Advertisement
தினமலர் முதல் பக்கம் » வாசகர்கள் கருத்துக்கள்

    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 1
D K Dushyanth - chennai,இந்தியா
2013-06-19 23:54:20 IST
To my knowledge Samantha has acted in only a couple of tamil movies and both were failures, I really fail to understand why you keep publishing pictures of her on a daily basis. I strongly suspect you have taken money to promote her....
Aravind Agarwal - New Delhi,இந்தியா
2013-06-19 17:15:27 IST
Dear Indians , As per Nastordam's perdition a person from south India will come and rule India then bring Asia under his control...? Till day his all major predictions was true, then who is the person ?...
N. SANKARAN - TIRUTTANI,இந்தியா
2013-06-18 16:14:16 IST
Excess fees collected in Tiruttani Sudhandira Matriculation School. They Charge Rs.14400 for VI Std and Rs.14900 for IX Std. Also they give two variant bills. For Ex. for Rs.9000 the give bill in the name of School and for Rs.5400 in the name G.A.S. Garments. Kindly instruct the concerned officers to take action against them....
G. ABIRAMI - udumalpet,இந்தியா
2013-06-18 15:41:12 IST
நான் மிகவும் விரும்பி படிக்கும் நாளிதழ் தினமலர். செய்திகளை உண்மை மாறாமல் கொடுக்கும் ஒரே நாளிதழ் தினமலர்....
Selvam R - Dharmapuri,இந்தியா
2013-06-17 13:37:25 IST
மாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள். 1. பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிமூப்பு மற்றும் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய மேற்பார்வையாளர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / மாவட்ட கல்வி அலுவலர் / மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் / இனை இயக்குனர், இயக்குனர் போன்ற பல உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே கல்வித் தகுதியுடன் ஒரே தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பானது நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணியிடமான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியுடன் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் நேரடியாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணியில் சேருபவர்களுக்கு அவர்கள் பணிக்காலம் முழுவதும் பதவி உயர்வு வாய்ப்பு என்பது இல்லவே இல்லை. 2. தற்பொழுது சுமார் 125 – 150 மாணவர்கள் இருந்தாலே உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் நிலையில் அந்த ஒரு பள்ளியை மட்டும் நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி நிலையவிட, சுமார் 75 - 100 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் கண்காணிப்பு, ஆய்வு மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் நிர்வாகப்பொருப்பை வகிக்கும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் பதவி நிலை கீழே வைக்கப்பட்டுள்ளது. 3. தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளி/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6 – 8 வகுப்புகளுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் வட்டார வள மையங்களின் மேற்பார்வையாளர் பதவிக்கு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டே நிரப்பப்படுகிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை பெரும்பான்மையாக உள்ள நிலையில், மேற்பார்வையாளர் பதவிக்கு தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வாய்ப்பளிக்கப் படாதது ஏன் ?. 4. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியானது தொடக்கக் கல்வித் துறைக்கு தொடர்பில்லாத உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கே அளிக்கப்படுகிறது. இப்பணி விதிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறை ஒன்றாக இருந்தபொழுது வகுக்கப்பட்டது போல தோன்றுகிறது. தற்பொழுது தொடக்கக் கல்விக்கென தனி இயக்ககம் உள்ள நிலையில், தொடக்கக் கல்வித்துறையிலும் பள்ளிக்கல்விதுறைப்போன்று தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் / நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் என பலர் உள்ளனர். இந்த நிலையில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியினை தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கே ஒதுக்கீடு செய்து, மேற்பத்தி 2 – ன்படி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நிலைக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பத்தி 3 – ன்படி தொடக்கக் கல்வித் துறையிலிருந்து பதவியுயர்வுப் பெற்ற வட்டார வளமைய மேற்பார்வையாளர்களைக் கொண்டும் ஏன் நிரப்பக்கூடாது?. 5. பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை உதவி ஆசிரியர்களாக பணியில் சேருபவர்கள் B.Lit., & B.Ed. உயர்கல்வி தகுதி பெற்றதும் பணிமூப்பின் படி தமிழாசிரியர்களாகவும் பின்னர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். இவர்களது மொத்தப்பணிக் காலத்தில் B.Lit., B.Ed. & M.A., உயர்கல்வி தகுதிகளுக்கு இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் (4 ஊதிய உயர்வுகள்) பெற்றுவிடுகின்றனர். ஆனால், தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை உதவி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்து தமிழாசிரியர் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் B.Ed. தேர்ச்சிப் பெற்றால் ஊக்க ஊதியம் மறுக்கப்படுகிறது. இவர்களைவிட உயர் பதவியிலுள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் B.Lit., B.Ed. & M.A., தேர்ச்சிக்கு 2 ஊக்க ஊதிய உயர்வுகளையும் பெற்றுவிடுகின்ற நிலையில் – கீழ் பதவி நிலையிலுள்ள நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இரண்டாவது ஊக்க ஊதியம் பெறுவதற்கு M.Ed. தகுதி பெற வேண்டியுள்ளது. இது எந்த வகையில் நியாயம் ?. இவை அனைத்திற்கும் காரணமாக, தொடக்கக் கல்வித் துறையில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் நிர்வாகப் பொருப்பில் உள்ள உயரதிகாரிகள் அனைவரும் பள்ளிக் கல்வித்துறையை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின் பாரபட்சமான நடவடிக்கை எனவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14 மற்றும் 16 ன்படி சம உரிமை மற்றும் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கருதப்படுகிறது. இக்குறைகளை களைய தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?....
Vijayasankar Ramasamy - Chennai,இந்தியா
2013-06-17 12:54:41 IST
தமிழ்நாடு இழந்த பகுதிகள் நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது 'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத்தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை. நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள். முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக். அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம். வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான். அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர். அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர். தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி). ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான். தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி. பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்). அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ். இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது. இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்... இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது. பவானி நதிப் பிரச்சினை கிடையாது. தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது. சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது. எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான். கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம். சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு. 1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை. மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின. இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு. மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன. ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா? வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது. வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன. 1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது. சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள். இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம். காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது. கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின. பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்- பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா. தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம். இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும். நன்றி - தமிழ் -கருத்துக்கள...
Selvam R - Dharmapuri,இந்தியா
2013-06-16 15:49:48 IST
ஆசிரியர்கள் மன்றம் ...
g.s,rajan - chennai ,இந்தியா
2013-06-16 15:26:38 IST
பல வாகனங்களில் முகப்பு விளக்குகள் மிகவும் பிரகாசமாக இருப்பதால் விபத்துக்கள் நடக்கிறது .இரவு நேரங்களில் எதிரே வருபவர்களின் கண்களுக்கு நேரே கண்களை கூசச்செய்யும் வகையில் "பளிச் "என்று வெளிச்சம் அடிப்பதால் சாலையின் மீது கவனம் குறைந்து திசை திரும்பி விபத்துக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்படுகிறது .பல சாலைகளில் சாலை விளக்குகள் இல்லாமல் இருப்பதால் சாலையை கணிப்பது எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு மிக மிகக் கடினமாக உள்ளது .வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகளில் நடுவே கறுப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டுவதால் கண்டிப்பாக எந்தப்பயனும் இல்லை .முகப்பு விளக்குகளின் மேற்புறத்தில் சரி பாதி அளவு கருப்பு நிற வர்ணத்தை அடித்து மறைக்க வேண்டும் .இதனால் சாலைகளின் மீது மட்டுமே வெளிச்சம் படும் .எதிரே வரும் வாகனங்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது .விபத்துக்களும் வெகுவாகக்குறையும்.எனவே இது குறித்து போக்குவரத்துக்காவல்துறை மற்றும் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அதிக வாகன வெளிச்சத்தால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க உடனடியாக முன் வர வேண்டும் .அதிக அளவு எண்ணிக்கையில் விளக்குகளை பொருத்தி இருக்கும் வாகனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ,சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் இது குறித்து கவனிப்பாரா ? ஜி.எஸ்.ராஜன் சென்னை . ...
