World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
முஷாரப்பிடம் விசாரிக்க ஐ.நா.,கமிஷன் முடிவு

நவம்பர் 07,2009,00:00  IST

Top global news update

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படு கொலை செய்யப்பட்டது குறித்து, முன்னாள் அதிபர் முஷாரப்பிடம் ஐ.நா.,கமிஷன் விசாரணை நடத்த உள்ளது.





பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனசிர் புட்டோ கடந்த 2007ம் ஆண்டு ராவல்பிண்டியில், தேர்தலுக்கு முன்னதாக நடந்த பேரணியில் கலந்து கொண்ட போது, தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் புலனாய்வு அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும் பெனசிர், கணவர் சர்தாரி "ஐ.நா.,கமிஷன் விசாரிக்க வேண்டும்' என, கோரினார். தற்போது சர்தாரி, பாகிஸ்தான் அதிபராக உள்ளார். இதையடுத்து, ஐ.நா., கமிஷன், பெனசிர் புட்டோவின் கொலையை விசாரிக்க திட்டமிட்டுள்ளது.





இதன் ஒரு கட்டமாக, முன்னாள் அதிபர் முஷாரப்பிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு ஐ.நா.,கமிஷன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ அதிகாரிகளிடமும், ஐ.எஸ்.ஐ.,அதிகாரிகளிடமும் இந்த கமிஷன் விசாரணை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. தற்போது முஷாரப், அமெரிக்காவில் தங்கியுள்ளார். இதற்கிடையே தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர், தலிபான்களின் கோட்டையாக விளங்கும் மக்கீன் நகரை நேற்று சுற்றி வளைத்தனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 முன்னால் அதிபர் முஸ்ஹ்ரப்  
by S Kumar,chennai,India    11/7/2009 1:18:06 PM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்