்தது , பக்க விளைவுகள் உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன மேலும் பாமாயிலில் ஒரு வித துர்நாற்றமும் வீசுகிறது ,இதனால் தான் அவர்கள் அங்கு பயன்படுத்தாமல் நமக்கு விற்றுவிடுகின்றனர் .இதன் தீங்கு பற்றி பலருக்கு தெரியுமா?மருத்துவ ரீதியாக அதை உடல்நலத்திற்கு நல்லது என்று அரசால் நிரூபிக்க முடியுமா ?விலை குறைவு என்பதற்காக அதை அங்கு இருந்து இறக்குமதி செய்யலாமா ? விவசாயிகளுக்கு மானியம் வழங்கக்கூடாது என்று அமெரிக்கா இந்தியாவிற்கு அறிவுரை கூறுகிறது ஆனால், அமெரிக்காவில் விவசாயத்திற்கு அரசாங்கம் விவசாயிகளுக்கு நல்ல மானியம் அளித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன .இது எந்த விதத்தில் நியாயம் ?புரியவில்லை ஆட்சி செய்பவர்கள் இனியும் விவசாயத்தில் அக்கறை செலுத்தாவிட்டால் இந்தியா ஒரு எதியோபியாவாகவோ , ,சொமாலியாவாகவோ மாறும் அபாயம் உள்ளது .பட்டினிச் சாவுகள் இந்தியாவில் கட்டாயம் அதிகரிக்கும். சேமிப்புக்கிடங்குகளில் .வீணாகும் உணவுப்பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுத்தால் என்ன ? குறைந்தா போய் விடுவார்கள் .வரலாறு காணாத கோதுமை உற்பத்தி இருப்பதாக செய்திகள் கூறும் வேளையில் அதன் விலை இங்கு குறைந்ததா ?இல்லையே .உணவு தானியங்களை எலி ,வண்டுகள் ,பூச்சி ,புழுக்கள் உண்ணலாம் பசியோடு இருக்கும் மனிதர்கள் உண்ணக்கூடாது என்னதான் உங்களது கொள்கையோ ?சித்தாந்தமோ ?எரி பொருளை பொருத்தமட்டில் ஆடம்பரத்தை குறைக்க வேண்டும் ,நம் நாட்டில் எரி பொருள் போதுமான அளவு கிடைப்பதில்லை ,வெளி நாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்திட வேண்டும் ,ஆனால் நம் நாட்டில் எவ்வளவு வாகனங்கள் வேண்டுமானால் தயாரிக்க முடிகிறது,விற்பனை செய்ய முடிகிறது .எது முக்கியம் ?எரி பொருளா? வாகனமா ? சுதேசி எரி பொருள் இல்லாமல் வெளி நாட்டை எரி பொருளுக்காக நாம் நம்பி இருக்கக்கூடாது என மகாத்மா காந்தி அவர்கள் பல முறை கூறி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன ,இன்றைக்கு எரிபொருள் எவ்வளவு வேண்டுமானால் கிடைக்கிறது ஆனால் ஒரு வேளை நாளை கிடைக்க வில்லை என்றால் என்ன ஆகும் எல்லாமே இந்தியாவில் ஸ்தம்பிக்கும் .அந்த நிலை வர வேண்டுமா ?.
ஜி.எஸ்.ராஜன்
சென்னை . ...
எல்லா பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் உள்ளே வரும் போதும் ,வெளியே வரும் போதும் ,பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும் காற்று ஒலிப்பான்களை அதாவது ஏர் ஹார்ன் ( AIR HORN ) உபயோகிப்பதை உடனடியாக தடை செய்ய வேண்டும் .காதைக்கிழிக்கும் வகையில் இதை தாறுமாறாக உபயோகப்படுத்துவதால் பொது மக்கள் மிரண்டு போகின்றனர்,அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றனர் .இதில் பேருந்துகள் வேகமாக வருவதும் ,மக்களை அச்சுறுத்துவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாகும் .ஏன் இந்த முரட்டுத்தனம் ?இதை அரசாங்கம் உடனடியாக சட்டம் போட்டு திருத்துமா ?
ஜி.எஸ்.ராஜன்
சென்னை ....
இயேசு சிலுவை சுமந்து சென்ற போது, நடந்திருக்கக் கூடிய 14 நிகழ்வுகளை, தவக்கால வெள்ளிக்கிழமைகளில், மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்து, இன்றைய வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பது கத்தோலிக்கரின் வழக்கம்.இன்றைய கருப்பொருள் "அப்பாவின் தலைமைப் பண்பு".ஒரு மணி நேர தியான நடையில், இரண்டு தந்தைகளின் நிதர்சன வாழ்வியல் என்னை வெகுவாக நெகிழ வைத்ததுவழிபாட்டிற்கு பொருள் சேர்த்தது.ஒரு தந்தை தன் சின்னஞ் சிறு தூங்கும் மகளை தூக்கி வந்தார். இப்படி குழந்தைகளை வளர்க்கும் தந்தையர் தங்களின் எடுத்துக் காட்டான வாழ்வால் பிள்ளைகளை வார்த்தெடுப்பர் என்பது திண்ணம்.இன்னொரு மகன் தன் தாயை அந்த ஒரு மணி நேரமும் வீல் சேரில் தள்ளிக் கொண்டே அந்த கூட்டத்தில் முகஞ் சுளிப்பின்றி நடந்தார்.அவருடன் அவரது 10 வயதிருக்கலாம் அவரது மகனும் உதவி செய்து கொண்டே வந்தான்.அருமையான காட்சி.அற்புதமான மகன்.தள்ளாத வயதிலும் தன் தாயையும் அழைத்துக் கொண்டு திருத்தலம் வந்த மகன்...நிச்சயமாக அவரது மகனுக்கு இந்த வாழ்க்கைப்பாடம் நல்ல ஆன்மீக அனுபவத்தை தரலாம்.ஒவ்வொருவர் வாழ்விலும் இத்தகைய மதம் கடந்த, சடங்கு, சம்பிரதாயம் கடந்த, ஆன்மீகமே அர்த்தமுள்ள வாழ்விற்கு பாதை காட்டும்..ரீச் தி ரூட்ஸ் தட் பார் த ப்ரூட் ,அதாவது கனிகள் கனிந்து கண்ணில் தெரிய வேண்டுமானால் வேரில் இருக்குது வேலை...வழிபாட்டிலும் வாழ்க்கைப் பாடம் கற்கலாம்கற்பிக்கலாம்...!...