g.s,rajan - chennai ,இந்தியா
2013-06-16 13:28:11 IST
திண்டுக்கல்- ,கரூர் -சேலம் ,திண்டுக்கல்- கரூர்- ஈரோடு திருச்சி- கரூர் ஈரோடு மார்க்கமாக அதிக பயணிகள் ரயில்களை உடனடியாக இயக்கவேண்டும் .குறுகிய தூர விரைவு ரயில்கள் ,பாஸ்ட் பாசஞ்சர்கள் ,அதிக அளவில் இயக்கப்பட வேண்டும் ,தற்போது இந்த வழியில் மிகவும் குறைந்த அளவு ரயில்களே இயக்கப்படுவதால் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது .இந்த தடத்தில் உள்ள ஒரு வழிப்பாதையை இருவழி அகல ரயில் பாதைகளாக மாற்றியும் ,மின்சார மயமாக்கியும் தேவையான இடங்களில் இருப்புப்பாதை லெவல் கிராசிங்குகளை தவிர்த்து ஆங்காங்கே மேம்பாலங்களை உடனடியாக அமைத்தால் சாலை மார்க்கமாக செல்லும் பயணிகளுக்கு தேவையற்ற கால தாமதங்கள் ஏற்படாது . மத்திய, மாநில அரசுகள் இது குறித்து கவனிக்குமா ? ஜி.எஸ்.ராஜன் சென்னை . ...
amukkusaamy - chennai,இந்தியா
2013-06-14 14:54:43 IST
திரு நரசிம்ஹன், உங்கள் கதையாவது பரவாயில்லை. எல்லாப்பொருளும் கிடைத்தது. எனக்கு என் நண்பன் ஒரு வெளிநாட்டு லெதர் ஜாக்கெட் ப்ரொபெஷனல் கொரியர் மூலம் அனுப்பினான் (லீவுக்கு ஊருக்கு வந்தபோது) எனக்கு கடைசிவரை கிடைக்கவே இல்லை. நடையாய் நடந்தது தான் மிச்சம். அவனுக்கு அவர்கள் சட்டப்படி அதிகபட்சம் 100ரூபா தான் நஷ்டஈடு தரமுடியும் என்று சொல்லிவிட்டார்கள். அவனும் கன்சூமர் கோர்ட் போவேன் என்று உதார் எல்லாம் விட்டுப்பாத்தான். வேலைக்கு ஆகலை. என்ன கோர்ட்டு கேசுன்னு அலஞ்சா அவன் திரும்ப வேலைக்கு போக முடியாதே? பூட்ட கேஸ். இப்போ தெரியுது தபால் துறையின் அருமை....
amukkusaamy - chennai,இந்தியா
2013-06-13 23:18:10 IST
சமீபத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு பெயர் பட்டை குறித்து தினமலரில் செய்தி வந்திருந்தது இது தொடர்பாக சில டிப்ஸ் வாசகர்களுக்கு: 1. பெரும்பாலும் தங்கள் பகுதியில் இருக்கும் தெரிந்த ஆட்டோவில் ஏறுங்கள். 2. பொது இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோ வை உபயோகியுங்கள் - உதாரணமாக சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் 3. பெரும்பாலும் தனியாக பெண்கள் அதிக நகையோடு இரவில் செல்லவேண்டாம். 4. கூடிய மட்டிலும் துணையோடு ( உறவினர்கள், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் ) செல்லுங்கள். 5. கையில் சிறிய பிளாஸ்டிக் பையில் மிளகாய்பொடி வைத்திருங்கள். 6. அல்லது "பெப்பர் ஸ்ப்ரே" வைத்திருங்கள். 7. அதிக அளவில் கையில் பணம் வைத்திருந்தால் தனியே செல்லாதீர்கள். 8. வண்டியில் ஏறியதும், உங்கள் மொபைலில் இருந்து யாருக்காவது குறுஞ் செய்திகள் அனுப்புங்கள் உங்கள் பயணம் பற்றி - அதில் வண்டியின் நம்பர் ப்ளேட் குறிப்பிடுங்கள். 9. ஒருவேளை உங்களுக்கு செல்கிற பாதையில் சந்தேகம் வந்தால் உடனே ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்காதீர்கள். ஏதாவது ஒரு பெட்டிக்கடையில் அல்லது மருந்துக்கடை அருகே நிறுத்த சொல்லுங்கள். மிக எளிதாக நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம் - பெட்டி, பைகள் போனால் நஷ்டமானாலும் நாளை கிடைக்கும். ஆனால் முக்கியம் உங்கள் உயிர் அல்லது மானம். 10. நான் புது ஊர்களுக்குப்போனால் அங்கு ஆட்டோ டிரைவர்யிடம் பேச்சுகொடுத்து அவருடைய மொபைல் நம்பர் வாங்கி மிஸ்ஸுடு கால் கொடுப்பேன் ( ஆண்களுக்கு மட்டும் இது நல்லது ) ஒருவேளை நல்லவராயிருந்தால் மீண்டும் வரும்போது வசதியாக இருக்கும். இல்லையேல் பின்னர் அவரது நம்பரை வைத்து புகார் செய்ய வசதியாக இருக்கும். அல்லது ஒருவேளை ஆட்டோவில் தொலைத்த பொருளை கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். - வாசகர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்....
S. MURALIDHARAN - chennai,இந்தியா
2013-06-13 17:20:47 IST
பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண். நாட்டின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில், மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் உங்கள் பங்கும் மிக அதிகம். ஏன் நீங்கள் நாட்டு நலத்திற்காக, பிஜேபி கு /மோடி க்கு பலமான் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபடக் கூடாது?...
Tharan abdullah - Erode,இந்தியா
2013-06-11 15:32:46 IST
BJP can only save India, congress destroy our nation's Wealth and Health. So,congress members please go out of India and enjoy with your black money in swiss., it will be used upto your 100th generation....
g.s,rajan - chennai ,இந்தியா
2013-06-09 21:22:00 IST
Introduce more short distance fast trains,Passanger Trains more frequently required between Dindugul ,Karur and Salem and also Dindugul,Karur and Erode,Trichy,Karur and Erode for the benefit of the people.Will the railways kindly look in to this quickly hence the train services are not enough....
Narsimhan K - Coimbatore,இந்தியா
2013-06-07 15:00:57 IST
பிரான்ச் எக்ஸ்பிரஸ் கொரியர் மூலம் ஒரு பார்சல் கோவையிலிருந்து திருச்சிக்கு அனுப்பினேன். அதில் 2 சேலைகள் மற்றும் பாவாடைகள் முதலியன அனுப்பினேன். பார்சல் டெலிவரி ஆகும்போது பாக்கெட் பிரிக்கப்பட்டு ஓபன் ஆக இருந்தது . அதில் பாவாடைகள் மட்டும் தான் இருந்தது. 2 சேலைகள் காணவில்லை. கேட்டதற்கு ஆபீசில் மற்றொரு கவரில் 2 சேலைகள் உள்ளதாக கொடுத்தார்கள். நான் அனுப்பிய கவரை பிரித்து 2 சேலைகளை மட்டும் தனியாக வேறு கவரில் போட்டு வைத்துள்ளர்கள். எப்படி அவர்கள் கவரை பிரிக்கலாம்? கொரியர் ஆபீசில் இந்த மாதிரி கூட நடக்குமா? இந்த மாதிரி கொரியர்களை எல்லாம் தடை விதிக்க வேண்டும். பிரான்ச் எக்ஸ்பிரஸ் இதற்கு வருத்தம் தெரிவிக்கவிடில் facebook , twitter எல்லாவற்றிலும் இதனை போட்டு நியாயம் கேட்பேன்....
Jerome Manohar D - Tiruchirapalli,இந்தியா
2013-06-07 10:30:01 IST
I am a retired govt servant. Only after my retirement I began to operate the computer and started to read the computer malar. This malar is very interesting: but the earlier vesions of this malar before the week ed with 29.12.2008 are not available on "On-line". Kindly inform me whether those malars can be brought into on line or a compiled book available for sale? D. Jerome Manohar....
chandrasekar - madurai,இந்தியா
2013-06-07 07:11:15 IST
சார் வணக்கம். 120 ரூபாயில் குடிநீர் தரும் தமிழ் அரசன் பற்றிய முழு விவரம் கொடுத்தால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்குமே. செய்வீர்களா...
Selvam R - Dharmapuri,இந்தியா
2013-06-05 22:08:39 IST
மாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள்...
Srinivasan, Dr.D. - srirangam,இந்தியா
2013-06-05 17:47:20 IST
தமிழக அரசு தற்போது விலையில்லா பொருட்களை (மின் விசிறி, க்ரைண்டர் மற்றும் மிக்சி) அனைவருக்கும் ரேசன் கடைகள் மூலம் வழங்குகிறது. குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும்போது அவற்றின் வரிசை எண்களைப் பின்பற்றி முறையாக வழங்கப்பட்டது. நுகர்வோருக்கு அட்டைகளைப் பெறுவது மிக எளிதாக இருந்தது. தற்போது ஸ்ரீ்ரங்கம் அம்மாமண்டபம் அரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை கிளை பொது வினியோகக் கடையில் குடும்ப அட்டை வரிசை எண்படியின்றி விலையில்லாப் பொருட்கள் பெற டோக்கன்கள் முறைபாடு இன்றி வழங்கப்படுகின்றன். இதனால் மக்களிடையே குழப்பமும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் அரசாங்கத்தை குறை கூறும் வண்ணம் உள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்று அடைவதில் குளறுபடி செய்யும் ஊழியர்களை நல்வழிப்படுத்த அரசு அதிகாரிகள் முற்படவேண்டும். தண்டிக்கவும் தயங்ககூடாது....
தமிழ் அரசன் - கடுகூர், அரியலூர் மாவட்டம்,இந்தியா
2013-06-05 13:48:17 IST
குடி தண்ணீருக்காக நாம் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட பணத்தை கட்டாயமாக ஒதுக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் அவ்வாறு செலவழித்தும் நல்ல குடிநீர் கிடைக்கிறதா என்றால் இல்லை காரணம் நீதிமன்றத்தில் அரசே கேனில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரில் 90 சதவிகிதம் பாதுகாப்பான குடிநீர் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எனவே சென்னை ஐ.ஐ.டி.,யில் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றும் பிரதீப் என்பவர் கண்டுபிடித்த நானோ' தொழில்நுட்ப முறையில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரத்திர கண்டுபிடிப்பை வாழ்த்துவதோடு அரசே முன்வந்து இவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்து அரசு காப்புரிமை பெற்று அல்லது அரசே அவரது தொழில்நுட்பத்தில் அவரையே தயாரிக்க சொல்லி முதலில் அரசு அலுவலகங்கள் , அரசு பள்ளிகள் , அரசு கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் என பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் பிறகு வெளிச்சந்தையில் குறைந்த விலையில் விற்பனைக்கு விடலாம். மேலும் விபரங்களுக்கு தினமலர் செய்திதாளில் ஜூன் மாதம் 3-ஆம் தேதி சிறப்பு செய்திகள் பக்கத்தில் சொல்கிறார்கள் என்ற தலைப்பில் வெளியான செய்தியை இணைத்துள்ளேன் 5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர் "நானோ' தொழில்நுட்ப முறையில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந் திரத்தை கண்டுபிடித்த, பிரதீப்: நான், மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். சுத்தமான நீரை குடிக்க, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய்க்கும் மேல் செலவாகும் சூழ்நிலை உள்ளது. மனிதனின் அடிப்படை தேவையான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, ஐந்து ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியில், "நானோ' தொழில்நுட்ப முறையில், ஒரு இயந்திரம் கண்டுபிடித்தேன். முதலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை அழித்த பின், இரண்டாம் கட்டமாக ஆர்சானிக், ஈயம், இரும்பு போன்ற, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன். சில்வர் நானோ துகள்களிலிருந்து கிடைக்கும், "வெள்ளி அயனிகள்' நீரில் உள்ள நுண்கிருமிகளை அழித்து, நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வெள்ளி அயனிகளை நேரடியாக நீரில் சேர்ப்பதால், நுண்கிருமிகள், கனிமங்கள், தாதுக்கள் போன்றவை, அதன் சுத்தப்படுத்தும் செயல்திறனை குறைத்துவிடும் என்பதால், அதற்கான மாற்று முறையை கண்டுபிடித்தேன். அலுமினியம் ஆக்சிஹைட்ராக்சைடு என்ற, களிமண் போன்ற பொருளால், 50 நானோ மீட்டர் நீளமும், 30 நானோ மீ., அகலமுள்ள கூண்டு செய்து, அதனுள் வெள்ளி அயனியை வைத்து, "உயிரி பாலிமர்' பொருளால் மூடினேன். இதனால், வெள்ளி அயனியை, நீரில் உள்ள நச்சு பொருட்கள் நேரடியாக தாக்க முடியாததால், வெள்ளி அயனி விரைந்து செயல்பட்டு, நீரின் நுண்கிருமிகளை அழிக்கிறது. இதே முறையில், மற்ற அயனிகளை பயன்படுத்தி, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன். இச்சுத்திகரிப்பு இயந்திரத்தை, வீட்டில் பயன்படுத்தி, நீரை சுத்திகரித்து குடிக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை கூண்டை மாற்றினால் போதும் தொடர்ந்து பயன்படுத்தலாம். இதன் விலை, 120 ரூபாய். கிராமப்புற பெண்களுக்கு இத்தொழில் நுட்ப பயிற்சி கொடுத்தால், வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், சுத்தமான குடிநீரை, லிட்டருக்கு, 5 பைசாவிற்கே தரமுடியும்....
M.murugan - rajapalayam,இந்தியா
2013-06-05 11:33:04 IST
dinamalar web is great...
தமிழ் அரசன் - கடுகூர், அரியலூர் மாவட்டம்,இந்தியா
2013-06-04 07:45:50 IST
எனது பக்கத்தில் பெயர் மற்றும் விலாசம் தமிழில் எழுதினால் ?????????? என்றே காட்சி அளிக்கிறது எனவே நான் மீண்டும் எனது பெயர் முகவரியை ஆங்கிலத்தில் ஏற்றியுள்ளேன், தமிழில் தெரிய ஆவணம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்....
Babu - Trichy,இந்தியா
2013-05-31 09:36:25 IST
திருச்சி மாநகராட்சியின் செயல்படமுடியாத நடவடிக்கையால் சில ரௌடிகள் மாநகராட்சி இடத்தை ஆக்ரமித்து கீற்று கொட்டகை அமைத்து கோழி இறைச்சி கடையை காந்தி மார்க்கெட்டில் கொல்லாத மாவட்ட நிர்வாகம் இனியாவது விளித்து துரிதகதியில் செயல்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம் நடத்துகிறார்கள்.இதனால் பாமர பொது மக்களுக்கும் பள்ளி கல்லூரி செல்பவர்களுகும் மிகவும் சிரமபடுகிரார்கள்.மாநகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பல பல முறை தெரியபடுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை.இப்படி மக்களை பற்றி கவலை...
K.Ramachandran - Chennai,இந்தியா
2013-05-30 12:07:14 IST
Sir, Kind Attention : Editor The Tamil Nadu State Transport Corporation (TNSTC) buses are frequently meeting with accidents almost on daily basis, ing and maiming passengers. I feel that some thing is fundamentally wrong either in ion of drivers or maintenance of buses. A fully researched and front paged story by Dinamalar will go a long way in attracting the attention of the Government to this serious problem. It will be great service by Dinamalar to the people of Tamil Nadu. Thanks. K.Ramachandran...
Muniyandi V - pondicherry,இந்தியா
2013-05-30 05:41:59 IST
பாண்டிசேரி டூ திண்டிவனம் சாலையில் உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் சந்திப்பில் எதிர் எதிரே பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. அதனால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இதனை மாற்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்குமாறு ஆரோவில் காவல்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் பலமுறை தெரியபடுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினசரிஏற்படும் போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு உடனடியாகபேருந்து நிறுத்தங்களை மாற்றியமைக்க ஊராட்சி நிர்வாகம்மற்றும் ஆரோவில் காவல்துறை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...

« First « Previous 1 2 3 4 5 6 ....  
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement